Jump to content

யாருக்கு இலா­பம் – இந்த வழக்­கால்?


Recommended Posts

யாருக்கு இலா­பம் – இந்த வழக்­கால்?

 

 

மேன்முறையீட்டு நீதி­மன்­றத்­தில் பிர­தி­வா­தி­கள் பெயர் கூப்­பி­டப்­ப­டும்­போது வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் எழுந்து நிற்­பது கட்­டா­யம் என்று அறி­வு­றுத்தி அவரை எழுந்து நிற்­கச் செய்­தி­ருக்­கி­றார் நீதி­ய­ர­சர் ஜானக டி சில்வா.

ஒரு மாகாண முத­ல­மைச்­ச­ராக இருந்­தா­லும், முன்­னாள் நீதி­ய­ர­ச­ராக இருந்­தா­லும், வய­தில் மூத்­த­வ­ராக இருந்­தா­லும், நீதி­யின் முன் எவ­ருக்­கும் பாகு­பாடு காட்­டப்­ப­டமாட்டாது என்­பதை உறு­திப்­ப­டுத்­தும் நோக்­கத்­து­டன் நீதி­ய­ர­சர் அவ்­வாறு அறி­வு­றுத்­தி­னார் என்­பது ஏற்­கத்­தக்­கதே.

ஆனால், எந்த நீதி­மன்­றத்­தின் உய­ரா­ச­னத்­தில் அமர்ந்­தி­ருந்து ஏனை­ய­வர்­க­ளுக்­குத் தீர்ப்பு வழங்­கி­னாரோ, அதே­ ஆ­ச­னத்­திற்கு எழுந்து நின்று மரி­யாதை வழங்க வேண்­டிய நிலையை ஒரு முன்­னாள் நீதி­ய­ர­ச­ருக்கு வழங்­கி­யி­ருப்­ப­வர்­க­ளும், அதே நீதி­ய­ர­ச­ரைத் தமது தலை­வர் என்று தலை­யில் தூக்கி வைத்­துக் கொண்­டா­டு­ப­வர்­க­ளும் தமி­ழர்­கள்­தாம் என்­பது மிகப் பெரும் முரண் நகை.

இவ்­வாறு ஒரு மதிப்­பார்ந்த மனி­தரை அவ­ரது முன்­னாள் பணி­யி­டத்­தி­லேயே தரம் குறைப்­பது போன்று நடத்­தும் நிலையை ஏற்­ப­டுத்­தும் இந்த வழக்­கால் யாருக்கு என்ன இலா­பம்? குறிப்­பா­கத் தமிழ் மக்­க­ளுக்கு இத­னால் ஏதா­வது இலா­பம் இருக்­கி­றதா?

ஒரு தன்­மு­னைப்பு (ஈகோ) மிக்க மனி­த­ரா­க­வும், தலை­வ­ராக விரும்­பும் சமா­னி­ய­னா­க­வும், இரு தலைக் கொள்ளி எறும்­பாக முத­ல­மைச்­சர் தவிப்­ப­தன் விளைவே இந்­தப் பிரச்­சி­னைக்­குக் கார­ணம் என்­ப­தை­யும் மறுப்­ப­தற்­கில்லை. அர­சி­யல் என்­பது வெறும் அழுங்­குப் பிடி­யல்ல, எங்கு விட­வேண்­டுமோ அங்கு விட்­டும், எங்கு பிடிக்­க­வேண்­டுமோ அங்கு இறுக்­கி­யும் இலக்கை நோக்கி நகர்­வதே அர­சி­ய­லின் முக்­கிய சூக்­கு­மம். அதைத்­தான் தலை­வர்­க­ளின் இரா­ஜ­தந்­தி­ரம் என்­றும் சாணக்­கி­யம் என்­றும் கரு­தப்­ப­டு­கின்­றது.

காரி­யத்­தைச் சாதித்­துக்­கொள்­வது அர­சி­ய­லில் மிக முக்­கிய தேவை. ஆனால், இப்­போது முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரா­கத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கு மக்­க­ளுக்கு எதைச் சாதித்­துத் தரப்­போ­கின்­றது என்­பது பெரும் கேள்வி? அதே­போன்று, இந்த விட­யத்­தைச் சமா­ளித்து பணிய வேண்­டிய நேரத்­தில் சற்றே பணிந்து நில­மையை சுமு­க­மாக்­கா­மல் விறைத்­துக் கொண்டு நிற்­ப­தன் மூலம் முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ர­னும் மக்­க­ளுக்கு என்ன தொண்­டாற்­றி­வி­டப்­போ­கி­றார் என்­ப­தும் புரி­யாத புதிர்­தான்.

வடக்கு மாகாண சபை­யின் முன்­னாள் அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ர­னைப் பதவி நீக்­கம் செய்­த­தில் இருந்து ஆரம்­ப­மான இந்­தச் சட்­டப் போராட்­டத்­தால், மக்­க­ளுக்கு எந்த நன்­மை­யும் விளை­யப் போவ­தில்லை என்­பது வழக்கை வைத்­த­வர்­க­ளுக்­கும், அதனை எதிர்ப்­ப­வர்­க­ளுக்­கும் தெளி­வா­கத் தெரிந்­த­து­தான். அதை அவர்­கள் நன்கு அறிந்­த­வர்­க­ளும்­தான்.

நீதி­மன்­றத்­திற்கு வெளியே இந்­தப் பிரச்­சி­னை­யைத் தீர்க்க முடி­யா­தென்­றில்லை. இந்த வழக்­கில் மோது­ப­வர்­கள் ஆசி­ரி­யர்­க­ளும் மாண­வர்­க­ளும் மூத்த வழக்­க­றி­ஞர்­க­ளும் அவர்­க­ளின் கீழே இளை­ய­வர்­க­ளா­கப் பணி­யாற்­றி­ய­வர்­க­ளும் ஒரே கூரை­யின் கீழே வழக்­கு­க­ளைக் கையாள்­ப­வர்­க­ளும்­தான். தமக்­கி­டையே பேசிப் பிரச்­சி­னை­யைத் தீர்ப்­ப­தற்கு அவர்­க­ளால் முடி­யா­மல் இருப்­ப­தற்கு ஏதோ ஒன்று தடை­யா­க­இ­ருக்­கி­றது. அந்த ஏதோ ஒன்று நிச்­ச­ய­மாக மக்­கள் நலன் அல்ல, அது சுய­ந­லன் மட்­டுமே!

வழக்­கில் மோதும் தலை­வர்­க­ளின் அர­சி­யல் எதிர்­கா­லம் என்­கிற சுய­ந­ல­னைக் கருத்­தில் கொண்டே நீதி­மன்­றத்­தில் அவர்­கள் மோது­கி­றார்­கள். ‘‘இது ஓர் அர­சி­யல் நோக்­கம் கரு­திய வழக்கு’’ என்று முத­ல­மைச்­ச­ரின் சட்­டத்­த­ரணி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தில் எடுத்­துச் சொன்­னார். அது உண்­மை­தான். அதே­ய­ள­வுக்கு இந்த வழக்கை எதிர்­கொண்­டே­தான் ஆவேன் என்று விடாப்­பி­டி­யு­டன் முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் நிற்­ப­தற்­குப் பின்­னா­லும் அதே அர­சி­யல் நோக்­கம்­தான் இருக்­கி­றது என்­பதை அவர் நீதி­மன்­றத்­தில் சொல்­லா­விட்­டா­லும், புரிந்­து­கொள்­வது சிக்­க­லான ஒன்­றல்ல.

மாகாண சபை­யின் பத­விக் காலம் முடிந்த பின்­ன­ரும் புலி வாலைப் பிடித்த கதை­யாக இந்­தப் பிரச்­சினை தொடர்­வ­தற்கு வாய்ப்­பு­கள் அதி­கம் உண்டு. அப்­படி ஒரு நிலை ஏற்­பட்டு, அதுவே இந்­தத் தலை­வர்­க­ளின் அர­சி­ய­லுக்கு எம­னா­கி­வி­டு­வ­தற்கு முன்­பாக மக்­கள் நலன் கருதி இந்­தப் பிரச்­சி­னை­யைச் சுமு­க­மா­கத் தீர்த்­துக் கொண்டு இந்­தப் புத்­தி­சா­லித்­த­னத்­தை­யும் நேரத்­தை­யும் தமி­ழி­னத்­தின் விடி­வுக்­காச் செல­விட இவர்கள் முன்­வ­ர­வேண்­டும்.

https://newuthayan.com/story/10/யாருக்கு-இலா­பம்-இந்த-வழக்­கால்.html

Link to comment
Share on other sites

தமிழரை நடுத்தெருவில் விடவேண்டும் என்பதில் உதயன் பத்திரிகை தெளிவாகத்தான் இருக்கிறது. வழமை போல் முதலமைச்சரைத் தாக்குகிறது. ஆட்சியாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் பணத்திற்கு தமது விசுவாசத்தைக் காட்டுகிறார்கள்.

வடமாகாண சபையின் அமைச்சரவை  தெரிவின் போது  தமிழரசுக்கட்சி  ஒரு லிஸ்ட் கொடுத்தார்கள் , அதில்  டெனீஸ்­வ­ர­னின் பெயரோ , சத்தியலிங்கத்தின் பெயரோ இருக்கவில்லை , தமிழரசுக்கட்சியின் லிஸ்டினைத் தூக்கிவீசிய முதலமைச்சர். மாகாணசபை உறுப்பினர்களிடம் C.V  கேட்டார்.( "சி.வி கேட்ட C.V" என அப்போது பத்திரிகைகளில் கூட செய்தி வந்ததது). அதன் பிரகாரம் அவர் அமைச்சர்களைத் தெரிவு செய்தார். முதலமைச்சருக்கும் தமிழரசுக்கட்சிக்கும் மோதல் போக்கு தொடங்கிய ஆரம்பப புள்ளி இதுவாகத் தானிருக்கும். அன்று  தமிழரசுக்கட்சியின்  லிஸ்ட்டின் படி முதலமைச்சர் செயற்பட்டிருந்தால் இன்றைக்கு பெரும் பாலானோருக்கு  டெனீஸ்­வ­ர­ன் யாரென்று தெரியாமலே போயிருக்கும். அதே  டெனீஸ்­வ­ர­ன் தான் இன்று  முதலமைச்சரை நீதிமன்றம் வரை கூட்டிச் செல்கிறார்.

சாதரண பாடசாலை அதிபர்( உடுவில் மகளிர் கல்லூரி) பிரச்சனையை தீர்க்க முடியாமல் மாணவிகளை சிங்கள அதிபரின் கால்களில் விழச்செய்தவர் தான் இந்த சுமந்திரன் அவருடன் இவரும் சேர்ந்து , கூடவே உதயன் பத்திரிகையும் ........!

இதே அரசியல் கோமாளிக் கூத்துகள் நடக்கும் பகுதியில் தான் ஒரு 14  வயதுச் சிறுமி பள்ளிச் சீருடை இல்லாமல் தற்கொலை செய்கிறாள். தேவையற்ற வழக்குகளுக்கு லட்ச கணக்கில் செலவழிப்பவர்கள் , ஒரு 2 மீற்றர் துணியை எடுத்துக் கொடுத்திருக்கலாம்...

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.