Jump to content

இராணுவத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஜனாதிபதி!- கூட்டமைப்பு விமர்சனம்


Recommended Posts

இராணுவத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஜனாதிபதி!- கூட்டமைப்பு விமர்சனம்

 

sumanthiran-1-720x450.jpg

குற்றப்புலனாய்வு பிரிவின் அழைப்பை மீறி பாதுகாப்பு பிரிவின் தலைவர் வெளிநாடு சென்றமை தொடர்பாக, கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சித்துள்ளது.

ஜனாதிபதிக்கு தெரியாமல் பாதுகாப்பு பிரிவின் தலைவர் ரவீந்திர விஜேகுணரத்ன வெளிநாட்டிற்கு பயணிக்க வாய்ப்பில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வாக்குமூலமொன்றை பதிவுசெய்துக் கொள்வதற்காக ரவீந்திர விஜேகுணரத்ன குற்றப்புலனாய்வு பிரிவிற்கு கடந்த திங்கட்கிழமை அழைக்கப்பட்டிருந்தார்.

ஆனால், குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகாத பாதுகாப்பு பிரிவின் தலைவர் அன்றைய தினம் மெக்ஸிகோவிற்கு பயணித்துள்ளார்.

இந்நிலையிலேயே அவர் ஜனாதிபதிக்கு அறிவிக்காது வெளிநாடு செல்ல வாய்ப்பில்லை என கூட்டமைப்பின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டிய ஜனாதிபதி, உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக குற்றம்சாட்டப்படின் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறும், ஆனால் கைது செய்ய வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிலிருந்து இராணுவத்தினரை பாதுகாக்கும் முயற்சிகளிலும் ஜனாதிபதி தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இராணுவத்தை-பாதுகாக்கும்/

Link to comment
Share on other sites

முப்படை பிரதானி குறித்த விசாரணையில் சிறிசேன தலையிடுகின்றார்- சுமந்திரன்

 

இலங்கையின் முப்படைகளின் பிரதானி விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிடுகின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிஐடியினரின் விசாரணைகளில்  நேரடியாக தலையிடுவதன் காரணமாக வேறு வழியில்லாமல் இந்த விவகாரம் குறித்து சர்வதேச விசாரணையை கோரவேண்டியுள்ளது என சுமந்திரன் ஐலண்ட் நாளிதழிற்கு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதியொருவரே இந்த விவகாரத்தில் தலையிடுவதன் காரணமாக  உள்ளுர் நீதிப்பொறிமுறை மூலம் பாதிக்கப்பட்டவர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாத நிலை காணப்படுவதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

ரவிராஜ் கொலை மற்றும் கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள்   கடத்தப்பட்டமை போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி தலைமறைவாகயிருப்பதற்கு உதவினார் என முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜயகுணவர்த்தன மீது சிஐடியினர் குற்றம்சாட்டியுள்ள நிலையிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தில் தலையிடுகின்றார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ரவிராஜ் படுகொலை தொடர்பில் பல வழக்குகள் இன்னமும் நீதிமன்றின் முன்னாள் உள்ளன, இந்நிலையிலேயே ஹெட்டியாராச்;சி தலைமறைவானார் எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

sumanthiran.jpg

இது தவிர 11 தமிழ் இளைஞர்கள் கொழும்பில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பிலும் அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முப்படைகளின் பிரதானியொருவர் ஜனாதிபதிக்கு தெரிவிக்காமல் மெக்சிக்கோ சென்றிருக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள சுமந்திரன் முப்படைகளின் பிரதானி தொடர்பில் தற்போது எழுந்துள்ள குழப்பநிலைக்கு சிறினேச பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி படையினர் விவகாரங்களில் தலையிட்டுள்ளமை பொறுப்புக்கூறலில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு நீதிசெயற்பாடுகளில் ஜனாதிபதியொருவர் தலையிடுவது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆழ்ந்த கவலையடைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ள சுமந்திரன் முப்படைகளின பிரதானி விவகாரம் உயர்மட்டத்தில் காணப்படும் அரசியல் தலையீடுகளை புலப்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை படையினரால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த அடிப்படையிலும் இலங்கை அரசாங்கத்திடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள சுமந்திரன் ஜனாதிபதியே விசாரணைகளில்  தலையிடுவதால் உரிய நீதி கிடைப்பதை உறுதிசெய்வதற்காக ஐநா தலையிடவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/40393

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.