Jump to content

உலகப் பார்வை: பதிமூன்று ஆண்டுகளாக தேடப்பட்ட ஒரு ஜோடி செருப்பு


Recommended Posts

பதிமூன்று ஆண்டுகளாக தேடப்பட்ட ஒரு ஜோடி செருப்பு

கடந்த சில மணி நேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம்.

செருப்புக்கான ஒரு தேடல்

செருப்புக்கான ஒரு தேடல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தி விஸார்ட் ஆஃப் ஓசெட் படத்தில் ஜூடி கார்லாண்டால் அணியப்பட்ட மாணிக்க செருப்பு ஒன்று பதிமூன்று ஆண்டுகளுக்குப்பின் கிடைத்துள்ளது. மின்சோடா அருங்காட்சியகத்திலிருந்த இந்த செருப்பினை, 2005 ஆம் ஆண்டு, சிலர் ஜன்னல்களை உடைத்து திருடினர். இந்த செருப்பு குறித்து தகவல் தருபவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு தருவதாக ஒருவர் அறிவித்து இருந்தார்.

ஜூடி கார்லாண்ட்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Presentational grey line

பாகிஸ்தான் அதிபராக இம்ரான்கான் கட்சியை சேர்ந்தவர் தேர்வு

பாகிஸ்தான் அதிபராக இம்ரான்கான் கட்சியை சேர்ந்தவர் தேர்வு

பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் பிரதமர் இம்ரான்கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த ஆரிப் ஆல்வி வெற்றி பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பிலும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் சார்பிலும் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இத்தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நான்கு மாகாண சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

ஆரிப் ஆல்வியின் தந்தை இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பல் மருத்துவராக இருந்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

Presentational grey line

கொல்லப்பட்ட போராட்டக்காரர்கள்

கொல்லப்பட்ட போராட்டக்காரர்கள்படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES

இராக் பாஸ்ராவில் நடந்த போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படைக்கும் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 14 பேர் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் பத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினரும் காயமடைந்ததாக கூறப்படுகிறது. வேலைவாய்ப்பின்மை, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி பாஸ்ரா மக்கள் போராடி வருகின்றனர்.

Presentational grey line

சமூக ஊடகத்தில் கிண்டல்

சமூக ஊடகத்தில் கிண்டல்படத்தின் காப்புரிமைAFP

சமூக ஊடகத்தில் மத நம்பிக்கைகள், மதிப்பீடுகள், பொது ஒழுக்கம் மற்றும் அரசு ஆணைகளை கிண்டல் செய்து பதிவிட்டால் ஐந்து ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என செளதி அரசு தரப்பு கூறி உள்ளது. இதற்கு அபராதமாக எட்டு லட்சம் டாலரும் விதிக்கப்படும் என்கிறது அரசு தரப்பு.

Presentational grey line Presentational grey line

அமெரிக்காவில் புயல்

அமெரிக்காவில் புயல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

வெப்பமண்டல புஅயல் கோர்டோன் அமெரிக்க வளைகுடா கடல் பகுதியை நோக்கி நகர்வதை அடுத்து லூசியானா மற்றும் மிசிஸ்சிபி ஆகிய மாகாணங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

தேசிய சூறாவளி மையம் இந்த புயலானது மணிக்கு 110 கி.மீ வேகத்தில் வரும் என்று எச்சரித்துள்ளது. நிலத்தை வந்தடைவதற்கு முன் இந்த புயலின் வேகம் அதிகரிக்கலாம் என்று எச்சரித்துள்ளது.

Presentational grey line

ஜப்பானை தாக்கிய கடும் சூறாவளி

ஜப்பானை தாக்கிய கடும் சூறாவளிபடத்தின் காப்புரிமைEPA

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக சக்திவாய்ந்த சூறாவளியொன்று ஜப்பானை தாக்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்  இந்த சூறாவளி தாக்குதலில் 200 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜப்பானின் மேற்கு பகுதியில் கரையை கடந்த ஜெபி என்று பெயரிடப்பட்ட இந்த சூறாவளி மணிக்கு 172 கி.மீட்டர் வேகத்தில் வீசியதாகவும், அதனால் மிக பயங்கர மழை பெய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றனர்.

மிக பெரிய அலைகள் வீசிவரும் நிலையில், கடும் வெள்ளம் மற்றும் மண் சரிவு குறித்து எச்சரிக்கைகள்  விடுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/global-45417025

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.