Jump to content

யாழ் மாவட்ட கிரிக்கெட்டில் புதிய முயற்சி “ ஜெப்னா சுப்பர் லீக்”


Recommended Posts

யாழ் மாவட்ட கிரிக்கெட்டில் புதிய முயற்சி “ ஜெப்னா சுப்பர் லீக்”

FB_IMG_1536814774301-696x418.jpg
 

யாழ். மாவட்டத்தில் கழகமட்ட கிரிக்கெட் விளையாட்டினை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தும் நோக்குடன் T20 லீக் போட்டித் தொடர் ஒன்றினை யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினர் ஏற்பாடு செய்துவருகின்றனர்.  

 “Jaffna Super League” என பெயரிடப்பட்டிருக்கின்ற இந்த போட்டித் தொடரிற்கு யாழ் மாவட்டத்தின் பிரதான நகரங்களை மையமாகக்கொண்ட 08 அணிகள் உருவாக்கப்படும். போட்டித் தொடரில் அணியின் உரிமையாளராக ஆர்வமுள்ளவர்கள் தமது கேள்வித் தொகையினை யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினரிடம் முன்வைக்க வேண்டும். கேள்வித் தொகையின் அடிப்படையில், அதிகூடிய தொகையினை முன்வைத்த முதல் 08 விண்ணப்பதாரிகளும் அணிகளின் உரிமையாளர்களாக ஒப்பந்தம் செய்யப்படுவார்கள்.  

 

 

அணிகளின் உரிமையாளர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (16.09.2018) உறுதி செய்யப்படுவர்.  அதன் பின்னர் வீரர்கள் ஏலத்திற்கான ஏற்பாடுகள் இடம்பெறும். ஜி.பி.எல் போன்று அல்லாது உரிமையாளர்கள் கிரிக்கெட் சங்கம் நிர்ணயிக்கும் தொகைக்குட்பட்டே வீரர்களை ஏலத்தில் கொள்வனவு செய்ய வேண்டும். ஏலத்தொகை வீரர்களிற்கு வழங்கப்படமாட்டாது.  

ஏலத்தில் பங்கெடுக்க விரும்பும் வீரர்கள் யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட 25 கழகங்களினூடாக மட்டுமே தமது விண்ணப்பத்தினை முன்வைக்கலாம்.  

ஒரு அணிக்கு 15 வீரர்களை மட்டுமே ஏலத்தில் கொள்வனவு செய்யலாம்.  ஒரு கழகத்திலிருந்து 05 வீரர்களை தெரிவு செய்யலாம். ஆனால் 04 வீரர்கள் மட்டுமே விளையாடும் பதினொருவருள் இடம்பிடிக்க முடியும்.

யாழ்ப்பாணத்தில் ஜி.பி.ல் போட்டித் தொடர் பிரபல்யமடைந்ததனைத் தொடர்ந்து, கடந்த வருடத்தில் கழக அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட V.T. மகாலிங்கம் பிறீமியர் லீக்கிற்கு பிரதியீடாக இந்த ஜெப்னா சுப்பர் லீக் போட்டித் தொடர் அறிமுகம் செய்யப்படுகின்றது.  ஆனால், ஜி.பி.எல் போன்று ஏலத்தொகை வீரர்களிற்கு வழங்கப்படமாட்டாது என்பது இந்த சுற்றுத் தொடரில் உள்ள வேறுபாடாகும்.   

அதேவேளை, வெற்றிபெறும் அணிகளுக்கான பரிசுத்தொகையினை வீரர்களிற்கு பகிர்ந்தளிப்பதற்கு ஏற்பாட்டாளர்கள் உத்தேசித்துள்ளனர்.

போட்டித் தொடரினை ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அதேவேளை, வார இறுதி நாட்களில் மட்டும் போட்டிகளை நடாத்துவதற்கும் திட்டமிட்டுள்ளனர்.

 

 

இந்த தொடர் குறித்து விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்போது, யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் வி.மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில்,

யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் மைதான உட்கட்டுமானப் பணிகள் வெகு விரைவில் நிறைவடைந்து விடும். அடுத்த ஆண்டளவில் இந்த மைதானத்தில் போட்டிகள் இடம்பெறுகின்ற போது நாம் ஏனைய மாவட்ட வீரர்களையும் உள்வாங்கி போட்டியின் தரத்தினை மேம்படுத்தலாம். மண்டைதீவில் அமையப்பெறவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பணிகள் நிறைவுபெறும் பட்சத்தில் நாம் சர்வதேச வீரர்களையும் உள்வாங்கி, இத்தொடரினை ஓர் சர்வதேச தரத்திலான போட்டியாக மாற்ற முடியும். “எனத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இப்போட்டியின் தரத்தினை உயர்த்துவதில் வீரர்கள், அணி உரிமையாளர்கள், ஊடகங்களினது பங்களிப்பும், இவை அனைத்திற்கும் மேலாக மக்கள் பங்கேற்பும் அவசியம். “ என்பதனை வலியுறுத்தினார்.

யாழ் மாவட்ட கிரிக்கெட் வீரர்களை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதற்கும், அவர்களது திறமைகளையும், சிறப்பான பெறுதிகளையும் வெளிக்காட்டுவதற்குமான களமாக யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஜெப்னா சுப்பர் லீக்கினை அறிமுகம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்களுக்கு

சுற்றுப்போட்டித் தலைவர்

யாழ் மாவட்ட துடுப்பாட்டச் சங்கம்

0773144627

http://www.thepapare.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.