Jump to content

சினிமா விமர்சனம்: The Nun


Recommended Posts

சினிமா விமர்சனம்: The Nun

சினிமா விமர்சனம்: The Nun

2016ல் வெளிவந்த The Conjuring 2 படத்தில் பேய் ஓட்டும் தம்பதியான எட் மற்றும் லோரைன் தம்பதி வாலக் என்ற ஒரு தீய சக்தியை எதிர்கொள்வார்கள். முடிவில் அந்த தீய சக்தி நரகத்திற்கு அனுப்பப்பட்டுவிடும். ஆனால், அதற்கு முன்பாக, அந்த வாலக் எப்படி இங்கே வந்தது? இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் கதைதான் The Nun. அதாவது The Conjuring - 2க்கு முன்பு நடக்கும் கதை.

   
திரைப்படம் The Nun
   
நடிகர்கள் திமியான் பிசியர், டெய்சா ஃபார்மிகா, ஜோனாஸ் ப்ளோகெத், போனி ஆரோன்ஸ்
   
இசை சாம் சி.எஸ்
   
கதை ஜேம்ஸ் வான்
   
கதை - இயக்கம் கோரின் ஹார்டி
   
   

1952. ருமேனியாவில் உள்ள கார்டா மடாலயம். அங்குள்ள இரு கன்னியாஸ்த்ரிகள் ஒரு புனிதப் பொருளைத் தேடிச் சொல்லும்போது, தீய சக்தி ஒருவரைக் கொன்றுவிட, மற்றொரு கன்னியாஸ்த்ரி தற்கொலை செய்துகொள்கிறார். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, புர்கே என்ற பாதிரியாரையும் ஐரின் என்ற கன்னியாஸ்த்ரியையும் அங்கே அனுப்புகிறது வாட்டிகன் திருச்சபை.

ஆனால், அடுத்த நாள்தான் மடாலயத்தில் இருப்பவர்களுடன் பேச முடியும் என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து அந்த இரவில் பல பயங்கரமான சம்பவங்கள் நடக்கின்றன. பாதிரியார் புர்கே உயிரோடு புதைக்கப்படுகிறார். அவரை ஐரின் கஷ்டப்பட்டு மீட்கிறாள். அடுத்த நாள் மடாலயத்தின் உட்பகுதிக்குள் ஐரின் மட்டும் செல்கிறாள். அங்கிருக்கும் ஒவானா என்ற கன்னியாஸ்த்ரி, மடாலயத்தின் பின்னால் உள்ள மர்மத்தைச் சொல்கிறாள்.

அதாவது, அந்த மடாலயத்தைக் கட்டிய மன்னன், பேய்கள், தீய சக்திகளை எழுப்புவது போன்ற செயல்களில் ஆர்வம் கொண்டவன். அவனால், வாலக் என்ற தீய சக்தி எழுப்பப்பட்டுவிட, வாட்டிகனிலிருந்து வந்த படையினர் அதனை அடக்குகிறார்கள். ஆனால், உலகப் போரில் தேவாலயம் சேதமடைய வாலக் மீண்டும் வெளியே வந்துவிடுகிறது. இதனை ஏசுவின் ரத்தத்தால்தான் மீண்டும் நகரத்திற்குத் தள்ள முடியும். பல பயங்கர சம்பவங்களுக்குப் பிறகு புர்கேவும் ஐரினும் அதைச் சாதிக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு உதவ வரும் ஃபெரெஞ்சி என்ற இளைஞன் வாலக்கால் பிடிக்கப்படுகிறான். இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் The Conjuring -1 படத்தில் வரும் சம்பவங்கள் நடக்கின்றன.

சினிமா விமர்சனம்: The Nun

The Conjuring பட வரிசையில், முதல் பாகத்திற்குப் பிறகு பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் படம் இதுதான். ஆனால், முந்தைய படங்களில் இருந்த பேய்ப் படங்களுக்கே உரிய லாஜிக் இதில் அவ்வப்போது தொலைந்துபோய்விடுகிறது. பல பலிகள், பூஜைகளுக்குப் பிறகு வெளியில் வரும் தீய சக்திகள், ரோம் படையினரால் மீண்டும் நரகத்திற்குள் தள்ளப்பட்டபிறகு, உலகப் போரின் குண்டு விழுந்து அவை நரகத்திலிருந்து மீண்டும் வருவதாக சொல்லப்படுவது ஏற்கும்படியாக இல்லை.

அதேபோல, தீயசக்தியான வோலக்கின் நோக்கம், அதன் சக்தி என்ன என்பதெல்லாம் சரியாக வரையறுக்கப்படவில்லை. ரோமிலிருந்து வரும் பாதிரியையும் கன்னியாஸ்த்ரியையும் துவக்கத்திலேயே கொல்வதற்குப் பதிலாக படம் நெடுக, வோலக் பல்வேறு ரூபங்களில் பயமுறுத்திக்கொண்டே இருக்கிறது. வேறு எதையும் செய்வதில்லை. படத்தின் உச்சகட்ட காட்சியில் மட்டுமே கொல்ல முயற்சிக்கிறது.

இது போன்ற அம்சங்களை கேள்விகேட்காமல் விட்டுவிட்டால், இந்த ஆண்டில் வெளிவந்த பேய்ப் படங்களிலேயே மிகவும் மிரட்டும் படம் இதுதான். படம் துவங்கியதிலிருந்து முடியும்வரை தொடர்ந்து பதற்றத்திலேயே வைத்திருக்கிறார்கள்.

சினிமா விமர்சனம்: The Nun

படத்தில் பேயைவிட்டுவிட்டால், மொத்தமே மூன்று பாத்திரங்கள்தான் என்பது இன்னும் அச்சத்தைக் கூட்டுகிறது. அபெலின் பின்னணி இசை பார்வையாளர்களின் அச்சத்தை இன்னும் அதிகரிக்கிறது. முக்கியப் பாத்திரங்களில் நடித்திருக்கும் மூன்று பேருமே பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். குறிப்பாக இளம் கன்னியாஸ்த்ரியாக வரும் டாய்ஸா ஃபார்மிகா மிகவுமே கவர்கிறார்.

சம்பவங்கள் நடக்கும் புனித கார்டா மடாலயம் இன்னொரு பாத்திரத்தைப் போலவே மனதில் பதிந்துவிடுகிறது.

திகில் பட ரசிகர்கள் தவறவிடக்கூடாத இன்னும் ஒரு பேய்ப் படம் இது.

https://www.bbc.com/tamil/arts-and-culture-45451893

Link to comment
Share on other sites

``முருகேசு... இந்த வாலக்கோட எஸ்டிடி தெரியுமா உனக்கு?'' - 'தி நன்' விமர்சனம் #TheNun

 
 
``முருகேசு... இந்த வாலக்கோட எஸ்டிடி தெரியுமா உனக்கு?'' - 'தி நன்' விமர்சனம் #TheNun
 

'தி கான்ஜூரிங்', 'அனபெல்' படங்களில் காட்டப்பட்ட 'வாலக்' கதாபாத்திரம் எப்படி உருவானது என்பதை விரிவாகச் சொல்ல முயன்ற, 'தி நன்' படம் எப்படி? 

உண்மைச் சம்பவத்தை மையமாகவைத்து எடுக்கப்பட்டதாகக் கூறி அனைவரையும் மிரட்டிய படம், 'தி கான்ஜூரிங்'. அதன் வெற்றி, சூப்பர் ஹீரோ யுனிவர்ஸ் கான்செப்ட் போல பேய்ப் படங்களையும் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்தது. அந்த வகையில், ஹாலிவுட்டின் ஹாரர் ஜானர் படங்களுக்கு ஒரு மைல்கல்லாக இந்தப் படம் அமைந்தது. 'தி கான்ஜூரிங்' படத் தொடரைப் பொறுத்தவரை, அதன் கதை பின்னோக்கி நகர்வதை நம்மால் உணர முடியும். அப்படியாக, 1950-களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது, 'தி நன்'. எட் வாரன் - லொரைன் வாரன் என்ற பேயோட்டும் தம்பதியைச் சுற்றித்தான் 'கான்ஜூரிங்' படத்தின் கதை பயணிக்கும். 'தி கான்ஜூரிங்', 'அனபெல்' இரண்டு படங்களிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் 'வாலக்' எனும் பேய், லொரைனையும் அவரைச் சுற்றியிருப்பவர்களையும் அச்சுறுத்திக்கொண்டே இருக்கும். குறைந்தபட்சம் அந்த கதாபாத்திரத் தாக்கமாவது மற்ற பாகங்களின் கதையில் இடம்பெற்றிருக்கும். வாலக் கதாபாத்திரம், 'கான்ஜூரிங்' சீரியஸின் டிரேட்மார்க் என்றே சொல்லலாம். அப்படி முத்திரை பதித்த இக்கதாபாத்திரத்தின் கதையை முழுமையாக எடுத்துச்சொல்லும் படமாகத்தான் 'தி நன்' வெளியாகியிருக்கிறது. நம்முடைய எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்ததா... லொரனை அச்சுறுத்தும் வாலக், நம்மையும் மிரட்டுகிறதா... என படம் முடிந்தபின் கொசுவர்த்தி சுருள் போட்டு நமக்கு நாமே கேட்டுக்கொண்டால், கேள்விக்குறிதான் விடையாக வருகிறது.  

தி நன்

 

 

முதலில், நன் என்பவர் யார்? கன்னியாஸ்திரியாக மாறும் பெண்களைத்தான் 'நன்' என்று குறிப்பிடுவார்கள். கதைப்படி, 1952ல் ரொமானியாவில் உள்ள தேவாலயத்தில் இரண்டு நன்கள் வாழ்ந்துவருகிறார்கள். இருவரையும் தவிர, மூன்றாவதாக இன்னொருவர் இருப்பதை அவர்கள் உணர்கிறார்கள். அவர்தான் வாலக். அதை உறுதிசெய்ய 'கடவுள் இங்கே முடிகிறார்' (God Ends Here) என்று குறிப்பிட்ட இடத்தில் பரிசோதித்துப் பார்க்கும் ஒரு பரீட்சை, விஷப்பரீட்சை ஆவதோடு, ஒருவர் உயிரிழக்கவும் நேரிடுகிறது. மற்றொருவர் தேவாலயத்தின் வாசலில் தூக்குப்போட்டு தன் உயிரை மாய்த்துக்கொள்கிறார். 

வாட்டிக்கன் கத்தோலிக் அமைப்பிலிருந்து ஃபாதர் ப்ரூக் (டெமியன் பிச்சிர்) என்பவரும், கன்னியாஸ்திரி மட பயிற்சி முகாமிலிருந்து சிஸ்டர் ஐரின் (தைஸா ஃபார்மிகா) என்பவரும் இந்தக் கொலையை விசாரிக்க ரொமானியா வருகின்றனர். தற்கொலைசெய்துகொண்ட சிஸ்டர் விக்டோரியாவின் உடலை முதலில் பார்த்த ஃப்ரென்சியின் (ஜோனஸ் ப்ளோகெட்) உதவியோடு, மூவரும் தேவாலயத்துக்குள் செல்கின்றனர். ஊருக்குள் எத்தனையோ தேவாலயங்கள் இருந்தும், இந்தத் தேவாலயத்துக்கு எதற்காக வாலக் வந்தது... எதற்காக நன்னைப் போலவே உடையணிந்து அங்கிருந்த இருவரையும் கொன்றது... உள்ளே சென்ற இந்த மூவரையும் என்ன செய்தது... வாலக்கிற்கும் 'கான்ஜூரிங்' லொரைனுக்கும் என்ன தொடர்பு... வாலக்கிற்கு உண்மையிலேயே என்ன வேண்டும்... போன்ற பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது 'தி நன்'. நல்ல முயற்சி! 

தி நன்

 பேய் படங்களைப் பொருத்தவரை ஒருவருக்கு பேய் பிடிக்கும், பிறகு க்ளைமாக்ஸின்போது சர்ச்சிலிருந்து ஃபாதர் வருவார், பின் சில சடங்குகள் நடைபெற்று பேய் விரட்டியடிக்கப்படும். ஆனால், 'தி நன்' படத்தைப் பொருத்தவரை பேய் இருக்கும் தேவாலயத்திலிருந்துதான் கதையே ஆரம்பமாகிறது. இதோடு சேர்த்து, கதை நடக்கும் சூழ்நிலைக்குத் தகுந்த சூழல்தான் படத்துக்கு மிகப்பெரிய பலம். 'இது பிரார்த்தனைக்கான நேரமல்ல... வேட்டையாடுவதற்கான நேரம்!' போன்ற 'தெறி' ரக வசனங்களும் சிறப்பு. படத்தில் நன்னோடு சேர்த்து நான்கே கதாபாத்திரங்கள்தான். குறிப்பாக, ஃப்ரென்சி கதாபாத்திரத்தில் நடித்த ஜோனஸ் ப்ளோகெட், அதிக கவனம்பெறுகிறார். மயான அமைதியில் இவர் அடிக்கும் லூட்டிகள், பார்வையாளர்களைப் பரவசப்படுத்துகிறது. 

பாழடைந்த தேவாலயம், அதற்கு அருகிலேயே சுடுகாடு, எங்கு பார்த்தாலும் இருள் சூழ் உலகு... எனக் காணும் இடமெல்லாம் பீதியடையச் செய்யும் லொக்கேஷன்கள் படத்துக்கு மற்றொரு ப்ளஸ். அதைத் தத்ரூமாகக் காட்ட ஒளிப்பதிவாளர், மாக்ஸிம் அலெக்ஸான்ட்ரே நிறையவே உழைத்திருக்கிறார். காட்சியில் பயத்தைக் கொடுக்கத் தவறியதை, இசையமைப்பாளர் கார்ஸெனியோவிஸ்கியின் சவுண்ட் எஃபெக்ட்ஸாவது கொடுத்து ஈக்குவல் செய்திருக்கலாம். ஆரம்பத்தில் ஒரே ஒரு காட்சிக்கு தூக்கிவாரிப்போட்ட சவுண்ட் எஃபெக்ட், படம் முடியும்வரை வாரவும் இல்லை, தூக்கவும் இல்லை. 'தி கான்ஜூரிங்' படத்தில் லிலி டெய்லரின் காதருகே வரும் குழந்தை, 'Shall we play hide and seek?' என்று சொல்லிவிட்டு கைதட்டும் காட்சியை நினைத்துப் பார்த்தாலே இரவு தூக்கம் வராது. அதில் இடம்பெற்ற பாதியையாவது இதில் இடம்பெறச் செய்திருக்கலாம். 

தி நன்

விஷுவல், படத்தை வேற லெவலுக்கு கொண்டுசென்றாலும், பயங்காட்டுவதை இன்னும் அதிகப்படுத்தியிருக்கலாம். 'நன்' வாலக்கின் ஆர்ஜின் ஸ்டோரி என விளம்பரப்படுத்தப்பட்ட படம், வாலக் ஏன் 'நன்' வேடத்தில் அலைகிறது என்பதை மட்டுமே தெளிவாகக் கூறுகிறது. பாதாள நரகத்திலிருந்து வாலக்கை ஏன் வெளியே கொண்டுவருகிறார்கள்... வாலாக்கின் நோக்கம்தான் என்ன... என்ற இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே வரியில் பதில் கூறியதுபோல சொன்னது நெருடல். இப்பேர்ப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்திய கதாபாத்திரத்துக்கு இன்னும் டீடெயிலிங் கொடுத்து விவரித்திருக்கலாம். விஷுவலாக மட்டுமே படத்தை வேற லெவலுக்குக் கொண்டு சென்ற இயக்குநர் கோரின் ஹார்டி, கதையிலும் அது கொடுக்கும் தாக்கத்திலும் சற்று சறுக்கிவிட்டதாகவே தோன்றுகிறது. 

தி நன்

கிளைமாக்ஸில், வாலக்குடன் வெடிக்கும் போராட்டத்தில் யார் வெல்லப்போகிறார்கள் என்ற கேள்விக்கு, கணிக்கக்கூடிய காட்சிகளாக விடைகள் விரிந்தாலும், அவை ரசிகர்களிடையே கைதட்டல்பெறவும் தவறவில்லை. அதே சமயம், படம் முடிந்த பிறகு ' 'தி நன்' படத்தின் வாலக்கைவிட 'தி கான்ஜூரிங்' பட வாலக்கே பெட்டர்...' என்று ரசிகர்கள் பெருமூச்சுவிடவும் தயங்கவில்லை. 

'தி கான்ஜூரிங்' படத்தில் இருந்த சுவாரஸ்யத்தையும், அச்சுறுத்தலையும் இந்தப் படத்திலும் தூவியிருந்தால், ஹாரர் படங்களுக்கு மத்தியில் 'தி நன்' நன்மதிப்பைப் பெற்றிருக்கும். இருப்பினும், 'தி நன்'னை ஒரு முறை விசிட் அடிக்கலாம்!

https://cinema.vikatan.com/movie-review/136315-the-nun-english-movie-review.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கோட்டாபய ராஜபக்ஷவினால் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன்-பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்! கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் நான் ஒருமுறை ஏமாற்றப்பட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தேரர் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் இதனைத் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்த பின்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ தனக்கும் பேராயர் சபைக்கும் வாய்மொழியாக வாக்குறுதியளித்ததாக கர்தினால் தேரர் இங்கு தெரிவித்தார். எவ்வாறாயினும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர், அது தொடர்பான அனைத்து விசாரணைகளும் கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார். அத்துடன் இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் நேர்மையான நோக்கத்துடன் செயற்படுவதில்லை எனவும் எந்தவொரு அரசியல் தலைவரும் ஆட்சிக்கு வந்ததும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2024/1378652
    • சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது! தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயம்; சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது! கூறுகின்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஆதவன்) தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது சிங்களத் தரப்பைக் கோபப்படுத்தி, இனவாதத்தைத் தூண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்து அற்பத்தனமானது என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- இலங்கை ஒரு ஜனநாயக நாடு. தமிழர்கள் தரப்பில் யாரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று யாரும் வரையறை விதிக்கமுடியாது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எடுத்துக்காட்டாகக் கூறும் குமார் பென்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வேட்பாளர்களாக நிறுத்தப்படவில்லை தற்போதைய பொதுவேட்பாளர் விடயம்  அவ்வாறானது அல்ல. நாங்கள் பல தடவைகள் பலருக்கு வாக்களித்துள்ளோம். ஆனால், தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை. சகல அரச தலைவர்களாலும் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். பொதுவேட்பாளர் என்பது இனப்பாகுபாடான விடயமல்ல. எமது சுயமரியாதையை, உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாங்கள் தெரிந்தெடுத்துள்ள ஒரு வழிமுறையாகும் - என்றார். (ஏ)    https://newuthayan.com/article/சுமந்திரனின்_கருத்து_அற்பத்தனமானது!
    • மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! நாட்டில் தனி நபரின் மாதாந்த செலவு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள ஒருவருக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் குறைந்தபட்சம் 16,975 ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரியில், தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, நாட்டின் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. மேலும் கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 18,308 ரூபா தேவைப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378659
    • 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! வடக்கு ஆளுநர் தெரிவிப்பு (ஆதவன்) வடக்கு மாகாணத்தில் 32 ஆயிரம் பேர் வீட்டுத் திட்டங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் இந்தத் திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என்று வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போதே வடமாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:- ‘வடக்கு மாகாணத்தில் இவ்வருடம் திட்டமிட்ட பயிர்ச்செய்கையை மேற்கொள்ளமுடியும். இதற்கு போதுமான அளவு நீர் காணப்படுகின்றது. பெரிய மற்றும் சிறிய குளங்களின் நீர்மட்டம் போதுமானதாகக் காணப்படுகின்றமையால் இடைப்போகம் மற்றும் சிறுபோகம் ஆகியவற்றில் சிறந்த விளைச்சலை எதிர்பார்க்க முடியும். ஆகவே இதனூடாக வறுமையிலிருந்து மீள்வதற்கான சந்தர்ப்பமுண்டு. இந்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டத்தில் குளங்களைப் புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதே போல வடக்கு மாகாணத்தில் உள்ள 17 குளங்களை புனரமைப்புச் செய்வதற்கான நிதியை மத்திய அரசாங்கத்திடமும் ஏனைய நிதி நிறுவனங்களிடமும் நாங்கள் கோரியுள்ளோம். மக்களிடையே கலை, கலாசாரத்தை வளர்ப்பதற்கு அவர்கள் வாழும் கிராமங்களிலேயே திறந்த வெளி மேடைகளை அமைத்து அங்கு வாழக்கூடிய இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். கிராமங்களில் திறந்த வெளி மேடைகளை அமைத்து நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதன் ஊடாக எமது தனித்துவமான கலை, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்க முடியும்'- என்றார். (ஏ)  https://newuthayan.com/article/32_ஆயிரம்_பேருக்கு_வடக்கில்_வீடுகள்!
    • பற்பசையில் போதைப்பொருள்: கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம். கொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த நபரொருவர் பற்பசை டியூபுக்குள்(Tube)  போதைப்பொருளை மறைத்துவைத்துக் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபர் கொண்டுவந்த பொருட்களைச் சோதனையிடும் போதே  போதைப்பொருள் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் அந்நபரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1378656
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.