Jump to content

பெண்கள் செய்யும் வீட்டு வேலைகள் உண்மையில் உடற்பயிற்சியா?


Recommended Posts

பெண்கள் செய்யும் வீட்டு வேலைகள் உண்மையில் உடற்பயிற்சியா?

 

வீட்டில் உணவு சமைப்பது, சுத்தம் செய்வது, துணி துவைப்பது, குழந்தைகளை பராமரிப்பது ஆகியவற்றை செய்யும் பெண் சுறுசுறுப்பானவரா? இல்லை, அலுவலகத்திற்கு சென்று வேலை செய்யும் பெண்கள் சுறுசுறுப்பானவர்களா?

Indian women healthபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

வீட்டு வேலையை செய்து முடித்துவிட்டு, அலுவலகத்திலும் சென்று வேலை செய்யும் பெண்களாக இருந்தாலும் சரி, பல மணி நேரம் இடைவிடாமல் பணியாற்றுபவராக இருந்தாலும் சரி... நீங்கள் சுறுசுறுப்பான, ஆரோக்கியமான பெண் என்று சொல்லிவிடமுடியுமா என்றால், கொஞ்சம் சிந்திக்க வேண்டியிருக்கிறது!

உடற்பயிற்சி செய்யவில்லையா என்று பெண்களிடம் கேட்டால், வீட்டிலுள்ள வேலைகளை செய்வது போதாதா? என்ற கேள்வியை படபடப்பாக கேட்கும் பெண்களே அதிகம். குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதைவிட உடற்பயிற்சி செய்வது என்ன பெரிய விஷயம்? நேரத்திற்கு பிடித்த கேடு என்பதே பல பெண்களின் கருத்தாகவும் இருக்கலாம்.

இன்னும் சிலரோ, வீட்டு வேலைகள் செய்து களைத்துவிடுகிறோம், பிறகு எதற்கு உடற்பயிற்சி என்ற கேள்விகளும் அடிக்கடி நாம் கேள்விப்படுவதே. ஆனால், இது போன்ற எண்ணங்களும், அடிப்படை புரிதல் இல்லாத கேள்விகளுமே நோய்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

டெல்லியை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ஷாலினி சிங்கலிடம் பெண்களின் உடற்பயிற்சி பற்றி பேசினோம். பெரும்பாலான பெண்கள், அவர்கள் செய்யும் வேலையே உடல் ஆரோக்கியத்திற்கு போதுமானது என்று நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில் அது தவறு என்று கூறுகிறார் டாக்டர் ஷாலினி.

கிராமங்களில் வசிக்கும் பெண்களைவிட நகர்ப்புற பெண்களுக்கு பணிச்சுமை சற்று குறைவாக இருப்பதற்கான சாத்தியங்களே அதிகம். நகரில் வசிக்கும் பெண்கள், வேலை அதிகமாக இருந்தால் பணியாளர்களை வைத்துக் கொள்கிறார்கள். நகரப் பெண்கள் செய்யும் வேலையில் முழு உடலும் இயங்குவதில்லை. முழு உடலும் இயங்கி, இதய துடிப்பு அதிகரிக்காதபோது, அதை முழுமையான இயக்கமாக, சுறுசுறுப்பான செயலாக கருதமுடியாது."

Indian women healthபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

உலக சுகாதார அமைப்பு அறிக்கை என்ன கூறுகிறது?

லான்செட் குளோபல் ஹெல்த் ஜர்னல் என்ற சஞ்சிகையில் வெளியான உலக சுகாதார அமைப்பின் அண்மை ஆய்வறிக்கையிலும் மக்களின் சுறுசுறுப்பு, மந்தத்தன்மை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில் ஏழை நாடுகளில் இயல்பாக செயல்பட வேண்டிய வயதுவந்தவர்களில் நான்கில் ஒருவர் மந்தமாக இருக்கின்றனர். சில நாடுகளிலோ, மூன்றில் ஒருவர் குறைவாக செயல்பட்டு மந்தமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

அந்த அறிக்கையில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், ஆண்களைவிட பெண்களின் செயல்பாடு மந்தமாகவே இருக்கிறது. செல்வ வளம் கொண்ட நாடுகளைவிட, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் வசிப்பவர்கள் அதிக செயல்திறன் கொண்டுள்ளதாகவும், சுறுசுறுப்பாக இருப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.

அதிகம் செயல்படாதவர்களுக்கு இதய சம்பந்தமான நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது. நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது என்பதோடு, சில நேரங்களில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியங்களும் அதிகமாவதாக இந்த அறிக்கை கூறுகிறது. அதுமட்டுமல்ல, குறைந்த அளவே செயல்படுவர்களின் மூளையின் ஸ்திரத்தன்மையும் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

Indian women healthபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்தியாவில் 43 சதவிகித பெண்களும், 23.5 சதவிகித ஆண்களும் செயல்படுவது குறைவாக இருப்பதாக கூறும் அந்த அறிக்கை, உலகில் மந்தமாக செயல்படுபவர்கள் குவைத் நாட்டு மக்கள் என்றும், அதிக சுறுசுறுப்பாக செயல்படுபவர்கள் உகாண்டா நாட்டு மக்கள் என்றும் கூறுகிறது

உடல் செயல்பாடு என்பது உடலால் செய்யப்படும் எல்லா செயலுமே என்று சொன்னாலும், சுறுசுறுப்பான செயல் என்பது, முழு உடலையும் இயக்குவதாக இருக்க வேண்டும். உதாரணமாக, வேகமான நடைபயிற்சி, ஏரோபிக்ஸ், சைக்கிள் ஓட்டுவது டென்னிஸ் விளையாடுவது, நீச்சல் போன்றவற்றில் முழு உடலும் செயல்படுகிறது என்று கூறலாம்.

வயதுவந்த ஒருவர், வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான ஏரோபிக் உடற்பயிற்சி செய்தால், உடல் சரியாக செயல்பாட்டில் இருக்கிறது என்று சொல்லலாம். ஏரோபிக்ஸ் பயிற்சிகள் செய்வதால் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது, சுவாசம் வேகமாகிறது, உடல் சூடாகிறது, உடல் சுறுசுறுப்பாக இயங்கும்போது, இவை மூன்றும் நடைபெறும்.

Indian women healthபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஷாப்பிங் செல்வது, சமையல் செய்வது அல்லது மேலே கூறிய மூன்றும் ஒன்றிணையாத வேலைகளை எத்தனை மணி நேரம் செய்தாலும் அது உடல் செயல்பாட்டிற்கான பலன்களை கொடுத்துவிடாது. முழு உடலும் செயல்படும்போதுதான், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

யார் எந்த அளவு மிதமான ஏரோபிக் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

  • 5 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் வாரந்தோறும் 60 நிமிடம் உடற்பயிற்சி செய்வது அவசியமானது.
  • 19 முதல் 64 வயதுடையவர்கள் வாரந்தோறும் 150 நிமிட மிதமான ஏரோபிக் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
  • 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 150 நிமிட மிதமான ஏரோபிக் பயிற்சிகள் செய்யலாம், உடல் வலிவு பெற வேண்டும் என்றால், வாரத்தில் இருமுறை உடற்பயிற்சி செய்யலாம்.
Indian women healthபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

மிதமான ஏரோபிக் உடற்பயிற்சிகள்

வேகமான நடைபயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், டென்னிஸ், ஸ்கிப்பிங், கைப்பந்து மற்றும் கூடைப்பந்து போன்றவை மிதமான செயல்பாடு கொண்ட ஏரோபிக்ஸ் பயிற்சிகள் என்று கருதப்படுகின்றன.

என்.எச்.எஸ் அறிக்கையின் படி, வழக்கமாக உடற்பயிற்சி செய்கிறவர்களுக்கு கீழ்கண்ட நன்மைகள் ஏற்படும்:

  • இதய பாதிப்பு மற்றும் இதய சம்பந்தமான நோய்களின் ஆபத்து 35 சதவிகிதம் குறைகிறது.
  • இரண்டாம் வகை நீரிழிவு ஏற்படுவதற்கான ஆபத்து 50 சதவீதம் குறைகிறது.
  • பெருங்குடல் அல்லது மலக்குடல் புற்றுநோய் ஆபத்து 50 சதவிகிதம் குறையும்.
  • மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்து 20 சதவீதம் குறைகிறது.
  • அகால மரணம் ஏற்படும் ஆபத்து 30 சதவிகிதம் குறைகிறது.
  • எலும்புகளில் நோய்கள் ஏற்படும் ஆபத்து 83 சதவிகிதம் குறைகிறது.
  • மனச்சோர்வு ஏற்படும் ஆபத்து 30 சதவிகிதம் குறைகிறது.

ஆனால் பெண்கள் மந்தமாக செயல்படுவது ஏன்?

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, ஆண்களைவிட பெண்கள் சற்று மந்தமாகவே செயல்படுகிறார்கள்.

இதற்கு பல காரணங்கள் இருப்பதாக ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்கள் கருதுகிறார்கள். உதாரணமாக, பொதுவாக வீடுகளில் குழந்தைகளை கவனித்துக்கொள்வது அம்மாவின் பொறுப்பு. இவற்றில் வேலைகளில் உடலின் இயக்கம் குறைவு. வெளி வேலைகளை செய்வது ஆணின் பொறுப்பாக கருதப்படுகிறது, இதில் உடல் இயக்கம் அதிகமாக தேவைப்படுகிறது.

இதைத்தவிர, சமூக சூழலும் பெண்கள் உடற்பயிற்சிகளை செய்வது மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்கு தடையாக இருக்கிறது.

எனவே ஆண்களை விட பெண்கள் சற்று மந்தமாகவே இருக்கிறார்கள் என்ற செய்தி வியப்பளிக்கவில்லை.

Indian women healthபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

உலக சுகாதார அமைப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போலவே, இன்றைய வாழ்க்கைமுறையே சுறுசுறுப்பாக இருப்பதற்கு முக்கிய பிரச்சனையாக இருப்பதாக கூறுகிறார். உரிய நேரத்தில் நமது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளாவிட்டால், எதிர்காலத்தில் நோய்கள் ஏற்பட அதுவே காரணமாகலாம் என்று டாக்டர் ஷாலின் கூறுகிறார்.

  • இதய நோய்கள் ஏற்படும் ஆபத்து
  • நீரிழிவு
  • உடல் பருமன்
  • ரத்த அழுத்தம்
  • கொழுப்பு தொடர்பான பிரச்சனைகள்
  • தசைகளில் வலி

உடலுழைப்பை நீண்ட நேரமாக தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கும் பெண்களை அதிகம் செயல்படாதவர்கள் என்று சொல்வது ஏன்?

Womanபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்திய கலாசாரத்தின்படியும், நமது பழக்க வழக்கங்களின்படியும், பெண்கள் தங்களுக்காக நேரம் ஒதுக்குவது சுலபமானதில்லை. இன்று இயந்திரமயமான நிலையில், பெண்கள் அதிக நேரம் வீட்டு வேலைகளை செய்தாலும், முழு உடலும் இயங்குவதில்லை. எனவே செய்யும் வேலையிலேயே கொஞ்சம் விவேகமாக முழு உடலும் இயங்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது.

காய்கறி வாங்குவதற்கு நடந்தே செல்லலாம். வாஷிங் மெஷினில் துணி துவைக்கும்போது, அதன் அருகிலேயே ஒரு சிறிய பலகையை போட்டு அதில் ஏறி இறங்கி உடற்பயிற்சி போல் செய்யலாம்.

சமையலறையில் நின்று கொண்டே வேலை செய்யும்போது, கால்களை மடக்கி நீட்டி சற்று இயக்கலாம். மாவு பிசைவது கைகளுக்கு பயிற்சி கொடுக்கும் சிறந்த வேலை.

வெளியில் செல்லும்போது, லிப்டுகளில் செல்வதை தவிர்த்து படிகளை பயன்படுத்துவதால் கால்களும், உடலும் சுறுசுறுபாக இயங்கும், உடலில் வெப்பம் ஏற்படும், வேர்வை வரும், இதயம் துடிக்கும், மூச்சு பயிற்சியாகவும் இருக்கும். இதுதானே சுறுசுறுப்பாக இருக்க தேவையானவை?

https://www.bbc.com/tamil/india-45459949

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு  குறைய‌ இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம் இன்னும் சிறிது கால‌ம் தான் கைபேசி மூல‌ம் வ‌ள‌ந்த‌ பிளைக‌ளிட‌ம் 1000 2000ரூபாய் எடுப‌டாது...................... நாட்டு ந‌ல‌ன் க‌ருதி யார் உண்மையா செய‌ல் ப‌டுகின‌மோ அவைக்கு தான் ஓட்டு..............................
    • அதுதான்…. இல்லை. அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................     இந்த‌ பெடிய‌னுக்கும் மேடையில் பேசிக்கு கொண்டு இருக்கும் போது திராவிட‌ குண்ட‌ர்க‌க் இந்த‌ பெடிய‌னுக்கு அடிக்க‌ மேடை ஏறின‌வை ஆனால் இந்த‌ பெடிய‌ன் நினைத்து இருந்தால் திராவிட‌ குண்ட‌ர்க‌ளை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் திமுக்காவில் அராஜ‌க‌ம் செய்துக‌ள்.................இப்ப‌டி ஒவ்வொரு த‌ரின் ஓட்டு உரிமைக்கு தேர்த‌ல் நேர‌ம் வேட்டு வைப்ப‌து ப‌ய‌த்தின் முத‌ல் கார‌ண‌ம்........................விடிய‌ல் ஆட்சி எப்ப‌ க‌வுழுதோ அப்ப‌ தான் த‌மிழ் நாட்டில் மீண்டும் அட‌க்குமுறை இல்லாம‌ ஊட‌க‌த்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா ந‌ட‌க்கும்.......................................................................
    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.