Jump to content

தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுக்கவில்லை : இந்தியாவில் மஹிந்த


Recommended Posts

தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுக்கவில்லை : இந்தியாவில் மஹிந்த

 

 
 

“விடுதலைப் புலிகளுக்கெதிராக கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தை இன ரீதியிலான யுத்தமாக கருதக்கூடாது. மேலும் அவ்  யுத்தத்தில் தமிழர்களை குறி வைத்து இராணுவ நடவடிக்கை எடுக்கப்படவில்லை”  என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமியின் “விராட் ஹிந்துஸ்தான்” சங்கம் சார்பில் டெல்லியில் “இந்தியா - இலங்கை உறவுகள்: அதை முன்னோக்கி எடுத்துச்செல்வதற்கான பாதை” என்ற தலைப்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கருத்தரங்கில் மேலும் மஹிந்த,

mahindha_at_india.jpg

“விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தின் போது இந்தியா மற்றும் பிற அயல் நாடுகளுடன் கலந்தாலோசனை நடத்துவது தொடர்பான கொள்கையை இலங்கை கடைப்பிடித்தது.

பொருளாதாரம் சமூகம் தொடர்பான விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்கும் இதே போன்ற நடைமுறையை இந்தியாவும், இலங்கையும் கொண்டுவர வேண்டும்.

விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தை ஒரு போதும் இன ரீதியிலான யுத்தமாக கருதக்கூடாது. தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுக்கவில்லை.

விடுதலைப்புலிகளின் செயல்பாடானது இலங்கை எல்லையுடன் மட்டும் நிற்கவில்லை. இந்தியா வரை நீண்டது. இந்திய மண்ணில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் பலரை அவர்கள் படுகொலை செய்தனர். இதை எப்போதும் மறக்க கூடாது.

தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவது என்பது ஒரு இனத்தினருக்கு பயன் தரும் நடவடிக்கையாக பார்க்க கூடாது. அதனால் ஒட்டு மொத்த நாட்டிற்கும் நன்மையாகும்.

விடுதலைப்புலிகளுக்கெதிரான யுத்தம் தீவிரமாக நடைபெற்ற வேளையில் பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளரும் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சரும் என்னைத் தொடர்பு கொண்டு உடனடியாக யுத்தத்தை நிறுத்தும் படி வலியுறுத்தினர்.

ஆனால் அதை நிராகரித்து விட்டேன். அப்படி செய்தால் எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் என நான் பதிலளித்தேன்.

இந்தியாவுடன் இணக்கமான நட்புறவை வைத்துக்கொள்வது மற்றும் இரு நாடுகளும் பரஸ்பரம் முழுவதும் புரிந்து கொள்வது ஆகியவையே எனது எதிர்கால வெளியுறவு கொள்கையின் ஒரு பகுதியாகும்” என குறிப்பிட்டார்.

இக் கலந்துரையாடலில் மஹிந்த ராஜபக்ஷவின் உரைக்கு பின்னர் சுப்பிரமணியன் சுவாமி,

“இலங்கையில் தேர்தலுக்கு பிறகு ஆட்சி அமைப்பது ராஜபக்ஷ தான் என பரவலாக நம்பப்படுகிறது. 

இலங்கையிலிருந்து தீவிரவாதத்தை அவர் அழித்து நாட்டை சுத்தப்படுத்தினார். இதனால் சர்வதேச நாடுகள் முதலீடுக்கான உகந்த மையமாக இலங்கையை தற்போது கருதுகின்றன” என தெரிவித்தார்.

இந் நிகழ்வில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொண்டனர்.        

http://www.virakesari.lk/article/40341

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.