Jump to content

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் - கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஒசாகா, செரீனா அதிர்ச்சி தோல்வி


Recommended Posts

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் - கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஒசாகா, செரீனா அதிர்ச்சி தோல்வி

 

அமெரிக்கா ஓபன் டென்னிசின் இறுதிப் போட்டியில் நட்சத்திர வீராங்கணை செரீனா வில்லியம்சை வீழ்த்தி ஜப்பான் வீராங்கனை ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார். #USOpen2018 #SerenaWilliams #NaomiOsaka

 
அமெரிக்கா ஓபன் டென்னிஸ் - கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஒசாகா, செரீனா அதிர்ச்சி தோல்வி
 
நியூயார்க்:
 
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
 
இதில், நடைபெற்ற பெண்களுக்கான அரையிறுதியில் லாத்வியாவை சேர்ந்த செவாஸ்டோவாவை வீழ்த்தி அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ் இறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரையிறுதி போட்டியில், அமெரிக்காவின் மாடிசன் கெய்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா.
 
 
இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 6-2, 6-4 எனும் நேர் செட்டில் செரீனாவை வீழ்த்தி நவோமி ஒசாகா வெற்றி பெற்றார். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஜப்பானியர் எனும் பெருமை பெற்றுள்ளார் ஒசாகா. 
 
இந்த போட்டியின் போது செரினாவுக்கும் நடுவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு சர்ச்சையுடன் முடிந்தது. 
 
இரண்டாவது செட்டை செரினா விளையாடும் போது அவரது பயிற்சியாளர் கைகளால் அடிக்கடி சைகை செய்தார். அதனை விதிமீறல் என நடுவர் கண்டித்தார். ஆனால் செரினா, தனது பயிற்சியாளர் கைகளால் வெற்றி பெறு என என்னை நோக்கி தம்ஸ் அப் மட்டுமே காட்டினார், ஏமாற்றி வெற்றி பெருவதற்கு பதில் நான் தோற்றுவிட்டே செல்வேன் என பதிலளித்தார். ஆனால், அதை நடுவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
 
பின்னர், அவரது டென்ன்ஸ் பேட்டை ஓங்கி தரையில் அடித்து கோபத்தை வெளிப்படுத்தினார். இது மீண்டும் விதிமீறலாகி ஆட்டத்தில் செரினாவின் புள்ளி குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மைதானத்திலேயே கடினமான வார்த்தைகளை பயன்படுத்த அவரை அமெரிக்க ஓபன் டென்னிஸ் அதிகாரிகள் வந்து சாந்தப்படுத்தினர்.
 
201809090718577476_1_535._L_styvpf.jpg
 
இந்த சர்ச்சைகளுக்கு பிறகு இரண்டாவது செட்டை தொடர்ந்த செரினா 6-4 என ஒசாகாவிடம் பறிகொடுத்தார். 
 
தனது முன்மாதிரி செரினா தான் என அடிக்கடி கூறிய ஒசாகா, தற்போது அதே செரினாவை வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தட்டிச்சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #USOpen2018 #SerenaWilliams #NaomiOsaka

https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/09051716/1190085/Japanese-tennis-player-Naomi-Osaka-beats-American.vpf

Link to comment
Share on other sites

அமெரிக்க ஓபன் மகளிர் இறுதியாட்டத்தில் செரீனாவால் பரபரப்பு

 

 
 

அமெரிக்க ஓபன்தொடரின் மகளிருக்கான இறுதியாட்டத்தில் நடுவராக பணியாற்றியவர் பெண்களிற்கு எதிரானவர் என குற்றம்சாட்டியுள்ள செரீனா வில்லியம்ஸ் ஆண்களை விட தன்னை நடுவர் கடுமையாக தண்டித்துள்ளார் என குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க ஓபன் தொடரின் மகளிருக்கான இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை நயோமி ஒசாகாவிடம் தோல்வியடைந்துள்ள நிலையிலேயே செரீனா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சனிக்கிழமை போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தவேளை செரீனா விதிமுறைகளிற்கு மாறாக விளையாடினார் என நடுவர் கார்லோஸ் ரமோஸ் குற்றம்சாட்டியிருந்தார்.

போட்டியின் போது பயிற்றுவிப்பாளரிடமிருந்து பயிற்சி அறிவுரையை பெற்றார்,ரக்கெட்டை உடைத்தார், நடுவரை திருடன் என அழைத்தார் என நடுவர் செரினா மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார்.

இவற்றின் காரணமாக செரீனா இறுதிப்போட்டியில் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

எனினும் இதன் பின்னர் செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ள செரீனா நடுவர் பெண்களை விட ஆண்கள் மீது அனுதாபம கொண்டவர் பெண்களிற்கு எதிரானவர் என தெரிவித்துள்ளார்

serena5.jpg

நான் பல போட்டிகளில் ஆண்கள் இதனை விட மோசமாக நடுவரை அழைப்பதை பார்த்திருக்கின்றேன், என செரீனா தெரிவித்துள்ளார்.

நான் இங்கு பாலியல் சமத்துவம் மற்றும் பெண் உரிமைகளிற்காக குரல்கொடுக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்கள் தன்னை திருடன் என தெரிவித்தமைக்காக அவர் ஒருபோதும் அவர்களை தண்டிக்கவில்லை என செரீனா தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/40016

 

 

Link to comment
Share on other sites

பெண்ணியம் பேசும் செரினா வில்லியம்ஸ்... இதுதான் உங்கள் ஸ்போர்ட்ஸ் `வுமன்’ஷிப்பா? #SerenaWilliams #USOpen

 

செரினாவின் இந்த ஆவேச செயல், பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. சர்வதேச ஊடகங்கள், அவர் எப்போதுமே 'தான் பாதிக்கப்பட்டவள்’ என்ற பிம்பத்தைத் தனக்குள் வைத்துக்கொண்டு திரிகிறார்.

பெண்ணியம் பேசும் செரினா வில்லியம்ஸ்... இதுதான் உங்கள் ஸ்போர்ட்ஸ் `வுமன்’ஷிப்பா? #SerenaWilliams #USOpen
 

டந்த சனிக்கிழமை, செரினா வில்லியம்ஸுக்கு அப்படி ஒருநாளாக அமையும் என நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார். 

2018-ம் ஆண்டின் யு.எஸ் ஓப்பன் இறுதிப் போட்டி... செரினா வில்லியம்ஸ், ஜப்பானைச் சேர்ந்த நோமி ஒசகா (Naomi Osaka) மோதுகிறார்கள். இடைவேளையின்போது, தன் பயிற்சியாளருடன் (பாட்ரிக் மெளரடொக்ளோவ்) சைகை மொழியில் செரினா பேசினார் என எச்சரித்தார், நடுவரான கர்லோஸ் ரமொஸ் (Carlos Ramos). டென்னிஸ் விதிமுறைப்படி, போட்டிக்கிடையே, சம்பந்தப்பட்ட வீரருக்கும் பயிற்சியாளருக்கும் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் உடல்மொழிகளும் இருக்கக் கூடாது. எனவேதான், செரினாவுக்கு எச்சரிக்கை அளித்து, அவரின் ஆட்டப்புள்ளிகளையும் எதிராளிக்கு அளித்தார் ரமோஸ்.

செரினா

 

 

இதனால் கோபமடைந்த செரினா, “ஏமாற்றுவதைவிட ஆட்டத்தில் தோற்பது மேல் என நினைப்பவள் நான். நீங்கள் உயிருடன் இருக்கும் வரை, இனி நான் விளையாடும் மைதானத்தில் நிச்சயம் இருக்க மாட்டீர்கள். நீங்கள் பொய் கூறுகிறீர்கள். நீங்கள் எப்போது என்னிடம் மன்னிப்பு கேட்கப்போகிறீர்கள்? மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். என்னிடம் கேளுங்கள். மன்னித்துவிடு எனக் கேளுங்கள். என் புள்ளிகளை நீங்கள் திருடிவிட்டீர்கள். நீங்கள் ஒரு திருடனும்” என ஆவேசமாகக் கத்தினார். தன் டென்னிஸ் ராக்கெட்டையும் வீசி எறிந்தார்.

 

 

இதன்மூலம், விளையாட்டின் மூன்று விதிமுறைகளை மீறியிருக்கிறார் என 17,000 டாலர் அபராதம் விதித்திருக்கிறது யு.எஸ் டென்னிஸ் அமைப்பு. விளையாட்டின்போது பயிற்சியில் ஈடுபட்டதால் 4,000 டாலர்களும், நடுவரிடம் தகாத வார்த்தைகள் பயன்படுத்தியதால் 10,000 டாலர்களும், டென்னிஸ் ராக்கெட்டை உடைத்ததால் 3,000 டாலர்களும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளன.

செரினா

இதுகுறித்து செரினா வில்லியம்ஸின் பயிற்சியாளர் பாட்ரிக் மெளரடொக்ளோ, “நான் நேர்மையாக ஒப்புக்கொள்கிறேன். செரினாவுக்குப் பயிற்சி அளிக்கவே முயன்றேன். ஆனால், அவர் என்னைப் பார்த்ததுபோலத் தெரியவில்லை. அதனால்தான், அவருக்கு இந்த விஷயம் பற்றி தெரியவில்லை. ஆனால், ஒசாகாவின் பயிற்சியாளரும் அவருக்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தார்” எனத் தெரிவித்தார்.

அதன் பிறகு, சனிக்கிழமை இரவு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய செரினா வில்லியம்ஸ், ``பெண்களின் உரிமைகளுக்கும் அவர்களைச் சமமாக நடத்துவதற்கும் பெண்கள் சம்பந்தமான அனைத்து விஷயங்களுக்கும் நான் போராடி வருகிறேன். அவரைத் திருடன் என அழைத்தது, என்னை அவர் நடத்தியவிதமும், பாலியல் பாகுபாடு கொண்ட வகையில் இருந்ததற்குமே. காரணம், எந்த ஆண்களையும் அவர் இப்படி நடத்தியதில்லை. ஆனாலும், நான் தொடர்ந்து பெண்களுக்காகவும் சம உரிமைகளுக்காகவும் போராடுவேன். இந்தச் சம்பவம், இனிவரும் டென்னிஸ் வீராங்கனைகளுக்கு நற்பாதையை அமைக்கும் என நினைக்கிறேன்” என்றார்.

 

 

செரினா

செரினாவின் இந்த ஆவேச செயல், பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. சர்வதேச ஊடகங்கள், "அவர் எப்போதுமே 'தான் பாதிக்கப்பட்டவள்' என்ற பிம்பத்தை தனக்குள் வைத்துக்கொண்டு திரிகிறார். அதனால்தான் மிகவும் கடுமையாக நடந்துகொள்கிறார்" எனக் குற்றம் சாட்டுகிறது. மற்றொருபுறம், அந்த நடுவர் எப்போதுமே இப்படித்தான் என்று விளையாட்டு வீரர்களை அவர் நடத்தும் விதம் பற்றி பலரும் மனவருத்தத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஒருமுறை பிரபல விளையாட்டு வீரர் ரபேல் நாடல், 'நடுவர் என்பவர் ஒரு போட்டியை அலசி ஆராய வேண்டுமே தவிர, வீரர்கள் மீதே குறியாக இருக்கக் கூடாது. அவர் மீது நான் மிகவும் மரியாதை வைத்திருக்கிறேன். அதேபோல அவரும் இருந்தால் நன்றாக இருக்கும்’ என வருந்தியுள்ளார்.

இங்கு விஷயம் அதுவல்ல செரினா... 23 முறை கிரான்ட்ஸ்லாம் பட்டம் வென்ற 36 வயதாகும் நீங்கள், பல மைதானங்களையும் நடுவர்களையும் பார்த்திருப்பீர்கள். ஒவ்வொரு போட்டியிலும் நிச்சயம் பல அனுபவங்கள் கிடைத்திருக்கும். அவ்வளவு சீனியரான நீங்கள், இந்த விஷயத்தைச் சற்றே நிதானமாகக் கையாண்டிருந்தால், பெண் உரிமைக்கு நிச்சயம் நியாயம் சேர்த்திருப்பீர்கள். ஆனால், ஒரு நடுவரைத் தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறீர்கள். இது நீங்கள் கூறும் 'வருங்கால டென்னிஸ் வீராங்கனைகளுக்கு' எத்தகைய தவறான முன்னுதாரணமாக அமையும்? நம் நேர்மையைச் சந்தேகிக்கும்போது நிச்சயம் கோபம் வரும்தான். அந்தக் கோபத்தை விளையாட்டில் காண்பித்து, நீங்கள் பேசும் பாலின பாகுபாட்டை உடைத்திருக்கலாமே? தற்போது, செய்திருக்கும் செயலால், முன்பு நீங்கள் நியாயமாகப் பேசிய பெண்ணியமும் கேள்விக்குறியாகி இருப்பதை உணரமுடிகிறதா செரினா?

https://www.vikatan.com/news/sports/136542-controversy-over-serenas-behaviour-is-it-right-to-violate-sportsmanship.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.