Jump to content

வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு மேலும் 20 கோடி ரூபாவை வழங்கியது ஜப்பான்


Recommended Posts

வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு மேலும் 20 கோடி ரூபாவை வழங்கியது ஜப்பான்

 

இலங்கையின் வட பகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் பணிகளை முன்னெடுப்பதற்காக ஸ்கவிடா மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணத் திட்டம் SKAVITA Humanitarian Assistance and Relief Project (SHARP) மற்றும் கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழு Mines Advisory Group (MAG)  ஆகியவற்றுக்கு மொத்தமாக 1,249,997 அமெரிக்க டொலர்களை ( ஏறத்தாழ  20 கோடி இலங்கை ரூபா) வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான மானிய ஒப்பந்தத்தில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி சுகனுமா, SHARP அமைப்பின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஓய்வுபெற்ற லெப். கேணல் வீ.எஸ்.எம்.சரத் ஜயவர்தன மற்றும் MAG அமைப்பின் தொழில்நுட்ப நடவடிக்கை முகாமையாளர் ரொவ்னான் பெர்ணான்டஸ் ஆகியோர் இன்று முற்பகல் கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகத்தில் கைச்சாத்திட்டனர்.

unnamed-2-428x285.jpg

இந்த மானிய ஒப்பந்தத்திலிருந்து SHARP அமைப்பு 625,000 அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்ளும் அதேவேளை MAG அமைப்பு 624,997 அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்ளும். கண்ணிவெடிகளால் சூழப்பட்ட பகுதிகளை பாதுகாப்பானதாக மாற்றி இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்பதற்கு வழிசெய்து வட பிராந்தியத்தில் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இந்த இரு திட்டங்களும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அடிமட்ட மனிதப் பாதுகாப்பு திட்ட மானிய உதவிகளின்Grassroots Human Security Project (GGP) மூலமாக இதுவரையில் 33 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (535 கோடி இலங்கை ரூபாவிற்கும்) அதிகமான தொகையை வழங்கியுள்ளதன் மூலமாக 2003ம் ஆண்டு முதலாக இலங்கையில் கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகளுக்கு பெரும் அன்பளிப்பை வழங்குகின்ற நாடாக ஜப்பான் திகழ்கின்றது. 2020ம் ஆண்டாகும் போது கண்ணிவெடியின் தாக்கம் அற்ற நாடாக மாற்றும் இலங்கை அரசாங்கத்தின் இலக்கின் அடிப்படையில் இடம்பெயர்ந்தவர்களின் மீளக் குடியமர்வு விவசாய நடவடிக்கைகள் மற்றும் ஏனைய வாழ்வாதாரச் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கும் துரிதப்படுத்தி வசதிவாய்ப்புக்களை முன்னெடுப்பதற்கும் இந்தப் பங்களிப்பு துணைபுரிந்துள்ளது.

unnamed-3-428x285.jpg

இந்த மானிய உதவி குறித்து ஒய்வுபெற்ற லெப். கேணல் வீ. எஸ்.எம். சரத் ஜயவர்த்தன கருத்து வெளியிடுகையில், “2014ல் SHARP நிறுவனம்  உருவாக்கப்பட்டதுடன் இலங்கையில் கண்ணிவெடியகற்றலை முன்னெடுக்கும் இரண்டாவது உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனம் ஆக விளங்குகின்றது. இன்றைய தினம் GGP நிதியுதவி SHARP அமைப்பிற்கு 3வது ஆண்டாக தொடர்ச்சியாக வழங்கப்படுவதை குறித்து நிற்கின்றது. SHARPஎமது கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு உதவிகளை வழங்கி ஊக்குவித்து வருவதற்காக ஜப்பானிற்கு நாம் நன்றிக் கடன் பட்டுள்ளதுடன் உண்மையிலேயே பெரிதும் பாராட்டுதல்களைத் தெரிவிக்கின்றோம்.

இந்தவேளையில் எமது அனுசரணையாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய வகையில் SHARP அதன் நடவடிக்கைகளை விடாமுயற்சியுடனும் வினைத்திறனுடனும் காத்திரமான வகையிலும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் என நான் எமது அனுசரணையாளர்களுக்கு உறுதியளிக்கின்றேன்” என்றார்.

MAG அமைப்பைச் சேர்ந்த ரொவ்நன் பெர்ணான்டஸ் கூறுகையில் “இலங்கையிலும் உலகின் பல பாகங்களிலும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகளுக்கான பெறுமதிமிக்க நன்கொடையாளராக விளங்குகின்ற ஜப்பானிய அரசாங்கத்திடம் இருந்து இந்த மானிய நிதியை பெற்றுக்கொள்வதையிட்டு MAGகௌவரமடைகின்றது.

கடந்த நான்கு வருடங்களில் மாத்திரம் ஜப்பானிய அரசாங்கத்திற்கும் MAG SRILANKA அமைப்பிற்கும் இடையிலான கைகோர்ப்பின் மூலமாக 11000 ற்கு மேற்பட்ட நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதும் அழிப்பதும் சாத்தியமாகியுள்ளது. இதன் மூலம் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மீளக் குடியேறுவதற்கும் தமது வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் மீளக் கட்டியெழுப்புவதற்கும் துணைபுரிந்துள்ளது.

இந்தப் புதிய திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும் அதேவேளை வவுனியா மாவட்டத்தில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டை ஆரம்பிக்க MAG எதிர்பார்த்துள்ளது. ஜப்பானிய மக்களின் நிதியுதவியானது மக்களின் உயிர்களைக் காப்பதற்கு மட்டுமன்றி நாட்டிலுள்ள மிகவும் வறிய சமூகங்கள் மத்தியிலும் அதிகமாக கண்ணிவெடியினால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியிலும் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கும் பங்களிக்கும் இந்த தொடர்ச்சியான ஜப்பானிய ஒத்துழைப்பின் மூலமாக 2020ம் ஆண்டில் இலங்கையை கண்ணிவெடிகளின் தாக்கம் அற்ற நாடாக மாற்றும் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பிற்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்க MAG எதிர்பார்த்துள்ளது” எனத் தெரிவித்தார்.

http://athavannews.com/வடக்கில்-கண்ணிவெடி-அகற்ற/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வழக்கமான முட்டுக்கொடுத்தல் இங்கு செல்லாது வழக்கம்போல் கருத்தை எதிர்மறையாக காட்டுவது உங்கள் இயல்பு இது மீராவுக்கு  புரியும் கோசனின் மெயில் ஐடியில் போர்ட்கிள்றது உண்மைகளை சொன்னால் பயந்து ஓடுவது பின் நேரம் கிடைக்கும்போது தலையில் குத்துவது  இது உங்கள் வளமை நான்  எதுக்கும் பயல்வது இல்லை .வெயிட்டிங் ....... உங்கள் ஐடியில்  வந்து ஜெயவாவோ கோசம் போடக்கூடாது இந்த யாழில் அவ்வளவுதான் நான் வருவேன் .
    • ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா?  தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை.  இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.    வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 
    • பெரும்ஸ் @பெருமாள் கடைசியாக சொல்கிறேன். (முன்பும் பல தடவை சொல்லியுள்ளேன்). உண்மையில் ஒரு சகோதரன் போலவே இதை சொல்கிறேன். கருத்துக்களம், திண்ணை இவையிரண்டை தவிர நான் உங்களோடு வேறு எங்கும் தொடர்பு கொண்டதேயில்லை. யாரோ நான் என சொல்லி உங்களை சுற்றுகிறார்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள். இப்படி செய்பவர்களுக்கு - தயவு செய்து இந்த கறுமத்தை செய்யாதீர்கள்.  இது உண்மையிலேயே ஒரு வகை cyber bullying. உங்களுக்கு இது விளையாட்டாக இருக்கலாம். அவருக்கு அப்படி இல்லை. ————— பெருமாள் - அனைவரினதும் நன்மைக்காக உங்களை கொஞ்ச காலம் எனது இக்னோர் லிஸ்டில் சேர்க்கப்போகிறேன்.  மிகுந்த மன வருத்தத்துடன் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இது தற்காலிகமானது என நம்புகிறேன். உங்களை சீண்டி விளையாடுவது நான் இல்லை என்பதை விளங்கப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் உங்களோடு கருத்தே பரிமாறாமல் இருக்க, தொடர்ந்தும் உங்களை யாராவது நான் என சொல்லி சீண்டினால் - அது நானாக இருக்க வாய்ப்பில்லை என புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.  
    • மன்னிக்கவும் அதன் பின் ஜெர்மன் காரன் மொசுக்கர் என்ற சுப்பர் அவதாரம் நன்றாக வேலை செய்தது .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.