Jump to content

சித்தார்த்தனும் செல்வமும் என்ன செய்யப் போகிறார்கள்?


Recommended Posts

சித்தார்த்தனும் செல்வமும் என்ன செய்யப் போகிறார்கள்?
புருஜோத்தமன் தங்கமயில் / 2018 செப்டெம்பர் 12
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான உறவு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது.  

பிரிவுக்குப் பின்னர், எவ்வாறான பாதையைத் தேர்தெடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் கூட்டமைப்பினரும் விக்னேஸ்வரனும் ஓரளவுக்குத் தெளிவான நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டார்கள்.  

உறவை ஒட்டுமொத்தமாக முறித்துக் கொள்வதற்கு முன்னரான, சம்பிரதாயபூர்வ சந்திப்புக்கான காத்திருப்பு மட்டுமே இப்போதுள்ளது. டெல்லிப் பயணத்தை முடித்துக்கொண்டு, இரா.சம்பந்தன் நாடு திரும்பியதும், ‘கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், கூட்டமைப்பின் முதலமைச்சர் விக்னேஸ்வரன்’ என்கிற அடிப்படையிலான இறுதிச் சந்திப்பு நடைபெறும் என்று தெரிகிறது. 

தமிழரசுக் கட்சிக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முரண்பாடுகள், கடந்த மூன்று ஆண்டுகளாக உச்சத்தை எட்டியிருந்த போதிலும், கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளிடமும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடமும் விக்னேஸ்வரனுக்கு ஆதரவான மனநிலை ஓரளவு காணப்பட்டது.   

கூட்டமைப்பை நோக்கி, விக்னேஸ்வரன் விமர்சனங்களை முன்வைக்கும் போதெல்லாம், அந்த விமர்சனங்களை, ‘தமிழரசுக் கட்சி எதிர் விக்னேஸ்வரன்’, ‘எம்.ஏ. சுமந்திரன் எதிர் விக்னேஸ்வரன்’ என்கிற நிலைகளில் பேண வேண்டும் என்பதிலும், அவர்கள் குறியாக இருந்தார்கள். ஆனால், கடந்த சில மாதங்களாக அந்த நிலையில் குறிப்பிட்டளவு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.   

புளொட்டின் தலைவர் த. சித்தார்த்தன் இன்று வரையிலும் விக்னேஸ்வரனை எதிர்த்தோ, ஆதரித்தோ கருத்துகள் எதையும் பெரியளவில் வெளியிட்டிருக்கவில்லை.   

கூட்டமைப்பிலிருந்து விக்னேஸ்வரன் விலகுவது அல்லது வெளியேற்றப்படுவது, தமிழ் மக்களைப் பாதிக்கும் என்கிற ரீதியிலான, யாருக்கும் வலிக்காத மாதிரியான கருத்துகளையே, அவர் வெளியிட்டு வந்திருக்கின்றார்.   

சித்தார்த்தனின் அரசியல் அணுகுமுறை என்பது, அவசரப்படுவதோ, அந்தரப்படுவதோ அல்ல. மிகமிக நிதானமாகப் பொறுத்திருந்து, சந்தர்ப்பங்களைக் கணித்து, தீர்மானங்களை மேற்கொள்ளும் போக்கிலானது.   

சம்பந்தனால் மதிக்கப்பட்ட பங்காளிக் கட்சித் தலைவர்களில், சித்தார்த்தனுக்கே முதலிடம். அது, மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் மகன் என்கிற அடிப்படையில் மாத்திரம் வந்ததல்ல. அரசியல் அணுகுமுறை சார்ந்தும் வந்தது. அதுபோலவே, விக்னேஸ்வரனும் அதிகளவு முக்கியத்துவத்தை சித்தார்த்தனுக்கு கொடுத்தே வந்திருக்கின்றார்.   

தமிழ் மக்கள் பேரவையிலுள்ள வைத்தியர்கள், சட்டத்தரணிகளுக்கு மேலான முக்கியத்துவத்தை சித்தார்த்தனுக்கு, விக்னேஸ்வரன் வழங்கி வந்திருக்கின்றார். பேரவைக்குள் இருக்கும் கட்சித் தலைவர்களில், நிதானமாக விடயங்களைக் கையாளக் கூடிய தலைவர் சித்தார்த்தன் என்கிற அடிப்படையில் வந்தது அது. 

இவ்வாறான கட்டத்தில், விக்னேஸ்வரன் புதிய அணிக்குத் தலைமையேற்கப்போகிறார்; புதிய அணியின் பலம் - பலவீனத்தை ஆராய்வதிலும், புளொட்டின் எதிர்கால நிலைப்புக்கு அது உதவுமா என்பது சார்ந்துமே, சித்தார்த்தன் தற்போது சிந்தித்து வருகிறார்.   

தன்னுடைய நிலை, இருப்புக்கு சிக்கல் என்று கருதிய எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர், சம்பந்தப்பட்ட தரப்புகளைப் பகைத்துக் கொண்டதில்லை. அடிப்படையில் அவர் எதிரிகளையே பகைத்துக்கொள்ளாதவர்.   

புளொட்டுக்கு, மட்டக்களப்பில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும், வன்னியில் சில மாகாண சபை உறுப்பினர்களும் இருந்தாலும், புளொட்டின் தற்போதைய அரசியல் இருப்பு, யாழ்ப்பாணம் சார்ந்தே கட்டமைக்கப்படுகின்றது. இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் எந்தத்தரப்பு பலமானது என்பதுதான், சித்தார்த்தனின் எதிர்காலப் போக்கைத் தீர்மானிக்கும். ஆனாலும், இது வரையிலும் கூட்டமைப்பிலிருந்து அவர் வெளியேறும் கட்டத்துக்கு வரவில்லை.   

இன்னொரு வகையில், கட்சியின் ஆதரவாளர்கள், இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்களை வைத்து, விக்னேஸ்வரனுக்கு எதிரான, விமர்சனப் போக்கைப் பேணவும் முயல்கிறார். அது, கூட்டமைப்புக்குள் தொடர்ந்தும் இருப்பதற்கான சூழல் நீடிக்கும் பட்சத்தில் உதவும் என்றும் நம்புகிறார்.   
அதாவது, மைத்திரிக்கு எதிரான தன்னுடைய விமர்சனங்களை, கோபங்களை ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு, ரணில் கையாளுவதற்கு இணையான உத்தி.  ஆனால், டெலோ இயக்கம் விக்னேஸ்வரனை ஒட்டுமொத்தமாகப் புறந்தள்ளி, சம்பந்தனின் கீழ் தொடர்வது என்கிற முடிவுக்கு வந்துவிட்டது.   

“தமிழ்த் தேசிய அரசியலுக்கு புதியவர், குழந்தை” என்கிற தோரணையிலான உரையாடல்களை, விக்னேஸ்வரன் குறித்து முன்வைக்கும் அளவுக்கான கட்டத்தை, டெலோ அடைந்துவிட்டது. விக்னேஸ்வரன் தொடர்பில், தொடர்ந்தும் நழுவல் போக்கில் இருப்பது, மேலதிக சிக்கல்களை எதிர்காலத்தில் கொண்டு வரும் என்பதால், எடுக்கப்பட்ட முடிவாக இருக்கலாம்.   

ஏனெனில், டெலோவின் வாக்கு வங்கி ஒப்பீட்டளவில், யாழ்ப்பாணத்தைவிட வன்னியில் அதிகம். அவ்வாறான நிலையில், வன்னியைப் பிரதானப்படுத்தி, முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் செல்வம் அடைக்கலநாதனுக்கு உண்டு. அதுதான், தன்னைத் தொடர்ந்தும் கட்சித் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் வைத்துக் கொள்ள உதவும் என்றும் அவர் நம்புகிறார்.   

கூட்டமைப்புக்குள் டெலோ முடிவுகளை எடுக்கும் கட்சியாக என்றைக்கும் இருந்ததில்லை. கிட்டத்தட்ட தமிழரசுக் கட்சியின் முடிவுகளின்படி ஒழுகும் கட்சியாகவே இருந்திருக்கின்றது.   

ஆனால், மன்னாரிலிருந்து சார்ள்ஸ் நிர்மலநாதனை தமிழரசுக் கட்சி கொண்டு வந்ததும், டெனீஸ்வரன் விடயத்தில் தமிழரசுக் கட்சியின் தலையீடுகளும் செல்வத்தை குறிப்பிட்டளவு எரிச்சல்படுத்தியது. அதனை அவர், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஆசனப்பங்கீட்டில் காட்டிக் கொண்டார்.   

என்றைக்குமே சொல்வதைக் கேட்கும் கிளிப்பிள்ளையாக இருக்கும் செல்வம், குரல் உயர்த்தியமை குறித்து, சம்பந்தனுக்கு கோபம் உண்டு. அதனை, தேர்தலின் பின்னரான சந்திப்புகளில் அவர் வெளிப்படுத்தியும் வந்திருக்கின்றார். ஆனாலும், விக்னேஸ்வரனின் அரசியல் என்பது, யாழ்ப்பாணத்துக்கு அப்பால், விரிவடையாத நிலையில், ‘அரசனை நம்பிப் புருசனைக் கைவிடும் நிலை’க்கு செல்வம் செல்லத் தயாராக இல்லை.   

விக்னேஸ்வரன் விடயத்தில், செல்வம் இன்னொரு நுட்பமான அணுகுமுறையையும் கையாள்வது தெரிகின்றது. வடக்கில், விக்னேஸ்வரன் உண்மையிலேயே ஓர் ஆளுமையுள்ள தலைமையாக மாறும் பட்சத்தில், அவரோடு ஒட்டிக்கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படலாம். அப்போது, அவர் குறித்து, தான் வெளியிட்ட விமர்சனங்கள் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்றும் நம்புகிறார். அதன்போக்கில்தான், விக்னேஸ்வரன் மீதான விமர்சனங்களையும் கோபத்தையும் சம்பந்தன் மீதான விசுவாசத்தையும் என். ஸ்ரீ காந்தவைக் கொண்டு முன்வைக்கிறார்.   

ஊடகங்களிடம் பேசும் போது, யார் குறித்த விமர்சனங்களையும் செல்வம் பெரிதாக முன்வைப்பதில்லை. அதற்கான பொறுப்பு ஸ்ரீ காந்தாவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. ஸ்ரீ காந்தாவும் ‘நவரத்தினம் காலத்து மேடைகள்’ என்று நினைத்து, ஒலிவாங்கிகளுக்கு முன்னால் முழங்குகிறார்.   

ஆனால், பேரவைக்காரர்களைப் பொறுத்தளவில் சித்தார்த்தனைக் காட்டிலும், செல்வத்தை அணைத்துக் கொள்வது, யாழ்ப்பாணத்துக்கு அப்பாலும் விக்னேஸ்வரனைக் கொண்டு சென்று, வடக்கின் தலைவராக உயர்த்துவதற்கு உதவும் என்று நம்புகிறார்கள். அது, கடந்தகால வரலாறுகள் சார்ந்து, ஒப்பீட்டளவில் புளொட் அடையாளத்தைக் காட்டிலும், டெலோ அடையாளம் சிறந்தது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலானது.  

பேரவையின் ஆதரவாளர்கள், தொண்டர் படையணி என்பது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்ந்தே பெரும்பாலும் இருக்கின்றது. அந்த அணி, புளொட் சார்ந்து வைத்த குற்றச்சாட்டுகள் என்பது, சமூக ஊடக அரங்கில் அதிகம். அப்படியான கட்டத்தில், புளொட்டை உள்வாங்கும் போது, கடந்த கால விமர்சனங்களுக்கு எதிரான கருத்துகளை, முன்வைக்க வேண்டி வரும்; அது, தர்மசங்கடமானது. அவ்வாறான சூழல் உருவாவதைத் தடுக்க வேண்டிய கட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருக்கிறார்.   

விக்னேஸ்வரனுக்கு, சித்தார்த்தனே மிக அவசியமானவர் என்கிற போதிலும், சித்தார்த்தனைக் காட்டிலும், செல்வத்தை உள்வாங்குவதையே கஜேந்திரகுமாரும், முன்னணியும் பேரவையின் வைத்தியர்களும், சட்டத்தரணிகளும் விரும்புகிறார்கள். அத்தோடு, தேர்தல் காலத்தில் வன்னியில், வாக்கு வங்கியையும் அதிகரித்துக் கொள்ள முடியும்.   

விக்னேஸ்வரனின் தனிப்பயணம், அடுத்து வரும் நாள்களில் ஆரம்பித்தாலும், அதன் பக்கம் இப்போதைக்கு சித்தார்த்தனோ, செல்வமோ செல்ல மாட்டார்கள். அதுதான், மாவையை முன்னிறுத்தி, வடக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ளும் திடத்தையும் சில காலத்துக்குப் பின்னர், ப.சத்தியலிங்கத்தை முதலமைச்சராக முன்னிறுத்தும் திட்டத்தையும் தமிழரசுக் கட்சியால் முன்னெடுக்க வைத்திருக்கின்றது. அதை, எதிர்வரும் நாள்கள் பதிவு செய்யும்.  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சித்தார்த்தனும்-செல்வமும்-என்ன-செய்யப்-போகிறார்கள்/91-221605

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சித்தார்த்தனும்-செல்வமும்-என்ன-செய்யப்-போகிறார்கள்/91-221605

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.