Jump to content

மிஸ் பண்ணக்கூடாத திக் திகில் பயணம்! - யூ டர்ன் விமர்சனம் #Uturn


Recommended Posts

மிஸ் பண்ணக்கூடாத திக் திகில் பயணம்! - யூ டர்ன் விமர்சனம் #Uturn

 
மிஸ் பண்ணக்கூடாத திக் திகில் பயணம்! - யூ டர்ன் விமர்சனம் #Uturn
 

கண்ணாடியும் ஃப்ரெஞ்சு தாடியுமாக என்ட்ரியான அந்த இளைஞரை 'யாரு சாமி நீங்க? எங்க இருந்து வந்தீங்க?' என ஆச்சரியமாக பார்த்தது கன்னட திரைப்பட உலகம். இன்று அதே இளைஞர் தமிழில் காலெடுத்து வைத்திருக்கிறார். 'லூசியா' என்ற மேஜிக்கல் படம் கொடுத்த பவண்குமாரின் பை-லிங்குவல் படமான 'யூ'டர்ன்' நம்மையும் அப்படி கேட்க வைக்கிறதா?

சமந்தா - யூ டர்ன்

இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு ஆங்கில இதழில் இன்டெர்னாக சேரும் சமந்தாவுக்கு வீட்டிலிருந்து கல்யாண பிரஷர், அலுவலகத்திலிருந்து வேலை பிரஷர். தன்னை நிரூபித்தாகவேண்டிய கட்டாயத்தில் ஒரு வித்தியாச அசைன்மென்ட்டை கையிலெடுக்கிறார். வேளச்சேரி பாலம் பற்றிய அசைன்மென்ட் அது. 'ஓ... பாலம் கட்டினதுல ஊழலா?' - இல்லை. 'பாலத்துக்குக் கீழே ஏதாவது சட்டவிரோதமா நடக்கிறத பத்தின கதையா?' - இல்லை. இது பவண்குமார் படமாயிற்றே. யூகிக்கவே முடியாத பல யூ-டர்ன்கள் அடித்து போகும் வழியெல்லாம் திக்திக் தருணங்களை பரிசளித்து இறுதியாக ஓரிடத்தில் முடிகிறது அந்தச் சாலை. அதுவென்ன என்பதை நீங்கள் திரையில் பார்ப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

 

 

ரக்‌ஷனாவாக சமந்தா. பொதுவாக த்ரில்லர்களில் ஹீரோக்கள் துப்பறிய, அவர்களின் வேலைக்கு நடுவே கால் செய்து, 'என்ன பண்ற? சாப்பிட்டியா?' என தொணதொணக்கும் வேஷம்தான் ஹீரோயின்களுக்கு! இதில் அப்படியே ரிவர்ஸ்! படத்தில் சமந்தா இல்லாத காட்சிகளை யோசித்துப் பார்த்து சொல்வது கூட கஷ்டம்தான். ஆனால், ஒரு த்ரில்லருக்கான அத்தனை வெயிட்டையும் தனது ட்ரேட்மார்க் சிரிப்போடு தாங்கியிருக்கிறார். ஒரு பக்கம் மட்டும் நெளிந்து முன்னால் விழும் தலைமுடி கொள்ளை அழகு. சிரிப்பு, பயம், சோகம் என காட்சிக்குக் காட்சி உணர்ச்சிகளை மாற்றவேண்டிய ரோல். சூப்பராக செய்துகாட்டுகிறார் சாம்!

 

 

'என்ன பண்ற, சாப்பிட்டியா?' என்ற ரோல் இதில் ராகுல் ரவீந்திரனுக்கு! பார்க்க அமெரிக்க மாப்பிள்ளை போல இருந்தாலும் வரும் காட்சிகளில் தன் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார். சமந்தா - ராகுலுக்கு இடையிலான சைலன்ட் மோட் அன்பு ரசிக்கவைக்கிறது. படம் முழுக்க சமந்தாவோடு பயணிப்பது போலீஸ்காரரான ஆதிதான். துடிப்பான ஆறடி போலீஸ்காரரை கற்பனை செய்துபார்த்தால் ஆதிதான் ஞாபகத்துக்கு வருவார். அவ்வளவு கச்சிதமான கேஸ்ட்டிங். யூ-டர்ன் போட்டு போட்டு தொடங்கிய இடத்திற்கே வந்தாலும் சளைக்காமல் திரும்ப எழுந்து ஓடுக்கொண்டே இருக்கிறார். 

யூ டர்ன்

பூமிகா, நரேன் போன்றவர்களின் நடிப்பெல்லாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. 'அடுத்தென்ன இதானா?' என்ற ரேஞ்சுக்கு ஈஸியாக நடித்துவிட்டுச் செல்கிறார்கள். நடிப்பில் குறையின்றி எல்லாரும் சிறப்பாக செய்திருந்தாலும் ஆங்காங்கே நான் சிங்க்கில் இருக்கும் டப்பிங் கொஞ்சம் தார் ரோட்டிலிருந்து விலகி ப்ளாஸ்டிக் ரோடில் பயணித்து திரும்ப யூ-டர்ன் அடிப்பது போல இருக்கிறது. 

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் சட்சட்டென மாறும் காட்சியமைப்புகள்தான். பின்னணி இசையில் மட்டுமல்ல, எடிட்டிங்கிலும் திகில் கிளப்பமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சுரேஷ் ஆறுமுகம். சாலை பற்றிய கதை என்பதால் ரெட் லைட் படம் முழுக்க டாலடிக்கிறது. அந்த மூட் செட்டாவதற்கு நிறைய மெனக்கெட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் நிகித் பொம்மிரெட்டி. முக்கியமாக லாக்கப்பில் நடக்கும் அந்த சீக்வென்ஸ் வேற லெவல்! ஒளிப்பதிவு, எடிட்டிங்கோடு ஒப்பிட்டால் இசையமைப்பாளர் கொஞ்சம் அடக்கி வாசித்ததுபோல இருக்கிறது.

 

 

'ஏதோ நடக்கப்போகுது' என நம் முதுகில் ஜில்லென பயத்தை படரச் செய்வதில் வெற்றி கண்டிருக்கிறது திரைக்கதை. தேவை இல்லாத காட்சிகள் இல்லை. பாடல்கள் இல்லை. அதனால் நான் ஸ்டாப் பஸ் போல விர்ரென வழுக்கிச் சென்று முடிவை அடைகிறது. ஒன்றிரண்டு இடங்களில் அடுத்தக் காட்சிகளை கணித்துவிடலாம்தான். ஆனால், அடுத்தடுத்த திருப்பங்கள் அதை மறக்கச் செய்கின்றன. 

ஆதி - யூ டர்ன்

லூசியாவின் வெற்றிக்குக் முக்கியக் காரணம் அதன் Rawness தான். ஆனால் இதில் அது மிஸ்ஸாகிறது. அதுவும் பை - லிங்குவல் என்பதற்காக திணிக்கப்பட்ட வசனங்கள் நாடகத்தன்மையை கொடுக்கின்றன. கன்னட யூ-டர்னின் ரீமேக்தான். அதற்காக கேரக்டர் பெயர்கள், வசனங்கள் கூட மாற்றாமல் அப்படியேவா தருவது? 

குறைகளைத் தாண்டி 'யூ-டர்ன்' வின்னராவதற்கு ஒரு பெரிய காரணமுண்டு. நாம் அன்றாடம் கடந்து செல்லும் ஒரு சிறு விஷயத்திற்குப் பின்னால் இவ்வளவு பெரிய கதையை பயம் வரும்வகையில் சொல்லலாம் என்ற மேக்கிங்தான் அது!

https://cinema.vikatan.com/movie-review/136826-u-turn-movie-review.html

Link to comment
Share on other sites

திரை விமர்சனம்: யூ டேர்ன்

 

 
u%20turn

சென்னையின் முக்கிய பகுதி யான வேளச்சேரியில் இருக் கிறது அந்த மேம்பாலம். அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் அதை கடந்துசெல்கின்றனர். அவர் களில் சிலர், சாலை விதிகளை மதிக் காமல் ‘யூ-டேர்ன்’ அடிக்கிறார்கள். இவ்வாறு விதி மீறுபவர்களை சந்தித்து சிறப்புக் கட்டுரை எழுத விரும்புகிறார் செய்தியாளர் சமந்தா. அப்படி விதிமீறிய ஒருவரை பேட்டி எடுக்கச் செல்லும்போது, எதிர் பாராதவிதமாக அவர் இறந்து கிடக் கிறார். போலீஸின் சந்தேகக் கண், சமந்தா மீது விழுகிறது. அவரை அழைத்துவந்து விசாரிக்கத் தொடங்குகின்றனர். ஆனால், இறந் தவர் தற்கொலை செய்துகொண்ட தாக உடற்கூறு ஆய்வு தெரிவிக் கிறது. ஆனால், உண்மை அது அல்ல. அந்த மேம்பாலத்தில் அத்து மீறியவர்கள் அடுத்தடுத்து பலியா கும் அதிர்ச்சிகரமான தொடர்ச்சி தெரியவருகிறது. அதன் மர்மப் பின்னணியை நோக்கி விறுவிறுப் பாகப் பயணிக்கிறது திரைக்கதை.

‘லூசியா’, ‘யூ-டேர்ன்’ ஆகிய கன்னடப் படங்களை இயக்கி வெற்றி கண்டவர் பவன்குமார். கதையிலோ, காட்சி அமைப்பிலோ பெரிய மாற்றங்கள் எதையும் செய் யாமல் 'யூ-டேர்ன்' படத்தை கச்சித மாக தமிழில் மறுஆக்கம் செய்திருக் கும் அவரை வரவேற்கலாம்.

 

அக்காவின் சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப்பையும், அவர் பரிந்துரைக்கும் காதணிகளையும் அணிந்துகொண்டு ரொமான்ஸ் மன துடன் அலுவலகம் வருகிறார் சமந்தா. அதுமுதல், நடக்கும் ஒவ் வொரு நிகழ்வும் தங்களுக்கே நடப்பதுபோல பார்வையாளர் களை உணரவைத்துவிடுகிறது இயக்குநரின் பிடிமானம் விலகாத கதை சொல்லல். அதேபோல, கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர் களைத் தேர்வு செய்த விதத் திலும் ‘அட!’ போட வைத்து விடுகிறார்.

மேம்பால வழக்கு ஃபைலை மூடிவிட்டு மற்ற வழக்குகளைப் பார்க்கும்படி மூத்த அதிகாரி கண்டிப்புடன் கூறினாலும், தன் தனிப்பட்ட ஆர்வத்தில் அந்த வழக்கை கையில் எடுத்து துறுவ ஆரம்பிக்கிறார் ஆதி. அவரும், சமந்தாவும் மொத்தப் படத்தையும் தூண்போல தாங்குகின்றனர். மிகை யற்ற எல்லைக்குள்ளும், கதாபாத் திரத்தை உணர்ந்தும் கடைசிவரை வெளிப்படுகிறது அவர்கள் இரு வரது நடிப்பு. குறிப்பாக, விசா ரணை அறைக்குள் சமந்தா காட்டும் பய உணர்ச்சிகள், பின்னர் தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் உடல் நடுங்கும் நிலையில் சுருண்டுகிடப்பது என காட்சிக்குக் காட்சி, பய உணர்ச்சியை நமக்குக் கூட்டிவிடுகிறார்.

சமந்தா, ஆதிக்கு அடுத்த இடத் தில் ‘ஆடுகளம்’ நரேன், ‘கத்துக் குட்டி’ நரேன், பூமிகா ஆகியோரும் பளிச்சென்று கவனம் ஈர்க்கின்றனர்.

சமந்தா - ராகுல் இடையிலான மெல்லிய காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் பிரதான கதைக்கு பெரிதாக உதவவில்லை.

பின்னணி இசையில் அதிகமும் மிரட்டாத பூர்ணசந்திர தேஜஸ்வி, ஒரு திரில்லர் மற்றும் திகில் கதைக்கு ஏற்ற மனநிலையை உருவாக்கும் ஒளிப்பதிவை அளித்த நிகேத் பொம்மி, சிக்கல்கள் இல்லாத கதையை கச்சிதமாகத் தொகுத் திருக்கும் சுரேஷ் ஆறுமுகம் ஆகிய மூவரது தொழிநுட்பப் பங்களிப்பும் படத்துக்கு முதுகெலும்பு.

ஆவி, அமானுஷ்யம் ஆகிய வற்றை சித்தரித்த விதத்திலும், முழு அழுத்தம் தரும் விதமாக ஓர் அமானுஷ்யக் கதையில் சமூக விழிப்புணர்வைக் கடத்திய விதத்திலும் ‘யூ-டேர்ன்’ தமிழ் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைக்கும்.

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24960592.ece?utm_source=HP&utm_medium=hp-cinema

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் உந்தப் படத்தை நேற்று பார்த்தேன்...வேறு எந்தப் படத்திலும் சமந்தா இவ்வளவு அசிங்கம் இல்லை?...ஆனால், படம் சுப்பரோ சுப்பர்

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

தரமான பிரதி கிடைத்தமையால் நேற்று இரவு இத் திரைப்படத்தை பார்த்தேன்.

ஊகிக்க முடியாத திரைக்கதையும் திருப்பங்களாலும் படம் விறுவிறுப்பாக இருந்தது. எல்லா இடமும் U ஆக முடிவது சுவாரசியமாக இருந்தது. ஆனாலும் இறுதியில் பேய்ப்படமாக முடித்ததில் கொஞ்சம் ஏமாற்றம் வந்தது.

ஒன்றும் செய்ய இல்லை என்றால் பொழுது போக்குவதற்காக ஒரு முறை பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நிழலி said:

தரமான பிரதி கிடைத்தமையால் நேற்று இரவு இத் திரைப்படத்தை பார்த்தேன்.

ஊகிக்க முடியாத திரைக்கதையும் திருப்பங்களாலும் படம் விறுவிறுப்பாக இருந்தது. எல்லா இடமும் U ஆக முடிவது சுவாரசியமாக இருந்தது. ஆனாலும் இறுதியில் பேய்ப்படமாக முடித்ததில் கொஞ்சம் ஏமாற்றம் வந்தது.

ஒன்றும் செய்ய இல்லை என்றால் பொழுது போக்குவதற்காக ஒரு முறை பார்க்கலாம்.

உண்மைதான் நிழலி ஊகிக்கவே முடியாதபடி கதையின் நகர்வுகள் இருந்தன. கடைசியில் பேய்க்கதையாக்கிவிட்டார்கள். இந்தப்படத்தில் பேயைத் திணிக்காமல் வேறுமாதிரி முடிவைக் கொடுத்திருக்கலாம் அல்லது தொடரக்கூடிய மாதிரி ஒரு சாப்டரை குளோஸ் பண்ணி இன்னொன்றை ஆரம்பிப்பதுபோல் தொடர்ந்திருக்கலாம். நல்ல விறுவிறுப்பான படம் சமந்தாவின் நடிப்பு சூப்பர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/16/2018 at 5:11 PM, ரதி said:

நான் உந்தப் படத்தை நேற்று பார்த்தேன்...வேறு எந்தப் படத்திலும் சமந்தா இவ்வளவு அசிங்கம் இல்லை?...ஆனால், படம் சுப்பரோ சுப்பர்

நானும் பார்த்தேன்.. :innocent:

நாங்கள் தாத்தாவானது மாதிரி,  சமந்தாவும் பாட்டியாகிவிட்டார்..! :)

காலத்தின் கோலம்..!! 

Link to comment
Share on other sites

கன்னடாவில் வந்த போது (streaming platform ) ஒன்றில் பார்த்திருந்தேன், அப்போதே பரவலான வரவேற்பைப் பெற்றிருந்த படம், சமந்தாவை விட ஷரதா நன்றாக நடித்திருந்தார் ,( எனக்கு சமந்தாவை பிடிக்கும் நல்லாவே அது வேறு:) தமிழில் பூமிகா சகிக்கவே முடியல்ல,

(  தமிழில் சமந்தாவின் கதலனாக நடித்தவர் சின்மையின் கணவர் :) என நினைக்கிறேன்) 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.