Jump to content

சினிமா விமர்சனம்: வஞ்சகர் உலகம்


Recommended Posts

சினிமா விமர்சனம்: வஞ்சகர் உலகம்

சினிமா விமர்சனம்: வஞ்சகர் உலகம்படத்தின் காப்புரிமைFACEBOOK/VANJAGAR ULAGAM

நிழலுலகத்தை பின்னணியாக வைத்து ஒரு க்ரைம் த்ரில்லரைச் சொல்ல முயற்சித்திருக்கிறார் புதுமுக இயக்குனரான மனோஜ் பீதா.

   
திரைப்படம் வஞ்சகர் உலகம்
   
நடிகர்கள் குரு சோமசுந்தரம், சிபி புவன சந்திரன், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், சாந்தினி தமிழரசன், வாசு விக்ரம்
   
இசை சாம் சி.எஸ்
   
படத்தொகுப்பு ஆண்டனி
   
கதை - இயக்கம் மனோஜ்
   
   

மைதிலி (சாந்தினி தமிழரசன்) என்ற பெண் வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடக்க, எதிர்வீட்டில் குடியிருக்கும் சண்முகத்தை (சிபி புவன சந்திரன்) விசாரிக்கிறது காவல்துறை. ஒரு பத்திரிகை அலுவலகத்தில் பணியாற்றும் சண்முகம் பெரும் குடிகாரனும்கூட. அவனை காவல்நிலையத்திலிருந்து வெளியில் கொண்டுவருகிறார்கள் உடன் பணியாற்றும் பத்திரிக்கையாளர்கள்.

மைதிலியின் கணவர் பாலசுப்ரமணியம் (ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்), முன்னாள் காதலன் கிருஷ் ஆகியோரும் விசாரிக்கப்படுகிறார்கள். இதில் பாலசுப்ரமணியத்தை சம்பத் (குரு சோமசுந்தரம்) என்ற கேங்ஸ்டர் மீட்கிறான். இதற்கிடையில் காவல்துறை துரைராஜ் என்ற மிகப் பெரிய ரவுடியையும் தேடுகிறது. இந்தக் கொலையை யார், எதற்காகச் செய்தது, இதில் விசாரிக்கப்படுபவனை கேங்ஸ்டர் ஒருவன் காப்பாற்றுவது ஏன், துரைராஜ் யார் என்பதுதான் மீதிக் கதை.

நிழலுலகம் கதையின் மையமா, இல்லை கொலைப் புதிரா அல்லது கதாநாயகனின் பிரச்சனைகள்தான் மையமா என்பது கடைசிவரைக்கும் புரியாததால் ரொம்பவுமே சோதிக்கிறது இந்தப் படம்.

சினிமா விமர்சனம்: வஞ்சகர் உலகம்

காவல்நிலையத்தில் சந்தேகத்திற்குள்ளானவர்களைக் காவல்துறை விசாரிக்கும்போது சர்வசாதாரணமாக பத்திரிகையாளர்கள் வந்து அழைத்துச்செல்லும் காட்சியிலேயே படம் குறித்த சந்தேகம் எழுந்துவிடுகிறது. பிறகு, ஒரு தாதாவை கடலுக்குள் வைத்துப் பேட்டியெடுத்து, கைசெய்ய வைப்பது, தனியாக பத்திரிகையாளர்களே ஒரு வழக்கில் தேடல் நடத்துவது என பத்திரிகையாளர்கள் குறித்த மிகையான பிம்பத்தை உருவாக்குகிறது படம். மற்றொரு பக்கம் தாதாவாக வரும் சம்பத் சம்பந்தமில்லாமல் ஏதேதோ செய்துகொண்டேயிருக்கிறார். காவல்துறை எந்த விசாரணையையும் உருப்படியாகச் செய்யாமல், அடிக்கடி பேசுகிறார்கள்.

சிறையில் இருக்கும் தாதாவான மாறன் நம்ப முடியாத வகையில் தப்பித்து முன்னாள் காவல்துறை அதிகாரியையும் பத்திரிகையாளரையும் எதற்காகக் கடத்துகிறார், சம்பந்தமே இல்லாமல் சம்பத் ஏன் காவல்துறை அதிகாரியைக் கொல்கிறார், துரைராஜ் என்பவர் என்ன செய்தார் என்பதற்காக காவல்துறை தேடுகிறது என பல கேள்விகளுக்குப் படத்தில் விடை இல்லை.

குரு சோமசுந்தரத்தைத் தவிர படத்தில் வரும் யாரும் நடிக்க முயற்சிகூட செய்யவில்லை. நடிகர்கள் பலரும் ஒட்டாமல் ஏனோ, தானோவென்று நடித்துவிட்டுச் செல்கிறார்கள். பல காட்சிகள் அமெச்சூர்தனமாக நகர்கின்றன.

சினிமா விமர்சனம்: வஞ்சகர் உலகம்படத்தின் காப்புரிமைFACEBOOK/VANJAGAR ULAGAM

சாம் சி.எஸ்சின் இசை படத்திற்கு சுத்தமாகப் பொருந்தவில்லை. படத்தில் வரும் காட்சி ஒரு மாதிரி இருக்க, இசை வேறு மாதிரி இருக்கிறது. குறிப்பாக ஒரு காட்சியில், பின்னணி இசை, சண்முகம் குறித்த ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. ஆனால், அந்தக் காட்சியில் அடிவாங்கி கீழே விழுகிறார் மனிதர். பாடல்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை.

திரைக்கதை, படத்தொகுப்பு என எல்லாவற்றிலும் கோட்டைவிட்டிருக்கிறார்கள்.

எல்லாவற்றையும் தாண்டி முடிவில், சம்பத்தும் நண்பரான பாலசுப்பிரமணியமும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று சுட்டிக்காட்டப்படும் காட்சியில், சண்முகம் பேசும் வசனங்கள் மிக மோசமானவை.

வஞ்சகர் உலகம் என்ற டைட்டிலும் அதில் குரு சோமசுந்தரம் நடித்திருந்ததும் படத்தின் ட்ரெய்லரும் இந்தப் படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. ஆனால், எல்லாவிதத்திலும் ஏமாற்றமளிக்கிறது படம்

https://www.bbc.com/tamil/arts-and-culture-45451110

Link to comment
Share on other sites

வஞ்சகர் உலகம் திரை விமர்சனம்

வஞ்சகர் உலகம் திரை விமர்சனம்

வஞ்சகர் உலகம் திரை விமர்சனம்

 

தமிழ் சினிமாவில் என்றாவது தான் வர்த்தகத்திற்கு அப்பாற்பட்ட படம் வரும். அப்படி தொடர்ந்து அறிமுக இயக்குனர்கள் சிலர் தரமான முயற்சிகளை சினிமாவில் எடுத்து வருகின்றனர், அந்த வகையில் அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள படம் வஞ்சகர் உலகம், இவை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே சாந்தனி கொலை செய்யப்படுகின்றார். இதை தொடர்ந்து அந்த கொலையை யார் செய்தார்கள் என்று போலிஸ் தேட ஆரம்பிக்கின்றது.

அதே நேரத்தில் பத்திரிகை துறையிலிருந்து இந்த கொலை குறித்து பெரிய விவாதம் நடந்து வருகின்றது, இந்த கொலையை யார் செய்தார்கள் என்று இரண்டு தரப்பும் மும்மரமாக தேட, அந்த கொலையை ஒருவர் செய்ததாக தெரிய வருகின்றது. அதோடு படத்தின் இடைவேளை.

இதற்கிடையில் ஒரு கேங்ஸ்டர் ஹெட் துரைராஜ் என்பவரை போலிஸ் தேட, அந்த குருப்பில் குருசோமசுந்தரம் இருக்க, இந்த இரண்டு கதைகளும் எப்படி ஒரு புள்ளியில் சந்திக்கின்றது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

குருசோமசுந்தரம் இவரை வாழ்த்த வார்த்தைகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும், முதல் பாதியில் இவர் எதற்கு இந்த படத்தில் என்று நம்மை எண்ண வைத்து, இரண்டாம் பாதியில் மிரட்டி விடுகின்றார், அதிலும் திரையரங்கில் ஒரு காட்சி குரு எவ்வளவு பெரிய நடிகர் என்பதை நிரூபித்துவிடுகின்றார்.

அதை தொடர்ந்து சிபி கதாபாத்திரம் கவனிக்க வைக்கின்றது, முதல் படம் போலவே இல்லை, இப்படி ஒரு புதிய முயற்சி கொண்ட படத்தில் ஏன் அத்தனை செயற்கை தனமான பத்திரிகையாளர்கள், எந்த ஒரு இடத்திலும் டப்பிங் மேட்ச் ஆகவே இல்லை.

படத்தில் பலரும் பேசத்தயங்கும் சில விஷயங்களை இயக்குனர் மனோஜ் தைரியமாக பேசியுள்ளார், இவை கதைக்கு மிக முக்கியம் என்பதால் அதை சொல்ல முடியவில்லை, படத்தின் முதல் பாதி ஆரம்பித்த 10 நிமிடம் விறுவிறுப்பாக செல்ல அடுத்து இடைவேளை வரை நம் பொறுமையை மிகவும் சோதிக்கின்றது.

இரண்டாம் பாதி கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைக்கின்றது, கேங்ஸ்டர் என்று ஒரு கதை தனியாக வர, அதில் குருசோமசுந்தரமே செம்ம ஸ்கோர் செய்கின்றார், அதிலும் அவர் கேங்ஸ்டராக மெல்ல வளர்ந்து வருவது போல் காட்டும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றது, தென்னிந்தியாவின் நவாஸுதின் சித்திக் என்றே இவரை சொல்லலாம்.

டெக்னிக்கல் விஷயங்கள் படத்தின் மிகப்பெரிய பலம் அதிலும் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு ஏற்றவாறு கலர் தேர்ந்தெடுத்தது புதிய முயற்சி, இவர்கள் எல்லோரையும் விட படத்தின் மறைமுக ஹீரோ இசையமைப்பாளர் சாம் தான், இவரின் பெஸ்ட் என்றே இதை சொல்லலாம்.

க்ளாப்ஸ்

குருசோமசுந்தரம் படத்தை ஒன் மேனாக தாங்கி செல்கின்றார்.

டெக்னிக்கல் விஷயங்கள் ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் சூப்பர்.

கிளைமேக்ஸ் டுவிஸ்ட் ஒவ்வொன்றாக தெரியும் காட்சி புதிய அனுபவத்தை தருகின்றது.

பல்ப்ஸ்

படத்தின் முதல் பாதி மிக மெதுவாக நகரும் திரைக்கதை.

ஒரு சிலர் குறிப்பாக அந்த பத்திரிகையாளரின் நடிப்பு மிக செயற்கைத்தனமாக உள்ளது.

ஜென்ரல் ஆடியன்ஸிற்கு படம் எளிதில் புரியுமா? என்று தெரியவில்லை.

மொத்தத்தில் புதிய முயற்சியை விரும்புவோர்கள், கண்டிப்பாக வஞ்சகர் உலகத்திற்கு விசிட் அடிக்கலாம். மற்றவர்களுக்கு?.

https://www.cineulagam.com/films/05/100961?ref=reviews-feed

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சியில்  மொத்தமாவே 4 சனம்தான் வந்தினம் ஐயோ பாவம் ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.