Jump to content

தொடர்கதையாகும் பாதிப்பு


Recommended Posts

தொடர்கதையாகும் பாதிப்பு

 

ஒரு கட்­ட­மைப்பின் கீழ் ஒன்­றி­ணைந்த நிலையில் தமிழ் அர­சியல் தலை­வர்கள் செயற்­ப­டாமல் இருப்­பது துர­திர்ஷ்­ட­வ­ச­மா­னது. நீண்ட கால­மாக அர­சியல் உரி­மைகள் மறுக்­கப்­பட்ட ஒரு தேசிய இன­மாகத் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்ற நிலையில், தமிழ் அர­சியல் தலை­வர்கள் இவ்­வாறு ஒன்­றி­ணைந்து செயற்­ப­டாமல் அல்­லது செயற்­பட முடி­யாமல் இருப்­பது அந்த மக்­களை மேலும் மேலும் பாதிப்­ப­டை­யவே செய்­தி­ருக்கின்றது. 

மேலோட்டப் பார்­வையில் இந் நாட்டில் தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் உரி­மைகள் மறுக்­கப்­பட்­ட­தாகத் தெரி­வ­தில்லை. அவர்­களும் ஏனைய பெரும்­பான்மை இனத்­த­வ­ரா­கிய சிங்­கள மக்­களைப் போன்று சுதந்­தி­ர­மா­கத்­தானே வாழ்­கின்­றார்கள். இந்த நாட்டின் அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­தின்­படி, அவர்­க­ளுக்கு கல்வி கற்கும் உரிமை இருக்­கின்­றது. மொழி உரிமை இருக்­கின்­றது. அரச மற்றும் தனியார் துறை­களில் பணி­யாற்­று­வ­தற்­கான தொழில்­வாய்ப்­புக்கள் வழங்­கப்­ப­டு­கின்­றன. 

இது­போன்ற சட்­ட­ரீ­தி­யான நிலை­மை­க­ளுக்கு அப்பால், சிங்­க­ள­வர்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்ற நாட்டின் தலை­ந­க­ரா­கிய கொழும்­பிலும் அதன் சுற்­றுப்­பு­றங்கள் மட்­டு­மல்­லா­மல் கண்டி, காலி போன்ற சிங்­களப் பிர­தே­சங்­க­ளி­லும்­கூட தமிழ் மக்கள் சொந்­த­மாகக் காணிகள், வீடுகள் வாங்கி குடி­யி­ருந்து தொழில் செய்­வ­துடன் வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள். 

பல்­க­லைக்­க­ழ­கங்­களில் தமிழ் மாண­வர்கள் உள்­வாங்­கப்­ப­டு­கின்­றார்கள். வரு­டந்­தோறும் பலர் பட்­ட­தா­ரி­க­ளாக வெளி­வ­ரு­கின்­றார்கள். அது­மட்­டுமா? பொலிஸ் மற்றும் இரா­ணுவ படைத்­து­றை­யி­லும்­கூட தமி­ழர்கள் உள்­வாங்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். குறிப்­பாக யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்னர் இரா­ணு­வத்தில் இளம் தமிழ்ப்­பெண்கள் உள்­வாங்­கப்­பட்டு தேசிய பாது­காப்பு அணியில் அவர்கள் பங்­க­ளிப்பு செய்­யக்­கூ­டிய வாய்ப்பு வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. 

தேசிய அர­சி­யலில் முத­லிடம் வகிக்­கின்ற ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி போன்ற அதி முக்­கிய கட்­சி­களில் தமி­ழர்­க­ளுக்கு உறுப்­பு­ரிமை வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. முக்­கிய தலை­மைப்­ப­த­வி­களில் அவர்­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. எந்தக் கட்சி ஆட்­சிக்கு வந்­தா­லும் ­சரி, தமி­ழர்­க­ளுக்கு அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள முக்­கிய அமைச்சுப் பத­விகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. இரா­ஜாங்க அமைச்­சர்கள், பிரதி அமைச்­சர்கள் போன்ற பதவி நிலை­க­ளிலும் அவர்கள் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வ­தில்லை.

இந் நிலையில் தமிழ் மக்­க­ளுக்கு நாட்டில் எந்த வகையில் உரி­மைகள் மீறப்­பட்­டி­ருக்­கின்­றன? அல்­லது அவர்கள் இன ஒடுக்­கு­மு­றைக்கு ஆளாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்? தமி­ழர்­க­ளுக்கு உள்ள பிரச்­சி­னைதான் என்ன, என்­ப­துதான் சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தி­க­ளி­னதும் அவர்­க­ளு­டைய அர­சியல் சிந்­தனை வயப்­பட்­ட­வர்­களும் சாதா­ர­ண­மாக எழுப்­பு­கின்ற கேள்­வி­க­ளாகும்.

ஆனால் இந்தக் கேள்­வி­க­ளுக்கு அப்பால் ஆழ­மாக உற்று நோக்­கும்­போது வரி­சை­யாக பல பிரச்­சி­னைகள் மேலெ­ழு­வதைக் காண முடியும். தமிழ் மக்கள் எவ்­வாறு திட்­ட­மிட்ட வகையில் மறை­மு­க­மான ஒரு நிகழ்ச்­சி ­நி­ரலின் கீழ் ஒடுக்­கப்­பட்டும் நசுக்­கப்­பட்டும் வரு­கின்­றார்கள் என்­பதை தெளி­வாகத் தெரிந்து கொள்ள முடியும். இதில் சந்­தே­கத்­துக்கு இட­மில்லை. 

நிலைமை

சிங்­களப் பேரி­ன­வாத பாச­றையிலுள்­ள­வர்­க­ளும்­கூட பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் தடு­மா­றிய நிலையில் அல்­லது தவிர்க்க முடி­யாத நிலையில் தமிழ் மக்­க­ளு­டைய உரி­மைகள் மறுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அவர்கள் ஒடுக்­கப்­ப­டு­கின்­றார்கள் என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றார்கள். ஒப்­புக்­கொண்­டு­மி­ருக்­கின்­றார்கள். 

இவ் விட­யங்­களை சர்­வ­தே­சமும் நன்கு உணர்ந்­தி­ருக்­கின்­றது. ஐ.நா.வின் சிறப்பு அறிக்­கை­யா­ளர்கள் பலரும் அதே­போன்று சர்­வ­தேச நாடு­களைச் சேர்ந்த பல இரா­ஜ­தந்­தி­ரி­களும் தமிழ் மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்ற வடக்கு – கிழக்கு மற்றும் மலை­யகம் உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் அவர்கள் எவ்­வாறு வாழ்­கின்­றார்கள், அவர்­க­ளு­டைய அடிப்­படை உரி­மைகள், மனித உரி­மைகள், வாழ்­வு­ரி­மைகள், அர­சியல் உரி­மைகள் எந்­தெந்த வகை­களில் எல்லாம் மறுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன, மீறப்­பட்­டி­ருக்­கின்­றன என்­பதைக் கண்­ட­றிந்து வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றார்கள். 

இந்த வரி­சையில் இலங்­கைக்கு ஐ.நா.வின் பிர­தி­நி­தி­யாக 8 நாட்கள் விஜயம் ஒன்றை மேற்­கொண்­டி­ருந்த ஜுவான் பப்லோ பொஹோஸ்­லவ்ஸ்கி நுண் நிதிக் கடன் விவ­கா­ரத்தில் அதிர்ச்சி தரத்­தக்க விட­யங்­களை வெளி­யிட்­டுள்ளார்.

மனித உரி­மை­களை, குறிப்­பாக பொரு­ளா­தார, சமூக, கலா­சார உரி­மை­களை முழு­மை­யாக அனு­ப­விப்­பதில் அர­சு­களின் வெளி­நாட்டுக் கடன்கள் மற்றும் சர்­வ­தேச நிதிக்­க­டப்­பா­டுகள் செலுத்­து­கின்ற ஆதிக்கம் தொடர்­பி­லான சுயா­தீன நிபுணர் ஜுவான் பப்லோ பொஹோஸ்­லவ்ஸ்கி நுண் நிதிக் கடன் விவ­கா­ரத்தில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­களைச் சேர்ந்த பெண்கள் பாலியல் இலஞ்ச கொடு­மைக்கு ஆளா­கி­யி­ருப்­பது பற்­றியும், அந்தக் கடன்­களை செலுத்­து­வ­தற்­காக தமது சிறு­நீ­ர­கங்­களை விற்­ப­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள் என்­பது பற்­றியும் கண்­ட­றிந்து வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார்.

மனித உரிமை விவ­கா­ரங்­களில் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் எவ்­வாறு நிதி­யு­த­விகள் ஆதிக்கம் செலுத்த பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன என்­பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு ஐ.நா. மனித உரிமைப் பேரவை பப்லோ பொஹோஸ்­லவ்ஸ்­கிக்கு 25-9 என்ற இலக்கம் கொண்ட தீர்­மா­னத்தின் மூலம் அதி­காரம் வழங்­கி­யி­ருக்­கின்­றது. ஐ.நா. மனித உரிமை பேர­வையின் விசேட ஏற்­பா­டு­க­ளில் உள்­ள­டக்­கப்­பட்ட ஓர் அம்­ச­மாக இவர் நாடு­க­ளுக்கு விஜயம் செய்து நிலை­மை­களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்கு உள்­வாங்­கப்­பட்­டுள்ளார்.   

சர்­வ­தேச நிபு­ணர்­களும் ஐ.நா. அறிக்­கை­யா­ளர்­களும் சர்­வ­தேச இரா­ஜ­தந்­தி­ரி­களும் வெளி­யிட்­டுள்ள பல்­வேறு தக­வல்கள் இலங்­கையின் தேசிய இன­மா­கிய தமிழ் மக்கள் எந்தள­வுக்கு பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள் என்­பதை தெட்டத்தெளி­வாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன. இதற்கு ஜுவான் பப்லோ பொஹோஸ்­லவ்ஸ்கி நுண் நிதிக்கடன் விவ­கா­ரத்தில் வெளி­யிட்­டுள்ள தக­வல்கள் சிறந்த உதா­ர­ண­மாக அமைந்­தி­ருக்­கின்­றன. 

துர­திர்ஷ்டம் என்­ன­வென்றால் உள்­ளூரில் உள்ள எவரும் குறிப்­பாக யுத்தத்தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நி­தி­க­ளா­கிய அர­சி­யல்­வா­திகள் எவரும் இந்த விட­யத்தில் கவனம் செலுத்­தி­ய­தாகத் தெரி­ய­வில்லை. ஈ.பி.­ஆர்­.எல்.எவ். கட்­சியின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் கடை­சி­யாக நடத்­திய செய்­தி­யா­ளர்கள் சந்­திப்­பின்­போது தனது கட்­சியின் செய­லா­ளரும் வன்னி மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய சிவ­சக்தி ஆனந்தன் இந்த நுண் நிதிக் கடன்கள் எவ்­வாறு அப்­பாவி பொது­மக்­களைப் பாதித்­தி­ருக்­கின்­றன என்­பது குறித்து, 2016 ஆம் ஆண்டு வர­வு–­செ­லவுத் திட்­டத்தின் மீது உரை­யாற்­று­கையில் தெரி­வித்­தி­ருந்தார். இதன் பின்னர், நுண்­கடன் திட்­டத்தின் பாதிப்பைக் கண்­டித்தும், அதற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் எனவும் கோரி வவு­னி­யாவில் ஆர்ப்­பாட்டம் ஒன்று நடத்­தப்­பட்­டி­ருந்­தது. 

நுண்­கடன் திட்­டத்தின் மூலம் நன்­மை­ய­டை­வ­தற்­காகக் கட­னு­தவி பெற்­ற­வர்கள் மீது பிர­யோ­கிக்­கப்­பட்ட மனி­தா­பி­மா­ன­மற்ற நட­வ­டிக்­கை­க­ளினால் வடக்­கிலும் கிழக்­கிலும் மன­மு­டைந்து போன­வர்கள் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றி­ருந்­தன. சமூக பொறுப்­புள்ள சில நிறு­வ­னங்­களும் இவ் விடயம் குறித்து ஆராய்ந்து அறிக்­கை­களை வெளி­யிட்­டி­ருந்­தன.

தற்­கொலைச் சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து நுண்­கடன் திட்­டத்­துக்கு எதி­ரான எதிர்ப்பு வலு­வ­டைந்து பல இடங்­க­ளிலும் ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தப்­பட்­டி­ருந்­தன. இப் பின்­ன­ணி­யி­லேயே மனித உரி­மை­களை மீறு­கின்ற வகையில் நிதி­யு­த­விகள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற விவ­காரம் குறித்த சர்­வ­தேச நிபுணர் ஜுவான் பப்லோ பொஹோஸ்­லவ்ஸ்கி இவ் விட­யத்தில் பாலியல் இலஞ்சம் கோரு­கின்ற நிலை­மையை வெளிச்­சத்துக்குக் கொண்டு வந்­துள்ளார். 

பொறுப்­புக்கள் பற்­றிய பொறுப்­பு­ணர்வு

ஆனால் தமிழ் அர­சியல் தலை­வர்கள் இந்த விட­யங்­களை எந்த அள­வுக்கு ஆழ­மா­கவும் தீவி­ர­மா­கவும் வெளியில் கொண்டு வந்­தி­ருக்­கின்­றார்கள் என்­பதும் தமிழ் மக்­களின் உண்­மை­யான நிலை­மை­களை வெளிப்­ப­டுத்தத் தக்க ஆதா­ரங்­களை ஆவ­ண­மாக்­கி­யி­ருக்­கின்­றார்கள் என்­பதும் கேள்­விக்­கு­ரி­யது. 

மிக­ மோ­ச­மான முறையில் மனித உரி­மைகள் மீறப்­பட்­டி­ருக்­கின்­றன. யுத்­த­கா­லத்­திலும் அதற்குப் பின்­னரும் பலர் மோச­மான முறையில் கொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். மனி­தா­பி­மா­ன­மற்ற முறையில் ஆட்கள் கடத்­தப்­பட்டும் கைது செய்­யப்­பட்டும் காணாமல் ஆக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். இரா­ணு­வத்­தி­னரால் பொது­மக்­க­ளு­டைய காணிகள் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அவற்றை விடு­விப்­பதில் அர­சாங்கம் "ஆமை வேகத்தில்" செய­லாற்­றிக்­கொண்­டி­ருக்­கின்­றது. அர­சியல் கைதி­களின் விடு­தலை என்­பது நீண்­ட­தொரு விவ­கா­ர­மாக சிக்­கல்கள் நிறைந்­த­தாக அரச தரப்­பி­னரால் மாற்­றப்­பட்டு அர­சியல் கைதிகள் என்று எவ­ருமே கிடை­யாது என்று அரசாங்கம் அடித்துக் கூறி வரு­கின்­றது. அடைத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்கள் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள்.அவர்கள் சட்­ட­ரீ­தி­யா­கவே அணு­கப்­ப­டு­வார்கள் என்­பதில் பிடி­வாதம் பேணப்­ப­டு­கின்­றது.

மீள்­கு­டி­யேற வேண்­டி­ய­வர்­க­ளு­டைய காணி­களை வன­ப­ரி­பா­லன திணைக்­க­ளமும் தனது பங்­குக்கு அப­க­ரித்து அவற்றைத் தனது உட­மை­யாக்­கு­வ­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருக்­கின்­றது. மீள்­கு­டி­யேற்­றப்­பட்ட வறு­மைக்­கோட்­டுக்கு உட்­பட்ட குடும்­பங்­களின் நிரந்­தர வாழ்­வா­தாரத் திட்­டங்கள் குறித்து அர­சாங்கம் அக்­கறை கொள்­வ­தில்லை. வடக்கு – கிழக்கிலுள்ள வேலை­தேடும் பட்­ட­தா­ரி­களை உள்­வாங்கி அவர்­க­ளு­டைய மனித வலுவை தேசிய வளர்ச்­சிக்குப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு உரிய திட்­டங்கள் அர­சாங்­கத்­திடம் இல்லை. 

இதை­யும்­விட, தமிழ்ப்­பி­ர­தே­சங்­களில் தமிழ் மக்­களின் பாரம்­ப­ரிய இன விகி­தா­சா­ரத்தைத் தலை­கீ­ழாக்கும் நோக்­கத்­து­ட­னான திட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்­றங்கள், யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட தமிழ்க்­கி­ரா­மங்­க­ளிலும் தமிழர் பகு­தி­களிலுள்ள கடற்­கரை பிர­தே­சங்­க­ளிலும் தென்­னி­லங்­கையைச் சேர்ந்த பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்­த­வர்கள் திட்­ட­மிட்ட வகையில் தொழில் செய்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றார்கள். 

விவ­சாயம் மற்றும் மீன்­பிடி தொழில்­து­றை­களில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற இந்த ஆக்­கி­ர­மிப்பு கார­ண­மாக யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட உள்­ளூர்­வா­சிகள் மிக மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். 

இது­போன்று எத்­த­னையோ பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. இந்தப் பிரச்­சி­னை­க­ளினால் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் பெரும் நெருக்­க­டி­க­ளுக்குள்­ளா­கி­யி­ருக்­கின்­றார்கள். அவர்­க­ளு­டைய நாளாந்த வாழ்­வா­தாரம், குடும்பப் பொரு­ளா­தாரம் என்­பன மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இவ் விட­யங்கள் குறித்து அர­சி­யல்­வா­திகள் ஒன்­றி­ணைந்த முறையில் கவனம் செலுத்­து­வதைக் காண முடி­ய­வில்லை.  

அவ்­வப்­போது, அடக்­கு­மு­றைகள் மற்றும் பாதிப்­பு­களை எதிர்த்து ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. இந்த ஆர்ப்­பாட்­டங்­களும் உதி­ரி­க­ளா­கவே நடத்­தப்­ப­டு­கின்­றன.

ஒரு பிரச்­சினை குறித்து ஒரு தடவை ஆர்ப்­பாட்டம் நடத்தி, அது குறித்து ஊட­கங்­களில் செய்தி வர­வேண்டும் என்­பதை இலக்­காகக் கொண்டு இந்த எதிர்ப்பு நட­வ­டிக்­கைகள் அல்­லது நியாயம் கோரு­கின்ற நட­வ­டிக்கைள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­ற­னவே தவிர, நீதி­கோரி நடத்­தப்­ப­டு­கின்ற அந்தப் போராட்­டங்கள் அடுத்­த­டுத்த கட்­டங்­களை நோக்கி ெவவ்வேறு வடி­வங்­களில் முன்­ன­கர்த்திச் செல்­லப்­ப­டு­வ­து­மில்லை. அத்­த­கைய நட­வ­டிக்­கை­களின் மூலம் அர­சுக்கு அழுத்தம் கொடுத்து பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­கின்ற போராட்ட உத்­தியும் நுட்­ப­மான தந்­தி­ரோ­பாய நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தில்லை. 

ஒன்­றி­ணை­வு­மில்லை, ஒருங்­கி­ணைந்த தொடர் நட­வ­டிக்­கை­க­ளு­மில்லை

கண்­டன அறிக்­கை­களும் போராட்­டங்­களும் ஊட­கங்­களில் வெளி­வந்தால் போதும் என்ற அர­சியல் மனப்­பாங்­குடன் நகர்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தையே காண முடி­கின்­றது. அத்­துடன் பொது­மக்­களின் பிர­தி­நி­தி­க­ளாக உள்­ள­வர்கள், அவர்கள் எந்தக் கட்­சியைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருந்­தா­லும்­ சரி, மக்­க­ளுக்­காகச் செயற்­ப­டு­கின்றோம் என்ற பொது நோக்­கத்தில் பாதிப்­பு­க­ளுக்கு எதி­ராக ஒன்­றி­ணைந்த நிலையில் குரல் கொடுப்­ப­தில்லை. போராட்ட நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­து­மில்லை.

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களில் கட்சி அர­சி­யலே முன்­னிலை வகிக்­கின்­றது. பிரச்­சி­னை­களைத் தீர்த்து மக்­க­ளுக்கு நீதி­யையும் நிம்­ம­தி­யையும் தேடித்­தர வேண்டும் என்ற பொது நோக்­குடன் செயற்­ப­டு­வதைக் காண முடி­யா­துள்­ளது. 

தமிழ் மக்­களின் ஏகோ­பித்த ஆத­ரவைப் பெற்­றுள்ள தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு அர­சியல் அரங்கில் முன்­னி­லையிலிருந்து செயற்­ப­டு­கின்ற போதிலும் போதாத வினைத்­தி­ற­னு­டைய அதன் செயற்­பா­டுகள் பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்­தியில் அவ­நம்­பிக் கை­யையே ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. 

கூட்­ட­மைப்­புக்­குள்­ளே­யும் ­சரி, கூட்­ட­மைப்­புக்கு வெளி­யி­லும்­ சரி ஏனைய கட்­சி­க­ளுடன் தமிழ் மக்­க­ளு­டைய பொதுப்­பி­ரச்­சி­னை­களில் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­கின்ற தன்­மையை கூட்­ட­மைப்பின் தலை­மை­யி­டமும் கூட்­ட­மைப்பின் தலை­மைக்­கட்­சி­யா­கிய இலங்கைத் தமிழரசுக் கட்சியிடமும் காண முடியாதுள்ளது.

இதனால் மாற்றுத்தலைமை ஒன்று அவசியம் என்ற அரசியல் உணர்வு வலுவடைந்து செல்கின்றது. இருப்பினும் மாற்றுத்தலைமை ஒன்றை உருவாக்குவதிலும் ஏனை தமிழ் அரசியல் கட்சிகள் குறிப்பாக கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றுள்ள கட்சிகளிடையே ஓர் இணக்கப்பாடு ஏற்படவில்லை. 

மாற்றுத் தலைமையை நோக்கிய நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையும் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் போக்கிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசியல் ரீதியான நடவடிக்கைகளில் அதனுடைய ஈடுபாட்டையும் மக்களை அணிதிரட்டி பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்கின்ற உறுதியான அரசியல் செயற்பாடுகளையும் அதனிடம் காணமுடியவில்லை. 

மறுபக்கத்தில் வடமாகாண முதலமைச்சர் மக்களுடைய மனங்களை வெல்லத்தக்கவையாகத் தோன்றுகின்ற கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும்கூட, வினைத்திறன் மிக்க அரசியல் தலைமைக்குரிய ஆளுமையை அவர் இன்னுமே வெளிப்படுத்தவில்லை. எனினும் அவருடைய தலைமையில் மாற்றுத்தலைமையை உருவாக்குவதற்கான முயற்சிகளும் இழுபறி நிலையைக் கடக்க முடியாமல் தேங்கி, தயங்கி நின்றுகொண்டிருக்கின்றன. 

மாற்றுத்தலைமையை உருவாக்க முயன்றுள்ள அரசியல் அணிகளும் தமக்குள்ளேயே ஒரு தலைமையை உருவாக்கிக் கொள்வதற்கும் இயலாத நிலையிலேயே காணப்படுகின்றன. இதனால் மாற்றுத்தலைமையை நோக்கிய நகர்வுகள் ஒன்றிணைந்த சக்தியைக் கொண்ட நகர்வாகக் காணப்படவில்லை. மாறாக நிலைகுலைந்து  சிதறுண்டு கிடக்கின்ற நிலையிலேயே புதிய தலைமை அல்லது மாற்றுத் தலைைமயை நோக்கிய அரசியல் நகர்வு நிலை காணப்படுகின்றது. இதனால் தமிழ் மக்களே மேலும் மேலும் பாதிக்கப்படத்தக்க நிலைமைகளை நோக்கி நகர்ந்து செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள். 

பி.மாணிக்­க­வா­சகம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-09-15#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.