Jump to content

உலக நிகழ்வுகள்.....கிராண்ட் ஸ்லாம் போட்டி: நடுவரை 'திருடன்' என்று திட்டிய செரீனா வில்லியம்ஸ்


Recommended Posts

கிராண்ட் ஸ்லாம் போட்டி: நடுவரை 'திருடன்' என்று திட்டிய செரீனா வில்லியம்ஸ்

கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

கிராண்ட் ஸ்லாம் போட்டி: நடுவரை திருடன் என்று திட்டிய செரீனா வில்லியம்ஸ்

நடுவரை திருடன் என்று திட்டிய செரீனா வில்லியம்ஸ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

நியூயார்க்கில் நடந்த கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டியில், பிரபல வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் நடுவரை 'திருடன்' என்று கூறியதையடுத்து, ஜப்பானின் நெயோமி ஒசாகா வெற்றி பெற்றார்.

தன் கோபத்தை வெளிப்படுத்திய செரீனா, டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்தார் பின் அவருக்கு பெனால்டி வழங்கப்பட்டது. செரீனா ஆட்ட விதிகளை மீறியதையடுத்து, 6-2, 6-4 என்ற கணக்கில் ஒசாகா வெற்றி பெற்றார்.

20 வயதாகும் ஒசாகா, கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெறும் முதல் ஜப்பானியர் ஆவார். போட்டி முடிந்தவுடன் நடுவரான கார்லொஸ் ரமோசுடன் கைக்குலுக்கவும் செரீனா வில்லியம்ஸ் மறுத்துவிட்டார்.


வட கொரியாவின் 70வது ஆண்டு விழா

வட கொரியாவின் 70வது ஆண்டு விழாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

வட கொரியா, தனது 70வது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் ராணுவ அணிவகுப்புடன், முதன் முதலாக பெரிய விளையாட்டு போட்டிகளையும் நடத்த தயார் செய்து கொண்டிருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, இந்த வார இறுதியில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.

வட கொரியாவின் ஆயுதக்கிடங்குகள் மற்றும் அணுஆயுதமற்ற பகுதியாக்க அந்நாடு அளித்த உறுதி ஆகியவற்றிற்கான குறிப்புகள் இந்த அணிவகுப்பில் கூர்ந்து கவனிக்கப்படும்.


பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு

பருவநிலை மாற்றம் குறித்த மாநாடுபடத்தின் காப்புரிமைEPA

கலிஃபோர்னியாவில் அடுத்த வாரம் உச்சிமாநாடு நடைபெற உள்ள நிலையில், பருவநிலை மாற்றத்திற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உலகம் முழுவதும் சூழலியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், மற்றும் பிரபலங்கள் என அடுத்த வாரம் நடைபெற உள்ள உலகளாவிய பருவநிலை குறித்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கு ஐ.நா, ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்கின்றன.

கொள்கை தோல்விகளால் ஃபிரான்ஸின் சூற்றுச்சூழல் அமைச்சர் விலகியதையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தொடரும் தாக்குதல்

தொடரும் தாக்குதல்படத்தின் காப்புரிமைAFP

இட்லிப்பின் மேற்கு மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் மீது சிரியாவும் ரஷ்யாவும் தீவிரமான விமான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இட்லிப்பின் கிழக்கு மற்றும் தென் பகுதிகளோடு எல்லையில் உள்ள ஹமா மீதும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி பெரிய நகரமான இட்லிப், சிரிய அரச படைகளால் ரஷ்யாவின் துணையோடு தாக்கப்பட்டு வருகிறது.

https://www.bbc.com/tamil/global-45463118

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.