Jump to content

வாவ்... ஐபோனுக்கு டூயல் சிம் அப்டேட் வந்தாச்சு! #IphoneXS


Recommended Posts

வாவ்... ஐபோனுக்கு டூயல் சிம் அப்டேட் வந்தாச்சு! #IphoneXS #AppleEvent #LiveUpdates

2640_thumb.jpg

ஐபோன் XR என்ற மற்றுமொரு புதிய ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்ச் டிசைன் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு 12 MP கேமராவைக் கொண்டது.

 

6.1 இன்ச் LCD டிஸ்ப்ளே இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை, கருப்பு, நீலம், பவளம், மஞ்சள். என ஐந்து நிறங்களில் இது விற்பனைக்கு வரும்

 

 


டூயல் சிம்

நீண்ட நாளாக எதிர்பார்க்கப்பட்ட டூயல் சிம் வசதியை இந்த இரண்டு ஐபோன்களிலும் கொடுத்திருக்கிறது ஆப்பிள். eSim முறையில் இது செயல்படும்.

சீனாவில் வெளியாகும் ஐபோன்களில் மட்டும் இரண்டு சிம் ஸ்லாட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

மார்கஸ் பிரவுன்லீ ட்வீட்

ஐபோன் XS மேக்ஸ்:

இதுவரை வெளியான ஐபோன்களிலேயே மிகவும் பெரிய டிஸ்ப்ளேவைக் கொண்டது இதுதான். இதுவும் 6.5 இன்ச் சூப்பர் ரெட்டினா OLED டிஸ்ப்ளேவைக் கொண்டது.

ஆப்பிள் ஐபோன் XS Max


5.8 இன்ச் சூப்பர் ரெட்டினா OLED டிஸ்ப்ளே மிகத் துல்லியமாக காட்சிகளைத் தரும். IP68 சர்டிபிகேட்  வாட்டர் ப்ரூஃபாக இருக்கும் 

ஐபோன் XS: இதற்கு முன்னர் வெளியான ஐபோன் X-ற்கும் இந்த இரண்டு புதிய ஐபோன்களுக்கும் பெரிய அளவில் ஏதும் வித்தியசமாமில்லை. இதுவரை வெளியான ஐபோன்களிலேயே இதுதான் அழகானது என்கிறார் பில்ஷில்லர்.

 

 

Iphone XS and XS max

ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஐபோன் XS

அடுத்து ஐபோன் அறிமுகப்படுத்தவிருக்கிறது.


Apple watch series 4

ஆப்பிள் வாட்ச்:

முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்ட ஆப்பிள் வாட்ச் 4 பெரிய டிஸ்ப்ளேவைக் கொண்டது. இதன் டிசைன் மட்டுமின்றி UI-ம் முழுவதுமாக புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. S4 சிப் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது; டூயல் கோர்  64-பிட் புராஸசர் இரண்டு மடங்கு வேகத்தில் செயல்படும்.

Apple Watch series 4

"நாங்கள் எப்பொழுதும் எங்கள் வாடிக்கையாளர்களை மையமாக வைத்தே அனைத்தையும் செயல்படுத்துகிறோம், ஆகவேதான் ஐஒஸ் உலகின் முன்னணி இயங்குதளமாக மட்டுமின்றி தனித்துவமாகவும் இருக்கிறது."

ஜெப் வில்லியம்ஸ் தற்பொழுது மேடையில் தோன்றி ஆப்பிள் வாட்ச்சைப் பற்றிய அறிமுக உரையை வழங்குகிறார்.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4

முதல் கேட்ஜெட்டாக ஆப்பிள் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. 


"ஏற்கெனவே உலக அளவில் முன்னிலையில் இருக்கும் ஆப்பிள் வாட்ச்சை, அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவிருக்கிறோம்."

"ஆப்பிள் ஸ்டோர்களை தற்பொழுது 500 மில்லியன் பேர் வரை பார்வையிடுகிறார்கள்"

ஒரு சிறிய அறிமுக வீடியோவை அடுத்து டிம் குக் தற்பொழுது மேடையில் தோன்றி நிகழ்வை 
தொடங்கி வைத்தார் 


ஆப்பிள் நிகழ்ச்சி தொடங்கியது.

Apple Event 2018

https://www.vikatan.com/news/information-technology/136766-apple-event-2018-live-updates.html

Link to comment
Share on other sites

ஐபோன் XR என்ற மற்றுமொரு புதிய ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்ச் டிசைன் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு 12 MP கேமராவைக் கொண்டது.

புதிய ஐபோன்கள்

6.1 இன்ச் LCD டிஸ்ப்ளே இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை, கருப்பு, நீலம், பவளம், மஞ்சள். என ஐந்து நிறங்களில் இது விற்பனைக்கு வரும்.

 

 

ஐபோன் XS விலை 999 டாலர்களில் இருந்து தொடங்குகிறது 

ஐபோன் XS Max  விலை 1099 டாலர்களில் இருந்தும், ஐபோன் XR விலை 749 டாலரில் இருந்தும் தொடங்குகிறது

 

https://www.vikatan.com/news/information-technology/136766-apple-event-2018-live-updates.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கி பாவிச்சு பாருங்கோ .....கொஞ்ச நாளையாலை புதிசாய் எதுவுமே இல்லை எண்டது தெரியும்.:grin:
ஐ போன் XS வைச்சிருக்கிறியள் எண்ட பேர் மட்டுதான் உங்களுக்கு :27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

வாங்கி பாவிச்சு பாருங்கோ .....கொஞ்ச நாளையாலை புதிசாய் எதுவுமே இல்லை எண்டது தெரியும்.:grin:
ஐ போன் XS வைச்சிருக்கிறியள் எண்ட பேர் மட்டுதான் உங்களுக்கு :27_sunglasses:

சரக்கு தீர்ந்து போச்சுங்கோ!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

சரக்கு தீர்ந்து போச்சுங்கோ!!!

அதுதான் உண்மை  இதுக்கு மேல் சரக்கு கிடையாது அவர்களிடம்  பார்ப்பம் இனி நோக்கியா நானோ  சென்சார் உணரிகளுடன் வரும் போனை.

வந்து சக்சஸ் ஆனால் அடுத்து வரும் 10 வருடம்களுக்கு மேல் மறுபடியும் நோக்கியா ராச்சியம் தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பெருமாள் said:

அதுதான் உண்மை  இதுக்கு மேல் சரக்கு கிடையாது அவர்களிடம்  பார்ப்பம் இனி நோக்கியா நானோ  சென்சார் உணரிகளுடன் வரும் போனை.

வந்து சக்சஸ் ஆனால் அடுத்து வரும் 10 வருடம்களுக்கு மேல் மறுபடியும் நோக்கியா ராச்சியம் தான் .

Black Berry New phone...?

Link to comment
Share on other sites

அதிநவீன அம்சங்களுடன் 2018 ஐபோன் மாடல்கள் அறிமுகம் - விலை மற்றும் விற்பனை விவரங்கள்

 
அ-அ+

ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை மற்றும் விற்பனை சார்ந்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #iPhoneXS #iPhoneXSMax

 
 
 
 
அதிநவீன அம்சங்களுடன் 2018 ஐபோன் மாடல்கள் அறிமுகம் - விலை மற்றும் விற்பனை விவரங்கள்
 
 
 
 
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2018 ஐபோன் மாடல்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 
 
ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR என அழைக்கப்படும் மூன்று மாடல்களில் பல்வேறு புதிய அம்சங்களுடன், ஆப்பிள் சாதனங்களில் முதல் முறை அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களில் முறையே 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் 458PPI சூப்பர் ரெட்டினா HDR டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளது. 
 
201809130202362995_1_Apple-A12-Bionic._L_styvpf.jpg
 
இந்த டிஸ்ப்ளே டால்பி விஷன், ஹெச்.டி.ஆர். 19 மற்றும் 120Hz டச்-சென்சிங் சப்போர்ட் கொண்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஐபோன்களில் முதல் முறையாக டூயல் சிம் சப்போர்ட் வசதி டூயல் ஸ்டான்ட்-பை இசிம் மூலம் வழங்கப்படுகிறது. எனினும் சீனாவில் மட்டும் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படுகிறது.
 
புதிய ஐபோன் ஆப்பிள் ஏ12 பயோனிக் 7என்.எம். சிப்செட் மூலம் இயங்குகிறது. இது முந்தைய ஏ11 பிராசஸரை விட 15% வேகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6-கோர் சி.பி.யு. கொண்ட புதிய சிப்செட் 40% குறைந்த மின்சக்தியை பயன்படுத்துகிறது. இதனால் ஐபோனின் பேட்டரி பேக்கப் முந்தைய மாடல்களை விட அதிக நேரம் கிடைக்கும். புதிய ஐபோன் XS மாடலில் உள்ள ஃபேஸ் ஐடி அம்சம் முந்தைய தொழில்நுட்பத்தை விட வேகமாகவும், அதிக பாதுகாப்பாகவும் இருக்கிறது.
 
201809130202362995_2_iPhone-XS-iPhone-Xs-Max._L_styvpf.jpg
 
ஆப்பிள் ஐபோன் XS மற்றும் XS மேக்ஸ் சிறப்பம்சங்கள்:
 
- ஐபோன் XS: 5.8-இன்ச் 2436x1125 பிக்சல் OLED 458ppi சூப்பர் ரெட்டினா HDR டிஸ்ப்ளே, 3D டச்
- ஐபோன் XS மேக்ஸ்: 6.5-இன்ச் 2688x1245 பிக்சல் OLED 458ppi சூப்பர் Retina HDR டிஸ்ப்ளே, 3D டச்
- 6-கோர், ஏ12 பயோனிக் 64-பிட் 7என்.எம். பிராசஸர் 4-கோர் GPU, M12 மோஷன் கோ-பிராசஸர்
- 64 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி ஆப்ஷன்கள்
- ஐ.ஓ.எஸ். 12
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68)
- டூயல் சிம் (இரண்டாவது இசிம் தேர்வு செய்யப்பட்ட நெட்வொர்க் மட்டும் அல்லது சீனாவில் பிரத்யேக சிம் ஸ்லாட்)
- 12 எம்பி வைடு-ஆங்கிள் பிரைமரி கேமரா, f/1.8
- 12 எம்பி டெலிஃபோட்டோ இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, டூயல் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்
- 7 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, ரெட்டினா ஃபிளாஷ்
- ட்ரூ டெப்த் கேமரா
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்
- பில்ட்-இன் லித்தியம் அயன் பேட்டரி, க்யூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங்
- ஃபாஸ்ட் சார்ஜிங்
 
ஆப்பிள் ஐபோன் XS மற்றும் XS மேக்ஸ் ஸ்மார்ட்போன் கோல்டு, சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. ஐபோன் XS விலை 999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.71,813) முதல் துவங்குகிறது. ஐபோன் XS மேக்ஸ் விலை 1,099 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.79,001) முதல் துவங்குகிறது.
 
ஐபோன் XS சீரிஸ் முதற்கட்டமாக 30 நாடுகளில் கிடைக்கும். இவற்றுக்கான முன்பதிவு செப்டம்பர் 14-ம் தேதி துவங்கி, விற்பனை செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறுகிறது. இந்தியாவில் இவற்றின் விலை முறையே ரூ.99,990 மற்றும் ரூ.1,09,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
201809130202362995_3_iPhone-XR-Blue-Offcl._L_styvpf.jpg
 
ஐபோன் XR சிறப்பம்சங்கள்:
 
- 6.1 இன்ச் 1792x828  பிக்சல் எல்.சி.டி. 326ppi லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே, 3D டச்
- 6-கோர் ஏ12 பயோனிக் 64 பிட் 7 என்.எம். பிராசஸர், 4-கோர் GPU, M12 மோஷன் கோ-பிராசஸர்
- 64 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி ஆப்ஷன்கள்
- ஐ.ஓ.எஸ். 12
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68)
- டூயல் சிம் (நானோ+இரண்டாவது இசிம் அல்லது சீனாவில் பிரத்யேக சிம் ஸ்லாட்)
- 12 எம்பி வைடு-ஆங்கிள் பிரைமரி கேமரா, f/1.8, ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், ட்ரூ டோன் ஃபிளாஷ்
- 7 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, ரெட்டினா ஃபிளாஷ்
- ட்ரூ டெப்த் கேமரா
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்
- பில்ட்-இன் லித்தியம் அயன் பேட்டரி, க்யூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங்
- ஃபாஸ்ட் சார்ஜிங்
 
ஆப்பிள் ஐபோன் XR மாடல் வைட், பிளாக், புளு, எல்லோ, கோரல் மற்றும் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை 749 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.53,860) முதல் துவங்குகிறது. அக்டோபர் 19-ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படும் ஐபோன் XR இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அக்டோபர் 26-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. #iPhoneXS #iPhoneXSMax

https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/13020236/1190985/iPhone-XS-iPhone-XS-Max-iPhone-XR-Specs-Price-Sale.vpf

Link to comment
Share on other sites

ஆப்பிளின் புதிய தயாரிப்புகள் அறிமுகம்: இதய துடிப்பை அறியும் வசதி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள்

சாய்ராம் ஜெயராமன்பிபிசி தமிழ்
ஆப்பிளின் புதிய தயாரிப்புகள் அறிமுகம்படத்தின் காப்புரிமைAPPLE Image captionஆப்பிளின் புதிய தயாரிப்புகள் அறிமுகம்

உலகம் முழுவதுமுள்ள தொழில்நுட்ப ஆர்வலர்கள், பயன்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆவலோடு எதிர்பார்த்த புதிய ஐபோன்கள், வாட்சை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நடக்கும் வருடாந்திர விழாவில் ஆப்பிள் நிறுவனம் தனது திறன்பேசியான ஐபோன், கையடக்ககணினியான ஐபாட், ஸ்மார்ட் வாட்சான ஆப்பிள் வாட்ச் போன்ற பல்வேறு தயாரிப்புகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் கூபர்டினோவில் கட்டப்பட்டுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் புதிய, பிரம்மாண்டமான தலைமையகத்திலுள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் புதன்கிழமை நள்ளிரவு வரை நடந்த இந்த வருடத்துக்கான தயாரிப்புகளின் அறிமுக கூட்டத்தில் அந்நிறுவனத்தின் புதிய ஐபோன்களான ஐபோன் 10 எஸ், 10 எஸ் மாக்ஸ், 10 ஆர், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச்செயலதிகாரியான டிம் குக்கும், அணியினரும் அந்நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி அவற்றின் சிறப்பம்சங்களை விளக்கினர்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஒவ்வொரு புதிய தயாரிப்பு குறித்த முக்கிய தகவல்களை காண்போம்.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4படத்தின் காப்புரிமைAPPLE Image captionஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4

ஆப்பிள் நிறுவனத்தின் மிகப் பிரபலமான தயாரிப்பாக பொதுவாக ஐபோன்கள் பார்க்கப்பட்டாலும், இந்த வருடத்தை பொறுத்தவரை ஸ்மார்ட் வாட்ச்களின் சிறப்பம்சங்களே ஆச்சர்யத்தை அளித்ததாக கருதப்படுகிறது.

40மிமீ, 44 மிமீ ஆகிய இரண்டு அளவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4இன் திரை அதன் முந்தைய பதிப்புகளை விட பெரியதாகவும், எட்ஜ் டூ எட்ஜ் வடிவமைப்பையும் கொண்டுள்ளது.

கடந்த மே நடந்த ஆப்பிளின் வருடாந்திர தொழில்நுட்பவியலாளர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட புதிய இயங்குதளமான வாட்ச்ஓஎஸ் 5இல் இது இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 17ஆம் தேதி வெளியிடப்படவுள்ள இந்த புதிய இயங்குதளத்தை ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 1 (2016), ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 2 மற்றும் முந்தைய வருடம் வெளியிடப்பட்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 பயன்பாட்டாளர்களும் பெறுவார்கள்.

முந்தைய ஆப்பிள் வாட்ச் சீரிஸ்களில் அழைப்புக்களை செய்யும்/ ஏற்கும், குறுஞ்செய்தி செய்யும்/ பார்க்கும், மேப்ஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், ஒருவர் நடக்கும் தொலைவு, இதய இயக்கம், உடற்பயிற்சிகள் உள்ளிட்ட உடலியக்கங்களை காண முடிந்த வந்தது.

இந்நிலையில், உலகிலேயே முதல் முறையாக ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4இல் இதுவரை மருத்துவமனைகளில் மட்டுமே காண முடிந்த ஈசிஜி எனப்படும் இதய துடிப்பலை அளவி அறிந்துகொள்ளும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்களது இதய துடிப்பில் அசாதாரண நிகழ்வு இருந்தால் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வசதியும், அவசர உதவியை அழைக்கும் தெரிவும் உள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மூன்று நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4இன் ஜிபிஎஸ் பதிப்பு 399 டாலர்களுக்கும், எல்டிஇ பதிப்பு 499 டாலர்களுக்கும் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் விற்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன்

வாடிக்கையாளர்கள் திருப்தியில் உலகின் முன்னணி திறன்பேசியாக கருதப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான தயாரிப்பான ஐபோனின் புதிய பதிப்புகளான ஐபோன் 10 எஸ், 10 எஸ் மாக்ஸ், 10 ஆர் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்டுள்ள மூன்று பதிப்புகளிலும் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறைக்கான பிரத்யேக ஏ12 பயோனிக் என்றழைக்கப்படும் 7 நானோ மீட்டர் அளவே கொண்ட அதிவேக சிப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது முந்தைய பதிப்புகளை விட 50 சதவீதம் வேகமாகவும் குறைந்த பேட்டரியை பயன்படுத்தும் வகையிலு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மங்கலான புகைப்படங்களை கூட தெளிவாக்கி பார்க்கும் எச்டிஆர் சென்சார் (உணரி), மேம்படுத்தப்பட்ட பேஸ்ஐடி என்னும் முகத்தை பயன்படுத்தி திறன்பேசியை திறக்கும் தொழில்நுட்பம், கைப்பேசிகளில் முதல்முறையாக புகைப்படம் எடுத்தபிறகும் கூட அதன் டெப்த்தை மாற்றிக்கொள்ளும் வசதி, நீடிக்கப்பட்ட பேட்டரி திறன், ஆகுமென்டட் விளையாட்டுகள் - பயன்பாடுகள், தண்ணீர் புகா வடிவமைப்பு போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

ஐபோன்படத்தின் காப்புரிமைAPPLE

குறிப்பாக இதுவரை இல்லாத வகையில் இந்த மூன்று ஐபோன்களிலுமே இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இசிம் பயன்படுத்தி கொள்ளும் வகையில் இது வடிவைக்கப்பட்டுள்ளது.

முறையே 5.8 அங்குல திரையையும், 6.5 அங்குல திரையையும் கொண்டுள்ள ஐபோன் 10 எஸ் மற்றும் ஐபோன் 10 எஸ் மாக்ஸின் பின்பக்கத்தில் 12எம்பி திறனுடைய இரண்டு கேமெராக்களும், முன்புறத்தில் 7எம்பி திறனுடைய கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. கிரே, சில்வர், கோல்ட் ஆகிய மூன்று நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐபோன் 10 எஸ்ஸின் தொடக்க விலை 99,000 ரூபாய் என்றும், ஐபோன் 10 எஸ் மாக்ஸின் தொடக்க விலையாக 109,900 ரூபாய் ஆகும். இவை இரண்டுமே இம்மாதம் 28ஆம் தேதியன்று இந்தியாவில் வெளியாகிறது.

ஐபோனின் சிறப்பம்சங்களை சற்றே குறைந்த விலையில் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்த முறை மூன்றாவதாக ஐபோன் 10 ஆர் என்ற புதிய திறன்பேசியையும் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 6.1 அங்குல திரையை கொண்டுள்ள இது ஐபோன் 10 எஸ் பெற்றுள்ள அநேக சிறம்பம்சங்களை பெற்றுள்ளதுடன், கூடுதலாக வெள்ளை, கறுப்பு, மஞ்சள், சிவப்பு, கோரல் ஆகிய நிறங்களில் அக்டோபர் 26ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படுகிறது. இதன் தொடக்க விலையாக 76,000 ரூபாய் ஆகும்.

மற்ற முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

மற்ற முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?படத்தின் காப்புரிமைAPPLE

ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து இயக்கங்களும் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் ஐபோனின் மொத்த விற்பனை 200 கோடியை தொடவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமைச்செயலதிகாரி டிம் குக் தெரிவித்தார்.

ஐபோன் மற்றும் ஐபாடுகளின் இயங்குதளமான ஐஓஎஸ்ஸின் 12வது பதிப்பும், ஆப்பிள் டிவிஓஎஸ் 12, வாட்ச்ஓஎஸ் 12 ஆகியவை வரும் 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் கணினியான ஐமேக் மற்றும் மடிமேற்கணினியான மேக்புக்கின் மேக்ஓஎஸ் மொஜாவே என்னும் புதிய பதிப்பு வரும் 24ஆம் தேதி வெளியிடப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/science-45505652

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

Black Berry New phone...?

முதலில் பாதுகாப்பு மென்பொருள் தயாரிக்க போறம் என்று அறிவித்து பின்பு போன் வெளியிட்டு என்று தாங்களே  குழம்பி  நிக்கினம் .

Link to comment
Share on other sites

`முரட்டு சிங்கிள்' ஐபோனில் இனி இரண்டு சிம்... அது என்ன இ-சிம்? #HowStuffWorks

2640_thumb.jpg
 

இத்தனை வருடங்கள் கழித்து ஒரு ஸ்மார்ட்போனில் டூயல் சிம் என்பது பலருக்குச் சாதாரணமான விஷயமாகத் தோன்றக்கூடும். ஆனால் ஆப்பிள் விஷயத்தில் அப்படிக் கிடையாது.

`முரட்டு சிங்கிள்' ஐபோனில் இனி இரண்டு சிம்... அது என்ன இ-சிம்? #HowStuffWorks
 

நீண்ட காலத்துக்குப் பின் தனது ஐபோன்களில் டூயல் சிம் வசதியைக் கொண்டுவந்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். ஐபோன் இந்த வசதியைப் பெறுவதற்கு எடுத்துக்கொண்ட காலம் பத்தாண்டுகளுக்கும் மேல். தொடக்கத்தில் சாம்சங், நோக்கியா தொடங்கி அதன் பின்னர் சந்தையை ஆக்கிரமித்த சீன நிறுவனங்கள் வரை டூயல் சிம் மொபைல்களை வெளியிட்ட போதும் கூட ஆப்பிள் தனது முடிவிலிருந்து பின் வாங்குவதாகத் தெரியவில்லை. இதற்கு முன்பு ஒவ்வொரு வருடமும் புதிய ஐபோன்களில் டூயல் சிம் வசதியை ஆப்பிள் தரும் என உலகமே எதிர்பார்க்கும். ஆனால் அது நடக்கவே நடக்காது. ஆனால் இந்த முறை ஒரு வழியாக டூயல் சிம்மைக் கொடுத்தே விட்டது.

ஐபோன் இனிமேல் முரட்டு சிங்கிள் கிடையாது

டிம்-குக்

 

 

ஆப்பிளிடம் எப்பொழுதும் ஒரு பழக்கம் உண்டு அரதப்பழசான விஷயமான இருந்தாலும் கூட அதை ஐபோனில் பயன்படுத்தி உலகத்தையே அதைப் பற்றிப் பேச வைக்கும். கடந்த வருடம் ஐபோன் X-ல் நாட்ச்சை அறிமுகப்படுத்தி அதைச் செய்தது இந்த வருடம் இ-சிம்மைப் பற்றி பேச வைத்திருக்கிறது. சாம்சங் இந்த இ-சிம் தொழில்நுட்பத்தை இரண்டு வருடங்களுக்கு முன்னால் 2016-ம் ஆண்டிலேயே பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து விட்டது. ஆனால் அதை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. தற்பொழுது ஐபோனில் இ-சிம் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டவுடன் அது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

 

 

இத்தனை வருடங்கள் கழித்து ஒரு ஸ்மார்ட்போனில் டூயல் சிம் என்பது பலருக்குச் சாதாரணமான விஷயமாகத் தோன்றக்கூடும். ஆனால் ஆப்பிள் விஷயத்தில் அப்படிக் கிடையாது. எதிலுமே ஒரு புதுமையை விரும்பும் ஆப்பிள் இதிலும் அதைப் பின்பற்றியிருக்கிறது. தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் டூயல் சிம் தொழில்நுட்பத்துக்கும் புதிய ஐபோன்களில் இருக்கும் டூயல் சிம் தொழில்நுட்பத்துக்கும் ஒரு சின்ன வித்தியாசம் இருக்கிறது. வழக்கமான டூயல் சிம் ஸ்லாட்கள் இதில் இருக்காது. அதற்குப் பதிலாக ஐபோன் XS, XS Max மற்றும் ஐபோன் XR களில் டூயல் சிம் வசதியைத் தருவதற்கு இ-சிம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறது ஆப்பிள். இந்த ஐபோன்களில் ஒரே ஒரு சிம் ஸ்லாட்தான் இருக்கும். அதில் வழக்கம் போல ஒரு சிம் கார்டைப் பயன்படுத்த முடியும்.

ஐபோன்

 

இ-சிம் என்றால் என்ன ? 

ஐபோன்

embedded SIM என்பதுதான் eSIM எனச் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட நாம் இப்போது பயன்படுத்தும் சிம் கார்டின் வேலையைத்தான் பார்க்கிறது. ஆனால், இந்தத் தொழில்நுட்பம் முற்றிலும் வேறுபட்டது. இவை சர்க்யூட் போர்டுகளில் நிரந்தரமாக இணைக்கப்பட்டே பயன்பாட்டுக்கு வரும். இ-சிம்கள் பொதுவாக 5 மி.மீ அல்லது 6 மி.மீ அளவு இருக்கும் இவை மதர்போர்டுகளில் நிரந்தரமாகப் பொருத்தப்பட்டு விடும். அதனால் வழக்கமான சிம் கார்டுகள் போல இந்த இ-சிம்களைத் தனியாக எடுத்துப் பயன்படுத்த முடியாது. இது சிலருக்கு CDMA தொழில்நுட்பத்தை ஞாபகப்படுத்தலாம். ஆனால் அதற்கும் இ-சிம் தொழில்நுட்பத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. CDMA-வில் ஒரு தொடர்பு எண்ணைப் பதிவு செய்தால் அது நிரந்தரமானதாக இருக்கும் அதை மாற்ற முடியாது. ஆனால் இ-சிம்மில் அப்படிக் கிடையாது.

 

 

நெட்வொர்க், மற்றும் சிம் உரிமையாளரின் தகவல்களை இ-சிம்மில் பதிவு செய்துகொள்ள முடியும். இதற்காக மெஷின் டூ மெஷின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் சிம்களில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் ஒரு முறை தகவல்கள் பதியப்பட்டு விட்டால் அதனை அழித்துவிட்டு மற்றொரு முறை பயன்படுத்த முடியாது. எடுத்துக்காட்டாக மொபைல் நம்பர் போர்டபிலிட்டி மூலமாக அதே நம்பரை வேறொரு நெட்வொர்க்குக்கு மாற்ற வேண்டும் என்றால் சிம் கார்டையும் சேர்த்து மாற்ற வேண்டியிருக்கும். ஆனால், இ-சிம்களில் அந்தப் பிரச்னை இருக்காது. இவற்றை மறுநிரலாக்கம்செய்ய முடியும். பழைய தகவல்களை அழித்துவிட்டு புதிய தகவல்களைப் பதிந்துகொள்ளலாம். இ-சிம்கள் மூலமாக வழக்கமான சிம் கார்டுகளுக்கான இடமும் குறையும் என்பதால் மொபைல் போன்களின் வடிவமைப்பும் எளிதாகும்.

இ-சிம்

இந்த இ-சிம்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை 2010-ம் ஆண்டிலேயே GSMA அமைப்பு ஆராயத் தொடங்கிவிட்டது. ஆப்பிள் கடந்த வருடம் தனது வாட்ச் சீரிஸ் 3-யில் இ-சிம் வசதியைக் கொடுத்திருந்தது. தற்பொழுது ஐபோனிலும் இந்தத் தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்து விட்டதால் பிற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களின் கவனமும் இ-சிம் மீது திரும்பியிருக்கும். எனவே ஆண்ட்ராய்டு மொபைல்களிலும் இந்தத் தொழில்நுட்பம் பரவலாகும் வாய்ப்புகள் அதிகம். எப்பொழுதும் உலகம் முழுவதும் விற்பனைக்கு வரும் ஐபோன்கள் ஒரே மாதிரிதான் வடிவமைக்கப்படுவது வழக்கம். டூயல் சிம் என்ற ஒரு விஷயத்திற்காக அதை விட்டுக்கொடுத்திருக்கிறது ஆப்பிள். சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவு போன்ற இடங்களில் விற்பனைக்கு வரும் ஐபோன்களில் டூயல் சிம் வசதி இருந்தாலும் அதில் இ-சிம் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக டூயல் சிம் ஸ்லாட்டுகளே கொடுக்கப்பட்டுள்ளன. அதில் இரண்டு நானோ சிம் கார்டுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இ-சிம் வசதியை அளிக்கின்றன. ஆப்பிள் இந்த இரண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்புகள் அதிகம்.

https://www.vikatan.com/news/information-technology/136944-how-esim-works-in-apple-iphone.html

Link to comment
Share on other sites

அய் இனி ஜாலிதான் கள்ள பொண்டாட்டிக்கு ஒன்று விட்டுக்குஒன்று என்று கதைக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, lusu said:

அய் இனி ஜாலிதான் கள்ள பொண்டாட்டிக்கு ஒன்று விட்டுக்குஒன்று என்று கதைக்கலாம்

லூசு! அவிங்களும் உதேமாதிரி யோசிச்சால்????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லூசு இந்த வார்த்தை பிரயோகம் ஒரே இடத்தில் உபயோகித்தன் காசி ஆனந்தன் விடயத்தில் வெட்டுபடும் என்று நண்பன் சொன்னான் இன்றுவரை வெட்டுபடவில்லை வேண்டுமென்றே உபயோகித்தன் ஆனால் அதே வார்த்தையை வேறு இடத்தில் உபயோகிக்க முடியாது நடு நிலை என்பது என்ன ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/16/2018 at 12:16 AM, பெருமாள் said:

லூசு இந்த வார்த்தை பிரயோகம் ஒரே இடத்தில் உபயோகித்தன் காசி ஆனந்தன் விடயத்தில் வெட்டுபடும் என்று நண்பன் சொன்னான் இன்றுவரை வெட்டுபடவில்லை வேண்டுமென்றே உபயோகித்தன் ஆனால் அதே வார்த்தையை வேறு இடத்தில் உபயோகிக்க முடியாது நடு நிலை என்பது என்ன ?

அட நீங்க வேற. அவற்ற பெயரே லூசு தான். ?

அதுபோக..

ஐபோன் என்னதான் சிறிய மாற்றங்களோடு வந்தாலும்.. விலை ஏறிர மாதிரி.. அதன் சேமிப்பிடம் ஏறுவதில்லை. போகப் போக ஐபோன் சிலோ ஆகிடும். அதனால்.. ஐபோனைப் பிடிப்பதே இல்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.