Jump to content

தொடர்கதையாகும் பாதிப்பு


Recommended Posts

தொடர்கதையாகும் பாதிப்பு

 

ஒரு கட்­ட­மைப்பின் கீழ் ஒன்­றி­ணைந்த நிலையில் தமிழ் அர­சியல் தலை­வர்கள் செயற்­ப­டாமல் இருப்­பது துர­திர்ஷ்­ட­வ­ச­மா­னது. நீண்ட கால­மாக அர­சியல் உரி­மைகள் மறுக்­கப்­பட்ட ஒரு தேசிய இன­மாகத் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்ற நிலையில், தமிழ் அர­சியல் தலை­வர்கள் இவ்­வாறு ஒன்­றி­ணைந்து செயற்­ப­டாமல் அல்­லது செயற்­பட முடி­யாமல் இருப்­பது அந்த மக்­களை மேலும் மேலும் பாதிப்­ப­டை­யவே செய்­தி­ருக்கின்றது. 

மேலோட்டப் பார்­வையில் இந் நாட்டில் தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் உரி­மைகள் மறுக்­கப்­பட்­ட­தாகத் தெரி­வ­தில்லை. அவர்­களும் ஏனைய பெரும்­பான்மை இனத்­த­வ­ரா­கிய சிங்­கள மக்­களைப் போன்று சுதந்­தி­ர­மா­கத்­தானே வாழ்­கின்­றார்கள். இந்த நாட்டின் அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­தின்­படி, அவர்­க­ளுக்கு கல்வி கற்கும் உரிமை இருக்­கின்­றது. மொழி உரிமை இருக்­கின்­றது. அரச மற்றும் தனியார் துறை­களில் பணி­யாற்­று­வ­தற்­கான தொழில்­வாய்ப்­புக்கள் வழங்­கப்­ப­டு­கின்­றன. 

இது­போன்ற சட்­ட­ரீ­தி­யான நிலை­மை­க­ளுக்கு அப்பால், சிங்­க­ள­வர்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்ற நாட்டின் தலை­ந­க­ரா­கிய கொழும்­பிலும் அதன் சுற்­றுப்­பு­றங்கள் மட்­டு­மல்­லா­மல் கண்டி, காலி போன்ற சிங்­களப் பிர­தே­சங்­க­ளி­லும்­கூட தமிழ் மக்கள் சொந்­த­மாகக் காணிகள், வீடுகள் வாங்கி குடி­யி­ருந்து தொழில் செய்­வ­துடன் வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள். 

பல்­க­லைக்­க­ழ­கங்­களில் தமிழ் மாண­வர்கள் உள்­வாங்­கப்­ப­டு­கின்­றார்கள். வரு­டந்­தோறும் பலர் பட்­ட­தா­ரி­க­ளாக வெளி­வ­ரு­கின்­றார்கள். அது­மட்­டுமா? பொலிஸ் மற்றும் இரா­ணுவ படைத்­து­றை­யி­லும்­கூட தமி­ழர்கள் உள்­வாங்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். குறிப்­பாக யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்னர் இரா­ணு­வத்தில் இளம் தமிழ்ப்­பெண்கள் உள்­வாங்­கப்­பட்டு தேசிய பாது­காப்பு அணியில் அவர்கள் பங்­க­ளிப்பு செய்­யக்­கூ­டிய வாய்ப்பு வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. 

தேசிய அர­சி­யலில் முத­லிடம் வகிக்­கின்ற ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி போன்ற அதி முக்­கிய கட்­சி­களில் தமி­ழர்­க­ளுக்கு உறுப்­பு­ரிமை வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. முக்­கிய தலை­மைப்­ப­த­வி­களில் அவர்­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. எந்தக் கட்சி ஆட்­சிக்கு வந்­தா­லும் ­சரி, தமி­ழர்­க­ளுக்கு அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள முக்­கிய அமைச்சுப் பத­விகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. இரா­ஜாங்க அமைச்­சர்கள், பிரதி அமைச்­சர்கள் போன்ற பதவி நிலை­க­ளிலும் அவர்கள் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வ­தில்லை.

இந் நிலையில் தமிழ் மக்­க­ளுக்கு நாட்டில் எந்த வகையில் உரி­மைகள் மீறப்­பட்­டி­ருக்­கின்­றன? அல்­லது அவர்கள் இன ஒடுக்­கு­மு­றைக்கு ஆளாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்? தமி­ழர்­க­ளுக்கு உள்ள பிரச்­சி­னைதான் என்ன, என்­ப­துதான் சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தி­க­ளி­னதும் அவர்­க­ளு­டைய அர­சியல் சிந்­தனை வயப்­பட்­ட­வர்­களும் சாதா­ர­ண­மாக எழுப்­பு­கின்ற கேள்­வி­க­ளாகும்.

ஆனால் இந்தக் கேள்­வி­க­ளுக்கு அப்பால் ஆழ­மாக உற்று நோக்­கும்­போது வரி­சை­யாக பல பிரச்­சி­னைகள் மேலெ­ழு­வதைக் காண முடியும். தமிழ் மக்கள் எவ்­வாறு திட்­ட­மிட்ட வகையில் மறை­மு­க­மான ஒரு நிகழ்ச்­சி ­நி­ரலின் கீழ் ஒடுக்­கப்­பட்டும் நசுக்­கப்­பட்டும் வரு­கின்­றார்கள் என்­பதை தெளி­வாகத் தெரிந்து கொள்ள முடியும். இதில் சந்­தே­கத்­துக்கு இட­மில்லை. 

நிலைமை

சிங்­களப் பேரி­ன­வாத பாச­றையிலுள்­ள­வர்­க­ளும்­கூட பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் தடு­மா­றிய நிலையில் அல்­லது தவிர்க்க முடி­யாத நிலையில் தமிழ் மக்­க­ளு­டைய உரி­மைகள் மறுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அவர்கள் ஒடுக்­கப்­ப­டு­கின்­றார்கள் என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றார்கள். ஒப்­புக்­கொண்­டு­மி­ருக்­கின்­றார்கள். 

இவ் விட­யங்­களை சர்­வ­தே­சமும் நன்கு உணர்ந்­தி­ருக்­கின்­றது. ஐ.நா.வின் சிறப்பு அறிக்­கை­யா­ளர்கள் பலரும் அதே­போன்று சர்­வ­தேச நாடு­களைச் சேர்ந்த பல இரா­ஜ­தந்­தி­ரி­களும் தமிழ் மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்ற வடக்கு – கிழக்கு மற்றும் மலை­யகம் உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் அவர்கள் எவ்­வாறு வாழ்­கின்­றார்கள், அவர்­க­ளு­டைய அடிப்­படை உரி­மைகள், மனித உரி­மைகள், வாழ்­வு­ரி­மைகள், அர­சியல் உரி­மைகள் எந்­தெந்த வகை­களில் எல்லாம் மறுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன, மீறப்­பட்­டி­ருக்­கின்­றன என்­பதைக் கண்­ட­றிந்து வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றார்கள். 

இந்த வரி­சையில் இலங்­கைக்கு ஐ.நா.வின் பிர­தி­நி­தி­யாக 8 நாட்கள் விஜயம் ஒன்றை மேற்­கொண்­டி­ருந்த ஜுவான் பப்லோ பொஹோஸ்­லவ்ஸ்கி நுண் நிதிக் கடன் விவ­கா­ரத்தில் அதிர்ச்சி தரத்­தக்க விட­யங்­களை வெளி­யிட்­டுள்ளார்.

மனித உரி­மை­களை, குறிப்­பாக பொரு­ளா­தார, சமூக, கலா­சார உரி­மை­களை முழு­மை­யாக அனு­ப­விப்­பதில் அர­சு­களின் வெளி­நாட்டுக் கடன்கள் மற்றும் சர்­வ­தேச நிதிக்­க­டப்­பா­டுகள் செலுத்­து­கின்ற ஆதிக்கம் தொடர்­பி­லான சுயா­தீன நிபுணர் ஜுவான் பப்லோ பொஹோஸ்­லவ்ஸ்கி நுண் நிதிக் கடன் விவ­கா­ரத்தில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­களைச் சேர்ந்த பெண்கள் பாலியல் இலஞ்ச கொடு­மைக்கு ஆளா­கி­யி­ருப்­பது பற்­றியும், அந்தக் கடன்­களை செலுத்­து­வ­தற்­காக தமது சிறு­நீ­ர­கங்­களை விற்­ப­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள் என்­பது பற்­றியும் கண்­ட­றிந்து வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார்.

மனித உரிமை விவ­கா­ரங்­களில் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் எவ்­வாறு நிதி­யு­த­விகள் ஆதிக்கம் செலுத்த பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன என்­பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு ஐ.நா. மனித உரிமைப் பேரவை பப்லோ பொஹோஸ்­லவ்ஸ்­கிக்கு 25-9 என்ற இலக்கம் கொண்ட தீர்­மா­னத்தின் மூலம் அதி­காரம் வழங்­கி­யி­ருக்­கின்­றது. ஐ.நா. மனித உரிமை பேர­வையின் விசேட ஏற்­பா­டு­க­ளில் உள்­ள­டக்­கப்­பட்ட ஓர் அம்­ச­மாக இவர் நாடு­க­ளுக்கு விஜயம் செய்து நிலை­மை­களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்கு உள்­வாங்­கப்­பட்­டுள்ளார்.   

சர்­வ­தேச நிபு­ணர்­களும் ஐ.நா. அறிக்­கை­யா­ளர்­களும் சர்­வ­தேச இரா­ஜ­தந்­தி­ரி­களும் வெளி­யிட்­டுள்ள பல்­வேறு தக­வல்கள் இலங்­கையின் தேசிய இன­மா­கிய தமிழ் மக்கள் எந்தள­வுக்கு பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள் என்­பதை தெட்டத்தெளி­வாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன. இதற்கு ஜுவான் பப்லோ பொஹோஸ்­லவ்ஸ்கி நுண் நிதிக்கடன் விவ­கா­ரத்தில் வெளி­யிட்­டுள்ள தக­வல்கள் சிறந்த உதா­ர­ண­மாக அமைந்­தி­ருக்­கின்­றன. 

துர­திர்ஷ்டம் என்­ன­வென்றால் உள்­ளூரில் உள்ள எவரும் குறிப்­பாக யுத்தத்தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நி­தி­க­ளா­கிய அர­சி­யல்­வா­திகள் எவரும் இந்த விட­யத்தில் கவனம் செலுத்­தி­ய­தாகத் தெரி­ய­வில்லை. ஈ.பி.­ஆர்­.எல்.எவ். கட்­சியின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் கடை­சி­யாக நடத்­திய செய்­தி­யா­ளர்கள் சந்­திப்­பின்­போது தனது கட்­சியின் செய­லா­ளரும் வன்னி மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய சிவ­சக்தி ஆனந்தன் இந்த நுண் நிதிக் கடன்கள் எவ்­வாறு அப்­பாவி பொது­மக்­களைப் பாதித்­தி­ருக்­கின்­றன என்­பது குறித்து, 2016 ஆம் ஆண்டு வர­வு–­செ­லவுத் திட்­டத்தின் மீது உரை­யாற்­று­கையில் தெரி­வித்­தி­ருந்தார். இதன் பின்னர், நுண்­கடன் திட்­டத்தின் பாதிப்பைக் கண்­டித்தும், அதற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் எனவும் கோரி வவு­னி­யாவில் ஆர்ப்­பாட்டம் ஒன்று நடத்­தப்­பட்­டி­ருந்­தது. 

நுண்­கடன் திட்­டத்தின் மூலம் நன்­மை­ய­டை­வ­தற்­காகக் கட­னு­தவி பெற்­ற­வர்கள் மீது பிர­யோ­கிக்­கப்­பட்ட மனி­தா­பி­மா­ன­மற்ற நட­வ­டிக்­கை­க­ளினால் வடக்­கிலும் கிழக்­கிலும் மன­மு­டைந்து போன­வர்கள் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றி­ருந்­தன. சமூக பொறுப்­புள்ள சில நிறு­வ­னங்­களும் இவ் விடயம் குறித்து ஆராய்ந்து அறிக்­கை­களை வெளி­யிட்­டி­ருந்­தன.

தற்­கொலைச் சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து நுண்­கடன் திட்­டத்­துக்கு எதி­ரான எதிர்ப்பு வலு­வ­டைந்து பல இடங்­க­ளிலும் ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தப்­பட்­டி­ருந்­தன. இப் பின்­ன­ணி­யி­லேயே மனித உரி­மை­களை மீறு­கின்ற வகையில் நிதி­யு­த­விகள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற விவ­காரம் குறித்த சர்­வ­தேச நிபுணர் ஜுவான் பப்லோ பொஹோஸ்­லவ்ஸ்கி இவ் விட­யத்தில் பாலியல் இலஞ்சம் கோரு­கின்ற நிலை­மையை வெளிச்­சத்துக்குக் கொண்டு வந்­துள்ளார். 

பொறுப்­புக்கள் பற்­றிய பொறுப்­பு­ணர்வு

ஆனால் தமிழ் அர­சியல் தலை­வர்கள் இந்த விட­யங்­களை எந்த அள­வுக்கு ஆழ­மா­கவும் தீவி­ர­மா­கவும் வெளியில் கொண்டு வந்­தி­ருக்­கின்­றார்கள் என்­பதும் தமிழ் மக்­களின் உண்­மை­யான நிலை­மை­களை வெளிப்­ப­டுத்தத் தக்க ஆதா­ரங்­களை ஆவ­ண­மாக்­கி­யி­ருக்­கின்­றார்கள் என்­பதும் கேள்­விக்­கு­ரி­யது. 

மிக­ மோ­ச­மான முறையில் மனித உரி­மைகள் மீறப்­பட்­டி­ருக்­கின்­றன. யுத்­த­கா­லத்­திலும் அதற்குப் பின்­னரும் பலர் மோச­மான முறையில் கொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். மனி­தா­பி­மா­ன­மற்ற முறையில் ஆட்கள் கடத்­தப்­பட்டும் கைது செய்­யப்­பட்டும் காணாமல் ஆக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். இரா­ணு­வத்­தி­னரால் பொது­மக்­க­ளு­டைய காணிகள் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அவற்றை விடு­விப்­பதில் அர­சாங்கம் "ஆமை வேகத்தில்" செய­லாற்­றிக்­கொண்­டி­ருக்­கின்­றது. அர­சியல் கைதி­களின் விடு­தலை என்­பது நீண்­ட­தொரு விவ­கா­ர­மாக சிக்­கல்கள் நிறைந்­த­தாக அரச தரப்­பி­னரால் மாற்­றப்­பட்டு அர­சியல் கைதிகள் என்று எவ­ருமே கிடை­யாது என்று அரசாங்கம் அடித்துக் கூறி வரு­கின்­றது. அடைத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்கள் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள்.அவர்கள் சட்­ட­ரீ­தி­யா­கவே அணு­கப்­ப­டு­வார்கள் என்­பதில் பிடி­வாதம் பேணப்­ப­டு­கின்­றது.

மீள்­கு­டி­யேற வேண்­டி­ய­வர்­க­ளு­டைய காணி­களை வன­ப­ரி­பா­லன திணைக்­க­ளமும் தனது பங்­குக்கு அப­க­ரித்து அவற்றைத் தனது உட­மை­யாக்­கு­வ­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருக்­கின்­றது. மீள்­கு­டி­யேற்­றப்­பட்ட வறு­மைக்­கோட்­டுக்கு உட்­பட்ட குடும்­பங்­களின் நிரந்­தர வாழ்­வா­தாரத் திட்­டங்கள் குறித்து அர­சாங்கம் அக்­கறை கொள்­வ­தில்லை. வடக்கு – கிழக்கிலுள்ள வேலை­தேடும் பட்­ட­தா­ரி­களை உள்­வாங்கி அவர்­க­ளு­டைய மனித வலுவை தேசிய வளர்ச்­சிக்குப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு உரிய திட்­டங்கள் அர­சாங்­கத்­திடம் இல்லை. 

இதை­யும்­விட, தமிழ்ப்­பி­ர­தே­சங்­களில் தமிழ் மக்­களின் பாரம்­ப­ரிய இன விகி­தா­சா­ரத்தைத் தலை­கீ­ழாக்கும் நோக்­கத்­து­ட­னான திட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்­றங்கள், யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட தமிழ்க்­கி­ரா­மங்­க­ளிலும் தமிழர் பகு­தி­களிலுள்ள கடற்­கரை பிர­தே­சங்­க­ளிலும் தென்­னி­லங்­கையைச் சேர்ந்த பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்­த­வர்கள் திட்­ட­மிட்ட வகையில் தொழில் செய்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றார்கள். 

விவ­சாயம் மற்றும் மீன்­பிடி தொழில்­து­றை­களில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற இந்த ஆக்­கி­ர­மிப்பு கார­ண­மாக யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட உள்­ளூர்­வா­சிகள் மிக மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். 

இது­போன்று எத்­த­னையோ பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. இந்தப் பிரச்­சி­னை­க­ளினால் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் பெரும் நெருக்­க­டி­க­ளுக்குள்­ளா­கி­யி­ருக்­கின்­றார்கள். அவர்­க­ளு­டைய நாளாந்த வாழ்­வா­தாரம், குடும்பப் பொரு­ளா­தாரம் என்­பன மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இவ் விட­யங்கள் குறித்து அர­சி­யல்­வா­திகள் ஒன்­றி­ணைந்த முறையில் கவனம் செலுத்­து­வதைக் காண முடி­ய­வில்லை.  

அவ்­வப்­போது, அடக்­கு­மு­றைகள் மற்றும் பாதிப்­பு­களை எதிர்த்து ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. இந்த ஆர்ப்­பாட்­டங்­களும் உதி­ரி­க­ளா­கவே நடத்­தப்­ப­டு­கின்­றன.

ஒரு பிரச்­சினை குறித்து ஒரு தடவை ஆர்ப்­பாட்டம் நடத்தி, அது குறித்து ஊட­கங்­களில் செய்தி வர­வேண்டும் என்­பதை இலக்­காகக் கொண்டு இந்த எதிர்ப்பு நட­வ­டிக்­கைகள் அல்­லது நியாயம் கோரு­கின்ற நட­வ­டிக்கைள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­ற­னவே தவிர, நீதி­கோரி நடத்­தப்­ப­டு­கின்ற அந்தப் போராட்­டங்கள் அடுத்­த­டுத்த கட்­டங்­களை நோக்கி ெவவ்வேறு வடி­வங்­களில் முன்­ன­கர்த்திச் செல்­லப்­ப­டு­வ­து­மில்லை. அத்­த­கைய நட­வ­டிக்­கை­களின் மூலம் அர­சுக்கு அழுத்தம் கொடுத்து பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­கின்ற போராட்ட உத்­தியும் நுட்­ப­மான தந்­தி­ரோ­பாய நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தில்லை. 

ஒன்­றி­ணை­வு­மில்லை, ஒருங்­கி­ணைந்த தொடர் நட­வ­டிக்­கை­க­ளு­மில்லை

கண்­டன அறிக்­கை­களும் போராட்­டங்­களும் ஊட­கங்­களில் வெளி­வந்தால் போதும் என்ற அர­சியல் மனப்­பாங்­குடன் நகர்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தையே காண முடி­கின்­றது. அத்­துடன் பொது­மக்­களின் பிர­தி­நி­தி­க­ளாக உள்­ள­வர்கள், அவர்கள் எந்தக் கட்­சியைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருந்­தா­லும்­ சரி, மக்­க­ளுக்­காகச் செயற்­ப­டு­கின்றோம் என்ற பொது நோக்­கத்தில் பாதிப்­பு­க­ளுக்கு எதி­ராக ஒன்­றி­ணைந்த நிலையில் குரல் கொடுப்­ப­தில்லை. போராட்ட நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­து­மில்லை.

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களில் கட்சி அர­சி­யலே முன்­னிலை வகிக்­கின்­றது. பிரச்­சி­னை­களைத் தீர்த்து மக்­க­ளுக்கு நீதி­யையும் நிம்­ம­தி­யையும் தேடித்­தர வேண்டும் என்ற பொது நோக்­குடன் செயற்­ப­டு­வதைக் காண முடி­யா­துள்­ளது. 

தமிழ் மக்­களின் ஏகோ­பித்த ஆத­ரவைப் பெற்­றுள்ள தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு அர­சியல் அரங்கில் முன்­னி­லையிலிருந்து செயற்­ப­டு­கின்ற போதிலும் போதாத வினைத்­தி­ற­னு­டைய அதன் செயற்­பா­டுகள் பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்­தியில் அவ­நம்­பிக் கை­யையே ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. 

கூட்­ட­மைப்­புக்­குள்­ளே­யும் ­சரி, கூட்­ட­மைப்­புக்கு வெளி­யி­லும்­ சரி ஏனைய கட்­சி­க­ளுடன் தமிழ் மக்­க­ளு­டைய பொதுப்­பி­ரச்­சி­னை­களில் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­கின்ற தன்­மையை கூட்­ட­மைப்பின் தலை­மை­யி­டமும் கூட்­ட­மைப்பின் தலை­மைக்­கட்­சி­யா­கிய இலங்கைத் தமிழரசுக் கட்சியிடமும் காண முடியாதுள்ளது.

இதனால் மாற்றுத்தலைமை ஒன்று அவசியம் என்ற அரசியல் உணர்வு வலுவடைந்து செல்கின்றது. இருப்பினும் மாற்றுத்தலைமை ஒன்றை உருவாக்குவதிலும் ஏனை தமிழ் அரசியல் கட்சிகள் குறிப்பாக கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றுள்ள கட்சிகளிடையே ஓர் இணக்கப்பாடு ஏற்படவில்லை. 

மாற்றுத் தலைமையை நோக்கிய நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையும் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் போக்கிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசியல் ரீதியான நடவடிக்கைகளில் அதனுடைய ஈடுபாட்டையும் மக்களை அணிதிரட்டி பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்கின்ற உறுதியான அரசியல் செயற்பாடுகளையும் அதனிடம் காணமுடியவில்லை. 

மறுபக்கத்தில் வடமாகாண முதலமைச்சர் மக்களுடைய மனங்களை வெல்லத்தக்கவையாகத் தோன்றுகின்ற கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும்கூட, வினைத்திறன் மிக்க அரசியல் தலைமைக்குரிய ஆளுமையை அவர் இன்னுமே வெளிப்படுத்தவில்லை. எனினும் அவருடைய தலைமையில் மாற்றுத்தலைமையை உருவாக்குவதற்கான முயற்சிகளும் இழுபறி நிலையைக் கடக்க முடியாமல் தேங்கி, தயங்கி நின்றுகொண்டிருக்கின்றன. 

மாற்றுத்தலைமையை உருவாக்க முயன்றுள்ள அரசியல் அணிகளும் தமக்குள்ளேயே ஒரு தலைமையை உருவாக்கிக் கொள்வதற்கும் இயலாத நிலையிலேயே காணப்படுகின்றன. இதனால் மாற்றுத்தலைமையை நோக்கிய நகர்வுகள் ஒன்றிணைந்த சக்தியைக் கொண்ட நகர்வாகக் காணப்படவில்லை. மாறாக நிலைகுலைந்து  சிதறுண்டு கிடக்கின்ற நிலையிலேயே புதிய தலைமை அல்லது மாற்றுத் தலைைமயை நோக்கிய அரசியல் நகர்வு நிலை காணப்படுகின்றது. இதனால் தமிழ் மக்களே மேலும் மேலும் பாதிக்கப்படத்தக்க நிலைமைகளை நோக்கி நகர்ந்து செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள். 

பி.மாணிக்­க­வா­சகம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-09-15#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.