Jump to content

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் மதஸ்தலம் அமைக்க முடியாது - நீதிமன்றம் அதிரடி உத்தரவு


Recommended Posts

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் மதஸ்தலம் அமைக்க முடியாது - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

 

முல்லைத்தீவு, குருந்தூர் மலைப்பகுதியில் அனுமதியின்றி மதஸ்தலங்களை அமைக்க முடியாதெனவும், இருக்கும் சைவ ஆலயத்தினை மக்கள் தடையின்றி வழிபட முடியுமெனவும் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

kurunthur.jpg

முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலைப்பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் விகாரை ஒன்றினை அமைக்கும் நோக்குடன் கடந்த 4 ஆம் திகதி பௌத்த துறவிகள் உள்ளிட்ட குழுவினர் பயணம் மேற்கொண்டுடிருந்த நிலையில் பிரதேச இளைஞர்களால் குறித்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன் முறுகல் நிலை ஒன்றும் தோன்றியிருந்தது.

இந்த நிலையில் இதில் ஒட்டுசுட்டான் பொலிசார் தலையிட்டு குறித்த நிலமையினை சரிசெய்ததுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றினை  தாக்கல் செய்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை கடந்த  06 ஆம் திகதி அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்படி இன்று வரை குறித்த மலைக்கு எவரும் செல்லமுடியாதவாறு தற்காலிக தடை உத்தரவினை நீதிபதி பிறப்பித்துள்ளதுடன், வழக்கினை மேலதிக விசாரணைக்காக திகதியிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று  குறித்த வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற  நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் குறித்த கிராமத்தின் சார்பாக மக்களும், விகாரை அமைக்கவந்த பௌத்த துறவிகள் தரப்பினரும் , ஒட்டுசுட்டான் பொலிசாரும் முன்னிலையாகியிருந்தனர்.

இதில் குமுழமுனை குருந்தூர்மலை கிராம மக்கள் சார்பாக ஜனாதிபதிசட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் மற்றும் மூத்த சட்டத்தரணி ரி.பரஞ்சோதி மற்றும் சட்டத்தரணிகளான சுபாவிதுரன், கணேஸ்வரன், ஜெமீல், ராதிகா, நேரோஜினி, மின்ராச், துஸ்யந்தினி, அனித்தா, ஹரிஸ், சுதர்சன், உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினை சேர்ந்த 14 சட்டத்தரணிகள் முன்னிலையாகி வாதாடியுள்ளார்கள்.

kurunthur2.jpg

இதன்போது இந்த வழக்கு தொடர்பாக பொலிசார் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில்,

குறித்த பிரதேசம் தமிழ் மக்களின் பூர்வீக வரலாற்றினை கொண்ட பிரதேசம் என்றும் அங்கு பல நூற்றாண்டுகளாகாக இயற்கை வழிபாட்டுமுறையில் ஆலயம் ஒன்றினை அமைத்து கிராம மக்கள் வழிபட்டு வருகின்றார்கள் என்றும் இந்த நிலையில் அங்கு அந்த இடத்திற்கு சம்மந்தமில்லாத பௌத்த மதகுருமார் தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் தொல்பொருள் திணைக்களத்தின் அனசரணையுடன் விகாரை அமைப்பதற்காக வருகை தந்திருப்பதானது இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் சுமூகமற்ற ஒரு நிலையினை தோற்றிவிக்கும் என்றும் குறித்த பிரதேசத்தில் தொன்று தொட்டு வழிபட்டு வரும் மக்களின் வழிபாட்டிற்கு தடைவிதிப்பது இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

அத்துடன் தொல்பொருள் திணைக்களம் ஆய்வு என்ற பெயரில் விகாரை அமைப்பதற்கு பௌத்த மதகுருக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளமை பிழையான விடையம் என்றும் அதனை தடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் இந்த வழக்கினை விசாரித்த நீதவான் குறித்த மலைப்பிரதேசத்தில் தொன்று தொட்டு வழிபாட்டில் ஈடுபடும் கிராம மக்கள் இயற்கை முறையில் அமைந்த கிராமிய வழிபாட்டினை ஆலயத்தில் மேற்கொள்ள எந்தவித தடையும் இல்லை என்றும் குறித்த பிரதேசத்தில் புதிதாக கட்டுமானம் மற்றும் அகழ்வு பணிகளை மேற்கொள்ளகூடாது. என்றும் தொல்பொருள் ஆய்வு என்றபோர்வையில் புதிதாக எந்தவொரு மதத்தினையும் சேர்ந்த  ஆலயங்கள் அமைப்பதும் கட்டுமானங்களையும் மேற்கொள்ள முடியாது என்றும் அவ்வாறு  நிர்மாணிப்பதாக இருந்தால் பொலிசில் அறிக்கை சமர்ப்பித்து நீதிமன்றின் அனுமதியுடன் மேற்கொள்ளமுடியும் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை குருந்தூர் மலையில் தொல்பொருள் அகழ்வு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவேண்டுமாக இருந்தால் யாழ்.பல்கலைக்கழகத்தின் தொல்லியல்  துறையின் பங்குபற்றலுடன் மூத்த வரலாற்று ஆய்வாளர்களினதும்  பங்கு பற்றலுடனும் குறித்த கிராமத்தினை சேர்ந்த அனுபவம் வாய்ந்தவர்களையும் ஈடுபடுத்தியே அகழ்வு ஆராய்ச்சியினை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவ்வாறு செய்யப்படாதுவிடத்து  இனமுரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து மன்றுக்கு அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளதுடன் குறித்த பிரதேசத்திற்கு சம்மந்தம் இல்லாதவர்களான பௌத்த துறவிகள் வரமுடியாது என்றும் நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

http://www.virakesari.lk/article/40360

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நவீனன் said:

இதன்போது இந்த வழக்கு தொடர்பாக பொலிசார் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில்,

குறித்த பிரதேசம் தமிழ் மக்களின் பூர்வீக வரலாற்றினை கொண்ட பிரதேசம் என்றும் அங்கு பல நூற்றாண்டுகளாகாக இயற்கை வழிபாட்டுமுறையில் ஆலயம் ஒன்றினை அமைத்து கிராம மக்கள் வழிபட்டு வருகின்றார்கள் என்றும் இந்த நிலையில் அங்கு அந்த இடத்திற்கு சம்மந்தமில்லாத பௌத்த மதகுருமார் தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் தொல்பொருள் திணைக்களத்தின் அனசரணையுடன் விகாரை அமைப்பதற்காக வருகை தந்திருப்பதானது இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் சுமூகமற்ற ஒரு நிலையினை தோற்றிவிக்கும் என்றும் குறித்த பிரதேசத்தில் தொன்று தொட்டு வழிபட்டு வரும் மக்களின் வழிபாட்டிற்கு தடைவிதிப்பது இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

அத்துடன் தொல்பொருள் திணைக்களம் ஆய்வு என்ற பெயரில் விகாரை அமைப்பதற்கு பௌத்த மதகுருக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளமை பிழையான விடையம் என்றும் அதனை தடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஐயோ ஐயோ-இப்படி  போலீசார் நீதிமன்றத்துக்கு சொன்னார்களா நம்ப முடியலை.

 

தொல்பொருள் ஆய்வு என்றபோர்வையில் புதிதாக எந்தவொரு மதத்தினையும் சேர்ந்த  ஆலயங்கள் அமைப்பதும் கட்டுமானங்களையும் மேற்கொள்ள முடியாது என்றும் அவ்வாறு  நிர்மாணிப்பதாக இருந்தால் பொலிசில் அறிக்கை சமர்ப்பித்து நீதிமன்றின் அனுமதியுடன் மேற்கொள்ளமுடியும் என்றும் தெரிவித்தார்.

 

கடைசியிலை இது நமக்கே ஆப்பா???

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.