Jump to content

நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என தீர்மானம்


Recommended Posts

நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என தீர்மானம்

 

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

nallur-pradesa.jpg?resize=780%2C405
நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் செவ்வாக்கிழமை சபை மண்டபத்தில் நடைபெற்றது,

 

அதன் போது ஆளும் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் கு. மதுசுதன், சைவ சமய விழுமியங்களை பேணும் வகையில், பசுவதைகளை தடை செய்யும் முகமான பிரதேச சபை எல்லைக்குள் மாட்டிறைச்சி கடைகளை தடை செய்ய வேண்டும். அத்துடன் சபையினால் குத்தகைக்கு வழங்கப்பட்ட மாட்டிறைச்சி கடைகளை, மாட்டிறைச்சி விற்பனை கடையாக குத்தகைக்கு கொடுக்க கூடாது. என சபையில் தீர்மானத்தை முன் வைத்தார்.

குறித்த தீர்மனத்தை சபை உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டதை அடுத்து தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டது.

http://globaltamilnews.net/2018/95158/

Link to comment
Share on other sites

மாட்டிறைச்சி கடைகளை மூட மேற்கொள்ளும் நடவடிக்கையில் பெரும் சந்தேகம்

 
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
Nilam.jpg?resize=800%2C600
மாட்டிறைச்சி கடைகளை மூட  மேற்கொள்ளும் நடவடிக்கையில் பெரும் சந்தேகம் நிலவுகிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் குறிப்பிட்டார். நல்லூர் பிரதேச சபையில் இன்று (11)  மாட்டிறைச்சி கடைகளை தடை செய்வது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பிலையே அவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
 
மாட்டிறைச்சியை முஸ்லீம் மக்கள் அதிகமாக நுகர்வதை யாவரும்.அறிவர்.யாழ்ப்பாணத்தை பொறுத்தமட்டில் அநேகமான இறைச்சிக்கடைகளை குத்தகை அடிப்படையில் பெற்று நடாத்துவது முஸ்லீம் மக்களாகும்.இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த கடைகளை மூட எத்தனிப்பது எவ்விதத்திலும் நியாயம் ஆகாது.யாழ்ப்பாண முஸ்லீம்கள் யுத்தத்தின் பின்னர் மீள்குடியேறி தற்போது சுமூக வாழ்வை தொடர்கின்றனர்.ஆனால் இந்த நடவடிக்கை அவர்களது தொழிலுரிமையை பாதிக்கின்றது.அவர்களின் குடும்பங்களின் வயிற்றில் அடிக்கின்றது.
 
யாழ்ப்பாண மாநகர சபை நல்லூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட 30க்கும் அதிகமான மாட்டிறைச்சி கடைகளில் 20 கடைகளை முஸ்லீம்களே நடாத்தி வருகின்றனர் என தெரிவித்தார்

http://globaltamilnews.net/2018/95187/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம் அடிப்படைவாதிகளால் பாதிக்கபட்ட அடக்கி ஒடுக்கபட்ட முஸ்லிம் மதத்தை சேர்ந்த நல்ல உள்ளம் கொண்டோரும் இருக்கின்றனர். இஸ்ரேலின் மீதான முல்லாக்களின் தாக்குதலை விரும்பாத ஈரானியர்கள் வெளிநாட்டில் இருக்கின்றனர் அவர்களை விடுவோம் ஈரானிலும் எல்லோ இந்த தாக்குதலை விரும்பாத ஈரானியர்கள் இருக்கின்றனர் .ஆனால் நீங்கள் குறிப்பிட்ட இலங்கை  தமிழ் நாட்டு முஸ்லிம்களுக்கு முல்லாக்களின் இந்த தாக்குதல் இஸ்ரேலின் அழிவு ஆரம்பம் முஸ்லிம்களின் வெற்றி  என்று கற்பனை செய்து வெற்றி கொண்டாட்டம் தானே
    • தாய்வானில் கூட நான் சீனாவை குறை சொல்ல மாட்டேன். நாடு முழுவதும் மாவோவின் கீழ் வீழ - எஞ்சிய முதாளிதுவ தீவு அது. அதை கேட்பது ஒரு வகையில் நியாயமே. திபெத், உகிர் அட்டூழியங்கள் மிக மோசமனாவை. ஆனால் உலக அளவில் ? ஆதிக்க விரிப்பு, வர்த்த ஆளுமை - எல்லாரும் செய்ய முனைவதுதானே? அது பொருட்டே இல்லை. விலை ஒன்றே கருதுபொருள்.
    • அதுதானே உலகத்திலை இல்லாத பிரச்சனையா சிலோனிலை இருக்குது? மிண்டு கொடுத்து வாழ்பவர்களுக்கு சகலதும் சகஜம்.😂 இலங்கையில் எவ்வித பிரச்சனையுமே இல்லை என நிறுவ ஒரு கூட்டம் யாழ் இணையத்தில் உள்ளது யாவரும் அறிந்ததே.🤣
    • நீங்கள் விரைந்து குணம் பெற எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறோம். அத்தோடு வைத்திய ஆலோசனைகளை சரியாக பின்பற்றத் தவற வேண்டாம்.. அதேவேளை வைத்தியர்களின் அலோசனைக்கு ஏற்ப உடல் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவில்லை என்றால்.. உடல் உளம் சொல்வதை வைத்தியரிடம் சொல்லாமல் இருப்பதையும் செய்ய வேண்டாம். 
    • இல்லை பொதுவாக வில்லனும் வில்லனும் ஒன்றாவது சகஜம்தானே. அமெரிக்காவுக்கு சோவியத் காலம் தவிர ரஸ்யா வேறெப்போதும் எதிரி இல்லைத்தான்.  ஆனால் கிழக்கு ஐரோப்பிய சிறிய தேசிய இனவழி நாடுகள், பின்லாந்து இவையின் நிலமை எப்போதும் முதலை குளத்தில் நீர் அருந்தும் மான்களின் நிலைதான். ரஸ்யாவில் ஒரு பீட்டர் த கிரேட், அல்லது அவன் த டெரிபிள், அல்லது கத்தரீன் த கிரேட், அல்லது ஸ்டாலின், அல்லது புட்டின் இருந்தால் இவர்கள் இரையாவது நிச்சயம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.