Jump to content

வாவ்... ஐபோனுக்கு டூயல் சிம் அப்டேட் வந்தாச்சு! #IphoneXS


Recommended Posts

வாவ்... ஐபோனுக்கு டூயல் சிம் அப்டேட் வந்தாச்சு! #IphoneXS #AppleEvent #LiveUpdates

2640_thumb.jpg

ஐபோன் XR என்ற மற்றுமொரு புதிய ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்ச் டிசைன் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு 12 MP கேமராவைக் கொண்டது.

 

6.1 இன்ச் LCD டிஸ்ப்ளே இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை, கருப்பு, நீலம், பவளம், மஞ்சள். என ஐந்து நிறங்களில் இது விற்பனைக்கு வரும்

 

 


டூயல் சிம்

நீண்ட நாளாக எதிர்பார்க்கப்பட்ட டூயல் சிம் வசதியை இந்த இரண்டு ஐபோன்களிலும் கொடுத்திருக்கிறது ஆப்பிள். eSim முறையில் இது செயல்படும்.

சீனாவில் வெளியாகும் ஐபோன்களில் மட்டும் இரண்டு சிம் ஸ்லாட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

மார்கஸ் பிரவுன்லீ ட்வீட்

ஐபோன் XS மேக்ஸ்:

இதுவரை வெளியான ஐபோன்களிலேயே மிகவும் பெரிய டிஸ்ப்ளேவைக் கொண்டது இதுதான். இதுவும் 6.5 இன்ச் சூப்பர் ரெட்டினா OLED டிஸ்ப்ளேவைக் கொண்டது.

ஆப்பிள் ஐபோன் XS Max


5.8 இன்ச் சூப்பர் ரெட்டினா OLED டிஸ்ப்ளே மிகத் துல்லியமாக காட்சிகளைத் தரும். IP68 சர்டிபிகேட்  வாட்டர் ப்ரூஃபாக இருக்கும் 

ஐபோன் XS: இதற்கு முன்னர் வெளியான ஐபோன் X-ற்கும் இந்த இரண்டு புதிய ஐபோன்களுக்கும் பெரிய அளவில் ஏதும் வித்தியசமாமில்லை. இதுவரை வெளியான ஐபோன்களிலேயே இதுதான் அழகானது என்கிறார் பில்ஷில்லர்.

 

 

Iphone XS and XS max

ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஐபோன் XS

அடுத்து ஐபோன் அறிமுகப்படுத்தவிருக்கிறது.


Apple watch series 4

ஆப்பிள் வாட்ச்:

முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்ட ஆப்பிள் வாட்ச் 4 பெரிய டிஸ்ப்ளேவைக் கொண்டது. இதன் டிசைன் மட்டுமின்றி UI-ம் முழுவதுமாக புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. S4 சிப் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது; டூயல் கோர்  64-பிட் புராஸசர் இரண்டு மடங்கு வேகத்தில் செயல்படும்.

Apple Watch series 4

"நாங்கள் எப்பொழுதும் எங்கள் வாடிக்கையாளர்களை மையமாக வைத்தே அனைத்தையும் செயல்படுத்துகிறோம், ஆகவேதான் ஐஒஸ் உலகின் முன்னணி இயங்குதளமாக மட்டுமின்றி தனித்துவமாகவும் இருக்கிறது."

ஜெப் வில்லியம்ஸ் தற்பொழுது மேடையில் தோன்றி ஆப்பிள் வாட்ச்சைப் பற்றிய அறிமுக உரையை வழங்குகிறார்.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4

முதல் கேட்ஜெட்டாக ஆப்பிள் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. 


"ஏற்கெனவே உலக அளவில் முன்னிலையில் இருக்கும் ஆப்பிள் வாட்ச்சை, அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவிருக்கிறோம்."

"ஆப்பிள் ஸ்டோர்களை தற்பொழுது 500 மில்லியன் பேர் வரை பார்வையிடுகிறார்கள்"

ஒரு சிறிய அறிமுக வீடியோவை அடுத்து டிம் குக் தற்பொழுது மேடையில் தோன்றி நிகழ்வை 
தொடங்கி வைத்தார் 


ஆப்பிள் நிகழ்ச்சி தொடங்கியது.

Apple Event 2018

https://www.vikatan.com/news/information-technology/136766-apple-event-2018-live-updates.html

Link to comment
Share on other sites

ஐபோன் XR என்ற மற்றுமொரு புதிய ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்ச் டிசைன் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு 12 MP கேமராவைக் கொண்டது.

புதிய ஐபோன்கள்

6.1 இன்ச் LCD டிஸ்ப்ளே இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை, கருப்பு, நீலம், பவளம், மஞ்சள். என ஐந்து நிறங்களில் இது விற்பனைக்கு வரும்.

 

 

ஐபோன் XS விலை 999 டாலர்களில் இருந்து தொடங்குகிறது 

ஐபோன் XS Max  விலை 1099 டாலர்களில் இருந்தும், ஐபோன் XR விலை 749 டாலரில் இருந்தும் தொடங்குகிறது

 

https://www.vikatan.com/news/information-technology/136766-apple-event-2018-live-updates.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கி பாவிச்சு பாருங்கோ .....கொஞ்ச நாளையாலை புதிசாய் எதுவுமே இல்லை எண்டது தெரியும்.:grin:
ஐ போன் XS வைச்சிருக்கிறியள் எண்ட பேர் மட்டுதான் உங்களுக்கு :27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

வாங்கி பாவிச்சு பாருங்கோ .....கொஞ்ச நாளையாலை புதிசாய் எதுவுமே இல்லை எண்டது தெரியும்.:grin:
ஐ போன் XS வைச்சிருக்கிறியள் எண்ட பேர் மட்டுதான் உங்களுக்கு :27_sunglasses:

சரக்கு தீர்ந்து போச்சுங்கோ!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

சரக்கு தீர்ந்து போச்சுங்கோ!!!

அதுதான் உண்மை  இதுக்கு மேல் சரக்கு கிடையாது அவர்களிடம்  பார்ப்பம் இனி நோக்கியா நானோ  சென்சார் உணரிகளுடன் வரும் போனை.

வந்து சக்சஸ் ஆனால் அடுத்து வரும் 10 வருடம்களுக்கு மேல் மறுபடியும் நோக்கியா ராச்சியம் தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பெருமாள் said:

அதுதான் உண்மை  இதுக்கு மேல் சரக்கு கிடையாது அவர்களிடம்  பார்ப்பம் இனி நோக்கியா நானோ  சென்சார் உணரிகளுடன் வரும் போனை.

வந்து சக்சஸ் ஆனால் அடுத்து வரும் 10 வருடம்களுக்கு மேல் மறுபடியும் நோக்கியா ராச்சியம் தான் .

Black Berry New phone...?

Link to comment
Share on other sites

அதிநவீன அம்சங்களுடன் 2018 ஐபோன் மாடல்கள் அறிமுகம் - விலை மற்றும் விற்பனை விவரங்கள்

 
அ-அ+

ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை மற்றும் விற்பனை சார்ந்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #iPhoneXS #iPhoneXSMax

 
 
 
 
அதிநவீன அம்சங்களுடன் 2018 ஐபோன் மாடல்கள் அறிமுகம் - விலை மற்றும் விற்பனை விவரங்கள்
 
 
 
 
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2018 ஐபோன் மாடல்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 
 
ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR என அழைக்கப்படும் மூன்று மாடல்களில் பல்வேறு புதிய அம்சங்களுடன், ஆப்பிள் சாதனங்களில் முதல் முறை அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களில் முறையே 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் 458PPI சூப்பர் ரெட்டினா HDR டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளது. 
 
201809130202362995_1_Apple-A12-Bionic._L_styvpf.jpg
 
இந்த டிஸ்ப்ளே டால்பி விஷன், ஹெச்.டி.ஆர். 19 மற்றும் 120Hz டச்-சென்சிங் சப்போர்ட் கொண்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஐபோன்களில் முதல் முறையாக டூயல் சிம் சப்போர்ட் வசதி டூயல் ஸ்டான்ட்-பை இசிம் மூலம் வழங்கப்படுகிறது. எனினும் சீனாவில் மட்டும் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படுகிறது.
 
புதிய ஐபோன் ஆப்பிள் ஏ12 பயோனிக் 7என்.எம். சிப்செட் மூலம் இயங்குகிறது. இது முந்தைய ஏ11 பிராசஸரை விட 15% வேகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6-கோர் சி.பி.யு. கொண்ட புதிய சிப்செட் 40% குறைந்த மின்சக்தியை பயன்படுத்துகிறது. இதனால் ஐபோனின் பேட்டரி பேக்கப் முந்தைய மாடல்களை விட அதிக நேரம் கிடைக்கும். புதிய ஐபோன் XS மாடலில் உள்ள ஃபேஸ் ஐடி அம்சம் முந்தைய தொழில்நுட்பத்தை விட வேகமாகவும், அதிக பாதுகாப்பாகவும் இருக்கிறது.
 
201809130202362995_2_iPhone-XS-iPhone-Xs-Max._L_styvpf.jpg
 
ஆப்பிள் ஐபோன் XS மற்றும் XS மேக்ஸ் சிறப்பம்சங்கள்:
 
- ஐபோன் XS: 5.8-இன்ச் 2436x1125 பிக்சல் OLED 458ppi சூப்பர் ரெட்டினா HDR டிஸ்ப்ளே, 3D டச்
- ஐபோன் XS மேக்ஸ்: 6.5-இன்ச் 2688x1245 பிக்சல் OLED 458ppi சூப்பர் Retina HDR டிஸ்ப்ளே, 3D டச்
- 6-கோர், ஏ12 பயோனிக் 64-பிட் 7என்.எம். பிராசஸர் 4-கோர் GPU, M12 மோஷன் கோ-பிராசஸர்
- 64 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி ஆப்ஷன்கள்
- ஐ.ஓ.எஸ். 12
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68)
- டூயல் சிம் (இரண்டாவது இசிம் தேர்வு செய்யப்பட்ட நெட்வொர்க் மட்டும் அல்லது சீனாவில் பிரத்யேக சிம் ஸ்லாட்)
- 12 எம்பி வைடு-ஆங்கிள் பிரைமரி கேமரா, f/1.8
- 12 எம்பி டெலிஃபோட்டோ இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, டூயல் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்
- 7 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, ரெட்டினா ஃபிளாஷ்
- ட்ரூ டெப்த் கேமரா
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்
- பில்ட்-இன் லித்தியம் அயன் பேட்டரி, க்யூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங்
- ஃபாஸ்ட் சார்ஜிங்
 
ஆப்பிள் ஐபோன் XS மற்றும் XS மேக்ஸ் ஸ்மார்ட்போன் கோல்டு, சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. ஐபோன் XS விலை 999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.71,813) முதல் துவங்குகிறது. ஐபோன் XS மேக்ஸ் விலை 1,099 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.79,001) முதல் துவங்குகிறது.
 
ஐபோன் XS சீரிஸ் முதற்கட்டமாக 30 நாடுகளில் கிடைக்கும். இவற்றுக்கான முன்பதிவு செப்டம்பர் 14-ம் தேதி துவங்கி, விற்பனை செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறுகிறது. இந்தியாவில் இவற்றின் விலை முறையே ரூ.99,990 மற்றும் ரூ.1,09,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
201809130202362995_3_iPhone-XR-Blue-Offcl._L_styvpf.jpg
 
ஐபோன் XR சிறப்பம்சங்கள்:
 
- 6.1 இன்ச் 1792x828  பிக்சல் எல்.சி.டி. 326ppi லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே, 3D டச்
- 6-கோர் ஏ12 பயோனிக் 64 பிட் 7 என்.எம். பிராசஸர், 4-கோர் GPU, M12 மோஷன் கோ-பிராசஸர்
- 64 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி ஆப்ஷன்கள்
- ஐ.ஓ.எஸ். 12
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68)
- டூயல் சிம் (நானோ+இரண்டாவது இசிம் அல்லது சீனாவில் பிரத்யேக சிம் ஸ்லாட்)
- 12 எம்பி வைடு-ஆங்கிள் பிரைமரி கேமரா, f/1.8, ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், ட்ரூ டோன் ஃபிளாஷ்
- 7 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, ரெட்டினா ஃபிளாஷ்
- ட்ரூ டெப்த் கேமரா
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்
- பில்ட்-இன் லித்தியம் அயன் பேட்டரி, க்யூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங்
- ஃபாஸ்ட் சார்ஜிங்
 
ஆப்பிள் ஐபோன் XR மாடல் வைட், பிளாக், புளு, எல்லோ, கோரல் மற்றும் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை 749 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.53,860) முதல் துவங்குகிறது. அக்டோபர் 19-ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படும் ஐபோன் XR இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அக்டோபர் 26-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. #iPhoneXS #iPhoneXSMax

https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/13020236/1190985/iPhone-XS-iPhone-XS-Max-iPhone-XR-Specs-Price-Sale.vpf

Link to comment
Share on other sites

ஆப்பிளின் புதிய தயாரிப்புகள் அறிமுகம்: இதய துடிப்பை அறியும் வசதி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள்

சாய்ராம் ஜெயராமன்பிபிசி தமிழ்
ஆப்பிளின் புதிய தயாரிப்புகள் அறிமுகம்படத்தின் காப்புரிமைAPPLE Image captionஆப்பிளின் புதிய தயாரிப்புகள் அறிமுகம்

உலகம் முழுவதுமுள்ள தொழில்நுட்ப ஆர்வலர்கள், பயன்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆவலோடு எதிர்பார்த்த புதிய ஐபோன்கள், வாட்சை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நடக்கும் வருடாந்திர விழாவில் ஆப்பிள் நிறுவனம் தனது திறன்பேசியான ஐபோன், கையடக்ககணினியான ஐபாட், ஸ்மார்ட் வாட்சான ஆப்பிள் வாட்ச் போன்ற பல்வேறு தயாரிப்புகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் கூபர்டினோவில் கட்டப்பட்டுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் புதிய, பிரம்மாண்டமான தலைமையகத்திலுள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் புதன்கிழமை நள்ளிரவு வரை நடந்த இந்த வருடத்துக்கான தயாரிப்புகளின் அறிமுக கூட்டத்தில் அந்நிறுவனத்தின் புதிய ஐபோன்களான ஐபோன் 10 எஸ், 10 எஸ் மாக்ஸ், 10 ஆர், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச்செயலதிகாரியான டிம் குக்கும், அணியினரும் அந்நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி அவற்றின் சிறப்பம்சங்களை விளக்கினர்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஒவ்வொரு புதிய தயாரிப்பு குறித்த முக்கிய தகவல்களை காண்போம்.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4படத்தின் காப்புரிமைAPPLE Image captionஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4

ஆப்பிள் நிறுவனத்தின் மிகப் பிரபலமான தயாரிப்பாக பொதுவாக ஐபோன்கள் பார்க்கப்பட்டாலும், இந்த வருடத்தை பொறுத்தவரை ஸ்மார்ட் வாட்ச்களின் சிறப்பம்சங்களே ஆச்சர்யத்தை அளித்ததாக கருதப்படுகிறது.

40மிமீ, 44 மிமீ ஆகிய இரண்டு அளவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4இன் திரை அதன் முந்தைய பதிப்புகளை விட பெரியதாகவும், எட்ஜ் டூ எட்ஜ் வடிவமைப்பையும் கொண்டுள்ளது.

கடந்த மே நடந்த ஆப்பிளின் வருடாந்திர தொழில்நுட்பவியலாளர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட புதிய இயங்குதளமான வாட்ச்ஓஎஸ் 5இல் இது இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 17ஆம் தேதி வெளியிடப்படவுள்ள இந்த புதிய இயங்குதளத்தை ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 1 (2016), ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 2 மற்றும் முந்தைய வருடம் வெளியிடப்பட்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 பயன்பாட்டாளர்களும் பெறுவார்கள்.

முந்தைய ஆப்பிள் வாட்ச் சீரிஸ்களில் அழைப்புக்களை செய்யும்/ ஏற்கும், குறுஞ்செய்தி செய்யும்/ பார்க்கும், மேப்ஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், ஒருவர் நடக்கும் தொலைவு, இதய இயக்கம், உடற்பயிற்சிகள் உள்ளிட்ட உடலியக்கங்களை காண முடிந்த வந்தது.

இந்நிலையில், உலகிலேயே முதல் முறையாக ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4இல் இதுவரை மருத்துவமனைகளில் மட்டுமே காண முடிந்த ஈசிஜி எனப்படும் இதய துடிப்பலை அளவி அறிந்துகொள்ளும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்களது இதய துடிப்பில் அசாதாரண நிகழ்வு இருந்தால் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வசதியும், அவசர உதவியை அழைக்கும் தெரிவும் உள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மூன்று நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4இன் ஜிபிஎஸ் பதிப்பு 399 டாலர்களுக்கும், எல்டிஇ பதிப்பு 499 டாலர்களுக்கும் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் விற்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன்

வாடிக்கையாளர்கள் திருப்தியில் உலகின் முன்னணி திறன்பேசியாக கருதப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான தயாரிப்பான ஐபோனின் புதிய பதிப்புகளான ஐபோன் 10 எஸ், 10 எஸ் மாக்ஸ், 10 ஆர் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்டுள்ள மூன்று பதிப்புகளிலும் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறைக்கான பிரத்யேக ஏ12 பயோனிக் என்றழைக்கப்படும் 7 நானோ மீட்டர் அளவே கொண்ட அதிவேக சிப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது முந்தைய பதிப்புகளை விட 50 சதவீதம் வேகமாகவும் குறைந்த பேட்டரியை பயன்படுத்தும் வகையிலு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மங்கலான புகைப்படங்களை கூட தெளிவாக்கி பார்க்கும் எச்டிஆர் சென்சார் (உணரி), மேம்படுத்தப்பட்ட பேஸ்ஐடி என்னும் முகத்தை பயன்படுத்தி திறன்பேசியை திறக்கும் தொழில்நுட்பம், கைப்பேசிகளில் முதல்முறையாக புகைப்படம் எடுத்தபிறகும் கூட அதன் டெப்த்தை மாற்றிக்கொள்ளும் வசதி, நீடிக்கப்பட்ட பேட்டரி திறன், ஆகுமென்டட் விளையாட்டுகள் - பயன்பாடுகள், தண்ணீர் புகா வடிவமைப்பு போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

ஐபோன்படத்தின் காப்புரிமைAPPLE

குறிப்பாக இதுவரை இல்லாத வகையில் இந்த மூன்று ஐபோன்களிலுமே இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இசிம் பயன்படுத்தி கொள்ளும் வகையில் இது வடிவைக்கப்பட்டுள்ளது.

முறையே 5.8 அங்குல திரையையும், 6.5 அங்குல திரையையும் கொண்டுள்ள ஐபோன் 10 எஸ் மற்றும் ஐபோன் 10 எஸ் மாக்ஸின் பின்பக்கத்தில் 12எம்பி திறனுடைய இரண்டு கேமெராக்களும், முன்புறத்தில் 7எம்பி திறனுடைய கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. கிரே, சில்வர், கோல்ட் ஆகிய மூன்று நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐபோன் 10 எஸ்ஸின் தொடக்க விலை 99,000 ரூபாய் என்றும், ஐபோன் 10 எஸ் மாக்ஸின் தொடக்க விலையாக 109,900 ரூபாய் ஆகும். இவை இரண்டுமே இம்மாதம் 28ஆம் தேதியன்று இந்தியாவில் வெளியாகிறது.

ஐபோனின் சிறப்பம்சங்களை சற்றே குறைந்த விலையில் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்த முறை மூன்றாவதாக ஐபோன் 10 ஆர் என்ற புதிய திறன்பேசியையும் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 6.1 அங்குல திரையை கொண்டுள்ள இது ஐபோன் 10 எஸ் பெற்றுள்ள அநேக சிறம்பம்சங்களை பெற்றுள்ளதுடன், கூடுதலாக வெள்ளை, கறுப்பு, மஞ்சள், சிவப்பு, கோரல் ஆகிய நிறங்களில் அக்டோபர் 26ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படுகிறது. இதன் தொடக்க விலையாக 76,000 ரூபாய் ஆகும்.

மற்ற முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

மற்ற முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?படத்தின் காப்புரிமைAPPLE

ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து இயக்கங்களும் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் ஐபோனின் மொத்த விற்பனை 200 கோடியை தொடவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமைச்செயலதிகாரி டிம் குக் தெரிவித்தார்.

ஐபோன் மற்றும் ஐபாடுகளின் இயங்குதளமான ஐஓஎஸ்ஸின் 12வது பதிப்பும், ஆப்பிள் டிவிஓஎஸ் 12, வாட்ச்ஓஎஸ் 12 ஆகியவை வரும் 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் கணினியான ஐமேக் மற்றும் மடிமேற்கணினியான மேக்புக்கின் மேக்ஓஎஸ் மொஜாவே என்னும் புதிய பதிப்பு வரும் 24ஆம் தேதி வெளியிடப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/science-45505652

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

Black Berry New phone...?

முதலில் பாதுகாப்பு மென்பொருள் தயாரிக்க போறம் என்று அறிவித்து பின்பு போன் வெளியிட்டு என்று தாங்களே  குழம்பி  நிக்கினம் .

Link to comment
Share on other sites

`முரட்டு சிங்கிள்' ஐபோனில் இனி இரண்டு சிம்... அது என்ன இ-சிம்? #HowStuffWorks

2640_thumb.jpg
 

இத்தனை வருடங்கள் கழித்து ஒரு ஸ்மார்ட்போனில் டூயல் சிம் என்பது பலருக்குச் சாதாரணமான விஷயமாகத் தோன்றக்கூடும். ஆனால் ஆப்பிள் விஷயத்தில் அப்படிக் கிடையாது.

`முரட்டு சிங்கிள்' ஐபோனில் இனி இரண்டு சிம்... அது என்ன இ-சிம்? #HowStuffWorks
 

நீண்ட காலத்துக்குப் பின் தனது ஐபோன்களில் டூயல் சிம் வசதியைக் கொண்டுவந்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். ஐபோன் இந்த வசதியைப் பெறுவதற்கு எடுத்துக்கொண்ட காலம் பத்தாண்டுகளுக்கும் மேல். தொடக்கத்தில் சாம்சங், நோக்கியா தொடங்கி அதன் பின்னர் சந்தையை ஆக்கிரமித்த சீன நிறுவனங்கள் வரை டூயல் சிம் மொபைல்களை வெளியிட்ட போதும் கூட ஆப்பிள் தனது முடிவிலிருந்து பின் வாங்குவதாகத் தெரியவில்லை. இதற்கு முன்பு ஒவ்வொரு வருடமும் புதிய ஐபோன்களில் டூயல் சிம் வசதியை ஆப்பிள் தரும் என உலகமே எதிர்பார்க்கும். ஆனால் அது நடக்கவே நடக்காது. ஆனால் இந்த முறை ஒரு வழியாக டூயல் சிம்மைக் கொடுத்தே விட்டது.

ஐபோன் இனிமேல் முரட்டு சிங்கிள் கிடையாது

டிம்-குக்

 

 

ஆப்பிளிடம் எப்பொழுதும் ஒரு பழக்கம் உண்டு அரதப்பழசான விஷயமான இருந்தாலும் கூட அதை ஐபோனில் பயன்படுத்தி உலகத்தையே அதைப் பற்றிப் பேச வைக்கும். கடந்த வருடம் ஐபோன் X-ல் நாட்ச்சை அறிமுகப்படுத்தி அதைச் செய்தது இந்த வருடம் இ-சிம்மைப் பற்றி பேச வைத்திருக்கிறது. சாம்சங் இந்த இ-சிம் தொழில்நுட்பத்தை இரண்டு வருடங்களுக்கு முன்னால் 2016-ம் ஆண்டிலேயே பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து விட்டது. ஆனால் அதை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. தற்பொழுது ஐபோனில் இ-சிம் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டவுடன் அது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

 

 

இத்தனை வருடங்கள் கழித்து ஒரு ஸ்மார்ட்போனில் டூயல் சிம் என்பது பலருக்குச் சாதாரணமான விஷயமாகத் தோன்றக்கூடும். ஆனால் ஆப்பிள் விஷயத்தில் அப்படிக் கிடையாது. எதிலுமே ஒரு புதுமையை விரும்பும் ஆப்பிள் இதிலும் அதைப் பின்பற்றியிருக்கிறது. தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் டூயல் சிம் தொழில்நுட்பத்துக்கும் புதிய ஐபோன்களில் இருக்கும் டூயல் சிம் தொழில்நுட்பத்துக்கும் ஒரு சின்ன வித்தியாசம் இருக்கிறது. வழக்கமான டூயல் சிம் ஸ்லாட்கள் இதில் இருக்காது. அதற்குப் பதிலாக ஐபோன் XS, XS Max மற்றும் ஐபோன் XR களில் டூயல் சிம் வசதியைத் தருவதற்கு இ-சிம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறது ஆப்பிள். இந்த ஐபோன்களில் ஒரே ஒரு சிம் ஸ்லாட்தான் இருக்கும். அதில் வழக்கம் போல ஒரு சிம் கார்டைப் பயன்படுத்த முடியும்.

ஐபோன்

 

இ-சிம் என்றால் என்ன ? 

ஐபோன்

embedded SIM என்பதுதான் eSIM எனச் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட நாம் இப்போது பயன்படுத்தும் சிம் கார்டின் வேலையைத்தான் பார்க்கிறது. ஆனால், இந்தத் தொழில்நுட்பம் முற்றிலும் வேறுபட்டது. இவை சர்க்யூட் போர்டுகளில் நிரந்தரமாக இணைக்கப்பட்டே பயன்பாட்டுக்கு வரும். இ-சிம்கள் பொதுவாக 5 மி.மீ அல்லது 6 மி.மீ அளவு இருக்கும் இவை மதர்போர்டுகளில் நிரந்தரமாகப் பொருத்தப்பட்டு விடும். அதனால் வழக்கமான சிம் கார்டுகள் போல இந்த இ-சிம்களைத் தனியாக எடுத்துப் பயன்படுத்த முடியாது. இது சிலருக்கு CDMA தொழில்நுட்பத்தை ஞாபகப்படுத்தலாம். ஆனால் அதற்கும் இ-சிம் தொழில்நுட்பத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. CDMA-வில் ஒரு தொடர்பு எண்ணைப் பதிவு செய்தால் அது நிரந்தரமானதாக இருக்கும் அதை மாற்ற முடியாது. ஆனால் இ-சிம்மில் அப்படிக் கிடையாது.

 

 

நெட்வொர்க், மற்றும் சிம் உரிமையாளரின் தகவல்களை இ-சிம்மில் பதிவு செய்துகொள்ள முடியும். இதற்காக மெஷின் டூ மெஷின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் சிம்களில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் ஒரு முறை தகவல்கள் பதியப்பட்டு விட்டால் அதனை அழித்துவிட்டு மற்றொரு முறை பயன்படுத்த முடியாது. எடுத்துக்காட்டாக மொபைல் நம்பர் போர்டபிலிட்டி மூலமாக அதே நம்பரை வேறொரு நெட்வொர்க்குக்கு மாற்ற வேண்டும் என்றால் சிம் கார்டையும் சேர்த்து மாற்ற வேண்டியிருக்கும். ஆனால், இ-சிம்களில் அந்தப் பிரச்னை இருக்காது. இவற்றை மறுநிரலாக்கம்செய்ய முடியும். பழைய தகவல்களை அழித்துவிட்டு புதிய தகவல்களைப் பதிந்துகொள்ளலாம். இ-சிம்கள் மூலமாக வழக்கமான சிம் கார்டுகளுக்கான இடமும் குறையும் என்பதால் மொபைல் போன்களின் வடிவமைப்பும் எளிதாகும்.

இ-சிம்

இந்த இ-சிம்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை 2010-ம் ஆண்டிலேயே GSMA அமைப்பு ஆராயத் தொடங்கிவிட்டது. ஆப்பிள் கடந்த வருடம் தனது வாட்ச் சீரிஸ் 3-யில் இ-சிம் வசதியைக் கொடுத்திருந்தது. தற்பொழுது ஐபோனிலும் இந்தத் தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்து விட்டதால் பிற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களின் கவனமும் இ-சிம் மீது திரும்பியிருக்கும். எனவே ஆண்ட்ராய்டு மொபைல்களிலும் இந்தத் தொழில்நுட்பம் பரவலாகும் வாய்ப்புகள் அதிகம். எப்பொழுதும் உலகம் முழுவதும் விற்பனைக்கு வரும் ஐபோன்கள் ஒரே மாதிரிதான் வடிவமைக்கப்படுவது வழக்கம். டூயல் சிம் என்ற ஒரு விஷயத்திற்காக அதை விட்டுக்கொடுத்திருக்கிறது ஆப்பிள். சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவு போன்ற இடங்களில் விற்பனைக்கு வரும் ஐபோன்களில் டூயல் சிம் வசதி இருந்தாலும் அதில் இ-சிம் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக டூயல் சிம் ஸ்லாட்டுகளே கொடுக்கப்பட்டுள்ளன. அதில் இரண்டு நானோ சிம் கார்டுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இ-சிம் வசதியை அளிக்கின்றன. ஆப்பிள் இந்த இரண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்புகள் அதிகம்.

https://www.vikatan.com/news/information-technology/136944-how-esim-works-in-apple-iphone.html

Link to comment
Share on other sites

அய் இனி ஜாலிதான் கள்ள பொண்டாட்டிக்கு ஒன்று விட்டுக்குஒன்று என்று கதைக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, lusu said:

அய் இனி ஜாலிதான் கள்ள பொண்டாட்டிக்கு ஒன்று விட்டுக்குஒன்று என்று கதைக்கலாம்

லூசு! அவிங்களும் உதேமாதிரி யோசிச்சால்????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லூசு இந்த வார்த்தை பிரயோகம் ஒரே இடத்தில் உபயோகித்தன் காசி ஆனந்தன் விடயத்தில் வெட்டுபடும் என்று நண்பன் சொன்னான் இன்றுவரை வெட்டுபடவில்லை வேண்டுமென்றே உபயோகித்தன் ஆனால் அதே வார்த்தையை வேறு இடத்தில் உபயோகிக்க முடியாது நடு நிலை என்பது என்ன ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/16/2018 at 12:16 AM, பெருமாள் said:

லூசு இந்த வார்த்தை பிரயோகம் ஒரே இடத்தில் உபயோகித்தன் காசி ஆனந்தன் விடயத்தில் வெட்டுபடும் என்று நண்பன் சொன்னான் இன்றுவரை வெட்டுபடவில்லை வேண்டுமென்றே உபயோகித்தன் ஆனால் அதே வார்த்தையை வேறு இடத்தில் உபயோகிக்க முடியாது நடு நிலை என்பது என்ன ?

அட நீங்க வேற. அவற்ற பெயரே லூசு தான். ?

அதுபோக..

ஐபோன் என்னதான் சிறிய மாற்றங்களோடு வந்தாலும்.. விலை ஏறிர மாதிரி.. அதன் சேமிப்பிடம் ஏறுவதில்லை. போகப் போக ஐபோன் சிலோ ஆகிடும். அதனால்.. ஐபோனைப் பிடிப்பதே இல்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.