Jump to content

பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர் செய்திகள்


Recommended Posts

பாக்.டெஸ்ட் தொடர்: வலுவில்லாத ஆஸி. அணியில் 5 புதிய வீரர்கள்; மீண்டும் பழைய வீரர் சிடில்

 

 
aus

புதிய வேகப்பந்துவீச்சாளர் டாகெட், பேட்ஸ்மேன் மாட் ரென்ஷா   -  படம் உதவி: ட்விட்டர்

பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் அனுபவம் இல்லாத 5 புதிய வீரர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு ஒரு ஆண்டு தடைவிதிக்கப்பட்டனர். அதன்பின் ஆஸ்திரேலிய அணி பலவீனமடைந்து காணப்படுகிறது.

 

குறிப்பாக டேவிட் வார்னர், ஸ்மித் இருவரும் அணியில் இருந்தாலே அசுரபலம் இருக்கும் சூழலில் இருவரும் இல்லாமல் இங்கிலாந்து சென்று ஒரு நாள் தொடரில் கடுமையாக உதைவாங்கி வந்தது ஆஸ்திரேலியா.

இனி அடுத்ததாக துபாய், அபுதாயில் பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா விளையாட உள்ளது. இதற்கான அணியில் அனுபவம் இல்லாத 5 புதுமுக வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் காயம் காரணமாக ஜோஷ் ஹேசல்வுட், பாட் கம்மின்ஸ், மேக்ஸ்வெல்ஆகியோர் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது. புதிய வீரர்களாக குயின்ஸ்லாந்து வீரர் மைக்கேல் நீசர், பிரன்டன் டோகெட், மார்நஸ் லாபுஸ்சாக்னே, தெற்கு ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், விக்டோரியா வீரர் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தேசிய அணித் தேர்வாளர் டிரவர் ஹான்ஸ் கூறுகையில், "பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் பல்வேறு குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அனுபவ வீரர்கள், அறிமுக வீரர்கள் ஆகியோர் கலந்த கலவையில் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன் "எனத் தெரிவித்தார்.

அபுதாபி, துபாயில் பாகிஸ்தான் அணி அடிக்கடி விளையாடிய அனுபவம் இருப்பதால், அந்த மைதானம் அந்த அணிக்கு மிகுந்த பழக்கப்பட்டதாகும். தற்போது பாகிஸ்தான் அணியில் வலுவான வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு, பேட்டிங் இருப்பதால், வலுவற்ற ஆஸ்திரேலிய அணி எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்று தெரியவில்லை.

ஸ்மித், வார்னர் இல்லாத நிலையில், தொடக்க வீரர்களாக மாட் ரென்ஷா, பின்ஞ் களமிறங்குவார்கள். காயத்தில் இருந்து குணமாகி ஷான் மார்ஷ் அணிக்கு திரும்பியுள்ளார். நடுவரிசையில் உஸ்மான் கவாஜா, மிட்செல்மார்ஷ், டிராவிஸ் ஹெட், லாபஸ்சாக்னே ஆகிய வீரர்கள் உள்ளனர்.

பந்துவீச்சில் மிட்ஷெல் ஸ்டார்க், நீண்ட இடைவெளிக்குப் பின் அணிக்கு பீட்டர் சிடில் திரும்பியுள்ளார். மேலும் புதுமுக வீரர்கள் நீஸர், பிரன்டன் டாகெட் உள்ளனர். சுழற்பந்துவீச்சில் நாதன் லயன், ஆஸ்டன் அகர் ஆகியோரும் விக்கெட் கீப்பராக கேப்டன் டிம் பைனேவும் உள்ளனர்.

முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 7-ம் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி 16-ம் தேதியும் நடக்கிறது.

அணி வீரர்கள் விவரம்:

டிம் பைனே(கேப்டன்), ஆஸ்டன் அகர், பிரன்டன் டாகெட், ஆரோன் பின்ஞ், டிராவிஸ் ஹெட், ஜான் ஹாலட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபஸ்சாக்னே, நாதன் லயான், மிட்ஷெல் மார்ஷ், ஷான் மார்ஷ், மைக்கேல் நீசர், மாத்யூ ரென்ஷா, பீட்டர் சிடில், மிட்ஷெல் ஸ்டார்க்.

https://tamil.thehindu.com/sports/article24925676.ece

Link to comment
Share on other sites

நானாக இருந்தால் என்ன செய்திருப்பேன் தெரியுமா? மேக்ஸ்வெல் நீக்கம் குறித்து பாண்டிங் காட்டம்

 

 
ponting

பாண்டிங். | ராய்ட்டர்ஸ்

பாகிஸ்தானுக்கு எதிராக யுஏஇயில் நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடருக்கு கிளென் மேக்ஸ்வெலை தேர்வு செய்யாத முடிவை ரிக்கி பாண்டிங் கடுமையாக எதிர்த்துள்ளார்.

யுஏஇயில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் பல புதுமுகங்கள் இடம்பெற்றனர், எப்படியும் மேக்ஸ்வெல், ஹேண்ட்ஸ்கம்ப் இருப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இருவரையுமே தேர்வு செய்யவில்லை.

 

இந்நிலையில் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கடுமையாகச் சாடிய போது, “நான் மேக்ஸி இடத்திலிருந்தால், இந்தியாவுக்கு ஏ தொடரில் என்னை தேர்வு செய்து நான் என்னை நிரூபிக்க ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்று கேட்டிருப்பேன்.

எனக்கு இது வழக்கத்துக்கு மாறானதாகவும் விசித்திரமாகவும் படுகிறது. எனக்கு ஏன் ஆஸ்திரேலியா ஏ அணியில் என்னை நிரூபிக்க வாய்ப்பளிக்கவில்லை என்று அவர் இடத்திலிருந்து எனக்குக் கேட்கத் தோன்றுகிறது.

maxwelljpg

மேக்ஸ்வெல். | படம்: கே.ஆர்.தீபக்.

 

ஆஸ்திரேலியா ஏ தொடருக்கு அவரைச் சேர்க்கவில்லை. அங்கு அவர் எப்படி ஆடுவார் என்பது எங்களுக்குத் தெரியும் என்று கூறினர். ஆனால் இப்போது பார்த்தால் அவரை இனி தேர்வு செய்யவே போவதில்லை என்பது போல் தெரிகிறது. அவர் பரிசீலனையில் கூட இல்லை போலும்.

ஏ தொடரில் மார்னஸ், டிராவிஸ் ஹெட்டுக்கு வாய்ப்பளித்தனர், அவர்களும் அங்கு நன்றாக ஆடினர், அதனடிப்படையில் தேர்வு செய்தனர். மேக்ஸ்வெலை நீக்கியது என்ன சேதி என்று எனக்குத் தெரியவில்லை, எனக்கு குழப்பமாகவே உள்ளது.

ஆஸ்திரேலியா அணிக்கு ஆட வேண்டும் என்று அவர் தனி முனைப்பு காட்டி வருகிறார், அவர் ஒரு மேட்ச் வின்னிங் பிளேயர். அவருக்கு ஆஸ்திரேலியாவுக்காக ஆட நிறைய வயதும் திறமையும் உள்ளது.”என்றார் ரிக்கி பாண்டிங்.

அல்ஜசீரா ஆட்ட நிர்ணய சூதாட்ட ஊழல் புகாரில் மேக்ஸ்வெல் பெயரும் அடிபட்டதால் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் மேக்ஸ்வெலை ஒதுக்கியிருக்கலாம் என்று ஆஸி.தரப்பில் சிலர் கருதுகின்றனர்.

https://tamil.thehindu.com/sports/article24935456.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.