Jump to content

மாலைதீவிலிருந்து அவுஸ்திரேலிய செல்ல முயன்ற 88 இலங்கையர்கள் கைது


Recommended Posts

மாலைதீவிலிருந்து அவுஸ்திரேலிய செல்ல முயன்ற 88 இலங்கையர்கள் கைது

 

 
 

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் மாலைதீவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த 88 பேர் சர்வதேச கடற் பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ship.jpg

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று கொழும்பு, ரங்கல கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இலங்கையில் இருந்து விமானமூலம் மாலைதீவிற்கு சென்று அங்கிருந்து அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் கடலில் சென்ற இவர்களை நேற்று திங்கட்கிழமை, அதிகாலை சர்வதேச கடற்பரப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. 

http://www.virakesari.lk/article/40181

Link to comment
Share on other sites

கடலில் வைத்து கைதுசெய்யப்பட்ட 90 பேரும் ரீயூனியன் தீவுக்கு சட்ட விரோதமாக சென்றவர்கள்

 

 
 

நீர் கொழும்பு வென்னப்புவ கடல்பகுதியில் இருந்து ரீயூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட பெண் ஒருவர் உட்பட 90 இலங்கையர்களை நீர்கொழும்பு மேற்கு கடற்பகுதியில்  இலங்கை கடற்படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். 

5.jpg

இதில் கைதுசெய்யப்பட்டவர்களை கொழும்பு ரங்கல கடற்படை முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். இதில் மட்டக்களப்பு, தொடவாவ, உடப்பு ,அம்பாறை, மன்னார் , சிலாபம் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இதில் 66 தமிழர்கள், 22 சிங்களவர்கள், 2 முஸ்லீம் உட்பட 90 பேர் படகில் பயணம் செய்துள்ளனர்.

3__1_.jpg

இவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு செல்வதற்காக தலா 3 இலட்சம் ரூபா பணத்தை முகவர் ஒருவரிடம் வழங்கியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களை இன்று புதன்கிழமை கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை ரீயூனியன் தீவு என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு பிரெஞ்சுத் தீவு என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/40258

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

கடலில் வைத்து கைதுசெய்யப்பட்ட 90 பேரும் ரீயூனியன் தீவுக்கு சட்ட விரோதமாக சென்றவர்கள்

 

இதேவேளை ரீயூனியன் தீவு என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு பிரெஞ்சுத் தீவு என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/40258

 

இந்த செய்தியை படிக்க வியப்பாக இருந்தது. முன்பு இதே வென்னப்புவயில் இருந்து படகு மூலம் பலர் இத்தாலிக்கு செல்வார்கள். 90களில் எனக்கு வழமையாக முடி வெட்டும் சலூன் நண்பரும் இவ்வாறே சென்றார். 

இந்தக்கூட்டத்த‌தை பார்த்தால் பெரியளவு படிக்காதவர்கள் என்றே தெரிகின்றது. 
இவர்களுக்கு எப்படி தெரியும் தமிழர்கள் வாழும் ரியூனின் தீவு ப்ரான்ஸ்ஸிற்கு சொந்தமானதென்று? இங்கு சென்று அகதி அந்தஸ்து கோரினால் அதை ப்ரான்ஸ் அரசாங்கமே கையாளும், இறுதியில் ப்ரான்ஸ் குடியுரிமை கிடைக்கும்.

ஆகவே நிச்சயமாக இவர்களுக்கு பின்னால் படித்த பல்வேறு சட்டத்தில் உள்ள் ஓட்டைகள் தெரிந்த மாபியா கும்பல்கள் இயங்குகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.