Jump to content

இத­ய­சுத்­தி­யு­ட­னான நட­வ­டிக்­கையே அர­சியல் தீர்­வுக்கு வழி­வ­குக்கும்


Recommended Posts

இத­ய­சுத்­தி­யு­ட­னான நட­வ­டிக்­கையே அர­சியல் தீர்­வுக்கு வழி­வ­குக்கும்

 

அர­சியல் தீர்வின் அவ­சியம் குறித்து தமிழ் தரப்­பி­னரால் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­ற­போ­திலும் இன்­னமும் உறு­தி­யான தீர்வைக் காண்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை. நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­றதன் பின்னர் புதிய அர­சியல் யாப்­பினை உரு­வாக்­கு­வதன் மூலம் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. ஆனாலும் இந்த முயற்சி விட­யத்­திலும் தொடர்ச்­சி­யான இழு­பறி நிலை காணப்­பட்டு வரு­கின்­றது.

2016ஆம் ஆண்டு இறு­திக்குள் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­படும் என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் நம்­பிக்கை தெரி­வித்­தி­ருந்தார். நல்­லாட்சி அர­சாங்கம் அர­சி­யல்­ தீர்­வுக்­கான உறு­தி­யான நட­வ­டிக்­கை­யினை எடுக்கும் என்ற நம்­பிக்­கை­யி­லேயே அவர் இத்­த­கைய கருத்­தினை தெரி­வித்­தி­ருந்தார்.

ஆனால் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வைக்­காணும் நட­வ­டிக்­கைகள் தற்­போது மந்­த­க­தியில் இடம்­பெற்று வரு­வ­தனால் சர்­வ­தேச பிர­தி­நி­தி­களை சந்­திக்­கும்­போது அர­சி­யல்­தீர்வின் அவ­சியம் குறித்தும் அதன் கால­தா­மதம் தொடர்­பிலும் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் தொடர்ச்­சி­யாக எடுத்­து­ரைத்து வரு­கின்றார்.

ஐக்­கி­ய­நா­டு­களின் இலங்­கைக்­கான புதிய வதி­வி­டப்­ பி­ர­தி­நி­தி­யான ஹனா சிங்­க­ருக்கும் எதிர்க்­கட்சித் தலை­வ­ருக்­கு­மி­டையில் கடந்த சனிக்­கி­ழமை விசேட சந்­திப்பு இடம்­பெற்­றி­ருந்­தது. இந்த சந்­திப்­பின்­போது கருத்­து­ரைத்த எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் அர­சி­யல்­தீர்வின் மூலம் ஒரு ­நி­லை­யான சமா­தா­னத்­தினை ஏற்­ப­டுத்தத் தவறும் பட்­சத்தில் இந்­த­ நாட்­டுக்கு எதிர்­காலம் இல்லை. ஐ.நா. பிரே­ர­ணையை முழு­மை­யாக நிறை­வேற்­ற­வேண்­டிய கட்­டா­யப்­பொ­றுப்பு அர­சாங்­கத்­திற்கு உள்­ளது என்று வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார்.

கடந்­த­ கா­லங்­களில் இடம்­பெற்ற வன்­மு­றைகள் மீண்டும் இந்­த­நாட்டில் இடம்­பெற அனு­ம­திக்க முடி­யாது. அதனை உறு­தி­செய்­வ­தற்­காக ஒரு புதிய அர­சி­யல்­யாப்பு அவ­சி­ய­மாகும். அதி­கா­ரப்­ப­கிர்­வு­தொ­டர்பில் தமிழ் மக்­களின் கோரிக்­கை­யா­னது நியா­ய­மா­னது மட்­டு­மன்றி அது சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கும் உட்­பட்­ட­தாகும். தமிழ் மக்கள் கடந்­த­ கால தேர்­தல்­களில் ஒரு­மித்த பிரிக்­கப்­பட முடி­யாத இலங்­கைத்­தீ­விற்குள் அர­சி­யல்­தீர்­வொன்றை அடை­வ­தற்கு தமது அங்­கீ­கா­ரத்தை வழங்­கி­யுள்­ளார்கள். மக்­களின் இந்த ஜன­நா­யகத் தீர்ப்­பினை மதிக்­க­வேண்­டிய கடப்­பாடு அர­சாங்­கத்­திற்கு உள்­ளது என்று இந்த சந்­திப்பில் சம்­பந்தன் எடுத்­து­ரைத்­துள்ளார்.

இத­னை­விட புதிய அர­சியல் யாப்பு தொடர்பில் இந்த அர­சாங்கம் பத­வி­யேற்­ற­பின்னர் முன்­னெ­டுக்­கப்­பட்ட கரு­மங்கள் ஒரு ­சா­த­க­மான முடி­வினை எட்­ட­வேண்டும். அர­சியல் தீர்­வின்­மூலம் ஒரு­நி­லை­யான சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்தத் தவ­றும்­பட்­சத்தில் இந்த நாட்­டுக்கு எதிர்­காலம் இல்லை. முன்­னைய அர­சாங்­கத்­துடன் ஒப்­பி­டு­கையில் இந்த அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு மற்றும் நட­வ­டிக்­கை­களில் மாற்­ற­முள்­ளது. எனினும் மக்கள் எதிர்­பார்த்த அளவில் கரு­மங்கள் இடம்­பெ­ற­வில்லை. காணாமல் ஆக்­கப்­பட்டோர், அர­சியல் கைதிகள், இரா­ணுவ வச­முள்ள மக்­க­ளுக்கு சொந்­த­மான காணிகள் விடு­விப்பு போன்ற விட­யங்­களில் திருப்­தி­க­ர­மான முன்­னேற்­றங்கள் இல்லை என்றும் சம்­பந்தன் ஐ.நா. வதி­வி­டப்­பி­ர­தி­நி­தி­யிடம் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்­வு­காணும் முயற்­சியில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­மை­யா­னது பெரும்­விட்­டுக்­கொ­டுப்­புக்­களை மேற்­கொண்டு செயற்­பட்டு வந்­தது. அர­சி­யல்­யாப்பு சபையின் வழி­ந­டத்தல் குழுவில் கூட்­ட­மைப்பின் சார்பில் அங்கம் வகிக்கும் அதன் தலைவர் இரா. சம்­பந்­தனும் பேச்­சா­ளர் எம்.ஏ. சுமந்­தி­ரனும் அர­சியல் தீர்வு தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­க­ளின்­போது விட்­டுக்­கொ­டுப்­புக்­களை மேற்­கொண்­டி­ருந்­தனர். பெரும்­பான்மை சிங்­கள மக்­களும் ஏற்­றுக்­கொள்­ளும்­வ­கையில் தீர்­வினை காண­வேண்டும் என்­பதால் தமிழ் மக்­களின் முக்­கிய கோரிக்­கை­க­ளான வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்­பிலோ அல்­லது சமஷ்டி குறித்தோ வழி­ ந­டத்தல் குழுவில் வலி­யு­றுத்­தாமல் ஓர­ள­விற்கு விட்­டுக்­கொ­டுப்­புக்­க­ளுடன் இவர்கள் செயற்­பட்­டி­ருந்­தனர்.

இவ்­வாறு அர­சி­யல்­தீர்வைக் கண்­டு­வி­ட­வேண்டும் என்ற விட­யத்தில் கடந்த மூன்று வரு­டங்­க­ளாக தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைமை விட்­டுக்­கொ­டுப்­புடன் செயற்­பட்டு வந்­துள்ள போதிலும் அர­சியல் தீர்­வுக்­கான முயற்சி என்­பது இன்­னமும் இழுத்­த­டிக்­கப்­பட்ட ஒரு­வி­ட­ய­மாக மாறி­யி­ருப்­ப­த­னா­லேயே எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் வெறுப்­ப­டைந்த நிலையில் சர்­வ­தேச சமூ­கத்தின் கவ­னத்தை ஈர்க்கும் வகையில் இத்­த­கைய கருத்­துக்­களை தெரி­விக்­க­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

இலங்­கைக்கு விஜயம் செய்த ஐ.நா.வின் பிர­தி­நி­தி­க­ளையும் அமெ­ரிக்க காங்­கிரஸ் பிர­தி­நி­தி­க­ளையும் ஐரோப்­பிய ஒன்­றிய தூதுக்­கு­ழு­வி­ன­ரையும் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் சந்­தித்து பேசி­ய­போது அர­சி­யல்­தீர்வு விட­யத்தில் காட்­டப்­படும் கால­தா­மதம் தொடர்பில் எடுத்து விளக்­கி­ய­துடன் இதற்­கான அழுத்­தங்­களை கொடுக்­க­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்தும் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

இதன் ஒரு கட்­ட­மா­கவே தற்­போது இலங்­கைக்­கான ஐ.நா.வின் புதிய வதி­வி­டப்­பி­ர­தி­நி­தியை சந்­தித்­த­போதும் அர­சி­யல்­தீர்வின் அவ­சியம் குறித்து அவர் எடுத்­துக்­கூ­றி­யி­ருக்­கின்றார். உண்­மை­யி­லேயே நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­வுடன் அர­சியல் தீர்வைக் காணும் நட­வ­டிக்­கையில் இத­ய­சுத்­தி­யுடன் ஈடு­பட்­டி­ருந்தால் தற்­போது அந்­தப்­ப­ணியை பூர்த்தி செய்­தி­ருக்க முடியும். ஆனாலும் கால­தா­ம­தத்தின் மத்­தியில் பாரா­ளு­மன்­றத்தை அர­சி­யல்­யாப்பு சபை­யாக மாற்றி வழி­ந­டத்தல் குழு­வினை அமைத்து கடந்த இரண்டு வரு­டங்­களில் அர­சி­யல்­தீர்வு குறித்தும் ஆரா­யப்­பட்­ட­துடன் இடைக்­கால அறிக்­கையும் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த அறிக்கை தொடர்பில் தற்­போது நிபு­ணர்கள் குழு ஆராய்ந்­துள்­ளது. இந்த நிபுணர் குழுவின் அறிக்கை வழி­ந­டத்தல் குழு­விற்கு தற்­போது சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ள­துடன் இந்த அறிக்­கை­யினை அர­சியல் யாப்பு சபையில் சமர்ப்­பிப்­ப­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. கால­தா­ம­தத்தின் மத்­தி­யிலும் புதிய அர­சி­யல் ­யாப்பு தொடர்­பான இடைக்­கால அறிக்கை தொடர்பில் நிபு­ணர்­குழு ஆராய்ந்து அதன் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்க செயற்­பா­டா­கவே உள்­ளது. இந்த அறிக்கை மீது விவாதம் நடை­பெற்று அர­சி­யல்­யாப்­புக்­கான இறுதி நகல்­வ­ரைபும் விரைவில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வேண்டும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் துரி­தப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் கருத்து தெரி­வித்த அர­சாங்­கத்தின் சபை முதல்வர் லக் ஸ்மன் கிரி­யெல்ல புதிய அர­சியல் அமைப்பு குறித்து நகல்­வ­ரைபை வெகு­வி­ரைவில் அர­சாங்கம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்கும். இந்த நகல் ­வ­ரைபு குறித்து இரண்டு நாட்கள் விவா­தமும் நடத்­தப்­படும். புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் குறித்து பொது எதி­ரணி முரண்­பட்­டாலும் அதனை மேற்­கொள்ள அர­சாங்கம் தயா­ரா­கவே உள்­ளது என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

சபை­ மு­தல்வர் லக்ஸ்மன் கிரி­யெல்ல தெரி­வித்­த­தைப்­போன்று அர­சி­யல்­தீர்வை உள்­ள­டக்­கிய புதிய அர­சி­யல்­யாப்­புக்­கான இறுதி நகல் ­வ­ரைபு விரைவில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வேண்டும். ஆனால் அதற்­கேற்ற சூழ்­நிலை தற்­போது உள்­ளதா என்ற சந்­தேகம் மறு­பு­றத்தில் எழுந்­தி­ருக்­கின்­றது. புதிய அர­சி­யல்­யாப்­புக்­கான இடைக்­கால அறிக்­கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்­பி­யி­ருந்­தது. பொது எதி­ரணி உட்­பட பல தரப்­பி­னரும் கடும் எதிர்ப்­பினை தெரி­வித்­தி­ருந்­தனர். இடைக்­கால அறிக்­கையில் உள்ள விட­யங்கள் நாட்டை பிள­வு­ப­டுத்­தப் ­போ­வ­தா­கவும் குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­தி­ருந்­தன. தென்­ப­கு­தியில் இன­வாத சக்­திகள் இடைக்­கால அறிக்­கை­யா­னது நாட்டை பிள­வு­ப­டுத்­தப் ­போவ­தாக குற்றம்சாட்டிய அதேவேளை வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் தமக்கு அதிகாரங்கள் போதவில்லை என்று எண்ணும் நிலைமை உருவாகியிருக்கின்றது.

எனவே இந்த இரு தரப்புக்களுக்கிடையிலான சந்தேகங்களையும் போக்கும் வகையிலேயே அரசியல்தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியல் யாப்புக்கான இறுதி நகல் அமையவேண்டியுள்ளது. ஆனால் அதற்கான சாத்தியங்கள் விரைவில் ஏற்படுத்தவேண்டுமானால் விட்டுக்கொடுப்புக்கள் என்பது அவசியமாகின்றது. இருதரப்பிலும் விட்டுக்கொடுப்புக்கள் மேற்கொள்ளாவிடின் புதிய அரசியல்யாப்புக்கான சட்டவரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதோ அல்லது அதனை நிறைவேற்றிக்கொள்வதோ சாத்தியமற்ற விடயமாகவே மாறிவிடும்.

தற்போதைய நிலையில் அரசாங்கமும் தென்பகுதி அரசியல் கட்சிகளும் வடக்கு, கிழக்கு மக்களை பிரதிநிதித்துவப்படும் அரசியல் கட்சிகளும் விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு இதயசுத்தியுடன் செயற்பட்டால் மட்டுமே தீர்வு என்பது சாத்தியமாகும். இல்லையேல் அது வெறும் கானல்நீராகவே மாறும் என்பதை சகலரும் புரிந்து கொள்வது நல்லது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-11#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.