Jump to content

காங்­கே­சன்­து­றை­மு­கத்­தின் விரி­வாக்­கத்­தை­யும் விரை­வு­ப­டுத்­துங்­கள்


Recommended Posts

காங்­கே­சன்­து­றை­மு­கத்­தின் விரி­வாக்­கத்­தை­யும்   விரை­வு­ப­டுத்­துங்­கள்

 

வடக்­கில் உள்ள பெரும் வானூர்­தித் தள­மான பலாலி வானூர்­தித் தளத்தை விரி­வாக்கி எதிர்­வ­ரும் -மார்­கழி மாதம் அங்­கி­ருந்து தென்­னிந்­தி­யா­வுக்கு வானூர்­திச் சேவையை வழங்­கு­வ­தற்­கான பணி­கள் துரி­த­மாக இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. எதிர்­வ­ரும் மார்­கழி மாதத்­துக்­குள் முத­லா­வது வானூர்­திச் சேவை பலா­லி­யில் இருந்து தொடங்­கப்­ப­டும் என்று எதிர்­வு­கூ­றப்­ப­டு­கின்­றது. அவ்­வாறு நடப்­பது மகிழ்ச்­சி­க­ர­மா­னது.வர­வேற்­கத்­தக்­கது.

வான் பறப்­புப் பாதை­யில் உள்ள சிறிய சிக்­கல்­கள் தீர்க்­ கப்­பட்­ட­தும் பய­ணத்­தைத் தொடங்­கு­வ­தற்­கான அனைத்­துப் பணி­க­ளும் முழு­மை­ய­டைந்­து­வி­டும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. குறித்த சிக்­க­லைத் தீர்ப்­ப­தில் இந்­திய மற்­றும் இலங்கை அதி­கா­ரி­கள் தீவிர கவ­னம் செலுத்தி வரு­கின்­ற­னர் என்­றும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள் ளது.

பணி­கள் அனைத்­தும் முடிந்து மார்­க­ழி­யில் வானூர்தி நிலை­யம் இயங்­கத் தொடங்­கும்­போது யாழ்ப்­பா­ணம் உள்­ளிட்ட வடக்­கின் பொரு­ளா­தா­ரத்­தில் அது கணி­ச­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்று ம் எதிர்­பார்க்­க­லாம்.

பய­ணி­கள் சேவை­கள் மட்­டு­மின்றி பொருள்­கள் சேவை­க­ளும் இந்த வானூர்­தித் தளத்­தின் ஊடாக இடம்­பெ­றும் என்­பதை எதிர்­பார்க்­க­லாம். இது வர்த்­தக நட­வ­டிக்கை ­களுக்கு ஊக்­கு­விப்­பாக அமை­வ­து­டன் யாழ்ப்­பாண உற்­பத்­தி­க­ளுக்­குச் சிறிய ஏற்­று­மதி வாய்ப்­பை­யும் கொடுக்­கக் கூடி­யது.

பலாலி வானூர்­தித் தளத்­தைப் போன்றே அல்­லது அதி­லும் கூடு­த­லாக வடக்­குக்­குப் பயன்­த­ரத் தக்­கது காங்­கே­சன் துறை­மு­கம். பொருள்­களை ஏற்றி இறக்­கக்­கூ­டிய வகை­யில் அந்­தத் துறை­மு­கத்தை விரி­வாக்­கம் செய்­வது அவ­சி­ய­மா­னது என்­பது உண­ரப்­பட்ட ஒன்று. அதற்­கான பணி­க­ளும் ஆரம்­பிக்­கப்­பட்டு நடந்­தேறி வரு­கின்­றன. மூன்று கட்­டங்­க­ளில் காங்­கே­சன் துறை­மு­கத்­தின் உரு­வாக்­கப் பணி­கள் இடம்­பெ­றும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. எனி­னும் இது­வ­ரை­யில் அந்­தப் பணி­கள் முழு­மைப்­ப­டுத்­தப்­பட­ வில்லை.

வானூர்­தித் தளத்­தைப் போலவே காங்­கே­சன் துறை­மு­கத் தையும் மறு­சீ­ர­மைத்து விரி­வாக்­கம் செய்து போக்­கு­வ­ரத்­துக்கு அனு­ம­திப்­பது அவ­ச­ரத் தேவை. வடக்­கின் பொரு­ளா­தா­ரத்­தில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யது அது.

இலங்­கை­யில் தற்­போது பண­வீக்­கம் அதி­க­மாக உள்ள மாவட்­டங்­க­ளில் ஒன்று யாழ்ப்­பா­ணம். ஏனைய மாவட்­டங்­க­ளி­லும் பார்க்க இங்கு பொருள்­க­ளின் விலை­கள் அதி­க­மாக இருக்­கின்­றன. இங்கு துறை­மு­கம் ஒன்று இல்­லா­த­மை­யும் இதற்­கொரு கார­ணம்.

துறை­மு­கம் ஒன்று இருக்­கும்­போது பொருள்­களை நேர­டி­யா­கவே அதன் ஊடா­கத் தரு­வித்­துக்­கொள்­ள­வும் ஏற்­று­மதி செய்­து­கொள்­ள­வும் முடி­யும். இது வர்த்­தக விரி­வாக்­கத்­துக்­குப் பெரி­தும் உத­வி­யாக இருக்­கும். துறை­முக நக­ரங்­கள் உல­க­கெங்­கும் துரி­த­மாக வளர்ச்­சி­ய­டைந்­துள்­ளமை கண்­கூடு. எனவே போருக்­குப் பின்­ன­ரான யாழ்ப்­பா­ணத்­தி­ன­தும், வடக்­கி­ன­தும் வளர்ச்­சிக்கு துறை­மு­கம் மிக முக்­கி­ய­மா­னது. அதன் அபி­வி­ருத்தி மற்­றும் கட்­டு­மா­னத்­தின் மீதும் அவ­ச­ர­மான, அவ­சி­ய­மான அக்­கறை செலுத்­தப்­ப­ட­வேண்­டும்.

வடக்கு அபி­வி­ருத்தி மீது அக்­கறை காட்­டு­வ­தா­கச் சொல்­லும் கொழும்பு அர­சின் தலை­வர்­கள் இது விட­யத்­தி­லும் உட­னடி அக்­கறை செலுத்த வேண்­டும். வடக்­கில் மீன்­பி­டித் துறை­களை மட்­டு­மன்றி ஒரு துறை­மு­கத்­தை­யும் விரி­வாக்­கம் செய்­வ­தன் அவ­சி­யத்தை பொரு­ளா­தார வல்­லு­நர்­கள் அனை­வ­ருமே வலி­யு­றுத்­தி­வ­ரும் நிலை­யில் அடுத்த வரு­டத்­துக்­கி­டை­யி­லா­வது காங்­கே­சன் துறை­ முகத்தை முழு­மை­யாக விருத்தி செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்­டும்.

அதா­வது துறை­மு­கத் தின் விரி­வாக்க மற்­றும் உரு­வாக்­கப் பணி­களை விரை­வு­ப­டுத்­து­வ­தற்கு அரச தலை­வர் மற்­றும் தலைமை அமைச்­சர் அக்­கறை காட்­ட­வேண்­டும். தமிழ்த் தலை­வர்­க­ளும் அதற்கு அதி­க­ள­வில் அழுத்­தம் கொடுக்­க­ வேண்­டும்.

https://newuthayan.com/story/12/காங்­கே­சன்­து­றை­மு­கத்­தின்-விரி­வாக்­கத்­தை­யும்-விரை­வு­ப­டுத்­துங்­கள்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.