Jump to content

இந்தியா கைவிடாதென்று நம்பியுள்ளனர் தமிழர்கள்! – மோடியிடம் எடுத்துரைத்தார் சம்பந்தன்


Recommended Posts

மோடியை சந்தித்தது கரு ஜயசூரிய தலைமையிலான குழு 

 

 
 

இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான கட்சித் தலைவர்கள் குழு இன்று காலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

karu.jpg

இந்திய அரசாங்கத்தின் அழைப்பையேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான கட்சித் தலைவர்கள் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் செய்தது.

இந்த விஜயத்தில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.

karu2.jpg

எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருக்கும் இவர்கள், இந்தியாவின் அரசியல் தலைவர்களை சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் இந்திய பாராளுமன்றத்துக்கும் விஜயம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/40084

Link to comment
Share on other sites

இந்தியாவின் பொருளாதாரத் திட்டங்களை விரைவுபடுத்த சிறிலங்கா நாடாளுமன்றக் குழு இணக்கம்

 

SL-MPs-Modi-1-300x174.jpgசபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான சிறிலங்காவின் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

புதுடெல்லியில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, இந்தியாவின் உதவியுடன் சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும், அபிவிருத்தி, ஒத்துழைப்புத் திட்டங்களால் மக்களுக்கு கிடைத்துள்ள நன்மைகள் குறித்து சிறிலங்கா நாடாளுமன்றக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இரண்டு நாடுகளினதும் பொருளாதாரங்கள் மற்றும் மக்களுக்கு நன்மையளிக்கும் இத்தகைய கூட்டு பொருளாதார திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்தவும், சிறிலங்கா தரப்புக் குழு இணக்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றக் குழுவை வரவேற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இதுபோன்ற தொடர்புகள் முக்கியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாடுகளினதும், மாகாண மட்ட சட்டமன்றங்கள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் புதிய முயற்சிகள்,  இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையையும், மக்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

SL-MPs-Modi-1.jpgSL-MPs-Modi-2.jpg

http://www.puthinappalakai.net/2018/09/10/news/32814

Link to comment
Share on other sites

இந்தியா கைவிடாதென்று நம்பியுள்ளனர் தமிழர்கள்! – மோடியிடம் எடுத்துரைத்தார் சம்பந்தன்

 
 
SL-MPs-Modi-1-1.jpg
“வடக்கு – கிழக்கு மக்கள் இந்தியாவை நம்புகின்றார்கள். நீங்கள் எங்களைக் கைவிட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.”
 
– இவ்வாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எடுத்துரைத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்.
 
இலங்கையில் இருந்து இந்தியா சென்றுள்ள அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு நேற்று இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தது. இதன்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
 
அவர் மோடியிடம் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
 
“போரால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கை அபிவிருத்தி செய்வதில் இந்தியா பெரும் உதவிகளை வழங்கி வருகின்றது. அதற்கு நன்றிகளைத் தெரிவிக்கிறோம். அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியா அதிக அக்கறை செலுத்த வேண்டும். இலங்கை அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
 
புதிய அரசமைப்பில் நிரந்தர அரசியல் தீர்வையே நாம் எதிர்பார்க்கின்றோம். அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுகளுடன் அந்தத் தீர்வு அமைய வேண்டும்.
 
இலங்கையின் தற்போதைய ஆட்சியில் நாம் எதிர்பார்த்த விடயங்கள் நடைபெறுகின்ற போதிலும் அவற்றின் வேகம் போதாமல் இருக்கின்றது” – என்றார்.
 
இதற்குப் பதிலளித்த இந்தியப் பிரதமர் மோடி,
 
“எம்மை நம்புங்கள். நாம் எப்போதும் உங்களுடைனேயே இருப்போம். இலங்கை அரசு காலதாமதமின்றித் தீர்வைக் காணவேண்டும். இதனைக் கடந்த வருடம் மே மாதம் நான் இலங்கை வந்தபோதும் ஜனாதிபதி, பிரதமரிடம் எடுத்துக் கூறியிருந்தேன்” – என்றார்.

http://www.newsuthanthiran.com/2018/09/11/இந்தியா-கைவிடாதென்று-நம/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு தமிழர்களேயே.... மோடி, பழி  வாங்குகின்றார்.
இதற்குள்... ஈழத்தமிழர்களை காப்பாற்றப் போகின்றாராம்.

முதலில்... சம்பந்தன், ஈழத்தமிழர்களுக்கு செய்ய வேண்டியதை, ஒழுங்காக செய்திருந்தாலே,
டில்லிக்கு  காவடி எடுக்க வேண்டிய, அவசியம் ஏற்பட்டிருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னையும் ஒரு ஆளுன்னு மதிச்சு .. கேட்ட பாரு .. நீ எங்கயோ போயிடப்பா .. வடிவேலு மொமண்ட் ?

Link to comment
Share on other sites

மோடியிடம் சம்பந்தனும், டக்ளசும் முன்வைத்த கோரிக்கைகள்

 

modi-sampanthan-300x200.jpgசிறுபான்மையினருக்கு அதிகாரங்களை உடனடியாகப் பகிர்ந்தளிக்கப்படுவதன் அவசியம் உள்ளிட்ட, இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்தும், இந்தியப் பிரதமருடன் நேற்று கலந்துரையாடப்பட்டதாக ஐஎஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான எட்டு சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு நேற்றுமுன்தினம் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டது.

இந்தக் குழுவினர் நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட இந்திய அரசுத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது, தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் வடக்கு, கிழக்கு பகுதி மக்களுக்கு அதிகாரங்களை பகிர்வதற்கு, 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கொழும்பை, இந்தியா இணங்க வைக்க வேண்டும் என்று, சிறிலங்கா குழுவில் இடம்பெற்றிருந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கோரியுள்ளனர்.

modi-sampanthan.jpg

இந்தச் சந்திப்பின் போது, இரா.சம்பந்தனும், டக்ளஸ் தேவானந்தாவும், 1987ஆம் ஆண்டின் இந்திய- சிறிலங்கா உடன்பாடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற தமிழர் தரப்பின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறியதுடன், வடக்கு, கிழக்கிற்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், தமிழ்ப் பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா மேலும் ஒரு இலட்சம் வீடுகளைக் கட்டித் தர வேண்டும் என்று இந்தியப் பிரதமரிடம் தாம் கோரிக்கை விடுத்ததாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திக்கு இந்திய உதவி வழங்க வேண்டும் என்றும், பிராந்திய இணைப்பை ஏற்படுத்தும் வகையில் திருச்சிக்கும் பலாலிக்கும் இடையே விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் தாம் இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/09/11/news/32838

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, நவீனன் said:

எம்மை நம்புங்கள். நாம் எப்போதும் உங்களுடைனேயே இருப்போம்

ஐ லைட்டே இதான் ..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:
வடக்கு – கிழக்கு மக்கள் இந்தியாவை நம்புகின்றார்கள். நீங்கள் எங்களைக் கைவிட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.”
 
– இவ்வாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எடுத்துரைத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்.

இதற்குப் பேர் ராஜதந்திரம் இல்லை!

பிச்சை எடுப்பு.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு – கிழக்கு மக்கள் இந்தியாவை நம்புகின்றார்கள்.....?

*****

சொல்ல மறந்த மிச்ச கதை.

வடக்கு – கிழக்கு மக்கள் இந்தியாவை நம்புகின்றார்கள். தெற்கு சீனாவை நம்புகிறது....

உண்மையில் தெற்கு சீனாவை நம்புகிறது....... முழு நாடுமே இந்தியாவை நம்ப மறுக்கிறது...

Link to comment
Share on other sites

இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்: மனோ

 

mano-720x450.jpg

தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பாக நட்பு நாடு என்ற ரீதியில் இந்தியா, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான குழுவினர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், அங்கு இடம்பெற்ற சந்திப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இந்திய விஜயத்தின் போது இலங்கை நாடாளுமன்றக் குழுவினர், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோரை சந்தித்துள்ளனர்.

இதன்போது, மலையகத்திற்கான இந்திய வீடமைப்பு திட்டங்களை விரிவுப்படுத்தவும், விரைவுபடுத்தப்படவும் என இந்திய அரச தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கல்வி, கலாசார, சமூக விகாரங்களில் இந்தியாவின் ஒத்துழைப்பு அதிகரிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் இந்திய தலைவர்களுடன் விவாதிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/இலங்கை-அரசாங்கத்திற்கு-இ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

இந்தியா கைவிடாதென்று நம்பியுள்ளனர் தமிழர்கள்! – மோடியிடம் எடுத்துரைத்தார் சம்பந்தன்

 

உங்களால் முடியாவிட்டால் தாங்கள் இறங்கிறம் என்று வாசலில் வந்து குந்தியிட்டான் சைனாக்காரன் என்று ஒரு சொல்லு சொல்லியிருந்தால் காணும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.