Jump to content

ரஷ்ய உளவாளி மீது நச்சு தாக்குதல்: "நாங்கள் சுற்றுலா பயணிகள்" எனக்கூறும் சந்தேக நபர்கள்


Recommended Posts

ரஷ்ய உளவாளி மீது நச்சு தாக்குதல்: "நாங்கள் சுற்றுலா பயணிகள்" எனக்கூறும் சந்தேக நபர்கள்

பிரிட்டனில் முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா மீது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நச்சுப் பொருள்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட ரஷ்ய நாட்டவர்கள் இருவர் தாங்கள் வெறும் சுற்றுலாப் பயணிகள் என்று ரஷ்ய அரசுத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தனர்.

அலெக்ஸாண்டர் பெட்ரோவ், ரஸ்லன் பாஷிரோவ்படத்தின் காப்புரிமைREUTERS Image captionசந்தேக நபர்கள்: அலெக்ஸாண்டர் பெட்ரோவ், ரஸ்லன் பாஷிரோவ்

அலெக்ஸாண்டர் பெட்ரோவ், ரஸ்லன் பாஷிரோவ் என்ற அந்த இருவரும் ஸ்கிரிபாலையும் யூலியாவையும் கொல்ல கடந்த மார்ச் மாதம் முயன்றதாகவும், அவர்கள் இருவரும் ஜி.ஆர்.யு. என்ற ரஷ்ய ராணுவ உளவு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பிரிட்டன் கூறிவந்தது.

இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட அந்த இருவரையும் கண்டறிந்திருப்பதாகவும், அவர்கள் இருவரும் ரஷ்யக் குடிமக்கள்தான் என்றும், ஆனால் அவர்கள் கிரிமினல்கள் அல்ல என்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சில தினங்களுக்கு முன்பு குறிப்பிட்டிருந்தார். அவர்களே நடந்தது என்ன என்பதை விரைவில் கூறுவார்கள் என்றும் அப்போதும் புதின் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆர்.டி. என்ற ரஷ்ய அரசு நடத்தும் சர்வதேசத் தொலைக்காட்சி சேனலில் பேசிய அவர்கள், நச்சுத் தாக்குதல் சம்பவம் நடந்ததாக கூறப்படும் சாலிஸ்பரிக்கு சுற்றிப் பார்க்க சென்றிருந்ததாகவும், ஆனால் ஒரு மணி நேரத்தில் லண்டனுக்கு திரும்பிவிட்டதாகவும் கூறினர்.

"சாரிஸ்பரி நகரம் சேறாக இருந்தது. நாங்களும் நனைந்துவிட்டோம். உடனடியாக ரயில் பிடித்து லண்டன் திரும்பினோம்" என்று அவர்கள் கூறினர்.

செர்கெய் ஸ்கிரிபால், அவரது மகள் யூலியா.படத்தின் காப்புரிமைREX FEATURES Image captionசெர்கெய் ஸ்கிரிபால், அவரது மகள் யூலியா.

ரஷ்ய கடவுச்சீட்டில் மார்ச் 2-ம்த தேதி மாஸ்கோவில் இருந்து லண்டனுக்கு வந்ததாகத் தெரியவரும் அந்த இருவர் மீதும் குற்றம் சுமத்த போதிய ஆதாரம் இருப்பதாக பிரிட்டனின் கிரௌன் புலனாய்வு சேவை தெரிவித்தது.

சாலிஸ்பரியின் வில்ட்ஷயரில் உள்ள ஸ்கிரிபால் வீட்டின் முன் கதவில் ராணுவ தரத்தில் உள்ள நோவிசோக் என்ற நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நச்சுப் பொருளை தெளித்த பிறகு அவர்கள் ரஷ்யா திரும்பியதாக இரண்டு நாள் கழித்து போலீஸ் கூறியது.

இந்த தாக்குதலால் ஸ்கிரிபாலும், அவரது மகள் யூலியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டு சில வாரம் தீவிர சிகிச்சைக்குப் பிறகு தேறினர். ஆனால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/global-45511146

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.