Jump to content

இனி­யும் வேண்­டாமே பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டம்!!


Recommended Posts

இனி­யும் வேண்­டாமே பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டம்!!

 

பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­ட­மா­னது இலங்­கை­யில் மோச­மான மனித உரிமை மீறல்­க­ளுக்­குத் துணை­போ­யி­ருக்­கி­றது என்று சாடி­யி­ருக்­கின்­றது, அனைத்­து­வி­த­மான அநீ­தி­கள் மற்­றும் இன­வா­தங்­க­ளுக்கு எதி­ரான பன்­னாட்டு இயக்­கம். அதி­லும் குறிப்­பாக தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக இந்­தச் சட்­டம் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது என்­ப­தை­யும் அது குறிப்­பிட்­டி­ருக்­கின்­றது.

பயங்­க­ர­வா­தத் தடைச்ச ட்டத்­தின் ஊடா­கத் தன்­னிச்­சை­யான கைது­கள் மற்­றும் தடுத்து வைத்­தல்­கள் இடம்­பெற்­றுள்­ளன, சித்­தி­ர­வ­தை­கள் இடம்­பெற்­றுள்­ளன, சட்­டத்­த­ர­ணி­யின் துணை இன்­றிப் பாதிக்­கப்­பட்­ட­வ­ரின் ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லம் பெறப்­ப­டு­கின்­றது, இது அச்­சு­றுத்­த­லை­யும் சித்­தி­ர­வ­தை­யை­யும் அதி­க­ரிக்­கின்­றது என்­றும் அந்த இயக்­கம் தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளது.

ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யில் 39ஆவது கூட்­டத் தொட­ரில் உரை­யாற்­றிய இயக்­கத்­தின் பேச்­சா­ளர் இத­னைத் தெரி­வித்­தி­ருக்­கி­றார். தன்­னிச்­சை­யா­கத் தடுத்து வைத்­தல் தொடர்­பான ஐக்­கிய நாடு­க­ளின் செயற்­குழு தனது இலங்­கைப் பய­ணம் தொடர்­பில் வெளி­யிட்ட அறிக்­கை­யின் மீது பேசும்­போதே இயக்­கத்­தின் பேச்­சா­ளர் அன்­டோனி கிர்­பட் இத­னைத் தெரி­வித்­தார்.

இலங்­கை­யில் பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்­க­வேண்­டும் என்று ஐ.நா. செயற்­குழு பரிந்­து­ரைத்­துள்­ளது. அதற்­குப் பதி­லா­கக் கொண்­டு­வ­ரப்­ப­டக்­கூ­டிய சட்­ட­மா­னது பன்­னாட்­டுத் தர­நி­ய­மங்­களை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக இருக்க வேண்­டும் என்­றும் அது வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

செயற்­கு­ழு­வின் இந்­தப் பரிந்­து­ரையை வர­வேற்­றுக் கருத்­துத் தெரி­விக்­கும்­போதே, அனைத்­து­வி­த­மான அநீ­தி­கள் மற்­றும் இன­வா­தங்­க­ளுக்கு எதி­ரான பன்­னாட்டு இயக்­கம், மிக மோச­மான மனித உரிமை மீறல்­க­ளுக்­குப் பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டம் துணை­போ­யி­ருக்­கி­றது என்­கிற தனது குற்­றச்­சாட்டை முன்­வைத்­தது.

தமி­ழர்­கள் தரப்­பி­லி­ருந்து மிக நீண்ட கால­மா­கவே இந்­தக் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது. இந்­தச் சட்­டத்­தால் தமி­ழர்­கள் பாதிக்­கப்­பட்­டார்­கள் என்­ப­தி­லும் பார்க்க, தமி­ழர்­களை இலக்கு வைத்­துத்­தான் இந்­தச் சட்­டமே கொண்­டு­வ­ரப்­பட்­டது என்­ப­து­தான் மிகச் சரி­யா­னது. போர் முடிந்து பல வரு­டங்­கள் கடந்த பின்­ன­ரும்­கூட பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டம் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரா­கத் தீவி­ர­மாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

பலர் இந்­தச் சட்­டத்­தின் கீழ் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். பொலி­ஸா­ருக்­குக் கட்­டுப்­பா­டற்ற அதி­கா­ரங்­களை வழங்­கும் இந்­தச் சட்­டம் போர்க் காலங்­க­ளி­லும் அதன் பின்­ன­ரும்­கூட மனி­தா­பி­மா­ன­மற்ற கடும் சித்­தி­ர­வ­தை­க­ளின் உற்­பத்­திக் கூ­டங்­க­ளுக்­கான அடிப்­ப­டை­யாக இருந்­துள்­ளது. இப்­போ­தும்­கூட இருக்­கின்­றது. இந்­தச் சட்­டத்­தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் கடு­மை­யான உடல், உள வதை­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­பதைப் பல மருத்­துவ ஆய்­வு­கள் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன.

கிளர்ச்­சியை அடக்­கு­வது என்­கிற பெய­ரில் தமி­ழர்­க­ளைக் குறி­வைக்­கும் இந்­தச் சட்­டம் நீக்­கப்­ப­ட­வேண்­டும் என்­பது தமி­ழர்­க­ளின் நீண்ட நாள் கோரிக்கை. அத­னைச் செய்­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்து ஆட்­சிக்கு வந்த இன்­றைய அர­சு­கூட அதனை நிறை­வேற்­ற­வில்லை.

தற்­போது நடை­மு­றை­யில் உள்ள தீமை நிறைந்த பயங்­க­ர­வா­தத் தடைச்­சட்­டத்தை நீக்­கி ­விட்டு பன்­னாட்­டுத் தர­நி­ய­மங்­க­ளுக்கு ஏற்ற ஒரு சட்­டம் கொண்­டு­வ­ரப்­ப­டும் என்று அரசு உறு­தி­ய­ளித்­தது. அதன்­படி ஒரு சட்­ட­வ­ரை­வும் தயா­ரிக்­கப்­பட்டு நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­பட்­டது.

ஆனால் அது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட கட்­சி­க­ளின் கடு­மை­யான கண்­ட­னங்­க­ளுக்கு உள்­ளா­ன­தைத் தொடர்ந்து திருத்­தங்­க­ளுக்­காக ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. அது பற்றி இப்­போது மூச்­சுக்கூட இல்லை.

இந்த ஆட்­சி­யின் காலம் முடி­வ­டை­வ­தற்­குள் புதிய சட்­டம் நடை­மு­றைக்­குக் கொண்­டு­வ­ரப்­ப­டும் என்­ப­தற்­கான அறி­கு­றி­கள் எவை­யும் இல்லை. தான் அளித்த பல வாக்­கு­று­தி­களை இந்த அரசு நிறை­வேற்­றா­மல் விட்­ட­தைப் போலவே, இந்த விட­யத்­தை­யும் சுல­ப­மா­கக் கடந்து சென்­று­வி­டும் அபா­யம் இருக்­கின்­றது.

அப்­படி நடந்­து­வி­டா­மல் தடுப்­பது தமிழ் அர­சி­யல் கட்­சி­க­ளி­ன­தும், சிறு­பான்­மைக் கட்­சி­கள் அனைத்­தி­ன­தும் கட­மை­யா­கும். நடை­மு­றை­யில் இருக்­கும் பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்தை நீக்கி புதிய, ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய ஒரு சட்­டத்தை உட­ன­டி­யாக நடை­மு­றைக்­குக் கொண்­டு­ வ­ரு­வ­தற்­கான அழுத்­தத்தை அவை அர­சுக்­குக் கொடுக்­க­வேண்­டும். அர­சும் அதனை ஏற்­றுச் செயற்­ப­டு­வ­தற்கு முன்­வ­ர­வேண்­டும்.

https://newuthayan.com/story/11/இனி­யும்-வேண்­டாமே-பயங்­க­ர­வா­தத்-தடைச்-சட்­டம்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.