Jump to content

வடக்கும் தெற்கும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வேட்பாளரையே களமிறக்குவோம் - இந்தியாவில் நாமல்


Recommended Posts

வடக்கும் தெற்கும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வேட்பாளரையே களமிறக்குவோம் - இந்தியாவில் நாமல்

 

வடக்கும் தெற்கும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு ஜனாதிபதி வேட்பாளரையே நாங்கள் எதிர்வரும் தேர்தலில் களமிறக்குவோமென இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரும் மகிந்த ராஜபக்சவின் புதல்வருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

na4.jpg

எமது கட்சி பல கட்சிகளை உள்ளடக்கியுள்ளது. எனவே அனைவரும் ஒன்றிணைந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய வேட்பாளரைத் தெரிவு செய்வோம். 

இந்தியாவுடன் எமது உறவுகளைப் பலப்படுத்தவே நாங்கள் விரும்புகின்றோம். மத்தள விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் என்பவற்றை நாங்கள் இந்தியாவின் உதவியுடனேயே நிர்மாணிக்க திட்டமிட்டோம்.

ஆனால் அப்போது இந்தியா முன்வராததால் சீனாவுடன் இணைந்து அவற்றை நிர்மானித்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நாமல் ராஜபக்ச எம்.பி. அங்கு இந்திய ஊடகம் ஒன்றுக்கு இன்று வழங்கிய செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/40370

Link to comment
Share on other sites

"பொதுமக்களின் கருத்தினை அடிப்படையாக கொண்டு ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை நிறுத்தவேண்டும்"

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுமக்களின் கருத்தினை அடிப்படையாக வைத்து அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என  சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மகிந்த ராஜபக்ஷ போட்டியிடவேண்டும் அல்லது அவரது சகோதரர் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படவேண்டும் என விரும்புகின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

image.jpg

அதேவேளை அடுத்தவேட்பாளர் யார் என்பது பிரச்சினையில்லை மக்களின் விருப்பங்களை செவிமடுப்பதே முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆட்சியின் போது தவறுகள் இழைக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டுள்ள சமல்ராஜபக்ஷ பொது எதிரணி இந்த தவறுகளை களையும் எனவும் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/40359

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.