Jump to content

சென்னையில் சிறப்பு நீதிமன்றம்.... 'கிலி'யில் 75 குற்றப் பின்னணி எம்.எல்.ஏ-க்கள்!


Recommended Posts

சென்னையில் சிறப்பு நீதிமன்றம்.... 'கிலி'யில் 75 குற்றப் பின்னணி எம்.எல்.ஏ-க்கள்!

 

சென்னையில் சிறப்பு நீதிமன்றம் ஸ்டார்ட். கிலியில் 75 குற்றப் பின்னணி எம்.எல்.ஏ-கள்

சென்னையில் சிறப்பு நீதிமன்றம்.... 'கிலி'யில் 75 குற்றப் பின்னணி எம்.எல்.ஏ-க்கள்!
 

`தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்குத் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்’ என வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யா பொதுநல வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் போட்டார். நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, `குற்றப் பின்னணி கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ-களை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்’ எனக் கடந்த ஆண்டு நவம்பரில் உத்தரவிட்டது. இதன்பிறகு இந்த வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது `குற்றப் பின்னணி மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். இதில் இரண்டு நீதிமன்றங்கள் 228 எம்.பி-க்கள் தொடர்பான ஊழல் வழக்குகளை விசாரிக்கும். 65-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ள தமிழ்நாடு, ஆந்திரா, பீகார், கர்நாடகா, கேரளா, மத்தியபிரதேசம், மராட்டியம், தெலங்கானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 10 மாநிலங்களில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும். இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க 7.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.' என மத்திய அரசு தெரிவித்தது.  

`நீண்ட காலமாக எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-கள் மீது நிலுவையில் உள்ள 1,581 வழக்குகளை இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள் ஓர் ஆண்டுக்குள் விசாரித்துத் தீர்ப்பு அளிக்க வேண்டும். இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள் மார்ச் 1-ம் தேதி முதல் செயல்பட வேண்டும்' என சுப்ரீம் கோர்ட் டிசம்பரில் உத்தரவு போட்டது.  

அ.தி.மு.க. எம்.எல்.ஏ-கள் 28 பேர் மீதும் தி.மு.க. எம்.எல்.ஏ-கள் 42 பேர் மீதும் குற்ற வழக்குகள் இருக்கின்றன. மாவட்டங்களில் மந்த கதியில் நடைபெறும் இந்த வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டால் விரைந்து முடிக்கப்படும். அதனால், சிறப்பு நீதிமன்றத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி வந்தது தமிழக அரசு. மற்ற மாநிலங்களிலும் தனி நீதிமன்றங்கள் அமைப்பதிலும் வழக்குகளை ஒதுக்குவதிலும் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் பிரமாணபத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், `மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க 11 மாநிலங்களில் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தின் அந்தஸ்து குறிப்பிடப்படவில்லை' எனத் தெரிவித்திருக்கிறது. `சிறப்பு நீதிமன்றத்துக்கு 1,233 வழக்குகள் மாற்றப்பட்டுள்ளன. இதில் 136 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. 1,097 வழக்குகள் நிலுவையில் உள்ளன’ எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  

 

 

MLA

வழக்கை விசாரித்த நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச், எம்பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் குறித்து தகவல்களை அக்டோபர் 10-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் உயர் நீதிமன்ற பதிவாளர்களுக்கு உத்தரவிட்டது. சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட வேண்டிய வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் சொன்னது.  

 

 

இப்படியான சூழலில்தான் தனி நீதிமன்றத்தை அமைப்பதில் தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை. மற்ற மாநிலங்கள் சிலவற்றில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு வழக்குகள் மாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் தனி நீதிமன்றம் அமைக்காமல் இருந்தார்கள். தற்போது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக அரசின் உள் துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி தனி நீதிமன்றம் அமைக்கப்படும் எனக் கடந்த 6-ம் தேதி அரசிதழ் வெளியிட்டிருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பரிலும் டிசம்பரிலும் சுப்ரீம் கோர்ட் போட்ட உத்தரவுக்கு இப்போதுதான் செயல் வடிவம் கொடுத்திருக்கிறார்கள்.

சிறப்பு நீதிமன்றம்

1991-1996 அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல்களை விசாரிப்பதற்காகத் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. அந்த நீதிமன்றங்கள் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டன. அதே இடத்தில்தான் இந்தச் சிறப்பு நீதிமன்றமும் அமையும் எனத் தெரிகிறது. இதுபற்றி இறுதி முடிவைச் சென்னை உயர் நீதிமன்றம் விரைவில் எடுக்கும். சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியையும் முடிவு செய்வார்கள். 

சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்றப்படும் வழக்கு விவரங்களைத் தரச் சொல்லி அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருக்கும் நிலையில் இந்த நடைமுறைகள் விரைவில் தொடங்கும். சிறப்பு நீதிமன்றம் உடனே அமைக்கப்படுவதோடு எம்.எல்.ஏ-கள் மீது மாவட்டங்களில் உள்ள வழக்குகள் இங்கே மாற்றப்படும். இந்த விவரங்கள் அனைத்து அக்டோபர் 10-ம் தேதிக்குள் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்.

MLA

 

2016 சட்டசபைத் தேர்தலில் ஜெயித்த 232 எம்.எல்.ஏ-க்களில் 75 பேர் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள். இதில் கருணாநிதி, ஜெயலலிதா இப்போது உயிருடன் இல்லை. இடைத் தேர்தலில் வென்ற டி.டி.வி தினகரன் மீது ஐந்து வழக்குகள் இருக்கின்றன. மொத்தம் 74 எம்.எல்.ஏ-கள் மீதான வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கப் போகிறது. இவர்களில் 42 பேர் மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என சீரியஸ் வழக்குகள் இருக்கின்றன. குற்றப் பின்னணி எம்.எல்.ஏ-களில் 27 பேர் அ.தி.மு.க-வினர். 42 பேர் தி.மு.க-வினர். 5 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

https://www.vikatan.com/news/tamilnadu/136866-mlas-with-criminal-background-to-be-queried-by-special-court.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.