Jump to content

‘அலி­பாபா டாட் காம்’ நிறுவனர் ஜாக் மா ஓய்வு பெறுகிறார் சீனாவின், ‘நம்பர் – 1’ பணக்காரர்


Recommended Posts

large_1536433828.jpg

பீஜிங்:வலை­த­ளங்­களில் பல்­வேறு பொருட்­களை விற்­பனை செய்­யும், ‘அலி­பாபா டாட் காம்’ நிறுவ­னத்தை நிறு­விய, ஜாக் மா, நாளை, தன், 54வது பிறந்த நாளன்று, தலைமை செயல் அதி­காரி பத­வி­யில் இருந்து ஓய்வு பெறு­கி­றார்.


ஆங்­கில பேரா­சி­ரி­யர்

இவர், சீனா­வில், மிக­வும் ஏழ்­மை­யான குடும்­பத்­தில் பிறந்து, 20 ஆண்டு­களில், ‘நம்­பர் – 1’ பணக்­கா­ர­ராக உயர்ந்­த­வர். இவ­ரது தந்தை, மாதம், 40 டாலர் ஓய்­வூ­தி­யத்­தில், குடும்­பத்தை நடத்­தி­ய­வர்.ஹங்சோ ஆசி­ரி­யர் கல்லுா­ரி­யில் பட்­டக் கல்வி முடித்து, ஆங்­கில பேரா­சிரி­ய­ராக பணி­புரிந்து வந்த ஜாக் மாவுக்கு, இணை­யத்­தின் அறி­மு­கம், புதிய வாசலை திறந்­தது.
ஆசி­ரி­யர் பணியைஉதறி, பின் தன் வீட்­டி­லேயே, ஒரு கம்ப்­யூட்டர் உத­வி­யு­டன், வலை­தளத்தில், பொருட்­களை வாங்கி, விற்­கும் சிறிய நிறு­வ­னத்தை துவக்­கி­னார்.

அவர் மீதுள்ள நம்­பிக்­கை­யில், 1999ல், அமெ­ரிக்க துணி­கர முத­லீட்டு நிறு­வ­னம் ஒன்று, 60 ஆயிரம் டாலர் நிதி­யு­தவி அளித்­தது.இதை­ய­டுத்து, ஜாக் மா, நண்­பர்­கள் சில­ரு­டன் இணைந்து, ‘அலி­பாபா’ என்ற வலை­தள சந்தை நிறு­வ­னத்தை துவக்கி­னார்.அதில் இருந்து அவர் வாழ்க்­கையே மாறி­யது. இன்று, உல­கில் பெரும் வெற்றி பெற்ற சில நிறு­வ­னங்­க­ளுள் ஒன்­றாக, 42,088 கோடி டாலர்மதிப்­பு­டன், அலி­பாபா விளங்­கு­கிறது.

ஜாக் மாவின் சொத்து மதிப்பு, 3,660 கோடி டாலர், அதா­வது, 2.56 லட்­சம் கோடி ரூபாய்.ரிலை­யன்ஸ் தலை­வர் முகேஷ் அம்­பா­னிக்கு முன், ஆசி­யா­வின்,‘நம்­பர் – 1’ பணக்­கா­ரர் என்ற பெரு­மை­யும், ஜாக் மாவுக்கு கிடைத்­தது.


கல்வி

‘வெளிப்­ப­டைத் தன்மை, துணிச்­ச­லான முயற்சி, புது­மை­யான கண்­டு­பி­டிப்­பு­களில் உள்ள ஆர்­வம் ஆகி­யவை தான், ஜாக் மாவின் வெற்­றிக்கு கார­ணம்’ என, அவர் நண்பர்கள் கூறு­கின்­ற­னர்.
‘‘ஒரு­வர், சம்­பா­தித்த பணம் அவ­ருக்கு மட்­டு­மின்றி, சமு­தா­யத்­திற்­கும் பயன்­பட வேண்­டும்,’’ எனக் கூறும் ஜாக் மா,ஓய்­வுக்கு பின், கல்விமுன்­னேற்­றத்­திற்கு பாடு­பட திட்­ட­மிட்­டுள்­ளார்.

உள்­ளு­ணர்வு

முதன் முத­லாக, இணை­யம் பயன்­ப­டுத்­திய போதும், விசைப்­ப­ல­கையை தொட்­ட­போ­தும், அவற்­றில், உல­கையே மாற்­றக் கூடிய ஏதோ ஒரு சக்தி இருப்­ப­தாக, என் உள்­ளு­ணர்வு கூறி­யது.

ஜாக் மா, நிறு­வ­னர், அலி­பாபா டாட் காம்

http://business.dinamalar.com/news_details.asp?News_id=43310

வர்த்தக சகாப்தம் முடிவுக்கு வருகிறது.. அலிபாபாவிலிருந்து விலகினார் ஜாக் மா!

வர்த்தக உலகத்தின் ஒரு சகாப்தம் முடிவுக்கு வரப்போவதாக ஊடகங்கள் அனுமானித்துக் கொண்டிருந்த நிலையில், ஆன் லைன் வர்த்தகத்தில் அனாயாசமான சாதனைகளை நிகழ்த்திய அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா பதவி விலகப் போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது உலகளவில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் கோடீசுவர வர்த்தகராக அவதாரம் எடுத்துள்ள ஜாக் மா, அலிபாபா நிறுவன இயக்குநர்களில் ஒருவராகத் தொடர்வார் எனத் தெரிவித்துள்ள நியூயார்க் டைம்ஸ், நேரத்தையும், செல்வத்தையும் கல்வி அறக்கட்டளையில் செலவு செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

பிலà¯à®à¯à®à¯à®¸à¯ à®à®©à¯à®¤à®¾à®ªà®¿

பில்கேட்ஸ் அனுதாபி

ஜாக் மாவை அதிகம் கவர்ந்த மனிதர்களில் பில்கேட்சுக்கு எப்போதும் இடமுண்டு. பில்கேசிடம் கற்றுக்கொள்ள ஏராளமான நல்ல விஷயங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தாம் எப்போது பணக்காரனாகவே இருக்க முடியாது என்ற இயற்கையின் யதார்த்தத்தைப் புரிந்து வைத்துள்ள ஜாக், ஆனால் முன்னதாகவே ஓய்வு பெற முடியும் என்கிறார். மீண்டும் ஆசிரியர் பணிக்கு திரும்புவதாகவும், அலிபாபாவை விட அது நிறைவைத் தருவதாகவும் கூறியுள்ளார்.

தà¯à®£à®¿à®à®° à®®à¯à®¯à®±à¯à®à®¿

துணிகர முயற்சி

2013 ஆம் ஆண்டில் அலிபாபாவில் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவியேற்ற ஒரு ஆங்கில ஆசிரியரால், உலகச் சந்தையை வெல்ல முடிந்திருக்கிறது. ஆன்லைன் சில்லறை வர்த்தகம், ஹாலிவுட் திரைப்படம், பணப்பரிவர்த்தனைகளில் எடுத்த துணிகரமான முயற்சி ஒரே ஆண்டில் அலிபாபாவுக்கு 400 பில்லியன் டாலர்களை ஈட்டித் தந்தது.

à®à®¾à®à¯ மாவின௠à®à®µà®¤à®¾à®°à®®à¯

ஜாக் மாவின்

அவதாரம் 54 வயதை எட்டியுள்ள ஜாக் மா 40 பில்லியன் டாலருக்கு சொந்தக்காரராக வளர்ந்தார். ஏறக்குறைய ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்னர்த் தற்செயலாக அலிபாபா நிறுவனத்துக்குள் நுழைந்தார். இன்று சீனாவின் அங்கீகரிக்கப்பட்ட பெரிய முதலாளியாக வளர்ந்துள்ளார். இருப்பினும் அவர் பணத்தைப் பெரும் பொருட்டாகக் கருதியதில்லை.

வரà¯à®¤à¯à®¤à®à®¤à¯ தநà¯à®¤à®¿à®°à®®à¯

வர்த்தகத் தந்திரம்

ஜாக் மாவின் இந்த அதிர்ச்சிகரமான முடிவு அலிபாபா நிறுவன பங்குதாரர்களை அசைத்துப் பார்த்துள்ளது. நிறுவனத்தின் எதிர்காலம் குறித்துப் பேசிய ப்ரோக் சில்வர்ஸ், ஜாக் மாவின் வர்த்தகத் தந்திரம் நிறுவனத்தின் அடித்தளத்தை வலுவாக்கி இருப்பதாகக் கூறினார். இதேபோல் சீன நிறுவனங்களிலேயே அலிபாபாவின் நிர்வாகக் குழு வலுவானது என்றார்.

à®à®¾à®à¯ மா à®à®±à®à¯à®à®à¯à®à®³à¯

ஜாக் மா அறக்கட்டளை

பிரபலமான சில மனிதர்களைப் பயமுறுத்திய கல்வி ஜாக் மாவையும் விடவில்லை. சீனா தேசிய பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது 2 தேர்வுகளில் தோல்வியடைந்திருக்கிறார் ஜாக். தாம் நல்ல மாணவனாக இல்லையென்றாலும், முன்னேறியிருப்பதாகக் கூறுகிறார். எப்போதுமே தாம் கற்றுக்கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், ஜாக் மா அறக்கட்டளை மூலம் சேவையைத் தொடங்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்.

à®à®®à¯à®°à®¿à®à¯à®à®¾à®µà¯à®à¯ à®à®µà®°à¯à®¨à¯à®¤ à®à®¾à®à¯

அமெரிக்காவைக் கவர்ந்த ஜாக்

அலிபாபாவின் தலைவராக இருந்தபோது ஜாக் மாவின் வழிகாட்டல் உலகளாவிய வளர்ச்சிக்கு உதவியது. அவரது அபரிமிதமான வளர்ச்சியும் புத்திசாலித்தனமான உத்திகளும் அமெரிக்க அதிபரைக் கவர்ந்தது. அதனால் தேர்தல் முடிந்ததும் முதன் முதலாக ஜாக் மாவை சந்தித்தார் டொனால்டு டிரம்ப்.

முகேஷ் அம்பானி

ஆசிய கோடீஸ்வரர் பட்டியலில் இருந்து சில மாதங்கள் முன்பு முகேஷ் அம்பானி இவரைப் பின்னுக்கு தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://tamil.goodreturns.in/world/jack-ma-step-down-s-from-alibaba-goes-back-teaching-012577.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் அலிபாபா அமேசின் போன்றவை கடந்த இருபது  வருட காலத்திலை பல சிறிய பெரிய ஸ்டோர்களை அழித்துஒழிப்பு செய்த வரிசை பெரியது அதில்  (woolworths) வூல்வோர்த்  (Toys“R”Us) கொமெட் போன்ற மெகா ஜம்பவான்கலையே வீட்டுக்கு அனுப்பிய ஆட்கள் இன்னும் மிஞ்சி இருக்கும் pcவேர்ல்ட் காரீரிஸ் போன்றவை செக்மேட் புள்ளியில் நிக்கினம் . இந்த நேரம் இந்தாள் திரும்பவும் படிப்பிக்க போறன் எண்டு ஒத்தைக்காலில்  நிக்கிது என்னை பொறுத்தவரை உலகிலே மிகவும் கஷ்ட்டமான தொழில் பாடம் சொல்லி கொடுப்பது .? எதோ பிழையா நடக்கபோகுது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.