Jump to content

தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் தவ­றான செயற்­பா­டுகள்


Recommended Posts

தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் தவ­றான செயற்­பா­டுகள்

 

முல்­லைத்­தீவு மாவட்டம் ஒட்­டு­சுட்டான் பிர­தேச செய­லகப் பிரிவில் குமு­ள­முனை தண்­ணி­மு­றிப்பு குருந்தூர் மலைப்­ப­கு­தியில் புத்தர் சிலையை வைப்­ப­தற்கு எடுக்­கப்­பட்ட முயற்­சி­யா­னது பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. வெலி­ஓயா விகா­ரையைச் சேர்ந்த கல்­க­முவ சத்­வ­போதி தேரர் தலை­மை­யி­லான புத்­த­பிக்­குகள் குழு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இந்த முயற்­சியில் ஈடு­பட்­டி­ருந்­தது. புத்­த­பிக்­கு­களின் இந்த முயற்­சிக்கு தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் வவு­னியா முல்­லைத்­தீவு உதவிப் பணிப்­பாளர் உத­வி­யுள்­ள­மையும் தெரி­ய­வந்­துள்­ளது.

குருந்தூர் மலைப்­ப­கு­தியில் பௌத்த விகாரை ஒன்றை அமைக்கும் நோக்­குடன் பௌத்த பிக்­குகள் உட்­பட்ட 12 பேர் வருகை தந்­துள்­ளனர். இத­னை­ய­றிந்த அப்­ப­குதி இளை­ஞர்கள் வாக­னங்­களில் வந்­த­வர்­களை மறித்­த­துடன் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளனர். இந்த எதிர்ப்பின் கார­ண­மாக பௌத்த விகாரை அமைப்­ப­தற்கு வந்­த­வர்கள் திரும்பிச் செல்லும் நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது.

முல்­லைத்­தீவு மாவட்­டத்தின் எல்லைப் பகு­தியில் அமைந்­துள்ள தண்­ணி­மு­றிப்பு கிரா­மத்தில் தமிழ் மன்­னர்கள் வாழ்ந்த வர­லாற்று எச்­சங்­க­ளுடன் குருந்தூர் மலை காணப்­ப­டு­கின்­றது. இந்த மலையை ஆக்­கி­ர­மிப்­ப­தற்கு பல தட­வைகள் முயற்­சிக்­கப்­பட்ட நிலையில் அங்­குள்ள பழை­மை­யான சிவ­னா­ல­யத்தை மக்கள் பரா­ம­ரித்து வரு­கின்­றனர். இந்த நிலை­யி­லேயே நான்கு வாக­னங்­களில் பௌத்த பிக்­குகள் உள்­ளிட்ட 12 பேர் தங்­கு­மிடம் அமைப்­ப­தற்­கான வச­தி­க­ளு­டனும் விகாரை அமைப்­ப­தற்­கான கட்­டடப் பொருட்கள், புத்தர் சிலை ஆகி­ய­வற்­று­டனும் குருந்தூர் மலைப் பகு­திக்கு வரு­வதை ஊர்­மக்கள் அவ­தா­னித்­துள்­ளனர். இத­னை­ய­டுத்து ஒன்­று­தி­ரண்ட மக்கள் தண்­ணி­மு­றிப்புக் கிரா­மத்­துக்குச் சென்று தேடுதல் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­ட­போதே குறித்த குழு­வி­னரை மடக்கிப் பிடித்­துள்­ளனர். ஊர் மக்­களின் எதிர்ப்­பை­ய­டுத்து இந்த நட­வ­டிக்கை தற்­போது தடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களைப் பொறுத்­த­வ­ரையில் தமிழ் மக்­களின் பூர்­வீக நிலங்­களை சூறை­யாடும் நட­வ­டிக்கை தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­கின்­றது. வடக்கு, கிழக்கில் தமிழ் மக்­களின் குடிப்­ப­ரம்­பலை மாற்­றி­ய­மைக்கும் வகையில் சிங்­களக் குடி­யேற்­றங்­களை மேற்­கொள்­வ­தற்­கான செயற்­றிட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதன் ஒரு கட்­ட­மாக தமி­ழர்­களின் பூர்­வீக நிலங்­களில் புத்தர் சிலை­களை நிறு­வு­வ­தற்கும் பௌத்த விகா­ரை­களை அமைப்­ப­தற்கும் திட்­ட­மிட்ட வகையில் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதன் தொடர்ச்­சி­யா­கவே குருந்தூர் மலை­யிலும் புத்தர் சிலையை வைப்­ப­தற்­கான நட­வ­டிக்கை தற்­போது மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்றது.

தமி­ழர்­களின் பூர்­வீக இடங்­களை தொல்­பொருள் ஆராய்ச்சித் திணைக்­க­ளத்தின் உத­வி­யுடன் சுவீ­க­ரிப்­ப­தற்­கான செயற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக குற்­றச்­சாட்­டுகள் எழுந்­துள்­ளன. இதனை நிரூ­பிக்கும் வகை­யி­லேயே தொல்­பொருள் ஆராய்ச்சித் திணைக்­க­ளத்தின் வவு­னியா முல்­லைத்­தீவு உதவிப் பணிப்­பா­ளரின் உத­வி­யுடன் குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைப்­ப­தற்­கான முயற்சி இடம்­பெற்­றி­ருக்­கின்­றது. இந்த விட­ய­மா­னது தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் மீதான குற்­றச்­சாட்டை நிரூ­பித்­தி­ருக்­கின்­றது.

இவ்­வி­டயம் தொடர்பில் தேசிய ஒரு­மைப்­பாடு, நல்­லி­ணக்கம் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் நட­வ­டிக்கை எடுத்­துள்ளார். மாவட்ட செய­லாளர், பிர­தேச செய­லாளர், அந்தப் பகு­தியை உள்­ள­டக்கும் பிர­தேச சபைத் தலைவர் ஆகி­யோரின் எழுத்­து­மூ­ல­மான அனு­ம­தி­யின்றி எந்­த­வொரு மதஸ்­த­லத்­தையும் கட்­டவோ அல்­லது சிலை­களை தாபிக்­கவோ அனு-­ம­திக்­கக்­கூடாது என்று முல்­லைத்­தீவு கிளி­நொச்சி பிராந்­தி­யத்­துக்குப் பொறுப்­பான பிரதி பொலிஸ்மா அதிபர் குண­வர்­த­ன­வுக்கும் ஒட்­டு­சுட்டான் பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி ஆர்.எம். ரத்­நா­யக்­க­வுக்கும் அமைச்சர் உத்­த­ர­விட்­டுள்ளார்.

அத்­துடன் தொல்­பொருள் திணைக்­கள பணிப்­பாளர் நாயகம் பேரா­சிரியர் மண்­டா­வ­லவை தொடர்­பு­கொண்டு இவ்­வி­டயம் குறித்து அமைச்சர் தெளிவு­ப­டுத்­தி­யுள்ளார். தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் வவு­னியா முல்­லைத்­தீவு உதவிப் பணிப்­பாளர் எழுத்­து­மூலம் அழைப்­பு­வி­டுத்து வெலி­ஓயா விகா­ரையைச் சேர்ந்த பௌத்த தேரரை அழைத்­துக்­கொண்டு முல்­லைத்­தீவு மாவட்ட செய­லாளர் மற்றும் ஒட்­டு­சுட்டான் பொலிஸ்­நி­லையப் பொறுப்­ப­தி­காரி ஆகி­யோ­ருக்கு அறி­விக்­காமல் குருந்தூர் மலைப்­ப­கு­தியை நோக்கிச் சென்­றுள்ளார். இதற்கு இரா­ணு­வத்தின் ஒத்­து­ழைப்­பையும் அவர் பெற்­றுக்­கொண்­டுள்ளார். உதவிப் பணிப்­பா­ளரின் இந்த நட­வ­டிக்கை மிகவும் தவ­றா­னது. எனவே இவ்­வி­டயம் குறித்து நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்றும் அமைச்சர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

உண்­மை­யி­லேயே தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் உதவிப் பணிப்­பா­ளரின் நட­வ­டிக்கை பெரும் தவ­றா­க­வுள்­ளது. அந்தப் பணிப்­பா­ளரே பௌத்த பிக்­குகள் குழுவை அழைத்­துக்­கொண்டு இவ்­வா­றான செயற்­பாட்டை மேற்­கொண்­டுள்­ளமை ஏற்­றுக்­கொள்ள முடி­யாத நட­வ­டிக்­கை­யாகும். பௌத்த தேரர்கள் தலை­மை­யி­லான குழு­வினர் புத்தர் சிலை வைப்­ப­தற்கு சென்­ற­போது அப்­ப­குதி இளை­ஞர்கள் நாக­ரி­க­மான முறையில் நடந்­து ­கொண்­ட­மை­யினால் வன்­மு­றைகள் ஏற்­ப­ட­வில்லை. அவர்கள் அநா­க­ரி­க­மான முறையில் செயற்­பட்­டி­ருந்தால் அங்கு பெரும் வன்­முறை இடம்­பெற்­றி­ருக்கும். அது நாட்டில் இனக்­க­ல­வ­ரத்­தையே கொண்­டு ­வந்­தி­ருக்கும்.

எனவே இத்­த­கைய செயற்­பாட்டில் ஈடு­படும் அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்­கைகள் எடுக்­க­வே­ண்­டி­யது அவ­சி­ய­மா­க­வுள்­ளது. இந்த விடயம் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சார்ள்ஸ் நிர்­ம­ல­நா­தனும் கருத்து தெரி­வித்­தி­ருக்­கின்றார். தொல்­பொருள் திணைக்­க­ளத்­தி­ன­ரதும் சில பிக்­கு­க­ளி­னதும் ஆக்­கி­ர­மிப்­பு­க­ளினால் வடக்கு இளை­ஞர்கள் கொதித்துப் போயுள்­ளனர். எனவே நிலைமை மோச­ம­டை­வ­தற்கு முன்னர் தொல்­பொருள் திணைக்­க­ளத்­தையும் அத்­து­ மீறிச் செயற்­ப­டும் சில பிக்­கு­க­ளையும் அர­சாங்கம் கட்­டுப்­படுத்த வேண்டும் என்று அவர் பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தினம் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார்.

தற்­போ­தைய நிலையில் வடக்கு, கிழக்கைப் பொறுத்­த­வ­ரையில் தொல்­பொருள் திணைக்­க­ள­மா­னது திட்­ட­மிட்ட வகையில் தமிழ் மக்­களின் பூர்­வீக இடங்­களை சுவீ­க­ரிக்­கத்­தக்க வகை­யி­லான செயற்­பாடு­க­ளி­லேயே ஈடு­பட்டு வரு­கின்­றது. வவு­னியா ஒலு­ம­டுவில் உள்ள வெடுக்­கு­நாறி மலை­யி­லுள்ள ஆதி­சி­வ­னுக்கு பூசை வழி­பா­டு­களை செய்ய முடி­யாத நிலைமை தற்­போது ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. தொல்­பொருள் திணைக்­க­ள­மா­னது அந்தப் பகு­திக்கு மக்கள் செல்­லக்­கூ­டாது என்றும் அந்தப் பகுதி தொல்­பொருள் திணைக்­க­ளத்­துக்கு உரி­யது என்றும் அறி­வித்­தி­ருந்­த­தா­லேயே இந்த நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் இந்த நட­வ­டிக்­கைக்கு எதி­ராக அப்பகுதி மக்கள் ஆர்ப்­பாட்­டத்தை நடத்­தி­யி­ருந்­தனர். ஆனாலும் இந்த விட­யத்தில் இன்­னமும் தீர்வு காணப்­ப­டாத நிலைமை தொடர்­கின்­றது.

இதே­போன்றே செம்­ம­லையில் பிள்­ளையார் ஆல­யத்தை தமது இட­மென தொல்­பொருள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. அப்­ப­கு­தியில் விகாரை அமைக்­கவும் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. திருக்­கே­தீஸ்­வ­ரத்தில் தமிழ் மக்­களின் பூர்­வீக காணி­களை ஆக்­கி­ர­மித்து விகாரை அமைக்கும் முயற்­சியும் இடம்­பெ­று­கின்­றது. இந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு தொல்­பொருள் திணைக்­க­ளமும் பங்­க­ளிப்பை செய்து வரு­வ­தாக குற்றம் சாட்­டப்­ப­டு­கின்­றது.

வடக்கு, கிழக்­கிலோ அல்­லது நாட்டின் எப்­ப­கு­தி­யிலோ தொல்­பொருள் அடை­யா­ளங்கள் காணப்­பட்டால் அதனை பாது­காத்து ஆய்வு செய்து வர­லாற்றை அறி­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். ஆனால் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களைப் பொறுத்தவரையில் தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடானது அந்த மக்களின் பூர்வீக இடங்களை ஆக்கிரமிப்பதற்கு உதவும் வகையிலேயே அமைந்து வருகின்றது. முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புத்தர் சிலையை நிறுவுவதற்கு தொல்பொருள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் உதவி புரிந்ததைப் போன்றே ஏனைய இடங்களிலும் செயற்பாடுகளுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றதோ என்ற சந்தேகம் தற்போது வலுவடைந்துள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தின் ஆணையாளருடன் இந்த விடயம் குறித்தே அமைச்சர் மனோ கணேசனும் கலந்துரையாடியிருக்கின்றார். எனவே இந்த விடயத்தில் இனியும் அரசாங்கமானது கவனம் செலுத்தாது இருக்கக்கூடாது. தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அவதானித்து அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்க வேணடியது இன்றியமையாததாக உள்ளது.

இல்லையேல் இத்தகைய செயற்பாடுகள் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி நல்லிணக்கத்துக்கு பாதகமாக அமையும் என்பதை சகல தரப்பினரும் புரிந்துகொள்வது நல்லது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-07#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விரித்த சடைமுடி தொடுத்து முடிக்குமுன் எடுத்த  சபதம் முடித்தவளே    
    • தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள், நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள் என புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம்  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) பகிரங்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்காக நீங்கள் இருவரும் (சுமந்திரன், சிறீதரன்) நின்றபோது புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் கட்சி ஒன்றை வழங்குவதாக உங்கள் இருவருடனும் பேரம் பேசினாரா? என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.    தமிழ் வர்த்தகர் மேலும் தெரிவிக்கையில், "எனக்கு ஒருவர் மூலமாகப் புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் செய்தி அனுப்பியிருந்தார். அதாவது, கட்சிகள் விற்பனைக்கு உண்டு, உங்களுக்கு வேண்டுமா? என்று. உரியவர் என்னுடன் நேரடியாகப் பேசவில்லை என்றபடியால் அந்தப் புலம்பெயர் தமிழ் வர்த்தகரின் பெயரை என்னால் பகிரங்கப்படுத்த முடியாது. என்னைத் தலைவர் தெரிவுப் போட்டியிலிருந்து விலகப் பண்ணுவதற்காகவே என்னுடன் இந்த பேரம் பேசப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் வர்த்தகர்கள் தமிழரசுக் கட்சியில் அதிக செல்வாக்கு செலுத்துகின்றார்கள் என்பது உண்மை. இது இன்று பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. இது சம்பந்தமாக, ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் சர்வதேச மட்டத்தில் முக்கிய பதவியை வகித்த ஒருவர், எனக்கு அந்த நேரத்திலேயே ஒரு செய்தியை அனுப்பியிருந்தார். வடக்கிலும் அரசியலுக்குள் பணம் புகுந்து விட்டது, இது விரும்பத்தக்க விடயம் அல்ல, இதைப் பற்றி நீங்கள் கவனிக்க வேண்டும் என்று அவர் சொல்லியிருந்தார். இப்போது நான் பின்னால் திரும்பிப் பார்க்கின்றபோது பல விடயங்கள் அப்படி நடக்கின்றன போல்தான் தெரிகின்றன.  கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எங்கள் கட்சியைச் சேர்ந்த சிலரிடத்தில் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறுமாறு ஒலிவாங்கிகளை நீட்டி கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. சிலரிடம் அப்படிக் கேட்டபோது அவர்கள் மறுத்தும் உள்ளனர். கொள்கை அரசியல்   அதனால்தான் எனக்கு அந்த விடயமே தெரியவந்தது. சுமந்திரனுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்வீர்களேயானால் உங்கள் தேர்தல் பிரச்சார செலவுகளையெல்லாம் தாங்கள் பொறுப்பேற்பதாக அவர்களிடம் சொல்லப்பட்டிருந்தது.   அதற்கமைய சிலர் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். சிலர் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூற மறுத்தும் இருந்தார்கள்.   அப்படியான முயற்சிகள் இன்று கூடுதலாக வலுப்பெற்றுள்ளன. இது தமிழ் மக்களுடைய கொள்கை அரசியல் விடயத்தில் மிகவும் பாதகமான பின்விளைவை ஏற்படுத்தும்.  நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளபடியால் புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் தயவு செய்து தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள் என்று கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும். தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள். தமிழ் மக்களின் விடிவுக்கான பயணத்தை அரசியல் பாதையூடாக நாங்கள் முன்னெடுக்கின்றபோது அதற்குள் பணம் உட்செலுத்தப்பட்டால் அது பாரிய மோசமான பின்னடைவுகளை எங்கள் மக்களிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/sumandran-public-request-diaspora-tamil-traders-1713923907
    • அல்..வாயான்  ..என்பதை வைத்து ...அல்லாவின் ஆள் என்றொருவர் முதல் ஒரு திரியில் குறிப்பிட்டார்.. இப்ப நீங்கள்  புளட்  என்கிறியள் .. நான் ஏங்கைசாமி என் தலையை மோதுவன்...😁...சத்தியாமாச்    சொல்லுறன்........... தான்.
    • தகமைகளை வளர்த்து கொண்ட ஒருவர் 37 மணி நேரம் செய்து பெறும் சம்பளத்தை தகுந்த தகுதிகளை அடைய முடியாத ஒருவர் 60 மணி நேர உழைப்பில் அடையவேண்டி இருப்பது இயல்பே. இப்பவும் 60 மணத்தியாலம் வேலை செய்துதான் என் தேவையான வரவை அடைய முடியும் என்றால் நிச்சயம் செய்வேன். நீங்கள் வாரம் 60 மணத்தியாலம் வேலை செய்யும் 60+ வயது ஆட்களை காண்பதில்லையா? செக்கூரிட்டி வேலை செய்யும் அரைவாசி பேர் இப்படித்தானே?  அங்கே எல்லாம் ஒரு ஷிப்ட் 12 தான். 48 அல்லது 60 தான் வழமை. ———- Gross ஆ take-home ஆ என அந்த வீடியோவிலும் சொல்லவில்லை என நானும் egg இல் hair புடுங்க விரும்பவில்லை.🤣 Take-home ஆகவே இருப்பினும் gross 3380 எனில் take-home  2022/2023 யில் 2700. 20023/2024 இல் 2750.  இப்படி பார்த்தாலும் வீடியோவின் 10 இலட்ச கணக்கு சரிதான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.