Jump to content

வட கொரிய ராணுவ அணிவகுப்பு சொல்லப்போவது என்ன?


Recommended Posts

வட கொரிய ராணுவ அணிவகுப்பு சொல்லப்போவது என்ன?

தனது 70ஆவது ஆண்டை கொண்டாடும் விதமாக வட கொரிய மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பையும், பெரியளவிலான விளையாட்டுக்களையும் நடத்தவுள்ளது.

வட கொரியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

வட கொரியாவின் ஆயுத கிடங்குகள் குறித்தும், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களற்ற நிலையை உருவாக்குவதாக வட கொரியா கொடுத்த உறுதிமொழியின் நிலை குறித்தும் தெரிந்து கொள்ள இந்த அணிவகுப்பு நெருக்கமாக கண்காணிக்கப்படும்.

அதிக அளவிலான பாலிஸ்டிக் ஏவுகணைகள் அணிவகுப்பில் கொண்டுவரப்பட்டால், பிற நாடுகளிடையே அது கோபத்தை ஏற்படுத்தலாம்.

அதிக எண்ணிக்கையிலான ஜிம்னாஸ்டிக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் செய்யும் நடன அசைவுகள் கொண்டு பரப்புரைகள் மேற்கொள்ளப்படும்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜான் உன், வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக ஜூன் மாதம் சந்தித்துக் கொண்டதிலிருந்து வட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான உறவு நல்ல நிலையில் இல்லை.

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை ஒழிப்பது குறித்து இருநாட்டு அதிபர்களும் தெளிவில்லாத ஒரு ஒப்பந்ததில் கையெழுத்திட்டனர்.

அது சிறப்பானதொரு செயலாக இருந்தபோதிலும் அதில் நேரம் மற்றும் செயல்முறை விளக்கங்கள் குறித்து எந்த ஒரு விளக்கமும் இல்லை.

உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் சந்திப்புகள் தொடர்ந்து நடைபெற்றன. மேலும் 1950களில் நடந்த கொரிய போரில் கொல்லப்பட்ட அமெரிக்க படைகளின் எஞ்சியவற்றை வடகொரியா திருப்பிக் கொடுத்த நல்லிணக்க செய்கைகளும் நடந்தேறின.

ஆனால், சமீபத்தில் நடைபெறுவதாக இருந்த மைக் பாம்பேயோவின் வட கொரிய பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. பேச்சுவார்த்தைகளை தள்ளிபோடுவதாக இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தினர்

மேலும் அமெரிக்காவுக்கு எதிராக நடந்துகொள்ள வடகொரியாவுக்கு அழுத்தம் கொடுப்பதாக சீனா மீது டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

இந்த ராணுவ அணிவகுப்பு, வட கொரியாவின் நேர்மையும், ஏவுகணை பயன்பாட்டை நிறுத்தி வைத்ததாக கொடுத்த வாக்குறுதியையும் சந்தேகத்தில் ஆழ்த்தும் என கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வட கொரியாபடத்தின் காப்புரிமைREUTERS

இதற்கு முந்தைய அணிவகுப்பில், டாங்கிகள், ஏவுகணைகள் மறும் பல்லாயிரக்கணக்கான ராணுவத்தினர் கலந்து கொண்டனர். மேலும் இதில் எத்தனை சிப்பாய்கள் கலந்துகொண்டார்கள், எத்தனை ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் காட்டிலும் என்ன மாதிரியான ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதே முக்கியம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கு மிக முக்கியமாக, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் ஏதேனும் பயன்படுத்தப்படுகின்றவா என்றும், எத்தனை ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் கவனிக்கப்படும் என வட கொரிய செய்திகளின் ஆய்வாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

அமெரிக்கா வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகள் குறித்தே சர்வதேச அளவில் கவனங்கள் இருக்கும்.

"ஏவுகணை பயன்பாட்டை விட்டுவிடுவது போன்ற எண்ணம் வட கொரியாவுக்கு இருப்பதாக தெரியவில்லை" என அவர் தெரிவித்தார்.

அணிவகுப்பில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தவில்லை என்று போலியாக நடிக்காமல் இருந்தால் அது ஒரு நல்ல அறிகுறி என்று தெரிவித்த அவர், அது அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை உடைந்து போகிறது என்பதை காட்டும் என தெரிவித்தார்.

என்ன மாதிரியான விளையாட்டுகள் இருக்கும்?

இம்மாதிரியான பெரியளவிலான ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சி 2013ஆம் ஆண்டு நடைபெற்றது.

வட கொரியாவின் வரலாற்று குறித்து சொல்லும் இந்த வருட விளையாட்டுக்கள் `தி க்ளோரியஸ் கவுண்டி (Glorious county)` என்று பெயரிடப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சிபடத்தின் காப்புரிமைREUTERS Image caption2013ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி

செட்பம்பர் மாதம் முழுவதும் நடைபெறவுள்ள இந்த விளையாட்டுகள் மிகப்பெரியதாக இருக்கும் என இரண்டு வாரத்தில் எடுக்கப்பட்ட செயற்க்கைக்கோள் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காலங்களில் நடைபெற்ற விளையாட்டுகள், பெரியதொரு திடலில் பல ஜிம்நாஸ்டிக்ஸ் கலைஞர்கள் ஒரே மாதிரியான அசைவுகள் மூலம் நடனங்களை நிகழ்த்தினர்.

வட கொரியாவின் பிரஜைகளை உற்சாகமூட்டும் வகையிலும், அவர்களின் இணக்கம், மற்றும் கம்யூனிஸ வகுப்புவாத கொள்கைகளை காட்டும் வகையிலும் அந்த நிகழ்ச்சிகள் இருக்கும் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிகளை காண சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் வட கொரியாவின் விமான சேவை நிறுவனமான ஏர் கோர்யோ, பீய்ஜிங்கிலிருந்து கூடுதல் விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

இந்த அணிவகுப்புகள் கண்கவரும் வண்ணம் நடைபெறும். ஆனால் கடந்த காலங்களில், குழந்தைகள் இதில் வலுக்கட்டாயமாக கலந்து கொள்ள வைக்கப்பட்டதாக ஐ.நா தெரிவித்திருந்தது.

https://www.bbc.com/tamil/global-45463268

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.