Jump to content

``அன்று பெரியார், மகாத்மா காந்தி... இன்று திருமுருகன் காந்தி" தடுப்புக்காவல் சட்டத்தில் அடுத்து யார்?


Recommended Posts

``அன்று பெரியார், மகாத்மா காந்தி... இன்று திருமுருகன் காந்தி" தடுப்புக்காவல் சட்டத்தில் அடுத்து யார்?

 

"என்றென்றும் மக்கள் புரட்சிக்காக மே 17 இயக்கம் காலத்தில் நிற்கும். நாங்கள் உழைத்து சிறுகச்சிறுக வங்கியில் சேர்த்த மொத்த நிதியும் சென்ற வாரம் முடக்கப்பட்டிருக்கிறது. எங்கள் நண்பரின் நகையை வைத்து இந்தக் கூட்டத்தை நடத்துகிறோம். ஆனால், என்றுமே உங்கள் அடக்குமுறைகளுக்கு அடிபணிய மாட்டோம்."

``அன்று பெரியார், மகாத்மா காந்தி... இன்று திருமுருகன் காந்தி
 

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் கைதைக் கண்டித்தும் அவரை விடுதலை செய்யக்கோரியும், ''உபா' எனும் கறுப்புச்சட்டத்தினை நீக்கிடு' என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி மே 17 இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் செப்டம்பர் 8, 2018 அன்று சென்னை தியாகராய நகரில் நடத்தப்பட்டது. இதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், ம.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

தூத்துக்குடி 13 பேர் படுகொலை, சேலம் எட்டு வழிச்சாலை போன்ற பிரச்னைகள் குறித்து ஐ.நா சபையில் பேசிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசினார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி நார்வேயில் இருந்து பெங்களூரு திரும்பிய அவர், பெங்களூரு விமான நிலையத்திலேயே சிறைப்பிடிக்கப்பட்டார். திருமுருகன் காந்தி மீது 'லுக் அவுட் நோட்டீஸ்', பிறப்பிக்கப்பட்டிருந்ததால் அவரைச் சிறைப்பிடித்து வைத்திருந்தனர் விமான நிலைய காவலர்கள். முதலில் சென்னை வேப்பேரி , மயிலாப்பூர் காவல் நிலையத்தில் அவர்மீது 124 (A) தேசத்துரோக வழக்கு போடப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தனர். 

திருமுருகன் காந்தி

 

 

இது மட்டுமின்றி பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்துப் பேசியதற்காகவும் இவர்மீது வழக்குகள் போடப்பட்டன. மேலும், 'உபா' என்று சொல்லக்கூடிய 'சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் - UAPA ' ஆகிய பிரிவுகளிலும் இவர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். நடந்து முடிந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் இந்த விவகாரங்கள் குறித்து தங்கள் கருத்துகளை விரிவாக முன்வைத்தனர். 

 

 

பொதுக்கூட்டத்தில் தொடக்கவுரையாற்றிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் பேசுகையில்... 

பிரவின் குமார்

``அரசு அடக்குமுறைக்கு எதிரான பொதுக்கூட்டம் இது. 'இந்தக் கோரிக்கைக்காக மக்கள் கூட்டம் கூடுமா? திருமுருகன் காந்தியும் இல்லையே' போன்ற கவலைகள் இருந்தன. ஆனால், நாற்காலிகள் தீர்ந்து மக்கள் நின்றுகொண்டு கூட்டத்தில் பங்கேற்றுள்ளதைப் பார்க்கும்போது, அரசு அடக்குமுறைகளுக்கு எதிரான மனநிலையே மக்களிடம் வலுப்பெற்றிருக்கிறதென்று தெரிகிறது. ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு எங்கள் இயக்கத்துக்கு எந்தவித பொதுக்கூட்டம், கருத்தரங்குக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்ட பிறகு இப்போதுதான் அனுமதி கிடைத்திருக்கிறது. அதுவும் சில விதிகள், கட்டுப்பாடுகளைப் பிறப்பித்திருக்கிறார்கள். முதல் கட்டுப்பாடு திருமுருகன் காந்தி கைதைப் பற்றி பேசக்கூடாது என்பதுதான்! பிறகு எதற்கு நாங்கள் கூடப்போகிறோம்? 1930-ம் ஆண்டு முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு பேச்சுவார்த்தையில் 'தடுப்புக் காவல் சட்டம் இந்த நாட்டில் இருக்குமேயானால் நான் அதில் ஆட்சி செய்யமாட்டேன்' என்றார். இந்த நாட்டில் இன்று வரை தடுப்புக்காவல் சட்டம் இல்லாமல் இருந்ததில்லை. என்றென்றும் மக்கள் புரட்சிக்காக மே 17 இயக்கம் காலத்தில் நிற்கும். நாங்கள் உழைத்து சிறுகச்சிறுக வங்கியில் சேர்த்த மொத்த நிதியும் சென்ற வாரம் முடக்கப்பட்டிருக்கிறது. எங்கள் நண்பரின் நகையை வைத்து இந்தக் கூட்டத்தை நடத்துகிறோம். ஆனால், என்றுமே உங்கள் அடக்குமுறைகளுக்கு அடிபணிய மாட்டோம்" என்றார்.

 

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் பேசுகையில்...

ஆளூர் ஷாநவாஸ்

``பெரியார் சிலைக்கு மாலை போட்ட காரணத்தினால் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தியை விடுதலை செய்யக்கோரி தியாகராய நகரில் பொதுக்கூட்டம். ஒரு கையில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு, மறு கையில் மைக்கைப் பிடித்துக்கொண்டு இன மீட்புக்காக கருஞ்சட்டை போட்டுக்கொண்டு 45 ஆண்டுகளுக்கு முன்னர் இறுதி மூச்சு அடங்குகிற வேளையில் பெரியார் எங்கு பேசினாரோ... அதே இடத்தில் இன்று இந்தப் பொதுக்கூட்டம் நடக்கிறது. கிட்டதட்ட அரைநூற்றாண்டு காலம் கடந்தாலும் கருத்தியலில் மாற்றம் இல்லை. திருமுருகன் காந்தி இனவாதம், சாதியவாதம், மதவாதம் பேசியிருந்தால் மகிழ்ந்திருப்பார்கள். ஆனால், இவற்றையல்லாமல் திருமுருகன் காந்தி மானுடம் பேசினார். திருமுருகன் காந்தி என்கிற ஒற்றைக்குரலை நசுக்கினால் எங்களை அடக்கி விட முடியாது, அது பெருங்குரலெடுத்து பெருவடிவம் எடுக்கும் என்பதற்கான ஆதாரம்தான் தூத்துக்குடி விமான நிலையத்தில் ஒலித்த அந்த ஷோபியாவின் குரல். பெரியார், அம்பேத்கர் சிலைக்கு மாலை போட்டால் சிறை, ஆனால் பலர் கோட்சேவுக்கு சிலை வைத்துக் கொண்டாடுகிறார்கள் அவர்கள் மீது நடவடிக்கை இல்லையென்றால், இது பாசிசம் இல்லாமல் வேறென்ன. திருமுருகனை நீதிமன்றத்தில் காவல்துறை ஆஜர்படுத்தியபோது நீதிபதி சொல்கிறார் 'இவரைக் கைது செய்யமுடியாது' என்று! ஆனால், திருமுருகனைக் கைது செய்தார்கள். 'எஸ்.வி சேகரை ஏன் கைது செய்யவில்லை' என்று நீதிபதி கேட்கிறார்? ஆனால் எஸ்.வி சேகரை கைது செய்யவில்லை! திருமுருகன் காந்தி சரியான  பாதையில் பயணிப்பதாலேயே அவரைக் கைது செய்துள்ளனர்."

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மல்லை சத்யா பேசுகையில்...

மல்லை சத்யா

``1922-ல் தேசப்பிதா மகாத்மா காந்தி பேசியதற்காக அவர்மீது இதே போன்ற தடுப்புக்காவல் சட்டத்தை பிரித்தானிய அரசு ஏவியது. கிட்டதட்ட 100 ஆண்டுகள் கழித்து திருமுருகன் காந்தி அதே போன்றதொரு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அடிமை இந்தியாவில் எந்தச் சட்டத்தை தூக்கி எரிய வேண்டுமென்று முழங்கினோமோ அதே சட்டம் இன்று சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்கிக்கொண்டிருக்கிறது. அறிவாசான் தந்தை பெரியார் 1933-ம் ஆண்டு 'குடி அரசு' இதழில் அப்போதைய அரசு எங்குச் செல்கிறது என்று தலையங்கம் தீட்டியதற்காக இதே போன்ற தடுப்புக்காவல் சட்டத்தில் நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்டு 9 மாதம் சிறைத் தண்டனைப் பெற்றார். 'குடி அரசு' முடக்கப்பட்டு 'புரட்சி' என்ற இதழ் உருவாயிற்று. மகாத்மா காந்தி, தந்தைப் பெரியார் ஆகியோர் மீது பாய்ச்சப்பட்ட சட்டம் இன்று திருமுருகன் காந்தி மீது பாய்கிறது என்றால் அவர் போகின்ற பாதை சரியென்று அர்த்தம்" என்றார்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியதாவது...

வேல்முருகன்

``தமிழ்நாட்டில் ஓட்டு அரசியலை விரும்பாமல், இயக்க அரசியலை முன்னிறுத்துவதில் மே 17 முன்னுதாரணமாகத் திகழ்கிறது. இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத ஒடுக்குமுறையைப் பாய்ச்சுகிறார்கள்! உபா சட்டம் பாய்ச்ச அவரென்ன ஆயுதம் ஏந்திப் போராடினாரா. இல்லை! அவர் களநிலவரத்தை, உண்மையைப் பேசினார். அவரது ஆயுதம் 'பேச்சு' தான். தொலைக்காட்சியில் அவர் எதிராளிகளுக்குக் கொடுக்கும் பதிலடிகளுக்கு யாரும் வாய் திறக்கமுடியவில்லையே ஏன்? இதையெல்லாம் ஆளும் வர்க்கத்தினர் ஏற்பதில்லை. திருமுருகனைக் கைது செய்தால் அவரைப்போன்ற ஆயிரம் திருமுருகன்கள் உருவாகுவார்கள்" என்றார்.   

ஆயுதம் ஏந்தாத திருமுருகன் காந்தியை 'உபா' சட்டத்தில் கைது செய்வதே மனித உரிமை மீறல் என்று சமூக ஆர்வலர்கள் கூறிவரும் வேளையில், அவரை இயற்கை உபாதையைக் கூட கழிக்க விடாமல் கொடுமைப்படுத்துவது அடக்குமுறைகளின் உச்சம் என்பதைத் தவிர வேறென்ன!

https://www.vikatan.com/news/tamilnadu/136556-may-17-condemns-thirumurugan-arrest.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.