Jump to content

மீள்­கு­டி­யேற்­றத்­து­டன் விளை­யா­டுகிறது அரசு


Recommended Posts

மீள்­கு­டி­யேற்­றத்­து­டன்  விளை­யா­டுகிறது அரசு

 

தசாப்­தங்­கள் தாண்டி நீடித்த போர் முடி­வுக்கு வந்த பின்­ன­ரும், பாது­காப்பு அமைச்­சுக்­கான நிதி ஒதுக்­கீடு ஆண்­டு­தோ­றும் அதி­க­ரித்­துச் செல்­கின்­றது. போரி­னால் இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள்­கு­டி­ய­மர்த்தி அவர்­க­ளுக்கு அடிப்­ப­டைக் கட்­டு­மா­னங்­களை ஏற்­ப­டுத்­திக் கொடுத்து, இயல்பு வாழ்க்­கைக்கு அவர்­க­ளைத் திரும்­பச் செய்­ய­வேண்­டிய மீள்­கு­டி­யேற்ற அமைச்­சுக்­கான நிதி ஒதுக்­கீடோ குறைந்து செல்­கின்­றது.

2016ஆம் ஆண்டு மீள்­கு­டி­யேற்ற அமைச்­சுக்கு 14 ஆயி­ரம் மில்­லி­யன் ரூபா ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த ஆண்­டுக்கு வெறும் 750 மில்­லி­யன் ரூபா மாத்­தி­ரமே கொழும்பு அரசு ஒதுக்­கி­யி­ருந்­தது. வடக்கு – –கிழக்கு மாகா­ணங்­க­ளில் இந்த நிதி­யில் மீள்­கு­டி­யேற்­றச் செயற்­பா­டு­கள் மாத்­தி­ரம் அல்­லது இந்து விவ­கா­ரங்­களை மாத்திரமே அந்த அமைச்சு கவ­னிக்க வேண்­டிய நிலை இருக்­கின்­றது.

நீண்ட நெடிய போராட்­டத்­தின் பயனாக இரா­ணு­வத்­தி­ன­ரி­ட­மி­ருந்து மக்­க­ளின் காணி­கள் சில ஏக்­கர்­கள் யாழ்ப்­பா­ணத்­தில், முல்­லைத்­தீ­வில், கிளி­நொச்­சி­யில், மன்­னா­ரில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தன. அந்த மக்­களை உட­ன­டி­யாக மீள்­கு­டி­ய­மர்த்­து­வ­தற்­குத் தேவை­யான அடிப்­படை வச­தி­களை ஏற்­ப­டு­த்திக் கொடுக்­கவோ, அவர்­க­ளின் காணி­க­ளில் வளர்ந்­துள்ள பற்­றைக் காடு­களை அகற்­றவோ உட­ன­டி­யாக நிதி விடு­விக்­கப்­ப­ட­வில்லை.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் கடந்த ஏப்­ரல் மாதம் 683 ஏக்­கர் நிலம் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தது. அந்­தக் காணி­க­ளில் மக்­களை மீள்­கு­டி­ய­மர்த்­து­வ­தற்கு ஆயி­ரத்து 600 மில்­லி­யன் ரூபா தேவை என்று யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தி­னால் மதிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. அந்­தக் கோரிக்­கைக்கு இன்று வரை நிதி விடு­விக்­கப்­ப­ட­வில்லை. காணி விடு­விக்­கப்­பட்­டும் நான்கு மாதங்­க­ளுக்கு மேலாக அந்­தப் பகு­தி­யில் மீள்­கு­டி­ய­மர்வு முழு­மைப்­ப­டுத்­தப்­ப­ட­ வில்லை.

சாமி இடம் கொடுத்­தா­லும் பூசாரி இடம் கொடான் என்­பது போல், பாது­காப்­புத் தரப்­பி­னர் காணி­களை விடு­வித்­தா­லும், மக்­கள் மீள்­கு­டி­ய­மர முடி­யாத நில­மையே நீடிக்­கின்­றது.

இடம்­பெ­யர்ந்து நலன்­புரி நிலை­யங்­க­ளி­லுள்ள மக்­க­ளுக்கு உலர் உண­வுப் பொருள்­கள் மாதாந்­தம் வழங்­கப்­பட்டு வந்­தது. மகிந்த அர­சின் காலத்­தில் அவை திடீ­ரென நிறுத்­தப்­பட்­டன. நலன்­புரி நிலை­யங்­களே இல்லை என்று மகிந்த அரசு பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு அறி­விப்­ப­தற்­காக, நலன்­புரி நிலை­யங்­க­ளில் தங்­கி­யி­ருந்­தோ­ருக்கு வழங்­கிய உத­வி­களை நிறுத்­தி­யது.

இதே­போ­லத்­தான் இந்த அர­சும், மீள்­கு­டி­யேற்­றச் செயற்­பா­டு­கள் முழுமை பெற்று விட்­டது என்­ப­தைப் பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு காண்­பிப்­ப­தற்­கா­கவோ என்­னவோ, மீள்­கு­டி­யேற்ற அமைச்­சுக்­கான நிதி­யைக் குறைத் துள்­ளதோ என்று எண்­ணத் தோன்­று­கின்­றது.

பாது­காப்­புத் தரப்­பின் பிடி­யி­லுள்ள காணி­களை முழு­மை­யாக விடு­வித்து, அந்த நிலங்­க­ளுக்­குச் சொந்­தக்­கா­ரர்­களை முழு­மை­யா­கக் குடி­ய­மர்த்­திய பின்­னர், மீள் கு­டி­யேற்ற அமைச்­சுக்­கான நிதியைக் குறைப்­ப­தில் நியா­யம் இருக்­கின்­றது. ஆனால் காணி விடு­விப்பை கிள்­ளித் தெளிப்­பது போல் கொஞ்ச ஏக்­கர்­களை காலத்­துக்கு காலம் விடு­வித்து விட்டு, மீள்­கு­டி­யேற்ற அமைச்­சுக்­கான நிதி ஒதுக்­கீட்­டில் முழு­மை­யாக கை வைப்­பது பொருத்­த­மில்லை.

அடுத்த ஆண்­டுக்­கான வரவு – செல­வுத் திட்­டத்­தில் மீள்­கு­டி­யேற்ற அமைச்சு 6 ஆயி­ரத்து 650 மில்­லி­யன் ரூபா தேவை என்று மதிப்­பிட்­டுள்­ள­தா­கத் தெரி­கின்­றது. மீள்­கு­டி­யேற்­றத்­துக்கு எவ்­வ­ளவு நிதியை அரசு வழங்­கப் போகின்­றது என்­ப­தைப் பொறுத்­தி­ருந்து பார்ப்­போம்.

https://newuthayan.com/story/12/மீள்­கு­டி­யேற்­றத்­து­டன்-விளை­யா­டுகிறது-அரசு.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.