Jump to content

நகைக் கள்ளனும் நானும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் வேலை செய்வது ஒரு தபாற் கந்தோரில். இரண்டு கவுண்டர்களில் எனது திறந்தது. பொதிகளை வாங்குவதற்கு இலகுவாக ஒன்றை மூடியும் மற்றையதைத் திறந்தும்  அமைத்திருக்கின்றனர். வெய்யில் காலத்தில் குளிரூட்டியின் குளிர்மையில் நன்றாக இருப்பது குளிர் காலத்தில் நடுங்கவைக்கும். ஆனாலும் வீட்டுக்கு அண்மையில் இருப்பதாலும் முதலாளி என்று சொல்லப்படும் சிங் இனத்தவர் எப்போதாவது வருவதாலும் நானும் இன்னுமொரு தமிழ் அக்காவும் சுதந்திரமாகக் கதைத்துச் சிரித்து, ஆட்கள் வராவிட்டால் போனில் முகநூலை மேய்ந்து, பொன் கதைத்து நின்மதியாக வேலை செய்வோம். வாகனத் தரிப்பிட வசதியுடன் பத்து நிமிடத்தில் காரில் போனால் வேலை. வேலை முடிய ஒரு பதினைந்து நிமிடத்தில் வீடு. 

ஆனாலும் ஒரு குறை. பூட்டிய அறையுள் இருக்கும் அக்கா விதவிதமாய்ச் சங்கிலிகளும் தோடுகளும் மாத்தி மாத்திப் போட்டு வர நான் மிகவும் மெல்லிய ஒரு சங்கிலியும் சிறிய தோட்டுடனும் இருப்பது எனக்கே கடுப்பைக் கிளப்பும். அதுக்குக் காரணம் மனிசன் நகைகள் வாங்க விடுவதில்லை என்பது ஒருபுறம் இருக்கும் நகைகளையும் வீட்டில் வைக்கவிடாது பேங்க் லாக்கரில் கொண்டுபோய் வச்சிடுவார். ஒருநாள் நானும் வீட்டில கிடந்த நல்ல வடிவான சங்கிலியும் பெரிய தோடும் போட்டுக்கொண்டு போக, வந்த ஒரு கறுப்பு இனத்தவன் "கோல்ட் ஆ.... உது" என்று கேட்டதிலிருந்து திருப்ப வெள்ளித் தோடு சங்கிலி என மாறிப்போனன். 

எனது நண்பர் ஒருவரின் தபார் கந்தோரில் வேலை செய்யும் பெண் இருவார விடுமுறையில் செல்ல வேலைக்கு ஆட்கள் இன்றி என்னைக் கெஞ்சிக் கேட்டதனால் வேறு வழியின்றி சம்மதம் சொல்லிவிட்டு முகவரியைக் கேட்டால், அங்கு கார் நிறுத்தக் கன காசு. நீர் பஸ்ஸில் வாரும் என்றார் நண்பர்.

அந்தத் தபார் கந்தோருக்கு முன்னர் ஒருதடவை போயிருக்கிறேன் தான். ஆனாலும் வேலையை ஏற்கும் நேரம் காசுக் கணக்குகளை ஒழுங்காக எடுத்துப் பொறுப்பெடுக்க வேண்டும். திங்கள் காலை எட்டு மணிக்குத் திறப்பது. எட்டில் இருந்து பன்னிரண்டு சரியான சனமாக இருக்கும். நீர் ஒரு பன்னிரண்டுக்கு வந்தால் சனம் குறைவான நேரம் கணக்கெடுத்து எல்லாம் சொல்லித்தரமுடியும் என்றார் நண்பர்.

சரி அவதியாய் முதல் நாள் ஓடத் தேவை இல்லை. ஆறுதலாக எழும்பி மதிய உணவையும் சமைத்து காலை உணவையும் உண்டு முடித்து, புது இடம் எண்டதால கொஞ்சம் நல்ல உடுப்பைப் போட்டு கண்ணாடியைப் பார்த்தால் சில்வர் சங்கிலி பொருத்தம் இல்லாததுபோல் ஓர் எண்ணம் தோன்ற, நண்பரின் தபாற்கந்தோர் திறந்தது அல்ல. மூடியது. எனவே என்னிடம் உள்ள தங்க நகையைப் போடுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்ற எண்ணம் கூடவே எழுந்தது. சாதாரணமாகச் சிறிய சங்கிலி போடும் என் கைகளில் புதிதாக வாங்கி ஒரே ஒருமுறை மட்டும் போட்ட அழகான சங்கிலி தட்டுப்பட, அங்கே ஒருத்தரும் பறிக்க முடியாது என்ற நின்மதியான எண்ணமும் கூடவே எழுந்தது. பஸ்சும் கடையின் வாசலில் தான் நிற்பது. ஏறுவதும் எதிர்ப்பக்கம். எனவே என்னை நானே கண்ணாடியில் பார்த்துத் திருப்திப்பட்டுக் கொண்டேன்.

அடிக்கடி பஸ்ஸில் பயணிக்காததால் பிரையாண அட்டையைத் தேடி எடுத்து இதற்கென்று வைத்திருக்கும் சிறிய பணப் பையுள் இருபது பவுன்ஸ் தாளும் ஒரு ஆறு பவுண்ட்சுகள் சிலறையும் போட்டு கைப்பையுள் வைத்து பதினொன்று பத்துக்குப் புறப்பட்டாச்சு. தரிப்பிடம் வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடைதான். தரிப்பிடத்தில் போய் நின்றால் பஸ் வரப் பத்து நிமிடங்கள் இருப்பதாகக் காட்டியது. தரிப்பிடத்தில் யாரும் இல்லை. தெந்தட்டில் இருப்பதற்கான  இருக்கை இருக்க அதில் நான் இருக்க அந்த நேரம் பார்த்து என் மனிசன் போன் அடிக்கிறார்.

என்ன வெளிக்கிட்டியோ ???? ஓமப்பா பஸ் வரேல்லை.

சரி போய்ச் சேர்ந்தபிறகு போன் செய்.

நான் என்ன சின்னப் பிள்ளையே துலைய. ஒருக்கா நீங்கள் கொண்டு போய் விடுங்கோவன்.

இப்பதான் வீட்டை வந்தனான். நிறைய வேலை இருக்கு. நீயே போய்க்கொள்.

சரி போனை வையுங்கோ என்று கடுப்போடு சொல்லிவிட்டு பார்க்க நான் இருக்கும் பக்கமாக ஒரு ஸ்கூட்டியில் இருவர் வீதியின் பக்கம் உள்ள நடைபாதையில் வருவதையும் அவர்களில் ஒருவன் வீடுகள் இருக்கும் பக்கமாய்க் கையைக் காட்டி எதோ மற்றவனுக்குக் கூறுவதையும் கவனித்த நான் அவர்கள் அந்த வீடுகளில் எதிலாவது இருக்கிறார்கள் போல என எண்ணியபடி பார்க்க இருவரும் முகத்தில் மூக்கை மறைத்து கறுப்புத் துணியும் கட்டியிருப்பதைப் பார்த்து என்னடா இவர்கள் குளிரும் இல்லை.  வெய்யில் கொளுத்துகிறது. எதற்கு முகத்தில் துணி என எண்ணமிட்டவாறே பையைத் திறந்து காசு வைத்த பையையும் எடுத்து பிரையாண அட்டையை எங்கே என்று  குனிந்து பையுள் தேடிக்கொண்டு இருக்க, என் குனிந்த தலைக்கு முன்னால் எனக்குக் கிட்டவாக இரு சப்பாத்துக் கால்கள் தெரிகின்றன. தலையை நிமிர்த்திப் பார்த்தால் என்னை முட்டிவிடும் தூரத்தில் கறுப்பு உடைகளுடன் தலைக் கவசம் அணிந்தபடி ஒரு ஆணின் உருவம் தெரிகிறது. 

திடுக்கிட்டு நான் எழ, என்னிலும் உயரமாக ஒருவன் வெள்ளை நிறத்தவன் நிற்பது தெரிய உனக்கு என்ன வேண்டும் என நான் கேட்கிறேன். அவனின் இரு கைகளும் என் காதுகளை நோக்கி வர அப்போதுதான் அவன் திருடன் என்று எனக்கு உறைக்கிறது. உடனே நான் என் இரு கைகளாலும் அவனைத் தள்ளிவிட்டு ஓடுகிறேன். அவன் பின்னால் துரத்துகிறான். நான் அவனிடம் அகப்படவே இல்லை .......என் கூச்சல் கேட்டு வீதியால் சென்றவர்கள் ஓடிவர திருடன் பயந்து ஓடிவிட்டான். என் நகையும் தப்பி விட்டது. 

மேலே சொன்னது போல் நடந்திருக்கும் என்றுதான் எல்லோரும் நினைப்பீர்கள். ஆனால் நடந்ததோ .....

அவன் என் காதுக்குக் கைகளைக் கொண்டுவர என் கைகள் தானாகவே என் காதைப் பொத்திக்கொள்ள செய்வதறியாது நிற்கிறேன் நான். அடுத்து என்ன செய்வது என்று தெரியாது எல்லாம் மறந்து மரத்துவிட்ட நிலை ஒரு நிமிடம். அவன் எப்படி என் கழுத்தில் இருந்து சங்கிலியை எடுத்தான் என்பது கூட எனக்கு இன்னும்  தெரியவில்லை. அடுத்த நிமிடம் சுய நினைவு வரப்பெற்று கண்ணை விளித்துப் பார்த்தால் அவன் இன்னும் என் முன் நிற்கிறான். அப்போதுதான் என் நான்கு விரல்களிலும் நான் போட்டிருந்த மோதிரம் என் நினைவுக்கு வர, ஆட்களை உதவிக்கு அழைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. ஒரு வினாடி எப்படிக் கத்துவது என்று எண்ணிவிட்டு க்காஆ........என்று என் குரலை எத்தனை கூட்ட முடியுமோ கூட்டிக் கத்துகிறேன். உடனே அவன் மிரண்டு ஓட நானும் ஓடிப் போய்ப் பார்க்கிறேன். ஸ்கூட்டியில் எந்த இலக்கத்தையும் காணவில்லை. மற்றவன் ஸ்கூட்டியை தயார் நிலையில் வைத்திருக்க ஏறப் போனவன் நான் எட்டிப் பார்ப்பதைக் கண்டு மீண்டும் திரும்பி வருகிறான். ஒரு செக்கன் என்னசெய்வது என்று திகைத்தபடி பார்க்க என் கைப்பையும் போனும்  வேறு சில பொருட்களும் நிலத்தில் கிடப்பது தெரிகிறது. உடனே ஒரு கையில் கைப்பையையும் மறுகையில் போனையும் எடுத்துக்கொண்டு வீதியைப் பார்க்கிறேன். வீதியில் யாரும் இல்லை. வாகனங்கள் கூட ஒன்றும் இல்லை. உதவி உதவி  திருடர் என்று கத்திக்கொண்டு ஓடுகிறேன்.

ஒரு ஐம்பது மீற்றரும் ஓடியிருக்கமாட்டேன். எனக்கு எதிர்ப்புறமாக இரு ஆண்கள் சாதாரண உடையுடன் ஓடிவருவது தெரிகிறது. ஒரு வினாடி அவர்களும் என்னைப் பிடிப்பதற்காகத்தான் ஓடிவருகின்றனர் என நான் ஸ்தம்பித்து நிற்க அவர்கள் என்னைக் கடந்து ஓடிய பின்தான் அவர்கள் திருடனைத் துரத்துகிறார்கள் என்று புரிய உடனே திரும்பிப் பார்க்கிறேன். அவன் ஓடிச் சென்று ஸ்கூட்டியில் அமர மற்றவன் ஸ்கூட்டியை வீதிக்கு இறக்குகிறான். படங்களில் வருவதுபோன்று வீதியின் மறுபக்கத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு கார் அவர்களை மறிக்க, அவர்கள் இருவரும் கீழே விழுகின்றனர். துரத்திக்கொண்டு போனவர்கள் அண்மித்துவிட அவர்கள் பிடிபடுவது உறுதி என நான் மகிழ, விழுந்த வேகத்தில் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு இருவரும் எப்படிப் பறந்தார்கள் என்று இன்னும் நம்பமுடியாமல் இருக்கிறது. போலந்து நாட்டைச் சேர்ந்த இருவரும் திரும்பி வந்து உனக்கு ஓக்கேயா என்று கேட்டுவிட்டு போலீசுக்கும் போன் செய்துவிட்டு என்னைச் சுவரில் அமரச் சொல்கிறார்கள். அமரும்போது பார்க்கிறேன் என் கால்கள் இரண்டும் தொய்ந்துபோய் நடுங்குகின்றன. ஒரு போலந்துக்காரர் நான் இருந்த இடத்தில் சிதறிக்கிடந்த என் பொருட்கள் சிலவற்றை எடுத்துவருகிறார். ஆம் என்று வாங்கிய நான் பையுள் தேடுகிறேன் எனது சிறிய பணப் பையையும் காணவில்லை.

ஒரு ஐந்து நிமிடமும் இல்லை போலீசார் இருவர் வந்துவிட்டனர். காரில் வழிமறி த்தவர் திரும்பி வந்து போலிசுக்கு வாக்குமூலம் கொடுத்தார். அவர்கள் எதோ வைத்திருந்தார்கள். அது துவக்கா கத்தியா என்று என்னால் அடையாளம் காண முடியவில்லை. அதனால் பயத்தால் நான் அவர்களைப் பின்பற்றிச் செல்லவில்லை என்றார். மற்ற இருவரிடமும் வாக்குமூலம் ஒருவர் எடுக்க மற்றவர் என்னிடம் வந்து கருப்பு இனத்தவரா என்றார். இல்லை வெள்ளை என்றேன் நான். எப்படி இருந்தார்கள், என்ன நிற உடை அணிந்தார்கள், உனக்கு ஏதாவது காயங்கள் உள்ளதா, அம்புலன்சுக்கு அடிக்கவா எனக் கேட்டு நான் வேண்டாம் என்றபின் எதுக்கும் நாம் தடவியல் துறைக்கு அறிவித்துள்ளோம். உன் கழுத்தில் அவர்கள் கை பட்டதா??? அல்லது கையுறை போட்டிருந்தார்களா என்றெல்லாம் கேட்டுவிட்டு எனக்கு நினைவில்லை என்றவுடன் உன்வீடு எங்கே என்றார்கள். ஐந்து நிமிட நடைதான் என்றவுடன்  என்னோடு அவர்களும் வந்து நான் அழைப்பு மணியை அழுத்த வந்து கதவைத் திறந்த மனிசன் போலீசையும் என்னையும் மாறிமாறிப் பாக்கிறார். மனிசனுக்கு விசயத்தைச் சொல்லிப்போட்டு நான் கதிரையில் அமர்கிறேன்.

நான் போட்டிருந்த மேற்சட்டையைக் கழற்றித் தரும்படி போலிஸ் கூற நான் உடைமாற்றி வந்து எனது அழகிய மேற்சட்டையை ஒரு பையில் வைத்து அவர்களிடம் கொடுத்தேன்.

மூன்று நாட்களின் பின் தம்மால் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் உனது கேசை தற்காலிகமாக மூடுகிறோம் என்றனர். எனது மேற்சட்டை எங்கே என்றேன். தடவியல் துறையினரிடம் கொடுத்துள்ளோம். விரைவில் திருப்பிய அனுப்புகிறோம் என்றார்கள். இரண்டு வாரமாகியும் இன்னும் வரவில்லை.

 

 

அது ஒருபுறம் இருக்க ஒரு வாரம் கடந்தபின் மீண்டும் அந்த இருவரும் என் கண்ணில் பட்டனர்.  

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் துர்க்கையம்மன் .....:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அழகிய தோழியே....,!

 

லண்டன் மாநகரின் வானத்தை...,

ஒரு தடவை அண்ணார்ந்து பார்..!

 

இது கோடை காலம்!

 

பதினோரு மணி தானே?

இருபத்தி நாலு மணி நேரத்து...

இயந்திர நகரம்.....,

இன்னும் அரைத் தூக்கத்திலிருந்து..

முற்றாக விழிக்கவில்லை!

 

விடிகாலை தருகின்ற புதிய உணர்வு..,

இன்னும் நீங்கவில்லை!

 

புதுத் துளிர் விட்ட மரங்களும்..

எப்போதோ வருகின்ற...

வெயிலைக் கண்ட பூக்களும்,

மெதுவாகச் சிரிக்கும் ஒலி கூட...'

உன் காதில் விழவில்லையா?

 

கதிரவனுக்கு நன்றி சொல்லும்...

அந்தப் பறவைகளின் பாடல் சத்தம்..,

உனக்குக் கேட்கவில்லையா?

 

இவையெல்லாம் அழகில்லையா?

எதற்காக நகைகள்?

என்னிடம் பணம் மிஞ்சியிருக்கின்றது,

என இல்லாதவனுக்கு சொல்லுகிறாயா?

 

எனது கருத்தில்....,

குற்றவாளி அவர்கள் மட்டுமல்ல....,

நீயும் தானே தோழி?

 

சுமே....கதை அழகு...!

கவனமாக இருங்கள்!

மேலே உள்ள கருத்து சும்மா பம்பலுக்கு எழுதினது! சீரியஸாக எடுக்காதீர்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

மீண்டும் துர்க்கையம்மன் .....:cool:

அப்ப வரவேண்டாமோ????

6 hours ago, புங்கையூரன் said:

எனது அழகிய தோழியே....,!

 

லண்டன் மாநகரின் வானத்தை...,

ஒரு தடவை அண்ணார்ந்து பார்..!

 

இது கோடை காலம்!

 

பதினோரு மணி தானே?

இருபத்தி நாலு மணி நேரத்து...

இயந்திர நகரம்.....,

இன்னும் அரைத் தூக்கத்திலிருந்து..

முற்றாக விழிக்கவில்லை!

 

விடிகாலை தருகின்ற புதிய உணர்வு..,

இன்னும் நீங்கவில்லை!

 

புதுத் துளிர் விட்ட மரங்களும்..

எப்போதோ வருகின்ற...

வெயிலைக் கண்ட பூக்களும்,

மெதுவாகச் சிரிக்கும் ஒலி கூட...'

உன் காதில் விழவில்லையா?

 

கதிரவனுக்கு நன்றி சொல்லும்...

அந்தப் பறவைகளின் பாடல் சத்தம்..,

உனக்குக் கேட்கவில்லையா?

 

இவையெல்லாம் அழகில்லையா?

எதற்காக நகைகள்?

என்னிடம் பணம் மிஞ்சியிருக்கின்றது,

என இல்லாதவனுக்கு சொல்லுகிறாயா?

 

எனது கருத்தில்....,

குற்றவாளி அவர்கள் மட்டுமல்ல....,

நீயும் தானே தோழி?

 

சுமே....கதை அழகு...!

கவனமாக இருங்கள்!

மேலே உள்ள கருத்து சும்மா பம்பலுக்கு எழுதினது! சீரியஸாக எடுக்காதீர்கள்!

போலீஸ்காரன் சொன்னதும் அதுதான். உங்கள் ஆட்கள் விலை அதிகமான நகையை ஏன் போடுகிறார்கள் என்றான். எமது காசில் தானே நாம் போடுகிறோம் என்றேன் நான்.

பணம் மிஞ்சியிருப்பவர்கள் முப்பது பவுண் கொடி ஒரு விழாவுக்கு ஒரு நகை என்று போடுவார்கள். நாம்அப்படியா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ, உங்கள் வீட்டு காப்புறுதியில் contents இருந்தால் அதில் கொண்டு போகும் நகைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டனில் ஸ்கூட்டரில் வந்து திருடுபவர்களின் தொல்லை அதிகரித்துவிட்டது. அவர்களிடம் சுமேயும் அகப்பட்டது கவலையானது. பொலிஸ்காரர் இவர்களைப் பிடிக்க நேரத்தைச் செலவழிக்கப்போவதில்லை என்பதால் நாங்கள்தான் கவனமாக இருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பியர் கள்ளன்..... இப்ப நகை கள்ளன்...

சுமே அக்காவை தேடிப்பிடிச்சு அற்றாக் பண்ணுறாங்கள்.

எனக்கென்னவோ.... பியர் கள்ளன் தான் செற்றப் செய்த மாதிரி தெரியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இலண்டனில் ஸ்கூட்டரில் வந்து திருடுபவர்களின் தொல்லை அதிகரித்துவிட்டது. அவர்களிடம் சுமேயும் அகப்பட்டது கவலையானது. பொலிஸ்காரர் இவர்களைப் பிடிக்க நேரத்தைச் செலவழிக்கப்போவதில்லை என்பதால் நாங்கள்தான் கவனமாக இருக்கவேண்டும்.

உண்மைதான். அடுத்த தடவை கள்ளன் நிக்கிறான் என்று போன் செய்தும் யாருமே வரவில்லை. இப்ப வீட்டினுள்ளும் தனிய இருக்கப் பயமாத்தான் இருக்கு.

 

3 hours ago, Nathamuni said:

பியர் கள்ளன்..... இப்ப நகை கள்ளன்...

சுமே அக்காவை தேடிப்பிடிச்சு அற்றாக் பண்ணுறாங்கள்.

எனக்கென்னவோ.... பியர் கள்ளன் தான் செற்றப் செய்த மாதிரி தெரியுது.

பியர்க்கள்ளன் தமிழன். இது. கிழக்கு ஐரோப்பிய இனக்கள்ளன்.

4 hours ago, MEERA said:

சுமோ, உங்கள் வீட்டு காப்புறுதியில் contents இருந்தால் அதில் கொண்டு போகும் நகைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.

அதில் வீட்டுக்குள் களவு என்றால்த்தானே கொடுப்பார்கள்

2 hours ago, Nathamuni said:

 

வெள்ளைகளுக்கே இப்பிடி என்றால்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பியர்க்கள்ளன் தமிழன். இது. கிழக்கு ஐரோப்பிய இனக்கள்ளன்.

அதில் வீட்டுக்குள் களவு என்றால்த்தானே கொடுப்பார்கள்

அவையளை செட் பண்ணி அனுப்பியது இவையள் தானே...

நீங்கள் போட்டிருக்கிறது கிள்ற் இல்லை தங்கம் தான் என்று அவங்களுக்கு யாரு சொன்னது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாய் நகை களவு போச்சுதா அல்லது சுமோவின் கற்பனையோ தெரியவில்லை...உண்மையாய் களவு போயிருந்தால் ரதிக்கு மிக்க மகிழ்ச்சசி...உங்களை மாதிரி நகைகளை போட்டுக் கொண்டு படம் காட்டுபவர்களுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

அவையளை செட் பண்ணி அனுப்பியது இவையள் தானே...

நீங்கள் போட்டிருக்கிறது கிள்ற் இல்லை தங்கம் தான் என்று அவங்களுக்கு யாரு சொன்னது?

எல்லாம் எங்கடையள் தான் இங்குள்ள கள்வர்களை உளவு சொல்லி ஏவி விடுவதே இதுகள்தான் .இப்ப எல்லாம் அவங்களுக்கும் தெரியும் எது பசையுள்ள ஆட்கள் என்று. வீட்டு வாசலில்  மாங்கோ லீப் தோரணம் தொங்குவது மிடில் அந்த தோரணத்துடன் லெமனும் சில்லியும் தொங்கினால் அப்பர் மிடில்  இவைகளுடன் ஒரு அக்லி(வடிவில்லாத)படத்துடன் அல்லது அக்லி சிலையுடன் கிழமைக்கு ஒருக்கால் லெமனும் சில்லியும் புதிதாய் மாத்தி கொண்டு இருந்தால் அதி பணபுழக்கம் உள்ள வீடுகள் என்று காப்புலி விளக்கம் தருது .

நல்லகாலத்துக்கு மெட்ரோ பாங் லொக்கர் வந்த படியால் களவு கொள்ளை குறைவு அத்துடன் வீட்டுக்கு பாதுகாப்பு அலாரம் பற்றிய விழிப்புணர்வும் ring போன்ற நவீன பாதுகாப்பு சிஸ்ட்டம் என்பவற்றால் இன்னும் முன்னேற்றம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரதி said:

உண்மையாய் நகை களவு போச்சுதா அல்லது சுமோவின் கற்பனையோ தெரியவில்லை...உண்மையாய் களவு போயிருந்தால் ரதிக்கு மிக்க மகிழ்ச்சசி...உங்களை மாதிரி நகைகளை போட்டுக் கொண்டு படம் காட்டுபவர்களுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும் .

 

இது பொறாமையின உச்சம். ஏன் நீங்கள் முகத்திற்கு உதட்டிற்கு சாயம் பூசி படம் காட்டுவதில்லையோ? 

3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதில் வீட்டுக்குள் களவு என்றால்த்தானே கொடுப்பார்கள்

உங்கள் காப்புறுதிப் பத்திரத்தை வாசித்து பாருங்கள். 

எடுத்து செல்லும் மடிக்கணினி கைத்தொலைபேசி என்பவற்றுடன் அணிந்திருக்கும் நகைகளுக்கும் காப்புறுதி உள்ளது. (கைப்பையில் அல்ல)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

இது பொறாமையின உச்சம். ஏன் நீங்கள் முகத்திற்கு உதட்டிற்கு சாயம் பூசி படம் காட்டுவதில்லையோ? 

 

ஒன்றின் மேல் பொறாமைப்படுவதற்கு  அதன் மேல் ஆசை இருக்க வேண்டும்...நான் லிப்ஸடிக் போடுவதால் ஒருவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை....நகை போடுவது,போடாமல் விடுவது சுமோவின்{அவரவர்} விருப்பம்...ஆனால் எதுவும் இடத்திற்கு தக்க மாதிரி இருக்க வேண்டும் ...

கலைஞ்னுடனான எங்கள் சந்திப்பே கடைசி சந்திப்பாக இருக்கட்டும்...முகத்திற்கு பின்னால்  மற்றவர்களை விமர்ர்சிக்கும் உங்களை போன்றவர்களை  இனி மீள் சந்திக்கவே கூடாது...நன்றி ...வணக்கம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஒன்றின் மேல் பொறாமைப்படுவதற்கு  அதன் மேல் ஆசை இருக்க வேண்டும்...நான் லிப்ஸடிக் போடுவதால் ஒருவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை....நகை போடுவது,போடாமல் விடுவது சுமோவின்{அவரவர்} விருப்பம்...ஆனால் எதுவும் இடத்திற்கு தக்க மாதிரி இருக்க வேண்டும் ...

கலைஞ்னுடனான எங்கள் சந்திப்பே கடைசி சந்திப்பாக இருக்கட்டும்...முகத்திற்கு பின்னால்  மற்றவர்களை விமர்ர்சிக்கும் உங்களை போன்றவர்களை  இனி மீள் சந்திக்கவே கூடாது...நன்றி ...வணக்கம் 
 

ஒருவர் ஒரு பொருளை இழந்து நிற்கும் போது மகிழ்ச்சி கொண்டாடும் உங்களை போன்றவர்களின் மனநிலையை என்ன என்று சொல்வது.

சந்திப்பிற்கு வருவதும் வராமல் விடுவதும் உங்கள் விருப்பம்.

ஆனால் முகத்திற்கு பின்னால் விமர்சித்தமை என்பது உங்களின் அடுத்த புரளி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழிப்பறி செய்த கள்வர்களைத் துரத்திக்கொண்டு வந்த இரண்டு போலந்துகாரர்கள் சரியாக அப்போதுதான் சொல்லிவைத்தாற்போல் வந்தார்கள் என்றபடியால் எனது சிந்தனைக்கு அவர்களிலும் சந்தேகமே வருகிறது. தமது சகாக்கள்(கள்வர்கள்) பொருளுடன் தப்பிச் செல்வதை அன்னியரைப்போல் நின்று உதவுவது இவர்கள் போன்றவர்களின் பொறுப்பு. களவு கொடுத்தவருக்கு கள்வனைப்பற்றி என்னென்ன துப்புகள் கிடைத்துள்ளன - என்னென்ன பொருட்கள் மீதியாய் உள்ளன - காயம் எதுவும் ஏற்பட்டதா  என்பது போன:ற தரவுகளை களவு கொடுத்தவருடன் அளவளாவி இவர்கள் அறிந்து தமது குழுவை உசாராக்கிக்கொள்வார்கள்.

அண்மையில் இலண்டன் ஒக்ஸ்போட் வீதியில் மோட்டார் சைக்கிளில்  வந்த இருவரால் என் கண்ணுக்கு முன்பாக நிகழ்ந்த இதுபோன்ற ஒரு வழிப்பறியை  நான்  கண்டிருக்கிறேன். அங்கும் முதலில் உதவிக்கு வந்தது இரண்டு கிழக்கு ஐரோப்பிய ஆண்கள். சிறிதுநேர விசாரணையின்பின் பொலிசார் அந்த இரண்டு நபர்களையும் தமது வண்டியில் ஏற்றிச் சென்றதையும் கண்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு ஒன்றுமே நடக்கவில்லை என்பதில் ஆறுதல். 

இந்த சம்பவம் உங்களுக்கு படிப்பினையாக இருந்தாலும் மற்றவர்களுக்கு  எச்சரிக்கையும் கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

அவையளை செட் பண்ணி அனுப்பியது இவையள் தானே...

நீங்கள் போட்டிருக்கிறது கிள்ற் இல்லை தங்கம் தான் என்று அவங்களுக்கு யாரு சொன்னது?

உண்மைதான்

5 hours ago, ரதி said:

உண்மையாய் நகை களவு போச்சுதா அல்லது சுமோவின் கற்பனையோ தெரியவில்லை...உண்மையாய் களவு போயிருந்தால் ரதிக்கு மிக்க மகிழ்ச்சசி...உங்களை மாதிரி நகைகளை போட்டுக் கொண்டு படம் காட்டுபவர்களுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும் .

 

நீங்கள் இப்பிடித்தான் எழுதுவீர்கள் என்று அனுமானித்தபடியால் கோபம் வரவில்லை. நகை என்பது பெரும்பாலான பெண்களுக்குப் பிடிப்பதுதான். உங்கள் கதையைப் பார்த்தால் நகை போடுபவர்கள் எல்லாம் மற்றவர்கள் நகையைத் திருடிப் போடுவதுபோல் கூறுகிறீர்கள். நான் வேலைசெய்து என்காசில் நகை வாங்கிப் போடுவதில் உங்களுக்கு ஏன் கோபம்.??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

எல்லாம் எங்கடையள் தான் இங்குள்ள கள்வர்களை உளவு சொல்லி ஏவி விடுவதே இதுகள்தான் .இப்ப எல்லாம் அவங்களுக்கும் தெரியும் எது பசையுள்ள ஆட்கள் என்று. வீட்டு வாசலில்  மாங்கோ லீப் தோரணம் தொங்குவது மிடில் அந்த தோரணத்துடன் லெமனும் சில்லியும் தொங்கினால் அப்பர் மிடில்  இவைகளுடன் ஒரு அக்லி(வடிவில்லாத)படத்துடன் அல்லது அக்லி சிலையுடன் கிழமைக்கு ஒருக்கால் லெமனும் சில்லியும் புதிதாய் மாத்தி கொண்டு இருந்தால் அதி பணபுழக்கம் உள்ள வீடுகள் என்று காப்புலி விளக்கம் தருது .

நல்லகாலத்துக்கு மெட்ரோ பாங் லொக்கர் வந்த படியால் களவு கொள்ளை குறைவு அத்துடன் வீட்டுக்கு பாதுகாப்பு அலாரம் பற்றிய விழிப்புணர்வும் ring போன்ற நவீன பாதுகாப்பு சிஸ்ட்டம் என்பவற்றால் இன்னும் முன்னேற்றம்.

உங்களுக்குத் தெரியாததா. எந்த ஊர்க்காறர் நகைகள் அடுக்கி வீதிகளில் திரிந்தார்கள் என்று. நான் சாதாரணமாக்க் கொடிகூடப் போடுவதில்லை. ஒரு இரண்டரைப்பவுண் சங்கிலி கூடப் போட முடியாத நிலை என்றால் என்னத்துக்குச் சட்டமும் ஒழுங்கும்.

1 hour ago, vanangaamudi said:

வழிப்பறி செய்த கள்வர்களைத் துரத்திக்கொண்டு வந்த இரண்டு போலந்துகாரர்கள் சரியாக அப்போதுதான் சொல்லிவைத்தாற்போல் வந்தார்கள் என்றபடியால் எனது சிந்தனைக்கு அவர்களிலும் சந்தேகமே வருகிறது. தமது சகாக்கள்(கள்வர்கள்) பொருளுடன் தப்பிச் செல்வதை அன்னியரைப்போல் நின்று உதவுவது இவர்கள் போன்றவர்களின் பொறுப்பு. களவு கொடுத்தவருக்கு கள்வனைப்பற்றி என்னென்ன துப்புகள் கிடைத்துள்ளன - என்னென்ன பொருட்கள் மீதியாய் உள்ளன - காயம் எதுவும் ஏற்பட்டதா  என்பது போன:ற தரவுகளை களவு கொடுத்தவருடன் அளவளாவி இவர்கள் அறிந்து தமது குழுவை உசாராக்கிக்கொள்வார்கள்.

அண்மையில் இலண்டன் ஒக்ஸ்போட் வீதியில் மோட்டார் சைக்கிளில்  வந்த இருவரால் என் கண்ணுக்கு முன்பாக நிகழ்ந்த இதுபோன்ற ஒரு வழிப்பறியை  நான்  கண்டிருக்கிறேன். அங்கும் முதலில் உதவிக்கு வந்தது இரண்டு கிழக்கு ஐரோப்பிய ஆண்கள். சிறிதுநேர விசாரணையின்பின் பொலிசார் அந்த இரண்டு நபர்களையும் தமது வண்டியில் ஏற்றிச் சென்றதையும் கண்டேன்.

நீங்கள் கூறுவதும் சரியாக இருக்கலாம். ஆனால் அவர்கள் ஏன் கள்வரைத் துரத்திச் செல்லவேண்டும். ?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்குத் தெரியாததா. எந்த ஊர்க்காறர் நகைகள் அடுக்கி வீதிகளில் திரிந்தார்கள் என்று. நான் சாதாரணமாக்க் கொடிகூடப் போடுவதில்லை. ஒரு இரண்டரைப்பவுண் சங்கிலி கூடப் போட முடியாத நிலை என்றால் என்னத்துக்குச் சட்டமும் ஒழுங்கும்.

நீங்கள் கூறுவதும் சரியாக இருக்கலாம். ஆனால் அவர்கள் கள்வரைத் துரத்திச் செல்லவேண்டும். ?????

 

1 hour ago, Kavi arunasalam said:

உங்களுக்கு ஒன்றுமே நடக்கவில்லை என்பதில் ஆறுதல். 

இந்த சம்பவம் உங்களுக்கு படிப்பினையாக இருந்தாலும் மற்றவர்களுக்கு  எச்சரிக்கையும் கூட.

அதன்பின் நான் யோசித்தேன். இந்தநாட்டில் பட்டப்பகலில் நான் ஒருசிலநிமிடம் உறங்குநிலைக்குச் சென்றுவிட்டேன் என்றால் உயிர்ப் பாதுகாப்பற்ற நிலையில் இராணுவத்தைக்கண்டு எப்படிப் பெண்பகள் பதைத்திருப்பர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அப்ப வரவேண்டாமோ????

இதென்ன கரைச்சலாய்க்கிடக்கு.....எங்கை நான் அப்பிடி சொன்னனான்?

und wie geht's ihnen? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

இதென்ன கரைச்சலாய்க்கிடக்கு.....எங்கை நான் அப்பிடி சொன்னனான்?

und wie geht's ihnen? :cool:

மிக்க நலம் குமாரசாமி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

இலண்டனில் ஸ்கூட்டரில் வந்து திருடுபவர்களின் தொல்லை அதிகரித்துவிட்டது. அவர்களிடம் சுமேயும் அகப்பட்டது கவலையானது. பொலிஸ்காரர் இவர்களைப் பிடிக்க நேரத்தைச் செலவழிக்கப்போவதில்லை என்பதால் நாங்கள்தான் கவனமாக இருக்கவேண்டும்.

சிலோன்லை  இண்டியாவிலை வாழுற மக்கள் மாதிரி  லண்டனிலையும் வாழுறம் எண்டு நாசுக்காய் சொல்லுறீங்க...tw_tounge:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்குத் தெரியாததா. எந்த ஊர்க்காறர் நகைகள் அடுக்கி வீதிகளில் திரிந்தார்கள் என்று. நான் சாதாரணமாக்க் கொடிகூடப் போடுவதில்லை. ஒரு இரண்டரைப்பவுண் சங்கிலி கூடப் போட முடியாத நிலை என்றால் என்னத்துக்குச் சட்டமும் ஒழுங்கும்.

இப்படியொரு கருத்துக்குத்தான் ஒராள் வேண்டிகட்டிகொண்டு இருக்கிறா இப்போ நீங்களும் அதே வழியில் எவர் அடுக்கினால் உங்களுக்கு ஏதும் பாதிப்பா ? இரண்டரை என்ன 100 பவுனில் போடுங்க இங்குதான் தனியார் பாதுகாப்பு நிருவனம்கள் முடக்குக்கு முடக்கு இருக்கிறது பந்தாவா நகைகளை போட்டுகொண்டு பாதுகாவலர் புடை சூழ போய் வாருங்க . சும்மா அரசமரத்துக்கு கீல் நின்றுகொண்டு பறைவை எச்சம் போட்டுதாம் என்று வழமை போல் முகாரி பாடதீங்க.

2 hours ago, குமாரசாமி said:

சிலோன்லை  இண்டியாவிலை வாழுற மக்கள் மாதிரி  லண்டனிலையும் வாழுறம் எண்டு நாசுக்காய் சொல்லுறீங்க...tw_tounge:

வான் களவு போனதுக்கு போனில் கிரைம்  ரெபரன்ஸ் தரும் இங்குள்ள போலிஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமேயின் கதையைக் கேட்டதும்....இரண்டு சம்பவங்கள் எனக்கு உடனே நினைவுக்கு வந்தன!

அந்தக் காலத்து ரூட்டிங் புகையிரத நிலையத்துக்கு அருகில் ஒரு தமிழ்க்கடை புதிதாகத் திறக்கப்பட்டது! அங்கு ஒரு தமிழ்ப் பெண் காசாளராக வேலை செய்து கொண்டிருந்தார்! அந்தப் பக்கத்தால் வந்த ஒரு கறுவல்....அவரது கழுத்திலிருந்த தாலிக்கொடியை உருவிக்கொண்டு ஓடிவிட்டான்! 

ஐயோ....குய்யோ என்று குழறிய மனுசி....போலிசை அழைக்கப் போலிஸ் காரன்...அவவிடம்...அந்தக் கொடியின் பெறுமதி எவ்வளவு இருக்கும் எனக் கேட்கப் பதினைந்து பவுணுக்கு மனுசி விலை சொல்ல.....போலிஸ் காரனால்...அதை நம்பவே முடியவில்லை!

அதைக் களவெடுத்த கறுவலுக்கும் ...அந்தக் கொடியின் உண்மையான பெறுமதி...தெரிந்திருக்காது என்றே நினைக்கிறேன்!

 

இன்னொரு சம்பவம்....பாரிஸில்..எனது உறவினரது திருமணத்துக்குப் போயிருந்த போது...நடந்தது!

திருமணம் நடந்த மண்டபத்தில்....ஆண்கள்...பெண்களுக்கு...என கழிப்பறைகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தன!

 

நான் கழிப்பறைக்குப் போன போது....ஒரு ஆண்...பெண்கள் கழிப்பறை வாசலில் காவலுக்கு நிண்டதை...அவதானித்தேன்!

அது வழமைக்கு மாறாக இருக்கவே...எனது உறவினரினரிடம்...விசாரிக்க...அவர் கூறிய பதில் ...கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது!

உள்ளே சென்ற அவரது மனைவியின் ...கழுத்தில் தொங்கிய தாலிக்கொடி...இருபத்தியாறு பவுணாம்!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.