Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏமாற்றத்தின் விளிம்பில் ஈழத் தமிழ் மக்கள்

Featured Replies

ஏமாற்றத்தின் விளிம்பில் ஈழத் தமிழ் மக்கள்

 
 
Maithripala-Ranil-W-Piv-Via-MSs-FB-780x4

 

 

தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வைக் காணா­மல் தொடர்ந்து இழுத்­த­டிப்­ப­தால் நாட்­டின் ஒரு­மைப்­பாட்­டுக்குக் குந்­த­கம் ஏற்­பட்­டு­ வி­டு­ம் என்­பதை ஆட்­சி­யா­ளர்­க­ளும் தென்­ப­குதி அர­சி­யல்­வா­தி­க­ளும் புரிந்­து­கொள்ள வேண்­டும்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜயம்­பதி விக்­கி­ர­ ம­ரட்ண இதை உணர்த்­தும் வகை­யி­லேயே அரச தலை­வ­ருக்­கும், தலைமை அமைச்­ச­ருக்­கும் எச்­ச­ரிக்கை கலந்த வேண்­டு­கோள் ஒன்றை விடுத்­துள்ளார். அர­ச­மைப்பு உரு­வாக்­கம் மற்­றும் ஏனைய விட­யங்­க­ ளில் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற முடி­யாத தலை­வர்­க­ளாக இவர்­கள் இரு­வ­ரும் மாறி­வி­டக்­கூ­டாது என­வும் அவர் தெரி­வித்துள்ளார்.

பிரச்­சி­னை­கள் சூழ்ந்த நிலை­யில் நகர்கிறது தமி­ழர்­க­ளின் வாழ்வு

மேலோட்­ட­மா­கப் பார்க்­கும்­போது, தமிழ் மக்­கள் பிரச்­சி­னை­கள் எது­வு­மின்றி வாழ்­வது போன்­ற­தொரு தோற்­றம் வெளித் தெரிந்­தா­லும், உண்மை நிலை அது­வல்ல என்­பதை அனை­வ­ரும் புரிந்­து­ கொள்ள வேண்­டும். ஏரா­ள­மான பிரச்­சி­னை­ க­ளுக்கு முகம்கொடுத்த வண்­ணம் தமிழர்கள் தமது காலத்­தைக் கடத்தி வரு­கின்­ற­னர்.

இவற்­றுள் இனப்­பி­ரச்­சினை முக்­கி­ய­ மா­ன­தா­கும். இதற்­குத் தீர்வு காணா­த­தன் கார­ண­மா­கவே இன­மோ­தல்­கள் அடிக்­கடி ஏற்­பட்­ட­தோடு நீண்ட போர் ஒன்­றும் இடம்­பெற்­றது. இவை மீண்­டும் இடம்­பெ­றா­மல் பார்த்­துக் கொள்­வது ஆட்­சி­யா­ளர்­க­ளின் கைக­ளி­லேயே தங்­கி­யுள்­ளது.

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் தொடர்­பா­கப் பல­ரும் பேசி­வ­ரு­கின்­ற­னர். அர­ச­த­லை­வ­ரும், தலைமை அமைச்­ச­ரும் இதன் உரு­வாக்­கம் தொடர்­பாகத் தமிழ்த் தலை­வர்­க­ளி­டம் பல தட­வை­கள் வாக்­கு­று­தி­க­ளை­யும் வழங்­கி­யுள்­ள­னர். கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­தன் இதன் கார­ண­மா­கவே புதிய அர­ச­மைப்பு உருவாக்கப்படுவது நிச்சயமானது என்று தமிழ்மக்களுக்கு நம்­பிக்­கை வெளி­யிட்­டி­ருந்­தார். தமிழ் மக்­க­ளும் அதை முற்­று­மு­ழு­தாக நம்­பி­யி­ருந்­த­னர். ஆனால் அனைத்­தும் ஏமாற்­றத்­தி­லேயே முடிந்­துள்­ளன.

புதிய அர­ச­மைப்பு மிக­மிக அவ­சி­யம்

புதிய அர­ச­மைப்­பின் கீழ் அதி­கா­ரங்­க­ளைப் பகிர்ந்து வழங்­கு­வ­தன் ஊடாகத் தமி­ழர்­கள் சுயாட்­சி­ யைப் பெற்­றுக்­கொள்ள முடி­யும். தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள ஒற்­றை­யாட்சி முறை­யி­லான ஆட்­சி­முறை தமி­ழர்­களை அதி­கா­ரங்­கள் எவற்­றை­யும் பெற­மு­டி­யாத நிலைக்­குக் கட்­டிப்­போட்­டுள்­ளது.

மாகாண சபை­கள் அதி­கா­ரங்­கள் எவை­யு­மற்ற வெறும் சபை­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றன. இத­னால் எதை­யுமே செய்ய முடி­யாத நிலை­யில் அவை காணப்­ப­டு­கின்­றன. தமி­ழர் பகு­தி­க­ளில் அத்­து­மீ­றிய சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் இடம் பெறு­வ­தற்­கும், சட்­டம் ஒழுங்கு சீர்­கு­லைந்து காணப்­ப­டு­வ­தற்­கும் இதுவே கார­ண­மா­கும். காணி மற்­றும் பொலிஸ் அதி­கா­ரங்­கள் வழங்­கப்­பட்­டி­ருந்­தால் இவற்றை மாகாண சபை­க­ளால் தடுத்­தி­ருக்க முடி­யும். ஆனால் அதி­கா­ரங்­கள் வழங்­கப்­ப­டா­த­தால் மாகாண சபைகளால் அவ்விதம் செயற்பட முடி­ய­வில்லை.

இந்த நாடு மூன்று இனத்­த­வர்­க­ளை முதன்மையானவர்களாகக் கொண்­டது. மத ரீதி­யி­லும் மக்­கள் வேறு­பட்­டுக் காணப்­ப­டு­கின்­ற­னர். சிறு­பான்­மை­யின மக்­கள் அடிக்­கடி பாதிப்­புக்­குள்­ளா­வதை இங்கு காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. இதற்கு, இந்த நாடு தமக்­கு­ரி­ய­தெனப் பெரும்­பான்­மை­யின மக்­கள் கரு­து­வதே கார­ண­மா­கும். சுமார் 70 வீத­மா­ன­பெரும்பான்மை இனத்தவர்கள் ஏனைய சிறு­பான்மை இனத்­த­வரை மதிக்­கின்ற மன­நி­லை­யில் இல்­லை­யென்­று­தான் கூற­வேண்­டும்.

அந்­த­ அள­வுக்கு இன­வாத அர­சி­யல்­வா­தி­கள் அவர்­களை மூளைச் சலவை செய்­துள்­ள­னர். இன நல்­லி­ணக்­கம் மக்­க­ளின் அடி­ம­னங்­க­ளி­லி­ருந்து தானா­கவே உரு­வாக வேண்­டும். பிறர் மீதான காழ்ப்­பு­ணர்­வும், வெறுப்­பும் இருக்­கும் வரை­யில் நல்­லி­ணக்­கம் ஏற்­ப­டவே முடி­யாது. இன ஐக்­கி­யத்­தின் வாயி­லா­கவே நாட்டை அபி­வி­ருத்­திப் பாதை­யில் கொண்­டு­செல்ல முடி­யு­மென்­பதைத் தென்பகுதி அரசியல்வாதிகள் உண­ரும்­போது இன நல்­லி­ணக்­கம் தானா­கவே உரு­வா­கி­வி­டும். ஆனால் அதை அவர்­கள் உண­ரு­வ­தற்­கான அறி­கு­றி­கள் எவற்றையும் இது­வரை காண­முடியவில்லை.

உரி­மை­கள் மறுக்­கப்­பட்­டால் வன்­முறை வெடிப்­பது வர­லாறு

ஒரு குறிப்­பிட்ட இன மக்­கள் அடக்கி ஒடுக்­கப்­பட்டு அவர்­க­ளின் உரி­மை­கள் பறிக்­கப்­பட்­ட­தன் கார­ண­மா­கவே உல­கில் ஆயுதம் ஏந்துகின்ற இயக்­கங்­கள் உரு­வெ­டுத்­தன. பாதிக்­கப்­பட்ட இன மக்­கள் தமது உரி­மை­களை அகிம்சை வழி­யில் பெறு­வ­தற்கு இய­லா­து­விட்­டால் ஆயுத நட­வ­டிக்­கை­கள் மூல­மா­க­வா­ வது அவற்­றைப் பெறு­வ­தற்கு முயற்சி செய்­வார்­கள்.

எமது நாட்­டில் தமிழ் இளை­ஞர்­கள் ஆயு­த­மேந்தி போரா­டி­ய­தும் இத­னால்­தான். ஆனால் அவர்­க­ளின் உரி­மைக்­கான போராட்­டம் பயங்­க­ர­வாத முத்­திரை குத்­தப்­பட்டு அழித்­தொ­ழிக்­கப்­பட்­டு­விட்­டது. ஆனால் தமிழ் மக்­க­ளின் உரி­மைக்­கான வேட்கை இன்னமும் தணிந்து விட­வில்லை.

ஆகவே ஆட்­சிக்கு மாறி­மாறி வரு­கின்ற பெரும்­பான்­மை­யின அர­சி­யல்­வா­தி­கள் இந்த யதார்த்­தத்தை இனி­யா­வது புரிந்­து­ கொண்டு செயற்­ப­டு­வ­து­தான் நாட்­டின் மீட்­சிக்கு வழி­வ­குக்­கும்.

https://newuthayan.com/story/12/ஏமாற்றத்தின்-விளிம்பில்-ஈழத்-தமிழ்-மக்கள்.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.