Jump to content

“அரசியல்வாதிகளே எம்மை ஏமாற்றாதீர்”: பருத்தித்துறையில் வியாபாரிகள் போராட்டம்


Recommended Posts

“அரசியல்வாதிகளே எம்மை ஏமாற்றாதீர்”: பருத்தித்துறையில் வியாபாரிகள் போராட்டம்

 

 
 

தற்போது மேல்மாடியில் இயங்கி வரும் பருத்தித்துறை மரக்கறிச்சந்தையைப் பொருத்தமான இடத்திற்கு மாற்றித்தரக் கோரி பருத்தித்துறைச் சந்தை வியாபாரிகள் நேற்றைய தினம் தமது வியாபார நடவடிக்கைகளைக் நிறுத்தி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

01__1_.jpg

குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள் “அரசியல்வாதிகளே எம்மை ஏமாற்றாதீர்”, “நகரசபையே தேர்தல் நேர வாக்குறுதிகளை நிறைவேற்று”, “நகரசபையே வியாபாரிகளின் கோரிக்கையை நிறைவேற்று”, “மரக்கறிச் சந்தையை கீழ்த்தளத்திற்கு மாற்று”, “வியாபாரிகளின் பிழைப்பில் மண் போடாதே” உள்ளிட்ட பல்வேறு சுலோகங்களைத் தமது கைகளில் தாங்கிக் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

01__2_.jpg

இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட சந்தை வியாபாரிகள் கருத்துத் தெரிவிக்கையில்,

பருத்தித்துறை நகரின் மத்தியில் அமைந்துள்ள நகரசபையின் கட்டடத்தில் இரண்டாவது மாடியில் தற்போது மரக்கறிச்சந்தை இயங்கி வருகின்றது. இம் மரக்கறிச்சந்தை மேற்தளத்தில் இயங்குவதால் பொதுமக்கள் இலகுவாக வந்து பொருட்களை கொள்வனவு செய்வதில் பாரிய சிரமங்கள் ஏற்படுகின்றன.

இதனால், எமது வியாபாரநடவடிக்கைகள் மிகவும் குறைவடைந்து விட்டன. எமது பொருட்களை மேற்தளத்திற்கு கொண்டுசெல்வதில் தொடர்ச்சியாக சிரமங்களை எதிர் கொள்கிறோம்.

01__3_.jpg

இவ்விடயங்கள் சம்பந்தமாக கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளும் மரக்கறிச்சந்தையை மேற்தளத்தில் இருந்து மாற்றுவதாக உறுதி அளித்தன.

ஆனால், நகரசபையில் ஆட்சியை அமைத்த பின் எமது கோரிக்கைகளை பல்வேறுபட்ட காரணங்களைக் கூறி உதாசீனம் செய்வதோடு எமக்கு ஒரு தீர்வைப் பெற்றுத்தரவும் எவ்வித முயற்சியும் எடுப்பதாகவும் தெரியவில்லை.

01__4_.jpg

எனவே, எமது மரக்கறிச்சந்தையை பொருத்தமான இடத்திற்கு மாற்றித்தரக் கோரி  எமது வியாபார நடவடிக்கைகளை நிறுத்திப் பகிஸ்கரிக்கிறோம்.

01__5_.jpg

எமது கோரிக்கை நிறைவேற்றப்படாது விடின்,எதிர்காலத்திலும் எமது போராட்டம் தொடரும் என்பதை அதிகாரிகளிற்கும்,அரசியல் கட்சிகளிற்கும் அறியத் தருகின்றோம் என்றனர்.

http://www.virakesari.lk/article/40220

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.