Jump to content

மாலத்தீவு: இந்திய-சீன மல்யுத்தக் களம்


Recommended Posts

மாலத்தீவு: இந்திய-சீன மல்யுத்தக் களம்

 

 

 
6b95cbbfP1512091mrjpg

மாலத்தீவு நாட்டில் செப்டம்பர் 23 அன்று அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், அந்நாட்டின் அரசியல் மாற்றங்கள் குறித்த கவனம் எழுந்திருக்கிறது. சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டும் மாலத்தீவை இந்தியா எச்சரிக்கையுடன் அணுக வேண்டிய சூழலும் உருவாகியிருக்கிறது. சீனாவை நோக்கி மாலத்தீவு நகர்வதற்கு மாலத்தீவின் உள்நாட்டுக் குழப்பங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்நிலையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான புவியரசியலின் முக்கியக் களமாக மாறியிருக்கிறது மாலத்தீவு.

இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவு நீண்ட வரலாற்றைக் கொண்டது. இரு நாடுகளும் இன மற்றும் கலாச்சாரரீதியாக மிகவும் நெருக்கமான உறவு கொண்டவை. 1988 நவம்பரில் ஆயுதம் தாங்கிய குழுக்கள் அந்நாட்டைக் கைப்பற்ற முயன்றபோது ராணுவரீதியாகத் தலையிட்டு அதன் இறையாண்மையையும் ஆட்சியதிகாரத்தையும் காப்பாற்றியது இந்தியா. அதிலிருந்து இரு நாடுகளுக்குமான உறவு மேலும் வலுப்பட்டது. மாலத்தீவுக்குப் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான உதவிகளை இந்தியா தொடர்ந்து அளித்துவந்தது.

 

உறவும் விரிசலும்

2004-லிருந்து மாலத்தீவுகளில் மக்களாட்சிக்கு ஆதரவான இயக்கம் வலுப்பெறத் தொடங்கியபோது அந்நாட்டின் உள்விவகாரங்களில் இந்தியா உண்மையான அக்கறையைக் காட்டியது. 1978-லிருந்து அங்கு ஆட்சியிலிருந்த அதிபர் கயூமின் சர்வாதிகாரப் போக்குக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் சமூகச் செயற்பாட்டாளர்களும் அணிதிரளத் தொடங்கினர். இந்தியாவும் சர்வதேசச் சமூகமும் அளித்த அழுத்தங்களின் காரணமாக 2008-ல் முதன்முறையாக, பல கட்சிகள் போட்டியிட்ட சுதந்திரமான, நேர்மையான தேர்தல் மாலத்தீவில் நடந்தது. அந்நாடு சர்வாதிகார ஆட்சியிலிருந்து மக்களாட்சிக்கு மாறுவதற்குத் தேவையான உதவிகளை இந்தியா செய்தது. அந்தத் தேர்தலைக் கண்காணிக்க இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் பார்வையாளர்களும் அனுப்பப்பட்டனர். அரசியல் காரணங்களுக்காகச் சிறையிலிருந்த மொகமத் நஷீத் அந்தத் தேர்தலில் கயூமை எதிர்த்து நின்று வெற்றிபெற்றார். 2012 பிப்ரவரி மாதம் மாலத்தீவில் அரசியல் நெருக்கடி உருவாகும் வரை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சீராகவே இருந்தது.

2012-ல் எதிர்க்கட்சிகளும், சுயநல நோக்கம் கொண்ட சில குழுக்களும் ஒன்றுசேர்ந்து நஷீத்துக்கு நெருக்கடி தந்தன. இதையடுத்து அவர் பதவி விலக நேர்ந்தது. இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவில் விரிசல் விழத் தொடங்கியது அப்போதுதான்!

சீனாவிடம் நெருக்கம்

ரூ.3,500 கோடி மதிப்பில், மாலே சர்வதேச விமான நிலையத்தைப் புதுப்பித்தமைப்பது தொடர்பாக

ஜி.எம்.ஆர். என்ற இந்திய நிறுவனத்துக்குத் தரப்பட்டிருந்த திட்டம் ரத்துசெய்யப்பட்டது இந்த விரிசலைத் தெளிவாகக் காட்டியது. புதிய அரசின் அமைச்சர்கள் இந்தியாவுக்கு எதிராகவும், சீனாவுக்கு ஆதரவாகவும் கருத்துகளை வெளியிட்டனர். இந்தியாவின் நலன்களைப் பாதிக்கும் விதமாக மாலத்தீவின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் சீனா காலூன்றத் தொடங்கியது. 2014 செப்டம்பரில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாலத்தீவுக்குப் பயணம் மேற்கொண்டார். கடந்த 42 ஆண்டுகளில் சீன அதிபர் மாலத்தீவுக்கு வந்தது அதுவே முதல் முறை.

தெற்காசியப் பிரதேசத்தில் உள்ள வேறு சில நாடுகளில் நடப்பதைப் போலவே இங்கும் சீனா நிதியுதவி, கடன் ஆகியவற்றை அளித்து பல முக்கியமான, பெரிய அளவிலான அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்கியது. பொருளாதார ஒத்துழைப்பாகத் தொடங்கிய சீன-மாலத்தீவு உறவு, ஒருகட்டத்தில் பாதுகாப்பு-ராணுவம் தொடர்பான விவகாரங்களுக்கும் விரிவடைந்தது. சீனாவின் கப்பற்படை கப்பல்கள் மாலத்தீவுக்கு நட்புரீதியில் விஜயம் செய்தன. இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து துறைமுகங்களைக் கட்டும் பணியில் சீனா ஆர்வம் காட்டியது.  சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்தில் பங்கேற்பதில் மாலத்தீவு மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. இந்தத் திட்டத்தில் இந்தியா பங்கேற்கவில்லை என்பதுடன் இத்திட்டத்துக்கு எதிராக ஆட்சேபனைகளையும் இந்தியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தனது சில தீவுகளைச் சீனாவுக்கு நீண்டகால குத்தகைக்கும் விட்டிருக்கிறது மாலத்தீவு; அதுவும் மிகக் குறைந்த தொகைக்கு! சுற்றுலாவை வளர்ப்பதற்காக இவ்வாறு குத்தகைக்கு விடப்பட்டதாக விளக்கமும் சொன்னது.

இந்தியாவின் கவலை

எல்லாவற்றுக்கும் மேலாக, அவசர அவசரமாகக் கூட்டப்பட்ட மாலத்தீவு நாடாளுமன்றம் சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது. மாலத்தீவில் இப்படியெல்லாம் நடப்பது இதுவே முதல் முறை. இத்தனைக்கும், 17-வது சார்க் மாநாடு நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான், 2011 நவம்பரில் சீனா தனது தூதரக அலுவலகத்தை மாலத்தீவுகளில் திறந்தது. இந்நிலையில் மாலத்தீவின் போக்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் இந்தியாவுக்குக் கவலையை ஏற்படுத்தியிருப்பதில் ஆச்சரியமில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னர் மாலத்தீவுக்கு இந்தியா தந்த இரண்டு ஹெலிகாப்டர்களையும், அவற்றை இயக்கவும் பராமரிக்கவும் அனுப்பப்பட்ட குழுவினரையும் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு மாலத்தீவு சமீபத்தில் கூறியிருப்பது பிரச்சினையை மேலும் அதிகரித்திருக்கிறது. சீனாவுடனான நெருங்கிய உறவின் காரணமாகவே மாலத்தீவு இவ்வாறு துணிச்சலாக நடந்துகொள்கிறது. அதேசமயம், மாலத்தீவில் ராணுவத் தளங்களை அமைப்பதில் சீனா ஈடுபட்டுள்ளதாக வரும் தகவல்கள் ஆதாரமற்றவை. இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் ஆதிக்கத்தின் காரணமாக ராணுவத் தளங்களை அமைக்கச் சீனாவுக்கு இடமளிப்பது மாலத்தீவுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது.

பொது வேட்பாளர்

மாலத்தீவில் இன்று நிலவும் அரசியல் சூழலில் வெளிப்படைத்தன்மை இல்லை. பேச்சு சுதந்திரம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது, சட்டத்தின் ஆட்சி பலவீனமடைந்திருப்பது, எதிர்க்கட்சியினர், அரசியல் செயற்பாட்டாளர்கள், மக்களாட்சி நிறுவனங்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருப்பது ஆகியவை பெரிதும் கவலைக்குரிய விஷயங்களாக இருக்கின்றன. இந்த அடக்குமுறைகள் சர்வதேச அமைப்புகளாலும் தனிப்பட்ட பார்வையாளர்களாலும் வெளியுலகின் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்புச் சூழ்நிலைகளைக் காரணம்காட்டி 2018 பிப்ரவரி 5-ல் அதிபர் யாமீன், நெருக்கடிநிலையை அறிவித்தார். இது 45 நாட்களுக்கு நீடித்தது.

இந்தச் சூழ்நிலையில் மாலத்தீவு அதிபர் தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டுமென பரவலாகக் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அதிபர் யாமீனைத் தோற்கடிக்கவும் நாட்டின் அரசியலை இயல்புநிலைக்குக் கொண்டுவரவும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்தியுள்ளன. இந்தத் தேர்தலின் முடிவு இந்தியா, சீனாவுடனான மாலத்தீவின் உறவின் பாதையைத் தீர்மானிப்பதாக இருக்கும்.

- தோ.சி.கார்த்திகேயன், துணைப் பேராசிரியர், அரசியல் மற்றும் சர்வசேதச உறவுகள் துறை, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்.

https://tamil.thehindu.com/opinion/columns/article24940666.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவு நீண்ட வரலாற்றைக் கொண்டது. இரு நாடுகளும் இன மற்றும் கலாச்சாரரீதியாக மிகவும் நெருக்கமான உறவு கொண்டவை. 1988 நவம்பரில் ஆயுதம் தாங்கிய குழுக்கள் அந்நாட்டைக் கைப்பற்ற முயன்றபோது ராணுவரீதியாகத் தலையிட்டு அதன் இறையாண்மையையும் ஆட்சியதிகாரத்தையும் காப்பாற்றியது இந்தியா. அதிலிருந்து இரு நாடுகளுக்குமான உறவு மேலும் வலுப்பட்டது. மாலத்தீவுக்குப் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான உதவிகளை இந்தியா தொடர்ந்து அளித்துவந்தது. 

போட்டு ரெடி ..சோத்து பொர்சல் ரெடி .. ஆயுதமும் ரெடி. அனுப்பதான் ஆளை காணோம்.. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

போட்டு ரெடி ..சோத்து பொர்சல் ரெடி .. ஆயுதமும் ரெடி. அனுப்பதான் ஆளை காணோம்.. ?

பழைய கால உத்திகள் ஒன்றும் சரிவராது இங்கு புதுசா யோசிக்கணும் ஒரே வழி இருக்கு ஆனால் வரமாட்டினம் .

..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டடியிலை சீனா மாலைதீவிலை மாசிக்கருவாடு காயப்போடும் எண்ட நம்பிக்கை எனக்கிருக்கு..... :cool:

Link to comment
Share on other sites

 

1988 ல் புளட்டை மாலதீவை பிடிக்கசொல்லி அனுப்பிவிட்டு பின்னால் போய் மாலதீவை காப்பாற்றியதுபோல் இந்தியா நடந்துகொண்டது. இலங்கையிலும் அவ்வாறே ஒரு அணுகுமுறையை மேற்கொண்டு அதற்கு முதல் வருடம் படைகளை நுழைத்தது. இரண்டு நடவடிக்கையிலும் நேர்மையில்லை. பாதிக்கப்பட்டது தமிழர்களே. இன்று மாலதீவும் இலங்கையும் சீனாவின் ஆதிக்கத்துக்குஇந்தியாவால் எந்த அண்டைநாட்டையும் நண்பனாக வைத்திருக்க முடியாது. நேர்வளிகள் இருந்தாலும் அதன் மரபு முதுகில் குத்தியே பழக்கப்பட்ட அணுகுமுறையாக உள்ளது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.