Jump to content

பெரம்பலூரில் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணை கொடூரமாகத் தாக்கும் திமுக ரவுடி


Recommended Posts

 

 

பியூட்டி பார்லரில் இளம்பெண்ணை கடுமையாகத் தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர்: கட்சியிலிருந்து இடைநீக்கம்

download%207jpg

பெரம்பலூரில் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணை தாக்கி எட்டி உதைத்து கொடுமைப்படுத்திய திமுக முன்னாள் கவுன்சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

பொதுவாக பெண்களை தாக்கும் அரசியல்வாதிகள் வடமாநிலங்களில் அதிகம் காணலாம். வீக்கர் செக்ஸ் என்று பெண்களை அழைப்பார்கள். பெண்களை தாக்குவது தரக்குறைவாக பேசுவதை சட்டம் கடுமையாக பார்க்கிறது.

சாதாரண ஆண்கள் அவ்வாறு நடப்பதையே கடுமையாக விமர்சிக்கப்படும் காலகட்டத்தில் பொதுவாழ்வில் இருப்பவர்கள் பெண்களை கடுமையாக தாக்குவதும், எட்டி உதைப்பதும் கடுமையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று.

திமுக போன்ற முக்கியமான கட்சிகளில் பொதுமக்களை தாக்குபவர்கள் பற்றிய செய்திகள் அதிகரித்து வருகிறது. அதற்கு கட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் பிரியாணி கடை ஒன்றில் ஊழியர்களை கடுமையாக தாக்கியவர்களை கண்டித்த ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். கட்சியிலிருந்து அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கடந்தவாரம் செல்போன் கடையில் ஊழியர் ஒருவரை திமுக பிரமுகர் தாக்கியதாக செய்தி வெளியான நிலையில் உச்சக்கட்டமாக பியூட்டி பார்லரில் இளம்பெண் ஒருவரை திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வக்குமார் கடுமையாக எட்டி உதைத்து கீழே தள்ளி தாக்கும் காட்சிகள் வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் பியூட்டி பார்லருக்கு சென்ற திமுக பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை, மேற்கு ஒன்றியம், அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் செல்வகுமார் என்பவர் பியூட்டி பார்லருக்குள் உள்ள பெண்களை தக்க முனைகிறார்.

கண்டபடி அவர்களை திட்டுகிறார், அறைக்குள் நுழைய முற்படும் அவரை சத்தியா என்ற இளம்பெண் தடுத்து பேசுகிறார், மற்றப்பெண்கள் சமாதானப்படுத்தும் நிலையில் முதலில் தடுத்த இளம்பெண் சத்தியாவை வயிற்றிலேயே எட்டி உதைக்கிறார். நிலை குலைந்த சத்தியா ஓரமாக போய் நிற்கிறார்.

download%206jpg
ஆனாலும் ஆத்திரம் அடங்காத அவர் அந்த இளம்பெண் சத்தியாவை மீண்டும் மீண்டும் உதைக்கிறார். வயிற்றில் திரும்ப திரும்ப உதைக்கப்படும் அவர் நிலைகுலைகிறார், பின்னர் அவரை பிடித்து கழுத்தை நெரித்து கீழே தள்ளுகிறார் செல்வகுமார். கீழே விழுந்த இளம்பெண்ணை மீண்டும் மீண்டும் மிதிக்கிறார். மற்றப்பெண்கள் தடுத்தும் மிதித்துக்கொண்டே இருக்கிறார். இதில் அந்தப்பெண் மயக்கமடைகிறார்.

இந்தச் சம்பவம் நடந்து 4 மாதம் ஆகியும் பெரம்பலூர் டவுன் போலீஸார் சத்தியா புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தவே அதன் சிசிடிவி காட்சியை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அது தொலைக்காட்சிகளில், இணையதளங்களில் வைரலாகவே தற்போது இளம்பெண் சத்தியாவை கொடூரமாக தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமாரை பெரம்பலூர் டவுன் போலீஸார் தற்போது கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே திமுக தலைமையகத்துக்கு இந்த தகவல் கிடைக்கவே திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சம்பந்தப்பட்ட திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமாரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article24941242.ece?utm_source=HP&utm_medium=hp-epick

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Athavan CH said:

அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

புரியானிக்கடை எண்டாலும் போன் கடைஎண்டாலும் இங்கும் திமுக வின் நடவடிக்கை தங்கள் உறுப்பினர்மீது அதிகபட்ச தண்டனை இடைநீக்கம் மட்டுமே குண்டர் படையைதான் திமுக நம்புது மே 18கும்முன் தமிழ்நாட்டு மாணவர்கள் கொந்தளிக்கும்போதும் இதே குண்டர்களை வைத்துதான் அடக்கியது . 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/14/2018 at 8:04 AM, Nathamuni said:

பதவி இல்லாத நிலையில் இந்தக் கூத்து.

ஜெயலலிதா இல்லாத தைரியம் எண்டு சொல்லுங்கோ...tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.