Jump to content

மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால்


Recommended Posts

மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால்

 

மட்டக்களப்பு புல்லுமலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர் தொழிற்சாலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால் நடவடிக்கையில் மட்டு நகரே இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளது.

அந்தவகையில் சற்று முன்னர் வாகனங்கள் போக்குவரத்து செய்யப்பட்ட பகுதிகளில் ரயர்கள் எரிக்கப்பட்டதுடன் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

unnamed-1-2.jpgunnamed-11.jpgunnamed-5-2.jpgunnamed-4-3.jpgunnamed-2-4.jpg

http://www.newsuthanthiran.com/2018/09/07/மட்டக்களப்பில்-பூரண-ஹர்த/

Link to comment
Share on other sites

மட்டக்களப்பின் பல பகுதிகளில் அன்றாட நடவடிக்கைகள் முடக்கம்

 

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அன்றாட நடவடிக்கைகள் முடங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு - பதுளை வீதி பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டு வருகின்ற போத்தல் குடிநீர் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மட்டக்களப்பின் பல பகுதிகளில் இன்று தனியார் பேருந்துகள் எதுவும் போக்குவரத்தில் ஈடுபடாத நிலையில் இ.போ.சபையின் ஒரு சில பேருந்துகள் மாத்திரம் சேவையில் ஈடுபட்டுள்ளன.

அத்துடன், தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் என்பன முற்றாக மூடப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளில் மாணவர்களின் வருகையும் குறைவாகவே பதிவாகியுள்ளன.

இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல வீதிகள் வெறிச் சோடி காணப்படுகின்றதையும் அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

https://www.tamilwin.com/community/01/192770?ref=home-latest

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையில் இருந்த வளங்களையெல்லாம் கொடுத்துவிட்டு இன்று ஹர்த்தால் போடும் நிலையில் தமிழ் மக்கள் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடி.. சவுதி அளவுக்கு முன்னேறி இருக்குது.. ஆனால்.. மட்டக்களப்பு இன்னும் அப்படியே அபிவிருத்தி இன்றிக்கிடக்கிறது. ஆனால்.. கருணா என்கிற முரளிதரன்.. சொறீலங்காவின் 5வது பெரும் பணக்கார அரசியல்வாதி ஆகிட்டார்.  இதுதான் கிழக்கின் விடியல்..????! ?

Link to comment
Share on other sites

பற்றி எரிகிறது வீதிகள், வெறிச்சோடியது மாவட்டம்; யுத்த காலத்தை நினைவுபடுத்திய போராட்டம்!

 

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

 

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலக பிரிவில் உள்ள வளம் செறிந்த புல்லுமலை ஊரில் குடிநீரை நிலத்தடியில் இருந்து உறுஞ்சி போத்தல்களில் அடைத்து மத்தியகிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபார நோக்கில் காத்தான்குடி தவிசாளரால் ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலையை மூடுமாறு கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியநிலையில் இன்று 07/09/2018 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கிய நிர்வாக முடக்கம் ஹர்தால் போராட்டம் நடத்த மட்டக்களப்பு மாவட்ட பொது அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருந்தன.

இந்த போராட்டத்திற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பும் தார்மீக ஆதரவை தெரிவித்திருந்தனர் இன்றய ஹர்தால் கதவடைப்பு நிர்வாக முடக்கம் போராட்டம் பூரண வெற்றி அடைந்துள்ளது.

மட்டுநகர் படுவான்கரைபெருநிலம் எழுவான்கரை பகுதிகள் யாவும் வெறிச்சோடி காட்சியளிக்கிறது.

ஏறாவூர் பகுதியில் சில பேரூந்து சேவை காலையில் இடம்பெற்ற போதும் வீதிகளில் சிலர் தீயிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர் இதனால் பேருந்து சேவைகளும் முற்றாக நிறுத்தப்பட்டன.

படுவான்கரை பெருநிலப்பகுதி பாடசாலை மாணவர்கள் எவரும் எந்த பாடசாலைகளுக்கும் செல்லவில்லை.

சகல வர்தசங்கங்களும் பூரண ஆதரவை வழங்கியது திணைக்களங்களில் அன்றாட பணிகள் நடைபெற பொதுமக்கள் எவரும் செல்லவில்லை.

வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சை நோயாளர் நலன் கருதி இயங்கியபோதும் வரவு குறைவாகவே காணப்பட்டது.

இன்று நடைபெறும் இந்த ஹர்த்தால் எந்த ஒரு இனத்திற்குகோ மதத்திற்குகோ எதிரான போராட்டமல்ல இது எமது இயற்கையை அழிப்பவர்களுக்கு எதிரான போராட்டம் தண்ணீர்ப் பிரச்சனைக்கான போராட்டம் இது ஒட்டுமொத்த மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கான விவசாயத்திற்கு நீர் வேண்டும் என்பதற்கான போராட்டம் இப்படிப்பட்ட இந்த நியாயமான எதிர்கால உயிர் வாழ்தலுக்கான போராட்டத்தை ஏன் முஸ்லீம்கள் சிலர் இனவாதமாக பார்க்கவேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இன்றைய இந்த ஹர்த்தால் ஆனது தமிழ் மக்களின் ஒற்றுமையை பறைசாற்றி நிற்பதுடன் யுத்தகாலத்தில் இருந்த எழுச்சி மீண்டும் மட்டக்களப்பில் உருவாகியுள்ளதை எடுத்துக்காட்டியுள்ளது இதற்காண காரனம் அங்குள்ள மக்கள் மூம்முனைகளில் ஆக்கிரமிக்கப்பட்டு ஒடுக்கப்படுவதே காரணம் என கூறப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 07.09.2018 அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலையிலே மட்டக்களப்பின் பல பகுதிகளில் ரயர்கள் எரிக்கப்பட்டுள்ளதைக் காணக் கூடியதாவுள்ளது. அத்துடன் இன்று மட்டு நகரில் பிரபல பாடசாலைகளுக்கு சென்ற ஆசிரியர்கள் மாணவர்கள் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர் பாடசாலை இயங்கவில்லை காணமுடிகின்றது.இரு நூறுக்கும் மேற்பட்ட மீனவ படகுகளில் தொழில் செல்லாமல் நிறுத்தியதையும் காணமுடிகின்றது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/105785?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, nedukkalapoovan said:

காத்தான்குடி.. சவுதி அளவுக்கு முன்னேறி இருக்குது.. ஆனால்.. மட்டக்களப்பு இன்னும் அப்படியே அபிவிருத்தி இன்றிக்கிடக்கிறது. ஆனால்.. கருணா என்கிற முரளிதரன்.. சொறீலங்காவின் 5வது பெரும் பணக்கார அரசியல்வாதி ஆகிட்டார்.  இதுதான் கிழக்கின் விடியல்..????! ?

அரசியலுக்கு வந்தவன் முழுப்பேரும் பணக்காரன் ஆகிரான் ஓட்டிட்டவன் ஓட்டாண்டி ஆகிறான் ஒரு நாள் கஞ்சிக்கு ஓடும் நிலை 

இதில் கர்ணா மட்டும் இல்லையே மற்றவர்களையும் சேர்க்கலாம் தானே  சொகுசு பங்களா, சொகுசு கார், வெளிநாட்டில் பிள்ளைகள் குடும்பங்கள் சொத்துக்கள். கர்ணா மக்களால் விலக்கப்பட்டுள்ளார் பேருக்கும்மட்டும் அவர் இருக்கிறார் பிள்ளையான் பறவாவில்லை சிறையில் இருந்தாலும் துரோகியாக இருந்தாலும் அவர் ஆட்சியில் இருக்கும் போது தமிழ் (கிழ்க்கு)மக்களின் வளங்கள் சூறையாடப்படவில்லை அதில் அவர் கவனம்  செலுத்தினார்.:104_point_left:

Link to comment
Share on other sites

மட்டக்களப்பில் பேருந்துகள் மீது தாக்குதல்! பலர் கைது

 

திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தாக்குதல் சம்பவம் இன்று காலை மட்டக்களப்பு - செங்கலடியில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்களை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பலரை தேடி வருவதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மட்டக்களப்பு - பதுளை வீதி, பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டு வருகின்ற போத்தல் குடிநீர் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

https://www.tamilwin.com/community/01/192780?ref=imp-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அரசியலுக்கு வந்தவன் முழுப்பேரும் பணக்காரன் ஆகிரான் ஓட்டிட்டவன் ஓட்டாண்டி ஆகிறான் ஒரு நாள் கஞ்சிக்கு ஓடும் நிலை 

இதில் கர்ணா மட்டும் இல்லையே மற்றவர்களையும் சேர்க்கலாம் தானே  சொகுசு பங்களா, சொகுசு கார், வெளிநாட்டில் பிள்ளைகள் குடும்பங்கள் சொத்துக்கள். கர்ணா மக்களால் விலக்கப்பட்டுள்ளார் பேருக்கும்மட்டும் அவர் இருக்கிறார் பிள்ளையான் பறவாவில்லை சிறையில் இருந்தாலும் துரோகியாக இருந்தாலும் அவர் ஆட்சியில் இருக்கும் போது தமிழ் (கிழ்க்கு)மக்களின் வளங்கள் சூறையாடப்படவில்லை அதில் அவர் கவனம்  செலுத்தினார்.:104_point_left:

அன்பரே! பிரதேசவாதத்தை  கையிலெடுத்து ஒரு போராட்டத்தையே காட்டிக்கொடுத்தவர் ஒதுங்கிவிட்டார் என்பதற்காக அவரை இனிமேல் கணக்கில் எடுக்க மாட்டீர்களா? tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2018 at 4:04 AM, குமாரசாமி said:

அன்பரே! பிரதேசவாதத்தை  கையிலெடுத்து ஒரு போராட்டத்தையே காட்டிக்கொடுத்தவர் ஒதுங்கிவிட்டார் என்பதற்காக அவரை இனிமேல் கணக்கில் எடுக்க மாட்டீர்களா? tw_blush:

எடுக்க மாட்டோம் :)

Link to comment
Share on other sites

On ‎9‎/‎8‎/‎2018 at 12:34 AM, குமாரசாமி said:

அன்பரே! பிரதேசவாதத்தை  கையிலெடுத்து ஒரு போராட்டத்தையே காட்டிக்கொடுத்தவர் ஒதுங்கிவிட்டார் என்பதற்காக அவரை இனிமேல் கணக்கில் எடுக்க மாட்டீர்களா? tw_blush:

 

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

எடுக்க மாட்டோம் :)

மகிந்தா திரும்ப வந்தால்..... தனிக்காட்டு ராசாவுக்கு கருணாவே கணக்கில் பாடமெடுக்கவேண்டிய நிலையும் வரலாம். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எடுக்க மாட்டோம் :)

அவருக்கு இப்ப பவர்  இல்லையெண்டாப்போலை  எடுக்கமாட்டம் எண்டு எழுப்பம் விடப்படாது சார்..tw_blush:

Link to comment
Share on other sites

மட்டக்களப்பு தமிழர் பலர் (ஒருசிலரைத் தவிர) கடின உழைப்பின் மூலம் முன்னேறுவதில் அக்கறை குறைந்தவர்களாக இருப்பது கவலையானது. 

பலர் உயர்கல்வி, உத்தியோகம் போன்றவற்றில் சலுகைகளை கூடுதலாக எதிர்பார்க்கின்றனர். இது ஆரோக்கியமானது அல்ல. 

இது கிழக்கு மாகாண கல்வியலாளர்கள் சிலர் கவலையுடன் சொன்ன தகவல்கள். 

போராட்டங்களின் போது சொத்துக்களை தாக்குவது ஆரோக்கியமான விடயம் இல்லை. 

Link to comment
Share on other sites

2 hours ago, போல் said:

இது கிழக்கு மாகாண கல்வியலாளர்கள் சிலர் கவலையுடன் சொன்ன தகவல்கள். 

போராட்டங்களின் போது சொத்துக்களை தாக்குவது ஆரோக்கியமான விடயம் இல்லை. 

தாக்கியவர்கள் யார் இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் யார்மூலம் வந்தார்கள் என்பதை இந்த நவீன காலத்தில் படம்போட்டுக் காட்ட முடியுமே ஏன் போடவில்லை. சல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது தமிழ்நாட்டில் காவற்துறையே சொத்துக்களைத் தாக்கி அழித்தது. அவர்கள் நிச்சயம் பதவி உயர்வும் அடைந்திருப்பார்கள். இந்தியாதானே இலங்கை அரசுக்குப் பாடம் சொல்லித் தருகிறது. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்கு,

 

நீங்கள் இங்கே குறிப்பிடும்வரை எனக்கு இப்படியொரு செய்தி இருப்பதே தெரிந்திருக்கவில்லை

போர்ப்ஸ் இதழின்படி 2017 இல்ஈலங்கையின் முதல் பத்துப் பணக்காரர்களின் பட்டியல் இதோ,

குறிப்பு : இவை பகிரங்கமாக பிரகடனப்படுத்தப்பட்ட சொத்து விபரங்களை அடிப்படையாக வைத்து தொகுக்கப்பட்டிருக்கிறது !!!

1. முன்னால் அரசுத்தலைவர், மகிந்த ராஜபக்ச - அமெரிக்க டாலர்களில் 18 பில்லியன்.

2. உன்னால் இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர், அர்ஜுன ரணதுங்க - அமெரிக்க டாலர்களில் 68 மில்லியன்

3. இனறைய அரசுத் தலைவர், மைத்திரிபால சிறிசேன - அமெரிக்க டாலர்களில் 14 மில்லியன்

4. முன்னால் இலங்கை தொழிலாளர் கட்சித் தலைவர், ஆறுமுகம் தொண்டைமான் - அமெரிக்க டாலர்களில் 1.9 மில்லியன்

5. அரச ஆயுதக் குழுத் தலைவர், விநாயகமூர்த்தி முரளீதரன் - அமெரிக்க டாலர்களில் 1.7 மில்லியன்

6. முன்னால் அமைச்சர், பெளசி - அமெரிக்க டாலர்களில் 1.4 மில்லியன்

7. முன்னால் அரசுத்தலைவர், சந்திரிக்கா குமாரதுங்க - அமெரிக்க டாலர்களில் 1.4 மில்லியன்.

8. மக்கள் விடுதலை முன்னணி தலைவர், அநுர குமார திசானாயக்க - அமெரிக்க டாலர்களில் 1.3 மில்லியன்.

9. அமைச்சர் அதாவுள்ளா - அமெரிக்க டாலர்களில் 900,000

10. இன்றைய பிரதமர், ரணில் விக்கிரமசிங்க - அமெரிக்க டாலர்களில் - 860,000.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுடனிருந்து பிரிந்துசென்றபோது கருணா கையிலெடுத்த ஆயுதம் பிரதேசவாதம். ராஜன் ஆசீர்வாதம் மற்றும் மோனகுருசாமி போன்றவர்களை அருகில் வைத்துக்கொண்டு பிரதேசவாதம் கக்கிய கருணா செய்ததெல்லாம் கிழக்கு மாகாண மக்களை தனது சுயநல அரசிய லாபத்துக்காகப் பாவிக்க முனைந்ததுதான்.

ஆனால், அவரது பிரதேசவாதப் பொறியை விரைவாக உணர்ந்துகொண்ட தென் தமிழீழ மக்களும், தென் தமீழழத்தின் தளபதிகள் மற்றும் போராளிகளும் அவரை விட்டு வெளியேறியபோது அவரது முகத்திரை கிழிந்தது.

முகமாலையில் நிலைகொண்டிருந்த் ஜெயந்தன் படையணியின் போராளிகள் மற்றும் தளபதிகள் அடங்கலாக 450 பேரை, ஆயுதங்களைப் போட்டுவிட்டு இலங்கை ராணுவத்திடம் சரணடையுங்கள் என்று கருணா கட்டளையிட்டபோதே அவரது துரோகத்தனதின் முழு ரூபமும் வெளிப்பட்டு விட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒப்பற்ற தளபதியாக வலம் வந்த கருணா அம்மான் எனும் போராளி, விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து அழிக்க உதவிய துரோகிக்கான பட்டத்தையும் சுமந்து, தனது மக்களால் தூக்கியெறியப்பட்டு, வெறும் செல்லாக்காசாக, சிங்களத்தின் நூறோடு, நூற்றி ஒராவது கைக்கூலியாக மாறியிருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பான் பட்டைகிளப்பான் என்னும் நியதிக்கு ஏற்ப.
வடபகுதி மக்ககளை விட யுத்தத்தினாலும் இயற்கை அழிவுகளுனாலும் பல இழப்புக்கள் சந்தித்தாலும் அவற்றை எல்லாம் தாண்டி முன்னேறியுள்ளார்கள். உண்மையில் திறமைசாலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின முதல் பத்து பணக்காரர்களில் இரு தமிழர்கள் இருப்பது குறிப்பிடும்படியானது.

ஒருவர் மலையக மக்களின் அறிவீனத்தைப் பாவித்து, அவர்களின் முதுகில் சவாரி செய்து வயிறு வளர்த்தவர்.

மற்றையவர், பிரதேசவாததாலும், துரோகத்தனத்தாலும்  தனது வயிறு வளர்த்தவர்.

Link to comment
Share on other sites

2 hours ago, ragunathan said:

போர்ப்ஸ் இதழின்படி 2017 இல்ஈலங்கையின் முதல் பத்துப் பணக்காரர்களின் பட்டியல் இதோ,

தப்பு! தப்பு!

இது இலங்கையின் முதல் பத்து பணக்காரர் லிஸ்ட் இல்லை!

இது இலங்கையின் அரசியல்வாதிகளினுள் இருக்கும் முதல் பத்து பணக்காரர் லிஸ்ட்!

இல்லையென்றால் என் பேரும் வந்திருக்கோணும்! (?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2018 at 11:23 PM, Paanch said:

மகிந்தா திரும்ப வந்தால்..... தனிக்காட்டு ராசாவுக்கு கருணாவே கணக்கில் பாடமெடுக்கவேண்டிய நிலையும் வரலாம். ?

ஹாஹா  வந்தால் பார்ப்போம்  வேண்டும் என்றால் அவர் முகநூல் கணக்கு இருக்கிறது வேண்டுமானவர்கள் நட்பில் இணையலாம் :)

 

On 9/10/2018 at 2:55 AM, குமாரசாமி said:

அவருக்கு இப்ப பவர்  இல்லையெண்டாப்போலை  எடுக்கமாட்டம் எண்டு எழுப்பம் விடப்படாது சார்..tw_blush:

அப்படியென்றால் கருணா அம்மான் இன்னும் இறங்கி செய்வார் மக்களுக்காக அரசியல் 

ஆனால் அவர்  அவர் கீழ் இருந்த பிள்ளையானை கூட வெல்ல முடியாமல் போனது வேறு கதை பிள்ளையானுக்கு இருக்கும் மக்கள் ஆதரவு மக்கள் கருணா அம்மானுக்கு இல்லையே :104_point_left: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படியென்றால் கருணா அம்மான் இன்னும் இறங்கி செய்வார் மக்களுக்காக அரசியல் 

ஆனால் அவர்  அவர் கீழ் இருந்த பிள்ளையானை கூட வெல்ல முடியாமல் போனது வேறு கதை பிள்ளையானுக்கு இருக்கும் மக்கள் ஆதரவு மக்கள் கருணா அம்மானுக்கு இல்லையே :104_point_left: 

மக்கள் உயிரே முக்கியம் என வரிந்து கட்டி ஒரு இன விடுதலை போரட்டத்தையே  சீர்குலைத்தவர்களில் ஒருவர் சிறையில்.....
மற்றொருவருவரை ஒதிக்கிவிட்டோம் வரிசையில்....சம்சும்மும் சரியில்லாத நிலையில்....
காத்தான்குடி கொத்துரொட்டி கோலோச்சுமா? :104_point_left:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2018 at 4:45 AM, குமாரசாமி said:

மக்கள் உயிரே முக்கியம் என வரிந்து கட்டி ஒரு இன விடுதலை போரட்டத்தையே  சீர்குலைத்தவர்களில் ஒருவர் சிறையில்.....
மற்றொருவருவரை ஒதிக்கிவிட்டோம் வரிசையில்....சம்சும்மும் சரியில்லாத நிலையில்....
காத்தான்குடி கொத்துரொட்டி கோலோச்சுமா? :104_point_left:

முஸ்லீம்கள் இருப்பதால் என்னவோ ஒரு சில அபிவிருத்திகளாவது தமிழர் பகுதிகளில் கால்வாசியாவது கிடைக்கிறது  ஆனால் அவர்கள் நோக்கம் இலக்கு நோக்கி சாதாரணமாக பயணிக்கிறார்கள் சிங்களவர்களை மோடர்கள் என்றார்கள் அவர்கள் மோடர்கள் ஆக்கியது யாரை என்ற கேள்வி இருக்கு முஸ்லீம்களை வந்தேறிகள் என்றார்கள் அவர்களோ  இருக்கும் வரைக்கும் வாழ்ந்துவிட்டு போகலாம் என்று வாழ்கிறார்கள் தமிழர்கள் மட்டும் தான் தன் வாயால் கெட்டே வாழ்கிறார்கள் இப்ப வரைக்கும் காத்தான் குடி கொத்து செம ருசி :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு கருத்தாளர் தரும் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் போது மறுத்துரைக்கும் தரவுகளைத் தருவதில்லை. கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டால் "மேற்கின் , அமெரிக்காவின் செம்பு" என்பீர்கள். நீங்கள் உருப்படியான தரவுகளைத் தந்ததை விட "செம்பு" என்பதைத் தான் அதிக தடவைகள் பாவித்திருக்கிறீர்கள் என்பது என் அவதானிப்பு, இன்னும் நீங்கள் "சுழல் கழிப்பறை" பாவிப்பதாலோ தெரியாது😂!
    • நேற்றைய தினம் எனும் திரியில் கள உறுப்பினர்களுக்கும் முக்கியமாக @goshan_che அவர்களுக்கும் நிர்வாகத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இடம் பெற்ற கருத்தாடலில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு நிர்வாகம் தனது வருத்தத்தினைத் தெரிவிக்கின்றது.
    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.