Jump to content

வாவ்... ஐபோனுக்கு டூயல் சிம் அப்டேட் வந்தாச்சு! #IphoneXS


Recommended Posts

வாவ்... ஐபோனுக்கு டூயல் சிம் அப்டேட் வந்தாச்சு! #IphoneXS #AppleEvent #LiveUpdates

2640_thumb.jpg

ஐபோன் XR என்ற மற்றுமொரு புதிய ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்ச் டிசைன் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு 12 MP கேமராவைக் கொண்டது.

 

6.1 இன்ச் LCD டிஸ்ப்ளே இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை, கருப்பு, நீலம், பவளம், மஞ்சள். என ஐந்து நிறங்களில் இது விற்பனைக்கு வரும்

 

 


டூயல் சிம்

நீண்ட நாளாக எதிர்பார்க்கப்பட்ட டூயல் சிம் வசதியை இந்த இரண்டு ஐபோன்களிலும் கொடுத்திருக்கிறது ஆப்பிள். eSim முறையில் இது செயல்படும்.

சீனாவில் வெளியாகும் ஐபோன்களில் மட்டும் இரண்டு சிம் ஸ்லாட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

மார்கஸ் பிரவுன்லீ ட்வீட்

ஐபோன் XS மேக்ஸ்:

இதுவரை வெளியான ஐபோன்களிலேயே மிகவும் பெரிய டிஸ்ப்ளேவைக் கொண்டது இதுதான். இதுவும் 6.5 இன்ச் சூப்பர் ரெட்டினா OLED டிஸ்ப்ளேவைக் கொண்டது.

ஆப்பிள் ஐபோன் XS Max


5.8 இன்ச் சூப்பர் ரெட்டினா OLED டிஸ்ப்ளே மிகத் துல்லியமாக காட்சிகளைத் தரும். IP68 சர்டிபிகேட்  வாட்டர் ப்ரூஃபாக இருக்கும் 

ஐபோன் XS: இதற்கு முன்னர் வெளியான ஐபோன் X-ற்கும் இந்த இரண்டு புதிய ஐபோன்களுக்கும் பெரிய அளவில் ஏதும் வித்தியசமாமில்லை. இதுவரை வெளியான ஐபோன்களிலேயே இதுதான் அழகானது என்கிறார் பில்ஷில்லர்.

 

 

Iphone XS and XS max

ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஐபோன் XS

அடுத்து ஐபோன் அறிமுகப்படுத்தவிருக்கிறது.


Apple watch series 4

ஆப்பிள் வாட்ச்:

முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்ட ஆப்பிள் வாட்ச் 4 பெரிய டிஸ்ப்ளேவைக் கொண்டது. இதன் டிசைன் மட்டுமின்றி UI-ம் முழுவதுமாக புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. S4 சிப் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது; டூயல் கோர்  64-பிட் புராஸசர் இரண்டு மடங்கு வேகத்தில் செயல்படும்.

Apple Watch series 4

"நாங்கள் எப்பொழுதும் எங்கள் வாடிக்கையாளர்களை மையமாக வைத்தே அனைத்தையும் செயல்படுத்துகிறோம், ஆகவேதான் ஐஒஸ் உலகின் முன்னணி இயங்குதளமாக மட்டுமின்றி தனித்துவமாகவும் இருக்கிறது."

ஜெப் வில்லியம்ஸ் தற்பொழுது மேடையில் தோன்றி ஆப்பிள் வாட்ச்சைப் பற்றிய அறிமுக உரையை வழங்குகிறார்.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4

முதல் கேட்ஜெட்டாக ஆப்பிள் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. 


"ஏற்கெனவே உலக அளவில் முன்னிலையில் இருக்கும் ஆப்பிள் வாட்ச்சை, அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவிருக்கிறோம்."

"ஆப்பிள் ஸ்டோர்களை தற்பொழுது 500 மில்லியன் பேர் வரை பார்வையிடுகிறார்கள்"

ஒரு சிறிய அறிமுக வீடியோவை அடுத்து டிம் குக் தற்பொழுது மேடையில் தோன்றி நிகழ்வை 
தொடங்கி வைத்தார் 


ஆப்பிள் நிகழ்ச்சி தொடங்கியது.

Apple Event 2018

https://www.vikatan.com/news/information-technology/136766-apple-event-2018-live-updates.html

Link to comment
Share on other sites

ஐபோன் XR என்ற மற்றுமொரு புதிய ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்ச் டிசைன் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு 12 MP கேமராவைக் கொண்டது.

புதிய ஐபோன்கள்

6.1 இன்ச் LCD டிஸ்ப்ளே இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை, கருப்பு, நீலம், பவளம், மஞ்சள். என ஐந்து நிறங்களில் இது விற்பனைக்கு வரும்.

 

 

ஐபோன் XS விலை 999 டாலர்களில் இருந்து தொடங்குகிறது 

ஐபோன் XS Max  விலை 1099 டாலர்களில் இருந்தும், ஐபோன் XR விலை 749 டாலரில் இருந்தும் தொடங்குகிறது

 

https://www.vikatan.com/news/information-technology/136766-apple-event-2018-live-updates.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கி பாவிச்சு பாருங்கோ .....கொஞ்ச நாளையாலை புதிசாய் எதுவுமே இல்லை எண்டது தெரியும்.:grin:
ஐ போன் XS வைச்சிருக்கிறியள் எண்ட பேர் மட்டுதான் உங்களுக்கு :27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

வாங்கி பாவிச்சு பாருங்கோ .....கொஞ்ச நாளையாலை புதிசாய் எதுவுமே இல்லை எண்டது தெரியும்.:grin:
ஐ போன் XS வைச்சிருக்கிறியள் எண்ட பேர் மட்டுதான் உங்களுக்கு :27_sunglasses:

சரக்கு தீர்ந்து போச்சுங்கோ!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

சரக்கு தீர்ந்து போச்சுங்கோ!!!

அதுதான் உண்மை  இதுக்கு மேல் சரக்கு கிடையாது அவர்களிடம்  பார்ப்பம் இனி நோக்கியா நானோ  சென்சார் உணரிகளுடன் வரும் போனை.

வந்து சக்சஸ் ஆனால் அடுத்து வரும் 10 வருடம்களுக்கு மேல் மறுபடியும் நோக்கியா ராச்சியம் தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பெருமாள் said:

அதுதான் உண்மை  இதுக்கு மேல் சரக்கு கிடையாது அவர்களிடம்  பார்ப்பம் இனி நோக்கியா நானோ  சென்சார் உணரிகளுடன் வரும் போனை.

வந்து சக்சஸ் ஆனால் அடுத்து வரும் 10 வருடம்களுக்கு மேல் மறுபடியும் நோக்கியா ராச்சியம் தான் .

Black Berry New phone...?

Link to comment
Share on other sites

அதிநவீன அம்சங்களுடன் 2018 ஐபோன் மாடல்கள் அறிமுகம் - விலை மற்றும் விற்பனை விவரங்கள்

 
அ-அ+

ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை மற்றும் விற்பனை சார்ந்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #iPhoneXS #iPhoneXSMax

 
 
 
 
அதிநவீன அம்சங்களுடன் 2018 ஐபோன் மாடல்கள் அறிமுகம் - விலை மற்றும் விற்பனை விவரங்கள்
 
 
 
 
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2018 ஐபோன் மாடல்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 
 
ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR என அழைக்கப்படும் மூன்று மாடல்களில் பல்வேறு புதிய அம்சங்களுடன், ஆப்பிள் சாதனங்களில் முதல் முறை அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களில் முறையே 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் 458PPI சூப்பர் ரெட்டினா HDR டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளது. 
 
201809130202362995_1_Apple-A12-Bionic._L_styvpf.jpg
 
இந்த டிஸ்ப்ளே டால்பி விஷன், ஹெச்.டி.ஆர். 19 மற்றும் 120Hz டச்-சென்சிங் சப்போர்ட் கொண்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஐபோன்களில் முதல் முறையாக டூயல் சிம் சப்போர்ட் வசதி டூயல் ஸ்டான்ட்-பை இசிம் மூலம் வழங்கப்படுகிறது. எனினும் சீனாவில் மட்டும் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படுகிறது.
 
புதிய ஐபோன் ஆப்பிள் ஏ12 பயோனிக் 7என்.எம். சிப்செட் மூலம் இயங்குகிறது. இது முந்தைய ஏ11 பிராசஸரை விட 15% வேகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6-கோர் சி.பி.யு. கொண்ட புதிய சிப்செட் 40% குறைந்த மின்சக்தியை பயன்படுத்துகிறது. இதனால் ஐபோனின் பேட்டரி பேக்கப் முந்தைய மாடல்களை விட அதிக நேரம் கிடைக்கும். புதிய ஐபோன் XS மாடலில் உள்ள ஃபேஸ் ஐடி அம்சம் முந்தைய தொழில்நுட்பத்தை விட வேகமாகவும், அதிக பாதுகாப்பாகவும் இருக்கிறது.
 
201809130202362995_2_iPhone-XS-iPhone-Xs-Max._L_styvpf.jpg
 
ஆப்பிள் ஐபோன் XS மற்றும் XS மேக்ஸ் சிறப்பம்சங்கள்:
 
- ஐபோன் XS: 5.8-இன்ச் 2436x1125 பிக்சல் OLED 458ppi சூப்பர் ரெட்டினா HDR டிஸ்ப்ளே, 3D டச்
- ஐபோன் XS மேக்ஸ்: 6.5-இன்ச் 2688x1245 பிக்சல் OLED 458ppi சூப்பர் Retina HDR டிஸ்ப்ளே, 3D டச்
- 6-கோர், ஏ12 பயோனிக் 64-பிட் 7என்.எம். பிராசஸர் 4-கோர் GPU, M12 மோஷன் கோ-பிராசஸர்
- 64 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி ஆப்ஷன்கள்
- ஐ.ஓ.எஸ். 12
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68)
- டூயல் சிம் (இரண்டாவது இசிம் தேர்வு செய்யப்பட்ட நெட்வொர்க் மட்டும் அல்லது சீனாவில் பிரத்யேக சிம் ஸ்லாட்)
- 12 எம்பி வைடு-ஆங்கிள் பிரைமரி கேமரா, f/1.8
- 12 எம்பி டெலிஃபோட்டோ இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, டூயல் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்
- 7 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, ரெட்டினா ஃபிளாஷ்
- ட்ரூ டெப்த் கேமரா
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்
- பில்ட்-இன் லித்தியம் அயன் பேட்டரி, க்யூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங்
- ஃபாஸ்ட் சார்ஜிங்
 
ஆப்பிள் ஐபோன் XS மற்றும் XS மேக்ஸ் ஸ்மார்ட்போன் கோல்டு, சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. ஐபோன் XS விலை 999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.71,813) முதல் துவங்குகிறது. ஐபோன் XS மேக்ஸ் விலை 1,099 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.79,001) முதல் துவங்குகிறது.
 
ஐபோன் XS சீரிஸ் முதற்கட்டமாக 30 நாடுகளில் கிடைக்கும். இவற்றுக்கான முன்பதிவு செப்டம்பர் 14-ம் தேதி துவங்கி, விற்பனை செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறுகிறது. இந்தியாவில் இவற்றின் விலை முறையே ரூ.99,990 மற்றும் ரூ.1,09,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
201809130202362995_3_iPhone-XR-Blue-Offcl._L_styvpf.jpg
 
ஐபோன் XR சிறப்பம்சங்கள்:
 
- 6.1 இன்ச் 1792x828  பிக்சல் எல்.சி.டி. 326ppi லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே, 3D டச்
- 6-கோர் ஏ12 பயோனிக் 64 பிட் 7 என்.எம். பிராசஸர், 4-கோர் GPU, M12 மோஷன் கோ-பிராசஸர்
- 64 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி ஆப்ஷன்கள்
- ஐ.ஓ.எஸ். 12
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68)
- டூயல் சிம் (நானோ+இரண்டாவது இசிம் அல்லது சீனாவில் பிரத்யேக சிம் ஸ்லாட்)
- 12 எம்பி வைடு-ஆங்கிள் பிரைமரி கேமரா, f/1.8, ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், ட்ரூ டோன் ஃபிளாஷ்
- 7 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, ரெட்டினா ஃபிளாஷ்
- ட்ரூ டெப்த் கேமரா
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்
- பில்ட்-இன் லித்தியம் அயன் பேட்டரி, க்யூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங்
- ஃபாஸ்ட் சார்ஜிங்
 
ஆப்பிள் ஐபோன் XR மாடல் வைட், பிளாக், புளு, எல்லோ, கோரல் மற்றும் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை 749 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.53,860) முதல் துவங்குகிறது. அக்டோபர் 19-ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படும் ஐபோன் XR இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அக்டோபர் 26-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. #iPhoneXS #iPhoneXSMax

https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/13020236/1190985/iPhone-XS-iPhone-XS-Max-iPhone-XR-Specs-Price-Sale.vpf

Link to comment
Share on other sites

ஆப்பிளின் புதிய தயாரிப்புகள் அறிமுகம்: இதய துடிப்பை அறியும் வசதி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள்

சாய்ராம் ஜெயராமன்பிபிசி தமிழ்
ஆப்பிளின் புதிய தயாரிப்புகள் அறிமுகம்படத்தின் காப்புரிமைAPPLE Image captionஆப்பிளின் புதிய தயாரிப்புகள் அறிமுகம்

உலகம் முழுவதுமுள்ள தொழில்நுட்ப ஆர்வலர்கள், பயன்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆவலோடு எதிர்பார்த்த புதிய ஐபோன்கள், வாட்சை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நடக்கும் வருடாந்திர விழாவில் ஆப்பிள் நிறுவனம் தனது திறன்பேசியான ஐபோன், கையடக்ககணினியான ஐபாட், ஸ்மார்ட் வாட்சான ஆப்பிள் வாட்ச் போன்ற பல்வேறு தயாரிப்புகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் கூபர்டினோவில் கட்டப்பட்டுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் புதிய, பிரம்மாண்டமான தலைமையகத்திலுள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் புதன்கிழமை நள்ளிரவு வரை நடந்த இந்த வருடத்துக்கான தயாரிப்புகளின் அறிமுக கூட்டத்தில் அந்நிறுவனத்தின் புதிய ஐபோன்களான ஐபோன் 10 எஸ், 10 எஸ் மாக்ஸ், 10 ஆர், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச்செயலதிகாரியான டிம் குக்கும், அணியினரும் அந்நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி அவற்றின் சிறப்பம்சங்களை விளக்கினர்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஒவ்வொரு புதிய தயாரிப்பு குறித்த முக்கிய தகவல்களை காண்போம்.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4படத்தின் காப்புரிமைAPPLE Image captionஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4

ஆப்பிள் நிறுவனத்தின் மிகப் பிரபலமான தயாரிப்பாக பொதுவாக ஐபோன்கள் பார்க்கப்பட்டாலும், இந்த வருடத்தை பொறுத்தவரை ஸ்மார்ட் வாட்ச்களின் சிறப்பம்சங்களே ஆச்சர்யத்தை அளித்ததாக கருதப்படுகிறது.

40மிமீ, 44 மிமீ ஆகிய இரண்டு அளவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4இன் திரை அதன் முந்தைய பதிப்புகளை விட பெரியதாகவும், எட்ஜ் டூ எட்ஜ் வடிவமைப்பையும் கொண்டுள்ளது.

கடந்த மே நடந்த ஆப்பிளின் வருடாந்திர தொழில்நுட்பவியலாளர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட புதிய இயங்குதளமான வாட்ச்ஓஎஸ் 5இல் இது இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 17ஆம் தேதி வெளியிடப்படவுள்ள இந்த புதிய இயங்குதளத்தை ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 1 (2016), ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 2 மற்றும் முந்தைய வருடம் வெளியிடப்பட்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 பயன்பாட்டாளர்களும் பெறுவார்கள்.

முந்தைய ஆப்பிள் வாட்ச் சீரிஸ்களில் அழைப்புக்களை செய்யும்/ ஏற்கும், குறுஞ்செய்தி செய்யும்/ பார்க்கும், மேப்ஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், ஒருவர் நடக்கும் தொலைவு, இதய இயக்கம், உடற்பயிற்சிகள் உள்ளிட்ட உடலியக்கங்களை காண முடிந்த வந்தது.

இந்நிலையில், உலகிலேயே முதல் முறையாக ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4இல் இதுவரை மருத்துவமனைகளில் மட்டுமே காண முடிந்த ஈசிஜி எனப்படும் இதய துடிப்பலை அளவி அறிந்துகொள்ளும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்களது இதய துடிப்பில் அசாதாரண நிகழ்வு இருந்தால் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வசதியும், அவசர உதவியை அழைக்கும் தெரிவும் உள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மூன்று நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4இன் ஜிபிஎஸ் பதிப்பு 399 டாலர்களுக்கும், எல்டிஇ பதிப்பு 499 டாலர்களுக்கும் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் விற்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன்

வாடிக்கையாளர்கள் திருப்தியில் உலகின் முன்னணி திறன்பேசியாக கருதப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான தயாரிப்பான ஐபோனின் புதிய பதிப்புகளான ஐபோன் 10 எஸ், 10 எஸ் மாக்ஸ், 10 ஆர் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்டுள்ள மூன்று பதிப்புகளிலும் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறைக்கான பிரத்யேக ஏ12 பயோனிக் என்றழைக்கப்படும் 7 நானோ மீட்டர் அளவே கொண்ட அதிவேக சிப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது முந்தைய பதிப்புகளை விட 50 சதவீதம் வேகமாகவும் குறைந்த பேட்டரியை பயன்படுத்தும் வகையிலு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மங்கலான புகைப்படங்களை கூட தெளிவாக்கி பார்க்கும் எச்டிஆர் சென்சார் (உணரி), மேம்படுத்தப்பட்ட பேஸ்ஐடி என்னும் முகத்தை பயன்படுத்தி திறன்பேசியை திறக்கும் தொழில்நுட்பம், கைப்பேசிகளில் முதல்முறையாக புகைப்படம் எடுத்தபிறகும் கூட அதன் டெப்த்தை மாற்றிக்கொள்ளும் வசதி, நீடிக்கப்பட்ட பேட்டரி திறன், ஆகுமென்டட் விளையாட்டுகள் - பயன்பாடுகள், தண்ணீர் புகா வடிவமைப்பு போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

ஐபோன்படத்தின் காப்புரிமைAPPLE

குறிப்பாக இதுவரை இல்லாத வகையில் இந்த மூன்று ஐபோன்களிலுமே இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இசிம் பயன்படுத்தி கொள்ளும் வகையில் இது வடிவைக்கப்பட்டுள்ளது.

முறையே 5.8 அங்குல திரையையும், 6.5 அங்குல திரையையும் கொண்டுள்ள ஐபோன் 10 எஸ் மற்றும் ஐபோன் 10 எஸ் மாக்ஸின் பின்பக்கத்தில் 12எம்பி திறனுடைய இரண்டு கேமெராக்களும், முன்புறத்தில் 7எம்பி திறனுடைய கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. கிரே, சில்வர், கோல்ட் ஆகிய மூன்று நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐபோன் 10 எஸ்ஸின் தொடக்க விலை 99,000 ரூபாய் என்றும், ஐபோன் 10 எஸ் மாக்ஸின் தொடக்க விலையாக 109,900 ரூபாய் ஆகும். இவை இரண்டுமே இம்மாதம் 28ஆம் தேதியன்று இந்தியாவில் வெளியாகிறது.

ஐபோனின் சிறப்பம்சங்களை சற்றே குறைந்த விலையில் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்த முறை மூன்றாவதாக ஐபோன் 10 ஆர் என்ற புதிய திறன்பேசியையும் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 6.1 அங்குல திரையை கொண்டுள்ள இது ஐபோன் 10 எஸ் பெற்றுள்ள அநேக சிறம்பம்சங்களை பெற்றுள்ளதுடன், கூடுதலாக வெள்ளை, கறுப்பு, மஞ்சள், சிவப்பு, கோரல் ஆகிய நிறங்களில் அக்டோபர் 26ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படுகிறது. இதன் தொடக்க விலையாக 76,000 ரூபாய் ஆகும்.

மற்ற முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

மற்ற முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?படத்தின் காப்புரிமைAPPLE

ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து இயக்கங்களும் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் ஐபோனின் மொத்த விற்பனை 200 கோடியை தொடவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமைச்செயலதிகாரி டிம் குக் தெரிவித்தார்.

ஐபோன் மற்றும் ஐபாடுகளின் இயங்குதளமான ஐஓஎஸ்ஸின் 12வது பதிப்பும், ஆப்பிள் டிவிஓஎஸ் 12, வாட்ச்ஓஎஸ் 12 ஆகியவை வரும் 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் கணினியான ஐமேக் மற்றும் மடிமேற்கணினியான மேக்புக்கின் மேக்ஓஎஸ் மொஜாவே என்னும் புதிய பதிப்பு வரும் 24ஆம் தேதி வெளியிடப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/science-45505652

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

Black Berry New phone...?

முதலில் பாதுகாப்பு மென்பொருள் தயாரிக்க போறம் என்று அறிவித்து பின்பு போன் வெளியிட்டு என்று தாங்களே  குழம்பி  நிக்கினம் .

Link to comment
Share on other sites

`முரட்டு சிங்கிள்' ஐபோனில் இனி இரண்டு சிம்... அது என்ன இ-சிம்? #HowStuffWorks

2640_thumb.jpg
 

இத்தனை வருடங்கள் கழித்து ஒரு ஸ்மார்ட்போனில் டூயல் சிம் என்பது பலருக்குச் சாதாரணமான விஷயமாகத் தோன்றக்கூடும். ஆனால் ஆப்பிள் விஷயத்தில் அப்படிக் கிடையாது.

`முரட்டு சிங்கிள்' ஐபோனில் இனி இரண்டு சிம்... அது என்ன இ-சிம்? #HowStuffWorks
 

நீண்ட காலத்துக்குப் பின் தனது ஐபோன்களில் டூயல் சிம் வசதியைக் கொண்டுவந்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். ஐபோன் இந்த வசதியைப் பெறுவதற்கு எடுத்துக்கொண்ட காலம் பத்தாண்டுகளுக்கும் மேல். தொடக்கத்தில் சாம்சங், நோக்கியா தொடங்கி அதன் பின்னர் சந்தையை ஆக்கிரமித்த சீன நிறுவனங்கள் வரை டூயல் சிம் மொபைல்களை வெளியிட்ட போதும் கூட ஆப்பிள் தனது முடிவிலிருந்து பின் வாங்குவதாகத் தெரியவில்லை. இதற்கு முன்பு ஒவ்வொரு வருடமும் புதிய ஐபோன்களில் டூயல் சிம் வசதியை ஆப்பிள் தரும் என உலகமே எதிர்பார்க்கும். ஆனால் அது நடக்கவே நடக்காது. ஆனால் இந்த முறை ஒரு வழியாக டூயல் சிம்மைக் கொடுத்தே விட்டது.

ஐபோன் இனிமேல் முரட்டு சிங்கிள் கிடையாது

டிம்-குக்

 

 

ஆப்பிளிடம் எப்பொழுதும் ஒரு பழக்கம் உண்டு அரதப்பழசான விஷயமான இருந்தாலும் கூட அதை ஐபோனில் பயன்படுத்தி உலகத்தையே அதைப் பற்றிப் பேச வைக்கும். கடந்த வருடம் ஐபோன் X-ல் நாட்ச்சை அறிமுகப்படுத்தி அதைச் செய்தது இந்த வருடம் இ-சிம்மைப் பற்றி பேச வைத்திருக்கிறது. சாம்சங் இந்த இ-சிம் தொழில்நுட்பத்தை இரண்டு வருடங்களுக்கு முன்னால் 2016-ம் ஆண்டிலேயே பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து விட்டது. ஆனால் அதை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. தற்பொழுது ஐபோனில் இ-சிம் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டவுடன் அது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

 

 

இத்தனை வருடங்கள் கழித்து ஒரு ஸ்மார்ட்போனில் டூயல் சிம் என்பது பலருக்குச் சாதாரணமான விஷயமாகத் தோன்றக்கூடும். ஆனால் ஆப்பிள் விஷயத்தில் அப்படிக் கிடையாது. எதிலுமே ஒரு புதுமையை விரும்பும் ஆப்பிள் இதிலும் அதைப் பின்பற்றியிருக்கிறது. தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் டூயல் சிம் தொழில்நுட்பத்துக்கும் புதிய ஐபோன்களில் இருக்கும் டூயல் சிம் தொழில்நுட்பத்துக்கும் ஒரு சின்ன வித்தியாசம் இருக்கிறது. வழக்கமான டூயல் சிம் ஸ்லாட்கள் இதில் இருக்காது. அதற்குப் பதிலாக ஐபோன் XS, XS Max மற்றும் ஐபோன் XR களில் டூயல் சிம் வசதியைத் தருவதற்கு இ-சிம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறது ஆப்பிள். இந்த ஐபோன்களில் ஒரே ஒரு சிம் ஸ்லாட்தான் இருக்கும். அதில் வழக்கம் போல ஒரு சிம் கார்டைப் பயன்படுத்த முடியும்.

ஐபோன்

 

இ-சிம் என்றால் என்ன ? 

ஐபோன்

embedded SIM என்பதுதான் eSIM எனச் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட நாம் இப்போது பயன்படுத்தும் சிம் கார்டின் வேலையைத்தான் பார்க்கிறது. ஆனால், இந்தத் தொழில்நுட்பம் முற்றிலும் வேறுபட்டது. இவை சர்க்யூட் போர்டுகளில் நிரந்தரமாக இணைக்கப்பட்டே பயன்பாட்டுக்கு வரும். இ-சிம்கள் பொதுவாக 5 மி.மீ அல்லது 6 மி.மீ அளவு இருக்கும் இவை மதர்போர்டுகளில் நிரந்தரமாகப் பொருத்தப்பட்டு விடும். அதனால் வழக்கமான சிம் கார்டுகள் போல இந்த இ-சிம்களைத் தனியாக எடுத்துப் பயன்படுத்த முடியாது. இது சிலருக்கு CDMA தொழில்நுட்பத்தை ஞாபகப்படுத்தலாம். ஆனால் அதற்கும் இ-சிம் தொழில்நுட்பத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. CDMA-வில் ஒரு தொடர்பு எண்ணைப் பதிவு செய்தால் அது நிரந்தரமானதாக இருக்கும் அதை மாற்ற முடியாது. ஆனால் இ-சிம்மில் அப்படிக் கிடையாது.

 

 

நெட்வொர்க், மற்றும் சிம் உரிமையாளரின் தகவல்களை இ-சிம்மில் பதிவு செய்துகொள்ள முடியும். இதற்காக மெஷின் டூ மெஷின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் சிம்களில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் ஒரு முறை தகவல்கள் பதியப்பட்டு விட்டால் அதனை அழித்துவிட்டு மற்றொரு முறை பயன்படுத்த முடியாது. எடுத்துக்காட்டாக மொபைல் நம்பர் போர்டபிலிட்டி மூலமாக அதே நம்பரை வேறொரு நெட்வொர்க்குக்கு மாற்ற வேண்டும் என்றால் சிம் கார்டையும் சேர்த்து மாற்ற வேண்டியிருக்கும். ஆனால், இ-சிம்களில் அந்தப் பிரச்னை இருக்காது. இவற்றை மறுநிரலாக்கம்செய்ய முடியும். பழைய தகவல்களை அழித்துவிட்டு புதிய தகவல்களைப் பதிந்துகொள்ளலாம். இ-சிம்கள் மூலமாக வழக்கமான சிம் கார்டுகளுக்கான இடமும் குறையும் என்பதால் மொபைல் போன்களின் வடிவமைப்பும் எளிதாகும்.

இ-சிம்

இந்த இ-சிம்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை 2010-ம் ஆண்டிலேயே GSMA அமைப்பு ஆராயத் தொடங்கிவிட்டது. ஆப்பிள் கடந்த வருடம் தனது வாட்ச் சீரிஸ் 3-யில் இ-சிம் வசதியைக் கொடுத்திருந்தது. தற்பொழுது ஐபோனிலும் இந்தத் தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்து விட்டதால் பிற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களின் கவனமும் இ-சிம் மீது திரும்பியிருக்கும். எனவே ஆண்ட்ராய்டு மொபைல்களிலும் இந்தத் தொழில்நுட்பம் பரவலாகும் வாய்ப்புகள் அதிகம். எப்பொழுதும் உலகம் முழுவதும் விற்பனைக்கு வரும் ஐபோன்கள் ஒரே மாதிரிதான் வடிவமைக்கப்படுவது வழக்கம். டூயல் சிம் என்ற ஒரு விஷயத்திற்காக அதை விட்டுக்கொடுத்திருக்கிறது ஆப்பிள். சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவு போன்ற இடங்களில் விற்பனைக்கு வரும் ஐபோன்களில் டூயல் சிம் வசதி இருந்தாலும் அதில் இ-சிம் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக டூயல் சிம் ஸ்லாட்டுகளே கொடுக்கப்பட்டுள்ளன. அதில் இரண்டு நானோ சிம் கார்டுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இ-சிம் வசதியை அளிக்கின்றன. ஆப்பிள் இந்த இரண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்புகள் அதிகம்.

https://www.vikatan.com/news/information-technology/136944-how-esim-works-in-apple-iphone.html

Link to comment
Share on other sites

அய் இனி ஜாலிதான் கள்ள பொண்டாட்டிக்கு ஒன்று விட்டுக்குஒன்று என்று கதைக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, lusu said:

அய் இனி ஜாலிதான் கள்ள பொண்டாட்டிக்கு ஒன்று விட்டுக்குஒன்று என்று கதைக்கலாம்

லூசு! அவிங்களும் உதேமாதிரி யோசிச்சால்????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லூசு இந்த வார்த்தை பிரயோகம் ஒரே இடத்தில் உபயோகித்தன் காசி ஆனந்தன் விடயத்தில் வெட்டுபடும் என்று நண்பன் சொன்னான் இன்றுவரை வெட்டுபடவில்லை வேண்டுமென்றே உபயோகித்தன் ஆனால் அதே வார்த்தையை வேறு இடத்தில் உபயோகிக்க முடியாது நடு நிலை என்பது என்ன ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/16/2018 at 12:16 AM, பெருமாள் said:

லூசு இந்த வார்த்தை பிரயோகம் ஒரே இடத்தில் உபயோகித்தன் காசி ஆனந்தன் விடயத்தில் வெட்டுபடும் என்று நண்பன் சொன்னான் இன்றுவரை வெட்டுபடவில்லை வேண்டுமென்றே உபயோகித்தன் ஆனால் அதே வார்த்தையை வேறு இடத்தில் உபயோகிக்க முடியாது நடு நிலை என்பது என்ன ?

அட நீங்க வேற. அவற்ற பெயரே லூசு தான். ?

அதுபோக..

ஐபோன் என்னதான் சிறிய மாற்றங்களோடு வந்தாலும்.. விலை ஏறிர மாதிரி.. அதன் சேமிப்பிடம் ஏறுவதில்லை. போகப் போக ஐபோன் சிலோ ஆகிடும். அதனால்.. ஐபோனைப் பிடிப்பதே இல்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.