Jump to content

சர்வதேச சமூகத்தின் தலையீடு அவசியம் என்கிறது கூட்டமைப்பு


Recommended Posts

சர்வதேச சமூகத்தின் தலையீடு அவசியம் என்கிறது கூட்டமைப்பு 

 

(ஆர்.யசி)

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் உள்ளக நகர்வுகள் மிகவும் மோசமானதாக உள்ளன.  தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்கும் வரையில் சர்வதேச மேற்பார்வை இருப்பது அவசியம்.  உண்மைகளை கண்டறியும் பொறிமுறையில் இலங்கையின் நீதித்துறை செயற்பாடுகள் மோசமானவையாகும். எனவே சர்வதேச நீதிமன்ற தலையீடுகள் அவசியம் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

sum.jpg

ஜனாதிபதி ஜெனிவா செல்ல  முன்னர் நாம் மனித உரிமை  ஆணையாளரிடம் இலங்கையின் உண்மை தன்மையை தெரிவிப்போம் எனவும்  அவர் குறிப்பிட்டார். 

முப்படைகளின் அலுவலக  பிரதானி ரவீந்திர விஜய குணரத்ன குறித்து அதிகமாக விமர்சனங்கள் மற்றும் அரச தரப்பின் பாதுகாப்பில் அவர்  பாதுகாக்கப்படுகின்றார்  என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் அது குறித்தும், ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொறுப்புக்கூறல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன்  இதனைக் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/40441

Link to comment
Share on other sites

தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது - அரசாங்கத்தின் மீது கூட்டமைப்பு அதிருப்தி 

 

 

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை காப்பாற்றாது தப்பிப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது. காரணம் இரண்டு தடவைகள் இலங்கை அரசாங்கம் தானாக இணை அனுசரணை வழங்கியுள்ளது. 

sumanthiran.jpg

எனவே தொடர்ந்தும் தமிழ் மக்களை அரசாங்கம் ஏமாற்ற முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

தற்போது அரசாங்கம் தேர்தல்களிலேயே தனது முழுக்கவனத்தையும் செலுத்தியுள்ளது. இதன் காரணமாக அரசியல் தீர்வு கேள்விக்குறியாக்கப்படுமா? ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவத்தினரை பாதுகாக்கும் நோக்கிலேயே செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

எனவே தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவார்களா போன்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/40471

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.