Jump to content

எண்பதுகளில் சண்டை


Recommended Posts

எண்பதுகளில் சண்டை
காரை துர்க்கா /

“அடம்பன் கொடியும் கொடியும் திரண்டால் மிடுக்கு”, “வேற்றுமையிலும் ஒற்றுமை காண்போம்”, “ஒற்றுமை இன்றேல் உயர்வு இல்லை” எனப் பல பொன்மொழிகள் தமிழில் வழக்கில் இருக்கின்றன. ஆனால் இவை, தமிழ் மக்கள் (நல்)வாழ்வில் புழக்கத்தில் இல்லை. 

நல்வாழ்வுடன் உள்ள ஒருவர், சிறந்த மனவெழுச்சி சமூக நல்வாழ்வைக் கொண்டிருப்பதுடன், வாழ்வில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல்களையும் கொண்டிருப்பார். ஆனால், இவ்வாறான சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியாமலும் முறியடிக்க முடியாமலும், தமிழ்ச் சமூகம் திணறுகின்றது. 

இதற்குக் காரணமாக, தமிழ் மக்கள், அரசியல் அனாதைகளாக்கி உள்ளமையைக் குறிப்பிடலாம். கோர யுத்தம், தமிழ் மக்களில் பலரை, யாருமற்ற அனாதைகள் ஆக்கியது. அதுவே, முழுத் தமிழர்களையும் அரசியல் அனாதைகள் ஆக்கிவிட்டது. ஈழத் தமிழ் மக்களது நிம்மதியான சுதந்திர வாழ்வு, காலதாமதமாகிக் கொண்டே செல்கின்றது.

இதற்குப் பல காரணங்கள் காணப்பட்டாலும், தமிழ் மக்களிடையே (அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே) ஒற்றுமை இன்மையை முதன்மைக் காரணங்களில் ஒன்று எனக் கூறலாம். 

“எண்பதுகளில் எங்கட இயக்கங்களுக்கிடையே ஒற்றுமை இருந்திருந்தால், அப்பவே சுலபமாக அடிச்சுப் பிடிச்சிருக்கலாம்.” இது எனது நண்பர் ஆழ்ந்த கவலையோடும் ஏக்கத்தோடும் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தைகள்.

இது எப்படிச் சாத்தியமாகும்? ஈழத் தமிழ் மக்களது வாழ்வியல், இன்று பல கோணங்களிலும் பல்வேறுபட்ட நெருக்கடிகளைச் சந்தித்து நிற்கின்றது.  இந்த நேரத்தில் கூட, எண்பதுகளைத் தாண்டிய எண்பதுகளை அண்மித்த ஈழத் தமிழ் மக்களது அரசியல் தலைவர்களுக்கிடையே, ஒற்றுமையைக் காண முடியவில்லை. 

தமிழ் மக்களை ஒற்றுமையாக வழிநடத்த வேண்டிய சிரேஸ்ட அரசியல் தலைவர்களுக்கிடையே முரண்பாடுகளும் முறுகல்களும் நிறைந்து உள்ளன. அவர்கள், பொது வெளியில் மற்றவர்களை போட்டுத் தாக்குவதும் ஏட்டிக்குப் போட்டியாக அம்புகளை எய்துதலும், வழமையான நிகழ்வு என்றாகிவிட்டது. 

இந்நிலையில், இளமையுடன் கூடிய வீரம் பொருந்திய இருபது வயதுகளில், கையில் நெருப்பைக் கக்கும் துப்பாக்கிகளுடன் வலம் வந்த இளைஞர் (இயக்கங்)களுக்கிடையே, எப்படி ஒற்றுமை ஏற்படும்? அக்காலத்தில் ஒற்றுமை தோன்ற மறுத்தமையினாலேயே, பல இயக்கங்கள் தோன்றின. முரண்பாடுகளும் கூடவே தோன்றின. அவற்றின் தொடர்ச்சியாக, தங்களுக்குள் வேட்டுகள் தீர்க்கப்பட்டன. இன்னுயிர்கள் இரையாக்கப்பட்டன. உயர் மனிதங்கள் மரணித்தன. உடல்கள் எரிக்கப்பட்டன, புதைக்கப்பட்டன.

இவ்வாறாக இழந்தவைகள் ஏராளம். இவை, ஈழத் தமிழ்ச் சமூகம் சந்தித்த ஆறா(காயா)த வடுக்கள். ஆழமான அன்பான புரிந்துணர்வு இன்மையால், எமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட 
அலங்கோ(அவ)லமான துன்பியல் நிகழ்ச்சிகள். மனம், வன்மம் பெற்றமையால், வன்முறை நடைமுறை ஆகியது. 

ஆனாலும், எதிரிக்குக் கூட ஏற்படக்கூடாத இழப்புகளைச் சந்தித்த பின்னரும், தற்போது கூட தமிழ்த் தலைவர்களுக்கிடையே ஒற்றுமை என்பது, கானல் நீராகவே உள்ளமை சாபக்கேடாகும். அவர்களது நோக்கிலும் போக்கிலும், நாக்கிலும், தமிழ் மக்களுக்கு விடியலைத் தரக்கூடிய மாற்றங்களைக் காண முடியவில்லை.

அத்துடன், இவ்வாறான நிலையைத் தொடர்ந்தும் பேண அல்லது இதிலும் பாதகமான நிலையை ஏற்படுத்த, பேரினவாதம் கடுமையாக உழைக்கின்றது. இந்த வரிசையில், தற்போது பேசப்படுகின்ற பனிப்(போராக) எதிர்க்கட்சித் தலைவர் - வடக்கு மாகாண முதல்வர் (சம்பந்தன் - விக்னேஸ்வரன்) விவகாரம் உள்ளது.

2013ஆம் ஆண்டில், சம்பந்தனாலேயே விக்னேஸ்வரன் அழைத்து வரப்பட்டார். இந்த அண்ணளவாக உள்ள ஆறு ஆண்டுக் காலப்பகுதியில், ஆறு தடவைகளாவது இவர்கள் ஆற அமர்ந்திருந்து, தமிழர் அரசியல் பற்றிப் பேசியிருப்பார்களோ தெரியவில்லை. 

நீண்ட காலமாவே, சம்பந்தன் - விக்னேஸ்வரன் உறவு, தாமரை இலையின் நீர் போலவே இருந்து வந்துள்ளது. ஆனால், இவர்களுக்கான உறவு, நிலத்துக்கும் நீருக்கும் உள்ள உறவு போலவே இருந்திருக்க வேண்டும். அவ்வாறான உறவு இருந்திருந்தால், தமிழ் மக்களுக்கான பல அனுகூலங்களை அனுபவித்து இருக்கலாம். 

கூட்டமைப்பின் தலைமை தோல்வி அடைந்து விட்டதென விக்னேஸ்வரன் கூறியமை, நேரடியாகச் சம்பந்தனையே நோ(தா)க்குகின்றது. உண்மையிலேயே, இன்று வரை கூட்டமைப்பின் தலை(வர்)மை என்பது, ஒற்றைச் சொல்லில் சம்பந்தன் அவர்கள் மட்டுமே குறிக்கின்றது. 

இந்தச் செய்தியைச் சொல்ல விரும்பின், கூட்டமைப்புத் தலைமை, தோல்வி அடைந்துவிட்டது எனக் கூறாது, கூட்டமைப்பின் தலைமையால், தமிழ் மக்களது வெற்றியை வென்றெடுக்க முடியவில்லை என்றாவது, விக்னேஸ்வரன் கூறியிருக்கலாம்.

இந்நிலையில், கூட்டமைப்புத் தலைமை தோல்வி அடைந்து விட்டதென விக்னேஸ்வரன் வெளியில் கூறியமையானது, ஏற்கெனவே உள்ள சம்பந்தன் - விக்னேஸ்வரன் இடைவெளியை, மேலும் அதிகரிக்கவே வழிசமைத்திருக்கிறது. இவ்விருவருக்குமான இடைவெளியை அதிகரிக்க வேண்டுமெனக் காத்திருந்தவர்களுக்கு, பழம் நழுவிப் பாலில் வீழ்ந்த மாதிரியாகி விட்டது. 

அதேவேளை, விக்னேஸ்வரனைத் தபால்காரர் என, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியமை கூட, ஆரோக்கியமான அரசியல் போக்கு அல்ல. ஏனெனில், சுமந்திரன் தனியே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லர். மறுபுறத்தே, கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஆவார். ஆகவே, இக்கருத்து சுமந்திரனின் தனிப்பட்ட கருத்தல்லாமல், கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ கருத்து போலவும் ஆகிவிடும்.

இதற்கடையில், கூட்டமைப்பு கூட்டமைப்பு எனக் கூறினாலும், இக்கருத்து தனியே தமிழரசுக் கட்சியின் கருத்தாகவே இன்னொரு பக்கத்தால் பார்க்கப்படுகின்றது. 

விக்னேஸ்வரனுக்கு எதிரான இவ்வாறான கருத்துச் சமர்களை, சுமந்திரன், நீண்ட காலமாகவே தொடர்ந்து நடத்தி வருகின்றார். ஆகவே இது, கூட்டமைப்புக்கும் வடக்கு முதல்வருக்குமான உறவில் விரிசல்களை ஏற்படுத்தி வருகின்றதென்பதை எடுத்துரைக்கிறது.

தமிழர் அரசியலைப் பாதுகாக்கும் பொருட்டு, சுமந்திரனின் இச்செயலை, சம்பந்தன் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். தொடர்ந்து அனுமதித்து அழகானதல்ல. 

இல்லையெனில், இரண்டு விதமாக ஊகங்கள் தோன்றலாம். முதலாவது, சம்பந்தனின் அறிவுறுத்தலை அலட்சியம் செய்து, விக்கி மீதான விமர்சனத்தைத் தொடருதல்.

இரண்டாவது, சம்பந்தனின் அனுமதியுடன், விக்கி மீதான விமர்சனத்தைத் தொடருதல்.

ஆனாலும், விக்கி மீதான விமர்சனத்தை, சுமந்திரன் தொடங்கிவிட்டார். ஆகவே தொடருகின்றார்.

எது எவ்வாறாக இருந்தாலும், இவ்வாறான நெருக்கடியான வேளையில், வேண்டப்படாததும் விரும்பப்படாததுமான விமர்சனங்கள், தமிழ் மக்களுக்கு, எக்காலத்திலும் ஆக்கபூர்வமான விளைவுகளைத் தரப்போவதில்லை. 

அடுத்து, விக்னேஸ்வரனும் சுமந்திரனும், குருவும் சீடனும் ஆவர். இது நிற்க, சம்பந்தன்னே, விக்னேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்கும் அரசியல் வழிசமைத்தார். இன்று, இவர்கள் இருவருமே சம்பந்தனுக்கு அரசியல் வலியைக் கொடுத்துள்ளனர். 

ஆகவே, இவர்களது இந்தத் தொடர்பறுந்த நிலை மேலும் அதிகரிக்க. தமிழ் மக்கள் அனுமதிக்கக் கூடாது. ஏனெனில், இது ஊரில் கந்தசாமிக்கும் வேலுப்பிள்ளைக்கும் இடையிலான சராசரி முரண்பாடு அல்ல. மிழ் மக்களது தலைவிதி சம்பந்தப்பட்ட விடயம் ஆகும்.

தற்போதைய தமிழ் மக்களது பலவீனமான அரசியலை, இது மேலும் பழுதாக்கி விடும். இவர்கள், சட்டம் கற்றவர்கள். தத்தமது பக்கங்களில் நியாயம் உள்ளதென, மக்களுக்கு விளக்கம் தருவார்கள். தருகின்றார்கள்.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், யாரின் பக்கம் நியாயம், யாரின் பக்கம் அநியாயம் என்பதற்கு அப்பால், இவர்களது பிடுங்குப்பாட்டால், தங்களுக்கு அநியாயம் நடந்துவிடுமோ என அச்சப்படுகின்றார்கள். 

கூட்டமைப்பு, பல காரணங்களைக் கூறி விக்கினேஸ்வரனை கூட்டமைப்பி(கூட்டி)லிருந்து கலைக்கலாம். அவை, கூட்டமைப்பின் தரப்பிலிருந்து நோக்குகையில் சரியானவையாகவும் இருக்கலாம்.

ஆனால்,  வெளியே(ற்றப்பட்ட)றிய விக்கினேஸ்வரன், மீண்டும் தேர்தலில் களமிறங்கலாம். அவ்வாறு அவர் தேர்தலில் கூட்டமைப்புக்கு எதிராக மோதும் போது, மீண்டும் கூட்டமைப்பின் வாக்குகளே சிதறும். இடையில் போட்டியிட்ட ஏனைய தரப்புகள், உதிரிகளாக வாக்குகளைப் பெறுவர். ஆசனங்களை அலங்கரிப்பர். பலமான ஆளும் தரப்பாகக் கூட்டமைப்பு வருவதற்கான வாய்ப்புள் அருகும். தமிழர்களது அபிவிருத்தியும் அரசியலும் கருகும். இவ்வாறான நிலையை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் பேரினவாதம், துள்ளிக் குதிக்கும்.

ஆகவே,  தமிழ்த் தலைவர்களிடையே காணப்படுகின்ற ஒற்றுமையின்மையை, கடந்த காலங்களில் பயன்படுத்தி சுவை கண்ட பேரினவாதம், மீண்டும் சுவைக்க வலை விரித்துள்ளது. விழத் தயாராகின்றார்களா? அல்லது சுதாகரிப்பார்களா? காலமே பதில் 
சொல்லும். 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/எண்பதுகளில்-சண்டை/91-221529

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.