Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பரந்தன் கெமிக்கல் பயங்கரத்தின் அடையாளம்.


Athavan CH

Recommended Posts

paranthan

குளோரின் என்றவுடன் அது தண்ணீரை சுத்திகரிக்கும் பொருள் என்றுதான் எம்மில் அதிகம் பேர் நினைக்கின்றனர். அது மக்களுக்கும் சூழலுக்கும் நன்மை பயக்கும் உற்பத்தி என்றுதான் நினைக்கிறோம் ஆனால் உண்மை அது அல்ல உயர் செரிவு நிலையில் அதுவோர் கொடூரமான இரசாயனமாகும். முதலாம் உலகப் போரின் போது போர்க்களத்தில் குளோரின் ஒரு நச்சு வளிமமாக ஐரோப்பாவில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது

இன்றைய செய்திகளில் இரசாயன தாக்குதல் என்று குறிப்பிடப்படும் அனேக தாக்குதல்களில் குளோரின் வாயு நிலையிலோ அல்லது திரவ நிலையிலோ பயன்படுத்தப்படுகின்றது. இரசாயன ஆயுதங்களின் பிரதான மூலப்பொருள் செரிவூட்டப்பட்ட திரவக் குளோரினாகும்.

வழமையாய் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீரை சுத்திகரிக்கவென 10ஆயிரம் லிட்டருக்கு ஒரு விரல் நுனியளவு செரிவு குறைந்த தின்மக்குளோரின்தான் பயன்படுகிறது அந்த மிகச்சிறிய அளவு குளோரின் கூட தொடர் பாவனையின் மூலம் புற்றுநோயை ஏற்படுத்தும் என்கின்றனர். சாதாரணமாக குடிதண்ணீர் கிணற்றிற்கு சற்று கூடுதலாக சில கிராம்கள் குளோரின் இட்டால் கிணற்றில் இருக்கும் மீன்கள் தவளைகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு செத்துமிதக்கும். அத்தனை கடுமையான விசம் குளோரின்.

சாதரணமாக குளோரின் வாயுவின் அளவு காற்றில் 0.2 முதல் 0.5 PPM வரை இருந்தால் அது மனிதர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதுவே, 2 PPM அளவு இருக்குமானால் இருமல், வாந்தி தலைசுற்றல் ஏற்படும். 30 PPM இருந்தால் நுரையீரலை காலிபண்ணும் அதுவே 60 PPM இருந்தால் நொடியில் ஆளை முடித்துவிடும்.

PPM என்ற சொல் PARTICLES PER MILLION என்பதன் சுறுக்கமாகும் அதாவது பத்து லட்சம் காற்று துகள்களில் வெறும் 60 குளோரின் துகள் இருந்தாலே, அது நமது உயிரை எடுத்துவிடும்.

செரிவூட்டப்பட்ட திரவக் குளோரினை கப்பல் மூலம் எடுத்துச்செல்ல அமெரிக்கா போன்ற நாடுகள் தடை விதித்திருக்கின்றன அது இலகுவில் கடலின் உப்பு நீரோடு வேதியல் தாக்கத்துக்கு உள்ளாகி பாரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதால்.

ஜேர்மனியில் விசவாயு செழுத்தி ஹிட்லர் யூதர்களை படுகொலைசெய்தார் என்று கதைகளில் படித்த அந்த விசவாயு வேரெதுவும் இல்லை குளோரினே. அதேபோல் சிரியா உற்பட மத்திய கிழக்கு நாடுகளில் இரசாயன தாக்குதல்களுக்கு பயன்படுவதும் திரவக் குளோரினே.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் வடக்கின் பெருவீதியான A-9 வீதியில் கிளிநொச்சி நகருக்கு அண்மையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவுக்கு அருகில் “கெமிக்கல்” என்று அழைக்கப்படும் பரந்தன் இரசாயனக்கூட்டுத்தாபனம் இந்த கொடூர இரசாயன வேதிப்பொருளைத்தான் ஆனையிறவு உப்பில் இருந்து பிரித்தெடுக்கிறது.

பரந்தன் கெமிக்கல் தொழிற்சாலை பழைய படி இயங்கி இன்றைய உலகின் திரவக் குளோரின் தேவையை பூர்த்திசெய்ய இலங்கை அரசு தீவிரமாய் செயற்பட்டால் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருக்கும் திரவ, வாயுநிலை குளோரின் மற்றும் காஸ்டிக் சோடா, ஹைட்ரோ குளோரிக் அமிலம் போன்றவை ஒரு அணு உலையின் ஆபத்தை தன்னகத்தே கொண்டிருக்கும். ஒரு குளோரின் வாயுத்தாங்கி வெடித்துச்சிதறினால் வடமாகாணத்தின் மொத்தக்காற்றும் சுவாசிக்கத்தகுதியற்றதாவதோடு பலநூறு அப்பாவிகள் மூச்சுக்கு ஏங்கி மரணித்துப்போவார்கள். உலகில் அனேகமான விசவாயுக் கசிவு மரணங்கள் குளோரின் வாயுக் கசிவினாலேயே ஏற்படுகின்றன எனவே போபால் விசவாயு மரணங்களைப்போன்று பரந்தன் கெமிக்கல் மரணமும் தன் வடுவை காலம் முழுதும் சுமந்துகொண்டிருக்கும். இது ஒரு விபத்து நிகழ்ந்து குளோரின் வாயு சிலிண்டர் வெடித்தால் ஏற்படும் உடனடி விளைவு இதையும் தாண்டிய பின் விளைவுகள் பல இருக்கின்றன.

ஆனையிறவு உப்பளம் உப்பளமாக இயங்கி அங்கு உப்பு மட்டும் உற்பத்தி செய்யப்படுமானால் அதை அண்டியுள்ள நிலம் உவர் நிலமாகி பயிர்செய்கைக்கு உதவாத நிலமாய் போவதோடு நின்றுவிடும். அந்த உப்பை வைத்து திரவக்குளோரின் உற்பட வேதிப்பொருட்கள் தயாரிக்கத்தொடங்கினால் உப்பில் இருந்து இரசாயனங்களை பிரித்தெடுக்க குளோரினைவிடவும் ஆபத்து மிகுந்த இரசாயனங்கள் அதனோடு கலக்கப்படும் குளோரினை பிரித்தெடுத்தபின் வெளியாகும் ஆபத்து மிக்க இரசாயனக்கழிவுகள் பரந்தன் மண்ணிலேயே புதைக்கப்படும். அவை நிலத்தின் கீழிறங்கி நீரோட்டத்தால் இழுத்துச்செல்லப்பட்டு யாழ்குடாநாட்டின் சுண்ணக்கல் பாறைகளில் நீரோடு நீராய் சேமிக்கப்படும். எற்கனவே இவ்வாறு சேமிக்கப்பட்ட இரசாயனத்தின் விளைவைத்தான் இன்று குடாநாட்டு மக்கள் குடிநீர் பிரச்சனையாய் எதிர்கொள்கின்றனர்.

பரந்தன் கெமிக்கல் தொழிற்சாலையின் இரசாயனக்கழிவுகள் அன்றுதொட்டு இன்றுவரை எங்கே கொட்டப்பட்டன கொட்டப்படுகின்றன என்பது இன்றுவரை பரம ரகசியமாகவே இருக்கின்றது. இனி கொட்டப்படுவதும் ரகசியமாகவே இருக்கும்.

காகித ஆலைகள், தோல் பதனிடும் ஆலைகள் போன்றவற்றில் இருந்து வெளிப்படும் கழிவு நீரே பலபேரின் உயிரை பல இடங்களில் குடித்திருக்கிறது அந்த ஆலைகளில் பிரதான வேதிப்பொருளாய் பயன்படுத்தும் திரவக் குளோரினை தயாரிக்கும் ஆலையின் கழிவுகள் எத்தனை வீரியம் மிக்கதாய் இருக்கும்? அந்த கதிரியக்க வீரியம் மிக்க கழிவுகள் பல தசாப்தங்களாய் எம்மண்ணில்தானே தொழிற்சாலை தொழிற்புரட்சி வரலாற்று சாதனை என்ற பெயர்களில் கொட்டப்பட்டிருக்கிறது? பரந்தன் கெமிக்கலை அண்டிய மரங்களின் வேர்களிடம் பல கதைகள் இருக்கும் அவை வாழ்வோடு போராடிக்கொண்டிருப்பதைப்போல எதிர்காலத்தில் வடக்கும் போராடும்.

இலங்கை செறிவூட்டப்பட்ட திரவக் குளோரின் எற்றுமதியால் பலகோடி வருமானத்தைப்பெற்றுக்கொள்ள வன்னியை சுடுகாட்டு பூமியாக்க நினைக்கிறது. பரந்தன் கெமிக்கல் கடந்த காலங்களிலும் இன்றும் ஒரு சிலரின் வாழ்வில் வேண்டுமானால் பொருளாதார வளர்ச்சியை பெற்றுக்கொடுத்திருக்கலாம் ஆனால் அது ஒரு பாரிய நிலப்பரப்பை இன்று சுடுகாடாய் மாற்றியதோடு மேலும் சுடுகாடாய் மாற்றவும் செய்யும். அத்துடன் பல அப்பாவி மக்களை போதிய விழிப்புணர்வு இல்லாமல் சோடாப் பெக்ரி வேலை என்ற பேரில் காவுவாங்குவதோடு ஒரு தேசத்தையும் காவுகொள்கிறது.

சிங்களத்தின் முதலாவது இன அழிப்பு தொழில் ரீதியில்தான் தொடங்கியிருக்கிறது அதை இருகரம் கூப்பி வரவேற்றவர்களும் வடக்குத்தமிழர்களாய்த்தானிருந்தனர். அத்துடன் ஆபத்து மிகுந்த இரசாயன தொழிற்சாலையை தம் நிலத்தின் கெளரவம் என்று கருதுவதும் அதை மீண்டும் செயற்படவைக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கும் ஒரே இனம் எம்மினம்தான் ஏனெனில் இரசாயனத்தொழிற்சாலைகள் எங்கு அமைக்கப்படுமோ அங்கெல்லாம் மக்கள் அதற்கு எதிராய் அதன் பின் விளைவுகளை மனதில் வைத்து போராடியிருக்கின்றனர் ஆனால் நாம்தான் நடுவீட்டில் அதற்கு இடம் கொடுத்திருக்கிறோம் .

கடந்த காலத்தில் பரந்தன் கெமிக்கல் இல்லையென்றவுடன் திரவக்குளோரின் உற்பத்தியை கைவிட்டுவிட்டு இறக்குமதியை மேற்கொண்ட இலங்கை அரசு அதை இலங்கையின் இன்னோர் பாகத்தில் ஏன் செயற்படுத்த வில்லை என்பதில் பல கேள்விகளுக்கு பதில் இருக்கிறது. எதனால் ஏனைய உப்பளங்களில் செரிவூட்டப்பட்ட திரவக்குளோரினை இலங்கை உற்பத்தி செய்யவில்லை? எதற்காய் இரசாயன தொழிற்சாலை அமைக்கவில்லை? ஆனையிறவு உப்பில் மாத்திரம் தானா திரவக்குளோரினை பிரித்தெடுக்க முடியும்? புத்தளம் உப்பளத்திலும் அம்பாந்தோட்டை உப்பளத்திலும் குளோரின் உற்பத்தி செய்ய முடியாதா?

அங்கெல்லாம் அத்தொழிற்சாலையினை அமைத்தால் அதன் எதிர்கால விளைவுகளை சிங்களமக்கள் எதிர்கொள்ளவேண்டும் என்பதால்தான் அமைக்காமல் இருக்கிறது.
நாமோ கெமிக்கல் பெக்ரியை திறந்தால் வடக்கு சிங்கப்பூர் ஆகிவிடும் என்று கனவு கண்டுகொண்டு இருக்கிறோம் குடிக்க சுத்தமான நீர் இன்றி. இதுதான் உண்மை. வடக்கின் நிலத்தடி நீர் வற்றியா போய்விட்டது? இல்லையே குடிப்பதற்கு அது உகந்ததாக இல்லை அதில் அதிக வேதிப்பொருள் கலந்திருக்கிறது என்றுதானே இன்று யாழ் குடிநீருக்கு மாற்றுத்திட்டம் தேடுகிறீர்கள்? யாழ் நிலத்தடி நீருக்கு வேதிப்பொருள் எப்படி வந்தது எப்படி அதிக உவராக மாறியது என்று யாரேனும் கேள்விகேட்டார்களா இல்லை ஆராய்ச்சிதான் செய்தார்களா?

சுன்னாகம் பவர் ஸ்ரேசனின் கழிவு ஒயில் நிலத்தில் கலந்ததற்கே ஒரு பிரதேசத்தின் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறதென்றால் ஒரு மாபெரும் இரசாயன தொழிற்சாலையின் கழிவுகள் மண்ணில் புதைக்கப்படுவதில் நீர் நிலைகளில் கலக்கப்படுவதில் எத்தனை பெரும் பாதிப்பு ஏற்படும் என்று சிந்தியுங்கள். ஆனையிறவு உப்பளம் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் அபாயகரமான அழிவுக்கு தமிழர்கள் தாமே கையெழுத்து இட்டுக்கொடுத்திருக்கின்றனர். அதிலிருந்து அவர்கள் மீழ்வது கடினம்.

சு.பிரபா

paranthan

https://thinakkathir.com/?p=69565

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
    • இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன். முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.
    • பயங்கரவாதிகள் எனும் சொறப்தத்தை முதன்முதலாகப் பாவித்த அரசு சிறிமாவினது. 1971 ஆம் ஆண்டு தெற்கில் அரசுக்கெதிராகக் கிளர்ச்சிசெய்த சிங்களை இளைஞர்களை அன்று பயங்கரவாதிகள் என்று அரசு அழைத்தது. பின்னர் வடக்கில் அரசுக்கெதிராகப் போராடிய இளைஞர்களைப் பயங்கரவாதிகள் என்று அரசுகள் அழைத்தன. 2009 இற்குப் பின்னர் முஸ்லீம்களைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கின்றனர். ஆரம்பத்தில் வர்க்கவேறுபாட்டினால் உருவாக்கப்பட்ட ஆளும் பிரபுக்களால் உருவாக்கப்பட்ட அரசிற்கும் மக்களுக்குமிடையிலான போராட்டத்தை இனவாதமாகவும், மதவாதமாகவும் திசைதிருப்ப அரசுகளால் முடிந்தது.  தமிழ் மக்கள் தமது மரணித்த உறவுகளை காடுகளுக்குள்ச் சென்று, ஒளித்து மறைத்து நினைவுகூரவில்லை. மாறாக வெளிப்படையாகப் பொதுவெளியில், ஒரு சமூகமாக வந்து நினைவுகூர்கிறார்கள். இதனை நாம் மறுப்பது நியாயமில்லை. 
    • புலிகளின் உருவாக்கத்திற்காக நாம் எவ்வளவு காலத்திற்குப் பிரபாகரனைக் குறை கூறிக்கொண்டு இருக்கப்போகிறோம்? ஏன், பிரபாகரனுக்கு நிகரான பொறுப்பினை அன்றிருந்த அரசாங்களும் கொண்டிருக்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்? 1983 இல் தமிழர்களுக்கு அடித்தது அரசாங்கம் மட்டுமில்லையே? சிங்கள மக்களுமாகத்தானே சேர்ந்து அடித்தோம்? 
    • இன்று பலஸ்த்தீனத்தில் நடக்கும் அவலங்கள் குறித்தும், ஆயிரக்கணக்கில் கொல்லப்படும் குழந்தைகள் குறித்தும், வீடுகளுக்கு அடியில் உயிருடன் புதைக்கப்படும் பெண்கள் குறித்தும் கவலைப்படும் நாங்கள், ஆத்திரத்துடன் கேள்விகேட்கும் நாங்கள், இதையேதானே 15 வருடங்களுக்கு முன்னர் இதே நாட்டில் வடக்கில் செய்தோம்? அப்போது எமக்கு அது ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. இன்று ரஃபாவரை பலஸ்த்தீனர்களை தள்ளிச் சென்று ஒரு இடத்தில் குவித்து வைத்து படுகொலை செய்வதுபோல, நாமும் முள்ளிவாய்க்கால்வரை தமிழர்களைத் தள்ளிச் சென்று கொல்லவில்லையா? கொல்லப்பட்டவர்கள் எல்லாருமே புலிகள்தான் என்றும், அதனால் அதுகுறுத்து நாம் கவலைப்படத் தேவையில்லையென்றும், ஆகவே புலிகளின் மரணத்திற்கு நினைவுகூர்வதைத் தடுப்பது சரியே என்று கூறும் நாம், விமானத்திலிருந்து கொட்டப்பட்ட குண்டுகள் புலிகளை மட்டுமே இலக்குவைத்துத் தாக்கவில்லை, மாறாக அங்கிருந்த 3 மாதக் குழந்தையிலிருந்து அனைவரையுமே கொன்றது என்பதை ஏன் புரிந்துகொள்கிறோம் இல்லை? சரி, கொல்லப்பட்டது எல்லாருமே புலிகள் என்று வைத்துக்கொள்வோமே, ஏன், அவர்களின் உறவுகள் அவர்களை நினைவுகூர்வதில் என்ன தவறு இருக்க முடியும்? 1977 ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்கள் தனிநாடு கோருவது தவறில்லை என்று வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்ட அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி, பதவிக்கு வந்த வெறும் ஆறு மாதத்திலேயே பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் என்று கொண்டுவந்து ஒரு சில போராளிகளை மட்டுமே கொண்டிருந்த புலிகள் இயக்கத்தை பெருவிருட்சமாக வளர்த்துவிடவில்லையா? தமிழர்களுக்கு, ஒரு இனமாக‌ அரசியல் ரீதியில், பொருளாதார ரீதியில், சமூக ரீதியில் இருந்த பிரச்சினைகளுக்கு சிங்கள் அரசுகள் தீர்வொன்றினை வழங்க மறுத்ததனாலேயே புலிகள் உருப்பெற்றார்கள் என்பதை ஏன் நாம் புரிந்துகொள்கிறோம் இல்லை? ஐக்கிய தேசியக் கட்சியின் இனவாதிகளான சிறில் போன்றவர்கள் பாராளுமன்றத்திற்குள்ளேயே அன்று கூறியவை முற்றான பொய்கள் என்று எமக்குத் தெரியும், ஆனாலும் இன்றுவரை நாம் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லையா?  தெற்கின் "மக்கள் விடுதலை முன்னணியினர்" ஒரு காலத்தில் பயங்கரவாதிகள். ஆனால், இன்று அவர்கள் தமது உறுப்பினர்களின் மரணத்தை "மாவீரர்கள்" என்று நினைவுகூர்ந்து வருகிறார்கள். நாம் அதனை ஆதரிக்கிறோம், அனுமதிக்கிறோம். அப்படியானால், யுத்தத்தில் கொல்லப்பட்ட புலிகளை அவர்களின் உறவுகள் நினைவுகூர்வதில் என்ன தவறு இருக்கமுடியும்? மே 18 இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட தனது மகனை, மகளை, தாயைத், தந்தையை அம்மக்கள் நினைவுகூரும் நாள். அதற்கும் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அம்மக்களை தமது உறவுகளுக்கான வணக்கத்தினைச் செய்வதிலிருந்து தடுப்பதன் மூலம் மேலும் மேலும் இவ்வாறான படுகொலைகளுக்கே நாம் வித்திடுகிறோம்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.