Jump to content

நாய் கூடத் தின்ன முடியாத முந்திரிப் பருப்பை சிறிலங்கா அதிபருக்கு கொடுத்த சிறிலங்கன் எயர்லைன்ஸ்


Recommended Posts

நாய் கூடத் தின்ன முடியாத முந்திரிப் பருப்பை சிறிலங்கா அதிபருக்கு கொடுத்த சிறிலங்கன் எயர்லைன்ஸ்

 

maithripala-sirisena-300x200.jpgநாய் கூடச் சாப்பிட முடியாத முந்திரிப் பருப்புகளை சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் தனக்கு பரிமாறப்பட்டதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விசனம் வெளியிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டையில் நேற்று விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

”அண்மையில் காத்மண்டுவில் இருந்து புதுடெல்லி வழியாக கொழும்புக்கு சிறிலங்கன் விமான சேவையில் பயணித்தேன்.

அப்போது, விமானத்தில் தரப்பட்ட தரம் குறைந்த முந்திரிப் பருப்பை என்னால் சாப்பிட முடியவில்லை.

மனிதர்களால் சாப்பிட முடியாத-  நாய் கூடத் தின்னாத, இந்தப் பருப்புகளை கொள்வனவு செய்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தது?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

எனினும் இந்த தரம்குறைந்த முந்திரிப் பருப்பு தொடர்பாக விமானப் பணியாளர்களிடம் கேள்வி எழுப்பினாரா என்பது குறித்து அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

http://www.puthinappalakai.net/2018/09/11/news/32836

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நம்ம ஆட்கள் அதில் போய் வந்து சாப்பாடு அப்படி என்று புளுகினான்களே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பெருமாள் said:

அப்ப நம்ம ஆட்கள் அதில் போய் வந்து சாப்பாடு அப்படி என்று புளுகினான்களே ?

நம்ம ஆக்கள்....அந்தக் காலத்தில...அமெரிக்கன் அனுப்பின...புழுக்கட்டிப் போன விசுக்கோத்தையே...ஆஹா.....ஓஹோ...என்று சொல்லிச்? சாப்பிட்ட்டவை தானே!

வேற என்னத்தை எதிர்பார்க்க்கலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எயர்லைன்ஸ், முழுக்க மகிந்தன்ற ஆக்கள், அவயள் உங்களை எப்படி மதிக்கினம் எண்டு பாருங்கோவன்.

1 hour ago, பெருமாள் said:

அப்ப நம்ம ஆட்கள் அதில் போய் வந்து சாப்பாடு அப்படி என்று புளுகினான்களே ?

அதாவது, விலை குடின கஜூ எக்கனமிவகுப்பில கொடுக்கிறதில்லை.

பஸ்ட் கிளாசில , கொடுத்தது, கொஞ்சம் பழசு தான். வேணாம் எண்டால் நாய்க்கு போட்டிருக்கலாம். 

ஜானாதிபதி இப்படி கதைச்சு, பிபிசி வரை நாறிப்போச்சே... ?

Link to comment
Share on other sites

11 hours ago, நவீனன் said:

நாய் கூடத் தின்ன முடியாத முந்திரிப் பருப்பை சிறிலங்கா அதிபருக்கு கொடுத்த சிறிலங்கன் எயர்லைன்ஸ்

அதே தினம் நானும் இதே ஏயர்லைன்சில வேறு இடத்துக்கு பயணித்தேன். பயண நேரம் குறைவு என்பதால் சான்விச் மட்டும் தந்தார்கள்.

அப்பாடா நான் தப்பிட்டன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனின்ட முந்திரிக் கொட்டடை பற்றி எமக்கு ஏன் கவலை.எங்கடை மக்களை எப்படி முன்னேற்றலாம் என்டு எல்லோ எங்கடை முளை யோசிக்க  வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பெருமாள் said:

அப்ப நம்ம ஆட்கள் அதில் போய் வந்து சாப்பாடு அப்படி என்று புளுகினான்களே ?

எங்கடையள் ஆட்டுறைச்சியும் சோறும் தாறாங்கள் எண்டு இப்பவும் புளுகியடிக்குதுகள்....
ஜனாதிபதியார் என்னடாவெண்டால் வாயிலையும் வைக்கேலாது எண்டுறார்.....:(

நியூஸ் படிக்கிற சனம் எங்கை போய் முட்ட?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரான்சிட் பிளைட் 395 பவுண்டுக்கு போகுது  900க்கு ஏன் airலங்காவில் போகிறீங்க என்பதுக்கு வேற்று கிரக வாசியை பார்ப்பது போல் பார்த்துகொண்டு தை பொங்கலுக்கு பொங்கலும் போட்டு வடையும் தந்தவங்கள் என்று வாயால் வடை சுட்டவரை தேடிக்கொண்டு இருக்கிறன் .?

Link to comment
Share on other sites

“முந்திரி பருப்புக்களை நாய் கூட சாப்பிடாது”: ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை 

 

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் தனக்கு பரிமாறப்பட்ட முந்திரிப் பருப்புக்களை நாய் கூட உண்ணமுடியாதவை என நேற்று முன் தினம் ஹம்பாந்தோட்டையில் விவசாயிகள் மத்தியில் உரையாற்றும் போது ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

srilankans_airlines_with_maythiri.jpg

அதன் பிரகாரம் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் கொள்வனவு செய்த முந்திரிப் பருப்புக்களை நீக்கி விட்டதோடு முந்திரிப் பருப்பு கொள்வனவிற்காக டுபாய் நிறுவனத்துடனான செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு வேறு நிறுவனத்தோடு ஒப்பந்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தள்ளது.

http://www.virakesari.lk/article/40276

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நவீனன் said:

“முந்திரி பருப்புக்களை நாய் கூட சாப்பிடாது”: ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை 

 

ஜனாதிபதி திண்டுபார்த்து முந்திரி பருப்பு சரியில்லை என்று சொன்னதால்தான் அதிரடி நடவடிக்கையா?

மற்றும்படி இதுவரைநாள் முந்திரி பருப்பை தின்ற,

எவன் வாய் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்பதா எயார் லங்காவின் உலகதர சேவையின் திட்டம்?

நாயே தின்னாது என்ற தரத்தில் இருந்த முந்திரி பருப்பை மைத்திரிக்கு கொடுத்ததன்மூலம்  மைத்திரியை இலங்கை விமான சேவை எந்த அளவில் வைத்திருக்கிறது என்பதை அறிய ஆவல்.

Link to comment
Share on other sites

5 hours ago, நவீனன் said:

அதன் பிரகாரம் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் கொள்வனவு செய்த முந்திரிப் பருப்புக்களை நீக்கி விட்டதோடு முந்திரிப் பருப்பு கொள்வனவிற்காக டுபாய் நிறுவனத்துடனான செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு வேறு நிறுவனத்தோடு ஒப்பந்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தள்ளது.

நான் ஒருமுறை மட்டக்களப்புக்கு சென்றபோது ஒரு உறவு சில கஜு பக்கற்றுகளை எனக்கு அன்பளிப்பாக தந்திருந்தார் - என்ன ருசி. நானும் நண்பர்களும் இரண்டு கிலோவையும் சில மணி நேரங்களிலேயே தின்னு தீர்த்திருந்தோம்.

இதுக்குள்ளே டுபாய் நிறுவனத்துடன் ஒப்பந்தமாம் - டேய் கிரிபத்தும் கட்டு சம்பலும் இங்கிருந்துதானே வருகுது. கஜூவையும் மட்டுவில வாங்குங்கோடா விசருகளா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஜீவன் சிவா said:

இதுக்குள்ளே டுபாய் நிறுவனத்துடன் ஒப்பந்தமாம் - டேய் கிரிபத்தும் கட்டு சம்பலும் இங்கிருந்துதானே வருகுது. கஜூவையும் மட்டுவில வாங்குங்கோடா விசருகளா.

கட்டா கருவாட்டையும் இறக்கிரான்கள் ஜீவன் அதுவும் பக்கதில் இருக்கும் பிளட் பிடிக்கபோன மாலைதீவில் இருந்து கேட்க்க நாதியில்லை .?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஜீவன் சிவா said:

நான் ஒருமுறை மட்டக்களப்புக்கு சென்றபோது ஒரு உறவு சில கஜு பக்கற்றுகளை எனக்கு அன்பளிப்பாக தந்திருந்தார் - என்ன ருசி. நானும் நண்பர்களும் இரண்டு கிலோவையும் சில மணி நேரங்களிலேயே தின்னு தீர்த்திருந்தோம்.

இதுக்குள்ளே டுபாய் நிறுவனத்துடன் ஒப்பந்தமாம் - டேய் கிரிபத்தும் கட்டு சம்பலும் இங்கிருந்துதானே வருகுது. கஜூவையும் மட்டுவில வாங்குங்கோடா விசருகளா.

சந்தர்ப்பம் கிடைத்தால்....கல்பிட்டிக் கஜுவையும் சுவைத்துப் பாருங்கள்!

காசு கொடுத்து வாங்கத் தேவையில்லை! நீங்களே பிடுங்கிச் சாப்பிடலாம்!

மணல் வெளிகளில்...தாங்களாகவே வளர்ந்து .....தரை முழுவதும்...பரந்த படி...கிடக்கும்!

இப்போ நினைத்தாலும்....எனது அழகிய தேசமே...என்ற ஏக்கம் தான் மிச்சம் இருக்கின்றது!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.