Jump to content

ஏமாற்றத்தின் விளிம்பில் ஈழத் தமிழ் மக்கள்


Recommended Posts

ஏமாற்றத்தின் விளிம்பில் ஈழத் தமிழ் மக்கள்

 
 
Maithripala-Ranil-W-Piv-Via-MSs-FB-780x4

 

 

தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வைக் காணா­மல் தொடர்ந்து இழுத்­த­டிப்­ப­தால் நாட்­டின் ஒரு­மைப்­பாட்­டுக்குக் குந்­த­கம் ஏற்­பட்­டு­ வி­டு­ம் என்­பதை ஆட்­சி­யா­ளர்­க­ளும் தென்­ப­குதி அர­சி­யல்­வா­தி­க­ளும் புரிந்­து­கொள்ள வேண்­டும்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜயம்­பதி விக்­கி­ர­ ம­ரட்ண இதை உணர்த்­தும் வகை­யி­லேயே அரச தலை­வ­ருக்­கும், தலைமை அமைச்­ச­ருக்­கும் எச்­ச­ரிக்கை கலந்த வேண்­டு­கோள் ஒன்றை விடுத்­துள்ளார். அர­ச­மைப்பு உரு­வாக்­கம் மற்­றும் ஏனைய விட­யங்­க­ ளில் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற முடி­யாத தலை­வர்­க­ளாக இவர்­கள் இரு­வ­ரும் மாறி­வி­டக்­கூ­டாது என­வும் அவர் தெரி­வித்துள்ளார்.

பிரச்­சி­னை­கள் சூழ்ந்த நிலை­யில் நகர்கிறது தமி­ழர்­க­ளின் வாழ்வு

மேலோட்­ட­மா­கப் பார்க்­கும்­போது, தமிழ் மக்­கள் பிரச்­சி­னை­கள் எது­வு­மின்றி வாழ்­வது போன்­ற­தொரு தோற்­றம் வெளித் தெரிந்­தா­லும், உண்மை நிலை அது­வல்ல என்­பதை அனை­வ­ரும் புரிந்­து­ கொள்ள வேண்­டும். ஏரா­ள­மான பிரச்­சி­னை­ க­ளுக்கு முகம்கொடுத்த வண்­ணம் தமிழர்கள் தமது காலத்­தைக் கடத்தி வரு­கின்­ற­னர்.

இவற்­றுள் இனப்­பி­ரச்­சினை முக்­கி­ய­ மா­ன­தா­கும். இதற்­குத் தீர்வு காணா­த­தன் கார­ண­மா­கவே இன­மோ­தல்­கள் அடிக்­கடி ஏற்­பட்­ட­தோடு நீண்ட போர் ஒன்­றும் இடம்­பெற்­றது. இவை மீண்­டும் இடம்­பெ­றா­மல் பார்த்­துக் கொள்­வது ஆட்­சி­யா­ளர்­க­ளின் கைக­ளி­லேயே தங்­கி­யுள்­ளது.

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் தொடர்­பா­கப் பல­ரும் பேசி­வ­ரு­கின்­ற­னர். அர­ச­த­லை­வ­ரும், தலைமை அமைச்­ச­ரும் இதன் உரு­வாக்­கம் தொடர்­பாகத் தமிழ்த் தலை­வர்­க­ளி­டம் பல தட­வை­கள் வாக்­கு­று­தி­க­ளை­யும் வழங்­கி­யுள்­ள­னர். கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­தன் இதன் கார­ண­மா­கவே புதிய அர­ச­மைப்பு உருவாக்கப்படுவது நிச்சயமானது என்று தமிழ்மக்களுக்கு நம்­பிக்­கை வெளி­யிட்­டி­ருந்­தார். தமிழ் மக்­க­ளும் அதை முற்­று­மு­ழு­தாக நம்­பி­யி­ருந்­த­னர். ஆனால் அனைத்­தும் ஏமாற்­றத்­தி­லேயே முடிந்­துள்­ளன.

புதிய அர­ச­மைப்பு மிக­மிக அவ­சி­யம்

புதிய அர­ச­மைப்­பின் கீழ் அதி­கா­ரங்­க­ளைப் பகிர்ந்து வழங்­கு­வ­தன் ஊடாகத் தமி­ழர்­கள் சுயாட்­சி­ யைப் பெற்­றுக்­கொள்ள முடி­யும். தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள ஒற்­றை­யாட்சி முறை­யி­லான ஆட்­சி­முறை தமி­ழர்­களை அதி­கா­ரங்­கள் எவற்­றை­யும் பெற­மு­டி­யாத நிலைக்­குக் கட்­டிப்­போட்­டுள்­ளது.

மாகாண சபை­கள் அதி­கா­ரங்­கள் எவை­யு­மற்ற வெறும் சபை­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றன. இத­னால் எதை­யுமே செய்ய முடி­யாத நிலை­யில் அவை காணப்­ப­டு­கின்­றன. தமி­ழர் பகு­தி­க­ளில் அத்­து­மீ­றிய சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் இடம் பெறு­வ­தற்­கும், சட்­டம் ஒழுங்கு சீர்­கு­லைந்து காணப்­ப­டு­வ­தற்­கும் இதுவே கார­ண­மா­கும். காணி மற்­றும் பொலிஸ் அதி­கா­ரங்­கள் வழங்­கப்­பட்­டி­ருந்­தால் இவற்றை மாகாண சபை­க­ளால் தடுத்­தி­ருக்க முடி­யும். ஆனால் அதி­கா­ரங்­கள் வழங்­கப்­ப­டா­த­தால் மாகாண சபைகளால் அவ்விதம் செயற்பட முடி­ய­வில்லை.

இந்த நாடு மூன்று இனத்­த­வர்­க­ளை முதன்மையானவர்களாகக் கொண்­டது. மத ரீதி­யி­லும் மக்­கள் வேறு­பட்­டுக் காணப்­ப­டு­கின்­ற­னர். சிறு­பான்­மை­யின மக்­கள் அடிக்­கடி பாதிப்­புக்­குள்­ளா­வதை இங்கு காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. இதற்கு, இந்த நாடு தமக்­கு­ரி­ய­தெனப் பெரும்­பான்­மை­யின மக்­கள் கரு­து­வதே கார­ண­மா­கும். சுமார் 70 வீத­மா­ன­பெரும்பான்மை இனத்தவர்கள் ஏனைய சிறு­பான்மை இனத்­த­வரை மதிக்­கின்ற மன­நி­லை­யில் இல்­லை­யென்­று­தான் கூற­வேண்­டும்.

அந்­த­ அள­வுக்கு இன­வாத அர­சி­யல்­வா­தி­கள் அவர்­களை மூளைச் சலவை செய்­துள்­ள­னர். இன நல்­லி­ணக்­கம் மக்­க­ளின் அடி­ம­னங்­க­ளி­லி­ருந்து தானா­கவே உரு­வாக வேண்­டும். பிறர் மீதான காழ்ப்­பு­ணர்­வும், வெறுப்­பும் இருக்­கும் வரை­யில் நல்­லி­ணக்­கம் ஏற்­ப­டவே முடி­யாது. இன ஐக்­கி­யத்­தின் வாயி­லா­கவே நாட்டை அபி­வி­ருத்­திப் பாதை­யில் கொண்­டு­செல்ல முடி­யு­மென்­பதைத் தென்பகுதி அரசியல்வாதிகள் உண­ரும்­போது இன நல்­லி­ணக்­கம் தானா­கவே உரு­வா­கி­வி­டும். ஆனால் அதை அவர்­கள் உண­ரு­வ­தற்­கான அறி­கு­றி­கள் எவற்றையும் இது­வரை காண­முடியவில்லை.

உரி­மை­கள் மறுக்­கப்­பட்­டால் வன்­முறை வெடிப்­பது வர­லாறு

ஒரு குறிப்­பிட்ட இன மக்­கள் அடக்கி ஒடுக்­கப்­பட்டு அவர்­க­ளின் உரி­மை­கள் பறிக்­கப்­பட்­ட­தன் கார­ண­மா­கவே உல­கில் ஆயுதம் ஏந்துகின்ற இயக்­கங்­கள் உரு­வெ­டுத்­தன. பாதிக்­கப்­பட்ட இன மக்­கள் தமது உரி­மை­களை அகிம்சை வழி­யில் பெறு­வ­தற்கு இய­லா­து­விட்­டால் ஆயுத நட­வ­டிக்­கை­கள் மூல­மா­க­வா­ வது அவற்­றைப் பெறு­வ­தற்கு முயற்சி செய்­வார்­கள்.

எமது நாட்­டில் தமிழ் இளை­ஞர்­கள் ஆயு­த­மேந்தி போரா­டி­ய­தும் இத­னால்­தான். ஆனால் அவர்­க­ளின் உரி­மைக்­கான போராட்­டம் பயங்­க­ர­வாத முத்­திரை குத்­தப்­பட்டு அழித்­தொ­ழிக்­கப்­பட்­டு­விட்­டது. ஆனால் தமிழ் மக்­க­ளின் உரி­மைக்­கான வேட்கை இன்னமும் தணிந்து விட­வில்லை.

ஆகவே ஆட்­சிக்கு மாறி­மாறி வரு­கின்ற பெரும்­பான்­மை­யின அர­சி­யல்­வா­தி­கள் இந்த யதார்த்­தத்தை இனி­யா­வது புரிந்­து­ கொண்டு செயற்­ப­டு­வ­து­தான் நாட்­டின் மீட்­சிக்கு வழி­வ­குக்­கும்.

https://newuthayan.com/story/12/ஏமாற்றத்தின்-விளிம்பில்-ஈழத்-தமிழ்-மக்கள்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.