Jump to content

கருணாவின் பிரிவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராம்! காலம் கடந்து வெளிவரும் உண்மைகள்


Recommended Posts

கருணாவின் பிரிவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராம்! காலம் கடந்து வெளிவரும் உண்மைகள்

 

 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரிந்த விடயம் ஊடகவியலாளர் சிவராமிற்கு தெரியும் என இரா.துரைரத்தினம் தனது நூலில் சுட்டிக்காட்டுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான அழகு குணசீலன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் இரா.துரைரத்தினத்தின் செய்திகளின் மறுபக்கம் என்ற நூல் அறிமுகவிழா சுவிஸ் நடைபெற்றுள்ளது.

கருணாவின் பிளவில் மறைக்கப்பட்டுள்ள இன்னும் பல விடயங்கள்.. ( காலம் கடந்து வெளிவரும் உண்மைகள்)

  • கருணா பிரிவதற்கு முன் சிவராம் எதற்காக கொக்கட்டிச்சோலைக்கு சென்றார்?

 

  • நீண்ட கால நண்பனான நூலாசிரியர் இரா.துரைரத்தினத்திடம், சிவராம் கொக்கட்டிச்சோலை பயணத்தை மறைத்தது ஏன்?

 

  • உண்மையில் சிவராமின் நிலை என்ன எனும் பல மர்ம முடிச்சுக்களுக்கு பதில் வழங்குகின்றார் செய்திகளின் மறுபக்கம் நூலின் ஆசிரியர் இரா.துரைரத்தினம்.

இந்த புத்தகத்தில் இன்னும் 29 சிறப்பு அரசியல் தொகுப்புக்கள் உள்ளன.

அவற்றை பெற்றுக் கொள்ள வேண்டுமானால் கீழ் காணும் மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளுங்கள்.

இரா.துரைரத்தினம்
0041795556902
thurair@hotmail.com

 

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

https://www.tamilwin.com/politics/01/192948?ref=imp-news

Link to comment
Share on other sites

கருணா விவகாரத்தில் கிழக்கு பல்கலைக்கழகம் வகித்த பங்கு - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குணசீலன்

 

 

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் கருணாவுக்கும் இடையில் ஏற்பட்ட பிளவிற்கு கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் சிவராம் போன்றவர்கள் காரணமாக இருந்தார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இந்த சந்தேகத்தை இந்நூலாசிரியர் துரைரத்தினமும் எழுப்பியிருக்கிறார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அழகு. குணசீலன் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம் என்ற நூல் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை சுவிட்சர்லாந்து செம்மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய மண்டபத்தில் நடைபெற்ற போது நூல் விமர்சன உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருபவருமான அழகு குணசீலன் இதனை தெரிவித்தார்.

வைத்தியகலாநிதி விவேகானந்தன் ஜெயரூபன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அழகு குணசீலன் தொடர்ந்து உரையாற்றுகையில்...

நாங்கள் ஏற்கனவே அறிந்த செய்திகளில் அவர் சொல்லாமல் விட்ட சம்பவங்களை அல்லது தன்னால் காலச்சூழல் கருதி சொல்ல முடியாமல் போன சம்பவங்களை இப்போது சொல்ல வேண்டும் என்ற மன உறுத்தலின் வெளிப்பாடாகவே இந்த நூலை அவர் எழுத தூண்டிருக்கலாம் என நினைக்கிறேன்.

இது அவரின் நேர்மையான போக்கை வெளிப்படுத்துகிறது. இந்த நூலை வசித்த போது அவர் மீது எனக்கிருந்த விமர்சனங்கள் இல்லாமல் போய்விட்டது.

கருணாவின் பிளவு, அந்த பிளவுக்கு பின்னணியில் இருந்தவர்கள், இந்த பிளவின் பின்னணியில் சிவராமிற்கு இருந்த பங்கு, கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு இருந்த பங்கு புலம்பெயர் நாடுகளில் இருந்தவர்கள் வழங்கிய துரோகி பட்டங்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம், என பல விடயங்களை இந்த நூலில் உள்ளடக்கி இருக்கிறார்.

இனந்தெரியாத நபர்கள் என தான் செய்திகளில் சொன்ன விடயங்கள் யார் அந்த இனந்தெரியாதவர்கள் என்பதை இந்த சம்பவங்களை விபரிக்கும் போது தெளிவாக சொல்கிறார்.

இந்த கொலைகளை விடுதலைப்புலிகள் செய்தார்கள், இந்த கொலைகளை ஏனைய இயக்கங்கள் செய்தார் என அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு ஆதாரத்துடன் அந்நம்பவங்களை விபரிக்கின்றார்.

ஒரு பத்திரிகையாளன் காலம் கடந்த சூழலில் நடந்து வந்த பாதையை திரும்பி பார்த்து தன்னை சுயவிமர்சனம் செய்கிறார்.

நான் இந்த செய்தியை மக்களுக்கு சொல்லியிருக்க வேண்டும், இனத்தின் நன்மைகருதி இதனை சொல்லாமல் விட்டிருக்கிறேன். பத்திரிகையாளன் என்ற நிலையில் இது தவறு என தன்னை சுயவிமர்சனம் செய்கிறார். இந்த சுயவிமர்சனம் நேர்மையான பத்திரிகையாளனுக்கு அவசியமாகும்.

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் பிளவு என்பது தொடர்ந்து வந்திருக்கிறது. ஜி.ஜி.பொன்னம்பலம்- செல்வநாயகம், பிரபாகரன் - உமாமகேஸ்வரன், பிரபாகரன் மாத்தையா, யோகி, கருணா என தொடர்ந்து பின்னர் கருணா பிள்ளையான் பிளவு என்று தொடர்கிறது.

ஏனைய இயக்கங்களுக்கும் இதேநிலைதான் ஏற்பட்டிருக்கிறது. புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, ஈரோஸ் என அனைத்து இயக்கங்களும் பிளவு பட்டிருக்கின்றன. இந்த பிளவுகள் என்பது தமிழ் அரசியலில் புதிய விடயங்கள் அல்ல.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப்புலிகள் தான் உருவாக்கினார்கள் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அல்ல கிழக்கில் இருந்த பத்திரிகையாளர் சங்கம் தான் இந்த உருவாக்கத்தின் பின்னணியில் இருந்தது. பின்னர் 2004ல் தான் விடுதலைப்புலிகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள் என்ற விடயத்தை இந்நூல் விளக்குகிறது.

விடுதலைப்புலிகள் தேர்தல் அரசியலை நம்பியிருந்தவர்கள் அல்ல. தமது இலக்கை தேர்தல் அரசியல் மூலம் அடையலாம் என அவர்கள் ஒரு போதும் எண்ணியதில்லை. இது விடுதலைப்புலிகளின் அரசியலை தெரிந்தவர்களுக்கு புரியும் என அழகு குணசீலன் தெரிவித்தார்.

இந்த நூல் அறிமுக விழாவில் விமர்சன உரையை ஊடகவியலாளர் சண்.தவராசாவும் நிகழ்த்தினார்.

நூல் அறிமுக உரையினை மார்க்கண்டு ஜெயமோகனும் சிறப்புரைகளை ஐ.பி.சி தொலைக்காட்சி செய்திப் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர் பிரேம் சிவகுரு, தமிழ் ஆரவலர் கிருஷ;ணா அம்hலவாணர், கவிஞர் கல்லாறு சதீஸ் போன்றவர்கள் நிகழ்த்தினார்கள்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/launch/80/105979?ref=imp-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் இந்த நூல் வாங்கினால் ரதிக்கும் சேர்த்து வாங்கவும் 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2018 at 2:50 PM, ரதி said:

கிருபன் இந்த நூல் வாங்கினால் ரதிக்கும் சேர்த்து வாங்கவும் 

இரா. துரைரத்தினம் உண்மைகளை எழுதுவார் என்று நம்பவில்லை. என்றாலும் பெளசரிடம் கேட்டுப்பார்க்கின்றேன். இருந்தால் உங்களுக்கும் ஒன்றை வாங்குகின்றேன்?

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2018 at 2:50 PM, ரதி said:

கிருபன் இந்த நூல் வாங்கினால் ரதிக்கும் சேர்த்து வாங்கவும் 

ஒன்று பெளசரிடம் இருந்து வாங்கினேன்! ஆனால் திறந்தும் பார்க்கவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, கிருபன் said:

ஒன்று பெளசரிடம் இருந்து வாங்கினேன்! ஆனால் திறந்தும் பார்க்கவில்லை!

எனக்கும் சேர்த்து ஒரு புத்தகம்  வேண்டவெல்லோ சொன்னனான்  😮
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

எனக்கும் சேர்த்து ஒரு புத்தகம்  வேண்டவெல்லோ சொன்னனான்  😮
 

10 பவுண்ஸ்! பொல்லால அடிச்ச காசு! படிக்கிற உத்தேசம் இல்லையென்பதால் புத்தம் புதியதாக உங்களுக்கே தரலாம். தனிமடலில் எங்கு அனுப்புவது என்று சொல்லுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

10 பவுண்ஸ்! பொல்லால அடிச்ச காசு! படிக்கிற உத்தேசம் இல்லையென்பதால் புத்தம் புதியதாக உங்களுக்கே தரலாம். தனிமடலில் எங்கு அனுப்புவது என்று சொல்லுங்கள்!

இப்ப பாருங்க..

அங்க கொடுங்க.... இங்க கொடுங்க எண்டு விடுவா கதை.

நானும், மொளகா தூள், கேக்கிறா எண்டு... கட்டிக், காவி ஊரில இருந்து கொண்டு வந்தால், கிருபனிடம் கொடுங்கோ, அவர் கொண்டாந்து தருவார் எண்டு போட்டாவே ஒரு போடு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

இப்ப பாருங்க..

அங்க கொடுங்க.... இங்க கொடுங்க எண்டு விடுவா கதை.

நானும், மொளகா தூள், கேக்கிறா எண்டு... கட்டிக், காவி ஊரில இருந்து கொண்டு வந்தால், கிருபனிடம் கொடுங்கோ, அவர் கொண்டாந்து தருவார் எண்டு போட்டாவே ஒரு போடு. 

😲

புத்தகத்தை உங்களிடம் கொடுக்கச் சொல்லி கேட்டாலும் கேட்பார்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

இப்ப பாருங்க..

அங்க கொடுங்க.... இங்க கொடுங்க எண்டு விடுவா கதை.

நானும், மொளகா தூள், கேக்கிறா எண்டு... கட்டிக், காவி ஊரில இருந்து கொண்டு வந்தால், கிருபனிடம் கொடுங்கோ, அவர் கொண்டாந்து தருவார் எண்டு போட்டாவே ஒரு போடு. 

எல்லாம் ஒரு பாதுகாப்பு தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

10 பவுண்ஸ்! பொல்லால அடிச்ச காசு! படிக்கிற உத்தேசம் இல்லையென்பதால் புத்தம் புதியதாக உங்களுக்கே தரலாம். தனிமடலில் எங்கு அனுப்புவது என்று சொல்லுங்கள்!

சரியான கஞ்சூசாய் இருக்கிறீங்கள்... இந்த புத்தகம் கட்டாயம் நான் வாசிக்க வேண்டும் அதான் மீரா தன்ட  வீட்டை கூப்பிட்டு இருக்கிறார் தானே! வரும் போது கொண்டு வாங்கோ 😉
 

20 hours ago, Nathamuni said:

இப்ப பாருங்க..

அங்க கொடுங்க.... இங்க கொடுங்க எண்டு விடுவா கதை.

நானும், மொளகா தூள், கேக்கிறா எண்டு... கட்டிக், காவி ஊரில இருந்து கொண்டு வந்தால், கிருபனிடம் கொடுங்கோ, அவர் கொண்டாந்து தருவார் எண்டு போட்டாவே ஒரு போடு. 

உங்களை எல்லாம் நம்பி மனிசன் மி. தூள் வேண்ட வருவானே ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சரியான கஞ்சூசாய் இருக்கிறீங்கள்... இந்த புத்தகம் கட்டாயம் நான் வாசிக்க வேண்டும் அதான் மீரா தன்ட  வீட்டை கூப்பிட்டு இருக்கிறார் தானே! வரும் போது கொண்டு வாங்கோ 😉
 

உங்களை எல்லாம் நம்பி மனிசன் மி. தூள் வேண்ட வருவானே ☺️

உங்களை எல்லாம் நம்பி மனிசன் மி. தூள் வேண்ட வருவானே ☺️..

நீங்கள் எதோ மீ ட்டு (Me Too) அமைப்பை பற்றி எதோ சொல்கிறீர்கள் என்று நினைச்சிட்டேன்  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.