Jump to content

உலகப் பார்வை: சிரியா போர்: இட்லிப் மீது புதிய தாக்குதலை தொடங்கியது ரஷ்யா


Recommended Posts

சிரியா போர்: இட்லிப் மீது புதிய தாக்குதலை தொடங்கியது ரஷ்யா

கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

சிரியாபடத்தின் காப்புரிமைAFP

சிரியா போர்: இட்லிப் போர்நிறுத்தத்திற்கு ரஷ்யா மறுப்பு

சிரியாவின் இடலிப் மாகாணத்தின் மீது புதிய தாக்குதலை ரஷ்யா தொடங்கியுள்ளதாக மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இட்லிப் மாகாணத்தின் தென் மேற்கில் கிளர்ச்சியாளர்களின் நிலைகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாக இது கூறியுள்ளது,

சிரியாவின் வட பகுதியில், மக்கள் ரத்தம் சிந்துவதை தடுக்க துருக்கி விடுத்த போர் நிறுத்தத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முன்னதாக நிராகரித்துவிட்ட நிலையில் இந்த புதிய தாக்குதல் நடத்தப்படுகிறது.

இரான் மற்றும் துருக்கியோடு நடத்திய முத்தரப்பு கூட்டத்தில், இட்லிப் மாகாணத்திலுள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக போராடுவதை ரஷ்யா தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

சுமார் 30 லட்சம் பேர் வாழுகின்ற இட்லிப் மாகாணம் சிரிய அரசு எதிர்ப்பாளர்களின் கடைசி முக்கிய வலுவிடமாகும்.

ரஷ்யா மற்றும் இரானால் ஆதரவு அளிக்கப்படும் சிரிய ராணுவம் இங்கு மிக பெரிய தாக்குதலை விரைவில் நடத்தவுள்ளது.


அமெரிக்க ராப் இசை பாடகர் மேக் மில்லர் 26 வயதில் மரணம்

மேக் முல்லர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்க ராப் இசைப்பாடகர் மேக் முல்லர் அவரது கலிஃபோர்னிய இல்லத்தில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போதை மருந்துகள் உட்கொள்வதை வெளிப்படையாக ஒப்புகொண்டிருந்த 26 வயதான மில்லர், போதைப்பொருள் அதிக அளவு உட்கொண்டதால் இறந்ததாக தோன்றுகிறது.

மேக் மில்லர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

2011ம் ஆண்டு தன்னுடைய முதல் இசை தொகுப்பை வெளியிட்டபோது மல்கால்ம் ஜேம்ஸ் மெக்கோர்மிக் என்ற இயற்பெயருடைய இவர் பெரும் புகழ் அடைந்தார்.

'சுவிம்ங்' என்ற தன்னுடைய சமீபத்திய இசைத்தொகுப்பை இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட்ட இவர், இசைப்பயணம் மேற்கொள்ள இருந்தது குறிப்பிடத்தக்கது.


பசிபிக் பெருங்கடலை சுத்த செய்யும் ராட்சத பிளாஸ்டிக் சேகரிப்பு அமைப்பு

பசிபிக் பெருங்கடலை சுத்த செய்யும் ராட்சத பிளாஸ்டிக் சேகரிப்பு அமைப்புபடத்தின் காப்புரிமைTHE OCEAN CLEANUP

ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் கிரேக்க கடலில் நீந்தி சென்ற நெதர்லாந்தை சேர்ந்த பதின்ம வயதினர் மீன்களை விட அதிக பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் மிகுந்திருப்பதை கண்டார்.

இந்த மாசுபாட்டால் அதிர்ச்சியடைந்த பாயன் ஸ்லாட் பெருங்கடல்களை சுத்தம் செய்வது பற்றி பரப்புரை மேற்கொள்ள தொடங்கினார்.

நீண்டகாலமாக அவரது பரப்புரையை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

இந்த வார இறுதியில், பெரியதொரு நிதி ஆதரவாலும், பொறியியல் பின்புலத்தோடும் பெரிய பிளாஸ்டிக் கேசரிப்பு அமைப்பு ஒன்று சன் பிரான்சிஸ்கோ விரிகுடாவில் பிளாஸ்டிக் சேகரிக்கவுள்ளது.

இதுவரை பிளாஸ்டிக் குப்பை பற்றிய பரப்புரை கடற்கரையோரங்களில் காணப்படும் குப்பைகளை சுத்தப்படுத்துவதை பற்றியே இருந்து வந்துள்ளது.


இரான் துணை தூதரகத்திற்கு தீ வைத்த இராக் போராட்டக்காரர்கள்

தீபடத்தின் காப்புரிமைREUTERS

ஊழல் மற்றும் அடிப்படை சேவைகள் கிடைக்காததை கண்டித்து நடத்தப்படும் போராட்டங்களுக்கு மத்தியில், இராக்கின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பஸ்ரா நகரிலுள்ள இரானின் துணை துதரகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.

இராக் அரசியலில் இரானின் தலையீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்நகரத்தின் தெருக்களில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

முன்னதாக, பாதுகாப்பு படைப்பிரிவுகளோடு நடைபெற்ற மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 11 பேர் காயமடைந்தனர்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற 5ம் நாள் போராட்டத்தில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் அங்கு இப்போது அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/global-45457260

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
    • எழுதுங்க தம்பி.....இன்னும் எழுதுங்க..... உங்களால் முடியாதது எதுவுமில்லை.
    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.