Jump to content

10 வயது சிறுமியை சவுதிக்கு அனுப்பிய ஆசாமி சிக்கினார் : ரிஸானாவையும் இவரே அனுப்பியுள்ளார் : அதிர வைக்கும் தகவல்கள்


Recommended Posts

10 வயது சிறுமியை சவுதிக்கு அனுப்பிய ஆசாமி சிக்கினார் : ரிஸானாவையும் இவரே அனுப்பியுள்ளார் : அதிர வைக்கும் தகவல்கள்

 

 
 

(எம்.எப்.எம்.பஸீர்)

சவுதி அரே­பி­யாவில் மரண தண்­ட­னைக்கு உள்­ளான சிறுமி ரிஸானா நபீக்கை போலி ஆவ­ணங்கள் ஊடாக வெளி­நாட்­டுக்கு அனுப்­பிய நபர், கிண்­ணியா பகு­தியை சேர்ந்த 10 வயது சிறுமி ஒரு­வரை 21 வயது யுவதி என போலி கடவுச்சீட்டில்  சவுதி அரே­பி­யா­வுக்கு அனுப்­பிய குற்­றச்­சாட்டில் குற்றப் புல­னாய்வு பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். 

arre.jpg

போலி ஆவ­ணங்­கள் ஊடாக கடவுச்சீட்டை தயா­ரித்து சிறுமி ஒரு­வரை வெளி­நாட்­டுக்கு அனுப்­பி­யமை தொடர்பில் தண்­டனை சட்டக் கோவையின் 360 ஈ, குடி­வ­ரவு குடி­ய­கல்வு சட்­டத்தின் 45 (2) ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக அவரை கைது செய்­த­தாக சி.ஐ.டி.யினர் கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்­றுக்கு அறி­வித்­துள்­ளனர். அதன்­படி சந்­தேக நபர் கொழும்பு பிர­தான நீதிவான் ரங்க திஸா­நா­யக்­கவால் நாளை வியாழக்கிழமை வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

இந்த சம்­பவம் தொடர்பில் மேலும் அறிய முடி­வ­தா­வது,

ஓமானில் உள்ள இலங்கை தூத­ர­கத்தில் இருந்து கடந்த 2018.03.04 ஆம் திகதி குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு முறைப்­பா­ட­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது. அதில் ஓமானில் உள்ள இலங்கை தூத­ர­கத்தின் பாது­காப்பு இல்­லத்தில்  தங்­கி­யுள்ள ஒருவர் தொடர்பில் எழுத்து மூலம் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. 

கிண்­ணியா, குறிஞ்சிக் கிண்­ணியா பகு­தியைச் சேர்ந்த யுவதி குறித்தே அதில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­துள்­ளது. குறித்த யுவதி ஓமான் தூத­ர­கத்தில் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்த நிலையில் அவ­ரிடம் மேல­திக வாக்கு மூலம் ஒன்­றினைப் பெற்று அனுப்­பு­மாறு சி.ஐ.டி.யினர் ஆலோ­சனை வழங்க கடந்த 2018.03.10 ஆம் திகதி அது குறித்து மேல­திக வாக்குமூலம் பெறப்­பட்­டுள்­ளது.

அதன்­படி கடந்த 2017.07.10 ஆம் திக­தியே அந்த யுவதி மரு­தா­னையில் உள்ள வேலை வாய்ப்பு முகவர் நிறு­வனம் ஒன்­றினூ­டாக வெளி­நாட்­டுக்கு  சென்­றுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. இந் நிலையில் அச்­சி­று­மி­யிடம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணை­களில், அவர் 10 வயது சிறு­மி­யாக இருந்த போது சவுதி அரே­பி­யா­வுக்கு அனுப்பப்­பட்­டமை தொடர்பில் விசா­ர­ணை­களில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

 தனது வீட்­டுக்கு அருகில் வசிக்கும்  உப முக­வ­ரான பெண் ஒருவர், 2010 இல் தன்­னையும் மேலும் நான்கு சிறு­மி­க­ளையும் வெளி­நாட்­டுக்கு அனுப்பும் நோக்­குடன் கொழும்­புக்கு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்­றுக்கு அழைத்து வந்­த­தாக யுவ­தியின் வாக்குமூலத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அந்த பெண் தங்­களை பெயர், முக­வரி தெரி­யாத முஸ்லிம் நபர் ஒரு­வ­ரிடம் அழைத்து சென்­ற­தா­கவும், அதன் பின்னர் அவரின் ஆலோ­சனைப் படி தங்­கு­மி­ட­மொன்றில் தங்­கி­யி­ருந்­த­தா­கவும் அவர் கூறி­யுள்ளார்.இதன்­போதே, N4152293 எனும் கடவுச்சீட்டை தனது கைக­ளுக்கு தந்­த­தா­கவும் அதில் தனது புகைப்­படம் பெயர் என்­பன இருந்­த­தா­கவும் அவர் கூறி­யுள்ளார். 

எனினும் அந்த கடவுச்சீட்டில் அடை­யாள அட்டை இலக்­க­மா­னது 896416758V என குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் பிறந்த திகதி 1989.05.20 என குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. எனினும் பாதிக்­கப்­பட்ட யுவ­தி­யியின் உண்­மை­யான பிறந்த திகதி 2000.11.15 என கூறும் பொலிஸார் அவ­ரிடம் இந்த கடவுச்சீட்டு கொடுக்­கப்­படும் போது அவ­ருக்கு 10 வயது என நீதி­மன்­றுக்கு அறிக்கை ஊடாக சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். 

1762 எனும் இலக்­கத்தை உடைய போலி பிறப்புச் சான்­றிதழ், போலி அடை­யாள அட்டை ஆகி­ய­வற்றை வைத்தே போலி­கடவுச்சீட்டும் பெறப்­பட்­டுள்­ளதை சி.ஐ.டி. விசா­ர­ணை­களில் கண்­ட­றிந்­துள்­ளது. அதன்­படி குறித்த யுவதி சிறு­மி­யாக இருந்த போது அதா­வது 2010.08.10 ஆம் திகதி சவுதி அரே­பி­யா­வுக்கு போலி கடவுச்சீட்டில் வீட்டுப் பணிப் பெண்­ணாக அனுப்­பப்பட்­டுள்­ள­தாக கூறும் சி.ஐ.டி., அங்கு அவர் இரு வரு­டங்கள் வேலைச் செய்த பின்னர் நாடு திரும்­பி­யுள்­ள­தா­கவும் அதன் பின்னர் குவைத்துக்கும் வேலைக்­காக சென்­றுள்­ள­தா­கவும் நீதி­வா­னுக்கு சமர்ப்­பித்­துள்ள அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

இந் நிலை­யி­லேயே தற்­போது 18 வய­தான குறித்த யுவதி ஓமானில் வீட்டுப் பணிப் பெண்­ணாக சென்­றி­ருந்த போது அங்கு இடம்­பெற்ற கொடு­மை­களை சகிக்க முடி­யாமல் ஓமான் தூத­ர­கத்­துக்கு சென்று விட­யங்­களை கூறிய போது, அதனை மையப்­ப­டுத்தி சி.ஐ.டி. முன்­னெ­டுத்த விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த அதிர்ச்சித் தக­வல்கள் வெளி­ப்ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அதன்­ப­டியே சந்­தேக நப­ரான போலி ஆவ­ணங்­களை தயா­ரித்து வெளி­நாட்­டுக்கு குறித்த யுவ­தியை சிறு­மி­யாக இருந்த போது அனுப்­பிய  நபரை சி.ஐ.டி.யினர் கைது செய்து கொழும்பு பிர­தான நீதிவான் முன்­னி­லையில் ஆஜர் செய்­துள்­ளனர்.

குறித்த நபர்  ஏற்­க­னவே இவ்­வா­றான குற்றச் செயல்­களில் ஈடு­பட்­டவர் எனவும்,   கடந்த 2013 ஜன­வரி 9 ஆம் திகதி சவூதி அரே­பி­யாவில் தவாத்மி சிறையில் மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்ட சிறுமி ரிஸானா நபீக்­கையும் போலி ஆவ­ணங்கள் ஊடாக சவூ­திக்கு அனுப்­பிய குற்­ற­வாளி எனவும் சி.ஐ.டி.யினர் தெரி­விக்­கின்­றனர். 

1988 பெப்­ர­வரி 4 இல் ரிஸானா நபீக் பிறந்­தி­ருந்த நிலையில் தனது 17 ஆவது அக­வையில் 2005 மே 4 இல் பணிப்­பெண்­ணாக தொழில்வாய்ப்புப் பெற்று அவர் சவூதி அரே­பி­யா­வுக்கு அனுப்பப்­பட்­டி­ருந்தார்.சிறு­வர்கள் வெளி­நா­டு­களில் தொழில் புரிய தடை உள்­ளதால், அவ­ரது பிறந்த திகதி தொழில் முக­வரால் 02.-02.1982 என மாற்­றப்­பட்டு கட­வுச்­சீட்டு பெறப்­பட்­டி­ருந்­தமை தெரிந்ததே. 

2005 மே 22 இல், குழந்­தையின் தாய் தனது குழந்­தையை ரிசா­னாவின் பரா­ம­ரிப்பில் விட்டு விட்டு வெளியில் சென்­றி­ருந்த போது, குழந்­தைக்கு சிறிது நேரத்தில் புட்­டிப்பால் ஊட்டும் போது குழந்தை மூச்சுத் திணறி இறந்து விட்­டது. தான் அக்­கு­ழந்­தையைக் கொலை செய்­ய­வில்லை என்றும், பாலூட்டும் போது மூச்சுத் திணறி இறந்­த­தா­கவும் ரிசானா தெரி­வித்­தி­ருந்தார்.ஆனாலும், குழந்­தையின் பெற்­றோரும், காவல்­து­றை­யி­னரும்  இவர் நபீக் கொலை செய்­த­தாக குற்றம் சாட்டி இருந்­தனர். 

சவூதி காவல்­து­றை­யினர் ரிசா­னா­விடம் இருந்து வாக்­கு­மூ­லத்தைப் பெற்று வழக்குப் பதிவு செய்­தனர். வழக்கு விசா­ர­ணையின் போது ரிசா­னா­விற்கு மொழி பெயர்ப்பாளராக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். ரிசானா தரப்பில் வாதாடுவதற்கு யாருமற்ற ஒரு சூழலில் சட்ட ஆலோசனையைக் கூட பெற்றுக் கொள்ள முடியாதவராக இவர் இருந்தார். 2007 ஜூன் 16 ஆம் நாள் அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. 

இந் நிலையிலேயே கடந்த  2013 ஜனவரி 9 ஆம் நாள் புதன்கிழமை உள்ளுர் நேரப்படி சவூதி அரேபியாவில் தவாத்மி சிறையில் முற்பகல் 11.40 (இலங்கை நேரப்படி பிற்பகல் 2.10) மணியளவில் ரிஸானாவின் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/40253

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.