Jump to content

கறுப்புச் சட்டையில் மு.க அழகிரி.... தொடங்கியது அமைதிப் பேரணி!


Recommended Posts

கருணாநிதி நினைவிடத்துக்கு மு.க.அழகிரி ஆதரவாளர்கள் இன்று அமைதிப் பேரணி

 

 
newPic1624jpgjpg

மு.க.அழகிரி | கோப்புப் படம்.

சென்னை அண்ணா சாலையிலி ருந்து கருணாநிதி நினைவிடம் வரை தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று அமைதிப் பேரணி நடத்துகிறார்.

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். கருணாநிதி மறைந்து சில நாட்கள் அமைதியாக இருந்த அழகிரி கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி, ‘‘கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர்'' என்றார்.

 

இதைத் தொடர்ந்து செப். 5-ம் தேதி கருணாநிதி நினை விடத்துக்கு அமைதிப் பேரணி நடத்தப் போவதாக அறிவித்தார்.

அதன்படி இன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணா சாலை - வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலையிலிருந்து கருணாநிதி நினைவிடம் வரை அழகிரி அமைதிப் பேரணி நடத்துகிறார். இதுதொடர்பாக அழகிரி கூறும்போது, ‘‘பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள். எனது அடுத்தகட்ட நடவடிக் கையை பேரணியின் முடிவில் அறிவிப்பேன்'' என்றார்.

திமுக நிர்வாகி நீக்கம்

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அழகிரியை வரவேற்ற சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி கிழக்கு பகுதி செயலாளர் மு.ரவி, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article24869126.ece?utm_source=HP&utm_medium=hp-latest

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கலைஞ்சருக்கே நாடு தாங்கல.. ?

alagiri-postera-1536118106.jpg

அசுர குரு சுக்ராச்சாரியாருக்கும் தேவ குரு பிரகஸ்பதிக்கும் "டப் கொம்படிசன்" கொடுக்கினம்.. ?

alagiri-poster23334-1536118016.jpg

பேரு    "பாட்டில் மணி"   .. ஒரே டமாஸ்தான் ?

Link to comment
Share on other sites

கறுப்புச் சட்டையில் மு.க அழகிரி.... தொடங்கியது அமைதிப் பேரணி! #LiveUpdates

 

கரங்கள் கோர்ப்போம், கழகம் காப்போம்:

மு.க அழகிரி தலைமையில் நடக்கும் அமைதிப் பேரணியில் கலந்துகொண்டுள்ள அவரது ஆதரவாளர்கள் பெரிய பேனர் ஒன்றை வைத்துள்ளனர். அதில் கரங்கள் கோர்ப்போம், கழகம் காப்போம் என்று எழுதப்பட்டுள்ளது. 

kara_11392.jpg

 

 

பேரணியின் முடிவில் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் அழகிரி அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கிறார். 

மு.க அழகிரி தலைமையில் நடக்கும் அமைதிப் பேரணிக்காக சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

 

ala_auto_11345.jpg

பேரணியில் தனது ஆதரவாளர்களுடன் பேசும் மு.க அழகிரி....... 

ala_11311.jpg

கறுப்புச் சட்டை அணிந்து மு.க அழகிரி அமைதிப் பேரணி தொடங்கும் திருவல்லிக்கேணி பகுதிக்கு வந்தார். அவரின் மகன் தயாநிதி அழகிரியும் உடன் உள்ளார். இதைத்தொடர்ந்து அமைதிப் பேரணி தொடங்கியது.

mask_11166.jpg

அழகிரி சார்பில் நடத்தப்படும் அமைதிப் பேரணியில் கலந்துகொண்டுள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அழகிரி மாஸ்க் அணிந்துள்ளனர். பேரணியில் கலந்துகொண்டுள்ளவர்கள் அழகிரி படங்கள் கொண்ட பதாகைகளை கையில் கொண்டுள்ளனர். 

 

அழகிரியின் அமைதிப் பேரணி

அமைதிப் பேரணி தொடங்கும் திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து கருணாநிதியின் நினைவிடம் வரை அதிக பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ala1_10590.jpg

தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி மறைந்த பிறகு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவரின் மகனாக மு.க அழகிரி, தன்னை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் நான் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்வேன் என வலியுறுத்திவந்தார். இதற்கிடையில் செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் கருணாநிதியின் 30-வது நாள் நினைவுநாள் அமைதிப் பேரணி நடைபெறும் என்றும் இதில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்தார். இன்று அந்தப் பேரணி தொடங்கவுள்ள நிலையில், நேற்று இரவு முதல் மதுரையில் இருந்து மலர்கள் வரவழைக்கப்பட்டு கருணாநிதியின் நினைவிடம் அலங்கரிக்கப்பட்டது.

malar_10444.jpg

இன்று காலை 10 மணியளவில் அமைதிப்பேரணி தொடங்கவுள்ளது. இதற்காக மாநிலத்தில் பல பகுதிகளில் இருந்து அழகிரியின் ஆதரவாளர்கள் சென்னை வந்துள்ளார்கள். 

https://www.vikatan.com/news/tamilnadu/136004-azhagiris-silent-march-to-marina.html

Link to comment
Share on other sites

அழகிரியின் அமைதிப் பேரணி ஆரம்பமானது: ஆதரவாளர்கள் தொகையில் ஏமாற்றம்

 

sgs-720x450.png

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரின் ஆதரவாளர்கள் ஒன்று கூடும் அமைதிப்பேரணி ஆரம்பமாகியுள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்டதற்கு இணங்க இன்று காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்படும் என்ற போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க 2000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடபடுத்தப்பட்டுள்ளனர்.

இப்போராட்டத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான ஆதரவாளர்கள் உன்று கூடுவார்கள் என அழகிரி தெரிவித்திருந்தார்.

எனினும் இதுவரையில் 15000 க்கும் உட்பட்ட ஆதரவாளர்களே கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேரணியில் கலந்து கொண்டுள்ளவர்கள் கறுப்பு சட்டையணிந்துள்ள நிலையில் அஞ்சா நெஞ்சன் என்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளையும் ஏந்தியவாறு கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த பேரணி மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை செல்லவுள்ள நிலையில், அங்கு தொண்டர்கள் முன் உரையாற்றும் மு.க. அழகிரி தனது அரசியல் பயணத்தின் அடுத்தகட்ட நகர்வு தொடர்பில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

http://athavannews.com/கருணாநிதி-நினைவிடத்தை-நோ/

Link to comment
Share on other sites

மெரினா வந்தடைந்தது அமைதிப் பேரணி; அஞ்சலி செலுத்திய அழகிரி

அழகிரி தலைமையில் திருவல்லிக்கேணியில் தொடங்கிய அமைதிப் பேரணி தற்போது சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தை அடைந்துள்ளது. அங்கு அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

https://www.vikatan.com/news/tamilnadu/136004-azhagiris-silent-march-to-marina.html

Link to comment
Share on other sites

``பேரணியில் ஒன்றரை லட்சம் பேர் கலந்துகொண்டனர்” - அஞ்சலி செலுத்திய அழகிரி பேட்டி#LiveUpdates

 

ala_cr_12466.jpg

ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர்!

கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க அழகிரி, ``கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே இந்தப் பேரணி நடத்தப்பட்டது. வேறு எந்த நோக்கத்துடனும் இது நடத்தப்படவில்லை. பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது. இதற்கு முழு ஒத்துழைப்பு தந்த காவல்துறைக்கு நன்றி. இதில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர்” என்றார். 

 

 

ala_mic_12013.jpg

அழகிரி தலைமையில் திருவல்லிக்கேணியில் தொடங்கிய அமைதிப் பேரணி தற்போது சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தை அடைந்துள்ளது. அங்கு அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

 

 

ala_mala_12046.jpg

https://www.vikatan.com/news/tamilnadu/136004-azhagiris-silent-march-to-marina.html

Link to comment
Share on other sites

‘ஸ்டாலினுக்கும் எனக்கும் அரசியலில் மட்டுமே பிரச்னை'- பேரணிக்கு முன் அழகிரி பேட்டி

3349_thumb.jpg
 

`தனக்கும் ஸ்டாலினுக்கும் அரசியலில் மட்டுமே பிரச்னை. குடும்பத்தில் எதுவும் இல்லை' என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். 

அழகிரி

தன்னை தி.மு.க-வில் இணைக்க வலியுறுத்தி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனான மு.க அழகிரி இன்று சேப்பாக்கம் முதல் கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப் பேரணி மேற்கொண்டு வருகிறார். பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் கறுப்புச்சட்டை அணிந்து கலந்துகொண்டுள்ளனர்.

 

 

பேரணியில் கலந்துகொள்ளும் முன்பு மு.க அழகிரி ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில், ``கலைஞர் இறந்து இன்றுடன் முப்பது நாள் ஆகிறது. இந்த நாளில் பேரணி நடத்தி அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள அவரின் விசுவாசிகள் கேட்டுக்கொண்டனர். அதன் பின்னரே  தீர்மானிக்கப்பட்டு பேரணி நடைபெறுகிறது. என்னைக் கட்சியில் சேர்க்கவில்லை என்றால் தொண்டர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள முக்கியஸ்தர்களுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட முடிவுகள் அறிவிக்கப்படும். என்னைக் கட்சியில் இணைப்பது தொடர்பாக இதுவரை அவர்கள் (ஸ்டாலின்) தரப்பில் இருந்து என்னிடம் யாரும் பேசவில்லை. நானும் அவர்களிடம் பேசவில்லை. என்னைக் கட்சியில் சேர்த்தால் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் அதை ஊடகங்கள் பிரித்து, `நான் அவரைத் தலைவராக ஏற்கத் தயார்' எனக் கூறிவருகின்றனர். எங்கள் இருவருக்கும் அரசியலில் மட்டுமே பிரச்னை உள்ளது. குடும்பத்தில் எந்தவிதமான பிரச்னையும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார். 

https://www.vikatan.com/news/politics/136017-mk-alagiri-speaks-about-his-rally-in-chennai.html

Link to comment
Share on other sites

'வந்தது 1 லட்சம் அல்ல; பத்தாயிரம்தான்!' - அழகிரியைக் கொதிக்க வைத்த ஆதரவாளர்கள் 

 

இன்று காலை 7 மணியில் இருந்தே பேரணிக்கான ஏற்பாடுகள் குறித்து விசாரித்தபடியே இருந்தார் அழகிரி. 'வெயில் தொடங்குவதற்குள் பேரணியை ஆரம்பித்துவிட வேண்டும்' என நினைத்தார்.

'வந்தது 1 லட்சம் அல்ல; பத்தாயிரம்தான்!' - அழகிரியைக் கொதிக்க வைத்த ஆதரவாளர்கள் 
 

தி.மு.க தலைமைக்கு எதிராக நடந்த அமைதிப் பேரணி வெற்றியடையாமல் போனதில் மிகுந்த கொதிப்பில் இருக்கிறார் அழகிரி. 'பேரணியில் ஸ்டாலினுக்குக் கெடு விதிக்கும் முடிவில் இருந்தார். மெரினாவில் எதிர்பார்த்த கூட்டம் கூடாததால் மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார் அழகிரி' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். 

சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி சமாதியை நோக்கி இன்று அமைதிப் பேரணி நடத்தினார் மு.க.அழகிரி. கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, "கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே இந்தப் பேரணி நடத்தப்பட்டது. வேறு எந்த நோக்கத்துடனும் நடத்தப்படவில்லை. பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது. இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்த காவல்துறைக்கு நன்றி. இந்தப் பேரணியில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர்” என்றார். இதைக் கூறும்போது அவர் முகத்தில் பெரிதாக எந்த உற்சாகமும் தென்படவில்லை. 

அழகிரி ஆதரவாளர் ஒருவரிடம் பேசினோம். "தென்மாவட்டங்களைப் பொறுத்தவரையில் வீட்டில் யாராவது பெரியவர் இறந்து போனால், முப்பதாவது நாள் காரியத்தை கடைபிடிப்பது வழக்கம். அந்த அடிப்படையில் கருணாநிதி மறைந்த முப்பதாவது நாளில் அமைதிப் பேரணி நடத்த முடிவு செய்தார் அழகிரி. 'மீண்டும் தி.மு.கவில் இணைந்து செயல்பட வேண்டும்' என்பதுதான் அவரது நோக்கம். ஆனால், இதுகுறித்து ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் சொல்லப்படவில்லை. ஒருகட்டத்தில், 'கருணாநிதி இருக்கும்போதே பதவிக்கு ஆசைப்படாதவன் நான். கட்சியில் சேர்த்துக் கொண்டால், ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்' என ஒருபடி கீழிறங்கி வந்து பேசினார். அப்போதும் அறிவாலயத்தில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இதனால் ஆத்திரப்பட்டவர், 'நாம் யார் என்பதைக் காட்டியாக வேண்டும். 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் பேர் வரையில் பேரணியில் திரள வேண்டும்'  என உத்தரவிட்டார். மாவட்டத்துக்கு 50 வாகனங்கள்; தலைக்கு 500 ரூபாய் என பத்து நாள்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டது. சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்களை அழைத்து வருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், எங்கள் திட்டப்படி பெரிதாக எதுவும் நடக்கவில்லை" என ஆதங்கத்துடன் விவரித்தவர், 

 

 

அழகிரி நடத்திய பேரணி

"சென்னையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு நேற்றே வந்துவிட்டார் அழகிரி. இன்று காலை 7 மணியில் இருந்தே பேரணிக்கான ஏற்பாடுகள் குறித்து விசாரித்தபடியே இருந்தார். 'வெயில் தொடங்குவதற்குள் பேரணியை ஆரம்பித்துவிட வேண்டும்' என நினைத்தார். ஆனால், நேரம் செல்லச் செல்ல கூட்டம் கூடவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துவிட்டார். 'கூட்டம் வந்துவிட்டதா?' என அவர் விசாரித்தபோது, ' செங்கல்பட்டு ஏரியாவில் 50 வண்டிகள் நின்று கொண்டிருக்கிறது. மற்ற வண்டிகள் டோல்கேட்டைத் தாண்டிவிட்டன. இதோ வந்துவிடுவார்கள்' என ஆதரவாளர் ஒருவர் கூறியுள்ளனர். ஒருகட்டத்தில் பொறுமையிழந்து கத்தத் தொடங்கிவிட்டார். பின்னர், இருக்கும் கூட்டத்தை வைத்து 11.15 மணிக்குத்தான் பேரணியைத் தொடங்கினார். இதே கோபத்தில், கூட்டத்தில் ஆதரவாளர்களை அவர் அடிக்கும் காட்சிகளும் வெளியானது. பேரணி முடியும் தருணத்தில், அறிவாலயத்துக்குக் கெடு விதிக்கும் வகையில் பேசுவதற்கு அவர் திட்டமிட்டிருந்தார். கூட்டம் கூடாததால், 'எதுவும் பேச வேண்டாம்' என்ற முடிவுக்கு வந்துவிட்டார். பேரணி ஏற்பாடுகளில் இன்னும் கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம். சொல்லப் போனால், 'ஒரு லட்சம் பேருக்கும் மேல் திரள்வார்கள்' எனக்கூறி அழகிரியை ஏமாற்றிவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்" என்றார் விரிவாக. 

 

 

"அழகிரி குறித்து கழக நிர்வாகிகள் எந்தக் கருத்தையும் பேசக் கூடாது எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார் ஸ்டாலின். கட்சியின் பொருளாளர் ஆன பிறகு இன்று காட்பாடி தொகுதிக்குச் சென்றார் துரைமுருகன். அப்போது அழகிரி குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோதும், 'நோ கமென்ட்ஸ்' எனக் கூறிவிட்டார். அதேபோல், 'அழகிரி குறித்து எந்தக் கேள்வி வந்தாலும் பதில் அளிக்கக் கூடாது; தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கு பெறக் கூடாது' என உத்தரவிட்டுள்ளார் ஸ்டாலின். குறிப்பாக, ஒரு தொலைக்காட்சியைக் குறிப்பிட்டு, 'அந்தச் சேனலில் இருந்து எந்த விவாதத்துக்கு அழைத்தாலும் செல்ல வேண்டாம்' எனக் கூறிவிட்டார். இதே கட்டுப்பாடுதான் குடும்ப உறுப்பினர்களுக்கும்" என்கிறார் தி.மு.க நிர்வாகி ஒருவர். 

https://www.vikatan.com/news/tamilnadu/136056-azhagiris-plan-fails-as-just-10000-members-arrive-for-the-event.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.