Jump to content

'இஸ்லாத்திற்கு வாருங்கள் இல்லையேல் வெளியேறுங்கள்'; வீட்டிற்கு தீவைப்பு! அச்சத்தில் வாழும் தமிழ் குடும்பம்!!


Recommended Posts

'இஸ்லாத்திற்கு வாருங்கள் இல்லையேல் வெளியேறுங்கள்'; வீட்டிற்கு தீவைப்பு! அச்சத்தில் வாழும் தமிழ் குடும்பம்!!

 

 

 

 

 

 

அம்பாறை மாவட்டத்தின் வலத்தாப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்மையில் புரம் சுனாமி வீட்டு திட்டத்தில் வசித்து வரும் சோதிநாதன் சந்திரசேகர் என்ற தமிழ் குடும்பம் ஒன்றை இஸ்லாம் மதத்திற்கு வருமாறு அச்சுறுத்தி அவ‌ர்களது வீடு மற்றும் முச்சக்கர வண்டிக்கு தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (31) அதிகாலை அம்பாறை வலத்தாப்பட்டி ஸ்மையில் புரத்தில் உள்ள சோதிநாதன் சந்திரசேகர் வீட்டிற்கு வந்த இனந்தெரியாத குழு ஒன்று தங்களது வீட்டுக்கு தீவைத்து கொழுத்தியதாகவும் இதன்போது வீட்டில் இருந்த முச்சக்கர வண்டி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தின் பொது தாங்கள் விழித்துக் கொள்ளாது இருந்திருந்தால் தங்களது மூன்று மாத குழந்தை உட்பட அனைவரும் தீயில் எரிந்து இறந்திருப்போம் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்.

சம்பவத்திற்கான பின்னணி!

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

மட்டக்களப்பு கரடியணாறு பகுதியைச் சேர்ந்த சோதிநாதன் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவியான வினோஜினி மற்றும் அவரது மூன்றுமாதக் குழந்தை என குடும்பமாக தனிமையில் வசித்து வந்த குடும்பம் தங்களது தொழில் நிமிர்த்தம் கடந்த ஐந்து வருடங்களாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள வலத்தாப்பட்டி பகுதியில் உள்ள ஸ்மையில் புரத்தில் வசித்து வந்துள்ளனர்.

குறித்த கிராமம் சுனாமிக்கு பின்னர் உருவாகிய கிராமம் என்பதுடன் அது தற்போது ஸ்மையில் புரம் என்ற பெயருடன் முழு முஸ்லீம் கிராமமாக மாற்றப்பட்டுள்ளது.

அங்கு ஒரு சில தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் வசிப்பதாக இருந்தால் நீங்களும் முஸ்லீமாக இருக்க வேண்டும் என்று அங்குள்ள இஸ்லாமிய மதவாதிகள் இவர்களை அச்சுறுத்தி வந்த நிலையில் பல தடவைகள் சில நபர்களுடன் கைகலப்பு நடைபெற்ற பொலீசில் முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்யின் ஊடாக அதிக வருமானத்தை பெற்றுவந்த குறித்த குடும்பம் ஸ்மையில் புரத்தில் உள்ள இஸ்லாமியர்களினால் பல தடவைகள் இஸ்லாம் மதத்திற்கு மாறுமாரு வற்புறுத்தப் பட்டுள்ளனர் இன் நிலையிலேயே அந்த தீ வைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இஸ்லாம் மதத்திற்கு மாறிய 9 பேர்!

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருடைய மனைவியின் குடும்பத்தில் இருந்த 09 பேர் இது வரை இஸ்லாம் மதத்திற்கு சென்றுள்ளதாகவும்.

அவர்கள் அனைவரும் மட்டக்களப்பு நெல்லிக்காடு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளனர்.

இவர்களும் தொழில் நிமிர்த்தமாக அம்பாறை வலத்தாப்பட்டி கிராமத்திற்கு சென்று வந்த போது சம்மாந்துரையைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரின் ஊடாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பல குடும்பங்களை பணம் மற்றும் ஏனைய உதவிகளை வழங்கி இஸ்லாம் மதத்திற்கு இணைத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.

கண்டுகொள்ளாத பொலிசார்!

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

வீடு மற்றும் முச்சக்கர வண்டிக்கு தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சம்மாந்துரை பொலீசில் முறைப்பாடு செய்தும். குறித்த சம்பவம் தொடர்பாக பெரிதாக அலட்டிக் கொள்ளாத பொலிசார். ஒரு குடும்பத்தின் கொலை முயற்சியை சிவில் முறைப்பாடாக பதிவு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை!

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

வலத்தாப்பட்டி ஸ்மையில் புரத்தில் உள்ள சில இஸ்லாமிய மத வாத குழு தங்களது குடும்பத்தை கொலை செய்ய முயற்சி செய்வதாகவும். தங்களது மதத்தை விட்டு இஸ்லாம் மதத்திற்கு நாங்கள் மாற முடியாது எனவும் தாங்கள் தங்களது வீட்டில் வைத்து வணங்கிய இந்து கடவுள்களை எடுத்துக் கொண்டு கரடியணாறு பகுதிக்கு வந்துள்ளதாகவும் இனிமேல் அங்கு சென்றால் தங்களுக்கு எதுவும் நடக்கலாம் என்பதால் இந்த அரசாங்கம் தங்களுக்கான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
 
இதையும் தவறாமல் படிங்க

https://www.ibctamil.com/srilanka/80/105639?ref=imp-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலும் இஸ்லாமிய மதவாதம் ஆரம்பித்து விட்டது. 
இதை தடை செய்ய முயன்ற ஞனாசரவையும் சிறையில் அடைத்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, colomban said:

இலங்கையிலும் இஸ்லாமிய மதவாதம் ஆரம்பித்து விட்டது. 
இதை தடை செய்ய முயன்ற ஞனாசரவையும் சிறையில் அடைத்து விட்டார்கள்.

அவர் மொக்குத்தனமா நீதிமன்றத்தில குழப்படி பண்ணிபோட்டார்.

எங்கண்ட தூசனப் பிக்கர், சுமனை தேரரிட்ட ஓடிப் போய், விசயத்தைக் காதில போட்டால், மனிதர் சன்னதம் கொண்டாடும். 

உங்க அமைச்சர் முஸ்தபாவின் மருமகன், சிட்டினிலே மாட்டுப் பட்டிருக்கிறதை பார்த்தால், நீங்கள் சொல்லுறது சரிதான். 

Link to comment
Share on other sites

இதையெல்லாம் நான் சில வருடங்களுக்கு முன்னர் எதிர்வு கூறியபோது எந்தவொரு யாழ்  களத்தில் யாரும் கண்டு கொள்ளவில்லை.

இதைவிட நிர்வாகம் எச்சரிக்கை புள்ளியும் இட்டு இருந்தது.....!!!!!

இப்பொழுது எல்லாரும் இருந்து வேடிக்கை பார்க்க வேண்டியது தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மே 2009 க்குப் பின் முஸ்லீம் மதப் பயங்கரவாதம்... தனது தமிழ் மக்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பை அராபிய நாடுகள் மற்றும் பாகிஸ்தான்.. மற்றும் இஸ்லாமிய ஜிகாத் பயங்கரவாத அமைப்புக்களின் உதவியுடன் கடுமையான முன்னெடுத்து வருகிறது.

ஆனால் எங்களில் சிலர் முஸ்லீம் பயங்கரவாதத்திற்கு சகோதர முலாம் பூசி.. தமிழ் மக்களிடம் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானவர்களால்.. இந்த முஸ்லீம் பயங்கரவாதத்தை எதிர்த்து கடிதம் எழுத முடியாது என்பது எங்களுக்குத் தெரியும்.

இலங்கைத் தீவில்.. முஸ்லிம்.. மற்றும் சிங்கள பெளத்த பயங்கரவாதிகள் எல்லாரும் சேர்ந்து புலிகளை மீண்டும் வா வா என்று அழைக்கிறார்கள் போலவே தெரிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

'இஸ்லாத்திற்கு வாருங்கள் இல்லையேல் வெளியேறுங்கள்'; வீட்டிற்கு தீவைப்பு! அச்சத்தில் வாழும் தமிழ் குடும்பம்!!

வடமாகணத்தை விட்டு வெளியேற்றியதில் என்ன தவறு? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பாந்துறை போலீஸெல்லாம் அல்லாண்ட ஆக்கள் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விசயங்களை கவனித்து நாட்டினைக் காக்க ஞனாசரவை வெளியே விட வேண்டும்! ?

Link to comment
Share on other sites

9 hours ago, nedukkalapoovan said:

.

இலங்கைத் தீவில்.. முஸ்லிம்.. மற்றும் சிங்கள பெளத்த பயங்கரவாதிகள் எல்லாரும் சேர்ந்து புலிகளை மீண்டும் வா வா என்று அழைக்கிறார்கள் போலவே தெரிகிறது. 

நீங்கள் இப்படியே புலி வரும் எண்டு கனவு கண்டு கொண்டே இருங்கோ....!!! புலி இல்லை பூனையும் வராது....  அவன் வன்னியில் 1/3 பங்கை ஆக்கிரமித்துக் விட்டான், கிளி.முல்லையும் தான் மிச்சம்.

வடமரட்சி கிட்டதட்ட அவனது கட்டுபாட்டில், தென்மராட்ட்சி மிக வேகமா இஸ்லாமிய மயமாகிறது.

 

மிச்சத்துக்கு சிங்களவனை திட்டி போட்டு ஒன்றும் செயாதிங்கோ , தமிழ் இனத்தின் தற்போதைய எதிரி சிங்களவன் இல்லை .....!! முஸ்லிம் தான் .... இது புரியாமல் எங்கடைகள்  இன்னமும் சிங்களவன் எதிரி எண்டு போட்டு முஸ்லீம் மதவாத ஆக்கிரமிப்பை கண்ணை மூடிக்கொண்டு பார்த்து கொண்டிருக்கும்.

மக்கள் மத்தித்யில் ஏதாவது விழிப்புணர்வு செய்தோமா...???

 

Link to comment
Share on other sites

4 hours ago, Nathamuni said:

இந்த விசயங்களை கவனித்து நாட்டினைக் காக்க ஞனாசரவை வெளியே விட வேண்டும்!

ஞானசார ஏன் கவனிக்க வேண்டும், தமிழர்கள் எல்லாம் எங்கே...??????!!!!!!!!!!

நல்லூர் திருவிழாவில் ஒரு கூட்டம் பிசி

சாமத்திய சடங்கு கொண்டாடுரதில ஒரு குறூப் பிசி...!!!!

வடக்கு மாகாணத்தில இருக்கிற காணி எல்லத்தையும் முஸ்லீமுக்கு விக்கிறதில பிசி...!!!!!!

எப்படி வெளிநாட்டில அசைலம் அடிக்கலாம் எண்டதில இன்னொரு குறூப் பிசி....!!!!

அப்படி அசைல்ம் அடிக்க ஏலாட்டி எப்படி கல்யாணம் கட்டி வெளிநாட்டுக்கு வரலாம் என்பதில் இன்னொரு குறூப் பிசி....!!!!

இதுக்கு என்ன ம*******க்கு போராட்டம் விடுதலை என்று  இந்த பரதேசி கூட்டம் வெளிக்கிட்டது என்று தான் எண்ட கேள்வி...!!!!!

நாம் எல்லாம் சூடு சுரணை உள்ளவர்களாக இருந்தால் இந்த குடும்பத்தை மிரட்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம், அடுத்து மதம் மாறிய இவர்களது உறவினர்களை மீண்டும் தமிழர் ஆக்குவோம்.....!!!!!

எங்களிடம் அதற்கான பண வசதி உண்டு, சட்ட அறிவு உண்டு..!!! இலங்கை அரசு செய்யாவிடில் ஜெனிவா வரை செல்வோம்...!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லங்காஸ்தான் உருவாக்காமல் ஓய மாட்டார்கள் போல கிடக்கு .. ?

Link to comment
Share on other sites

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

லங்காஸ்தான் உருவாக்காமல் ஓய மாட்டார்கள் போல கிடக்கு .. ?

குறிப்பாக மேலே குறிப்பிட்ட வலத்தபிட்டி கிராமம் முழுமையாக மதமாற்றம் மூலம் இஸ்லாமியமயமாக்கப்பட்ட கிராமம்.

இதற்கான உத்தியோகபூர்வ தரவுகள் உள்ளன.

Link to comment
Share on other sites

பாரம்பரிய முசுலீம்கள் இதனைச் செய்ய முற்பட்டிருப்பார்கள் எனத் தோன்றவில்லை. முசுலீம் மதத்திற்கு மாறிய வந்த மக்களே இதனை முன்நின்று செய்திருப்பார்கள் எனத் தோன்றுகிறது.

மட்டக்களப்புக்கு வந்த யாழ்ப்பாணத்தவரை யாழ்ப்பாணி என்று துரத்த முற்பட்டவர்கள் மட்டக்களப்பு மக்களல்ல, முன்பே மட்டக்களப்புக்கு வந்து குடியேறியிருந்த யாழ்ப்பாணத்தவரின் செயற்பாடுகளை நேரில் கண்ட அனுபவமுள்ளது.

Link to comment
Share on other sites

1 hour ago, Paanch said:

பாரம்பரிய முசுலீம்கள் இதனைச் செய்ய முற்பட்டிருப்பார்கள் எனத் தோன்றவில்லை. முசுலீம் மதத்திற்கு மாறிய வந்த மக்களே இதனை முன்நின்று செய்திருப்பார்கள் எனத் தோன்றுகிறது.

மட்டக்களப்புக்கு வந்த யாழ்ப்பாணத்தவரை யாழ்ப்பாணி என்று துரத்த முற்பட்டவர்கள் மட்டக்களப்பு மக்களல்ல, முன்பே மட்டக்களப்புக்கு வந்து குடியேறியிருந்த யாழ்ப்பாணத்தவரின் செயற்பாடுகளை நேரில் கண்ட அனுபவமுள்ளது.

உங்களுடைய வெகுளிதனத்தை நம்ப முடியவில்லை, நீங்கள் இன்னமும் புட்டும் தேங்காய் பூவும் நிலையில் தான் இருகின்றீர்கள்.

Link to comment
Share on other sites

14 hours ago, குமாரசாமி said:

வடமாகணத்தை விட்டு வெளியேற்றியதில் என்ன தவறு? 

தவறே இல்லை என்று அடிக்கடி நிரூபித்து வருகிறார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Paanch said:

பாரம்பரிய முசுலீம்கள் இதனைச் செய்ய முற்பட்டிருப்பார்கள் எனத் தோன்றவில்லை. முசுலீம் மதத்திற்கு மாறிய வந்த மக்களே இதனை முன்நின்று செய்திருப்பார்கள் எனத் தோன்றுகிறது.

மட்டக்களப்புக்கு வந்த யாழ்ப்பாணத்தவரை யாழ்ப்பாணி என்று துரத்த முற்பட்டவர்கள் மட்டக்களப்பு மக்களல்ல, முன்பே மட்டக்களப்புக்கு வந்து குடியேறியிருந்த யாழ்ப்பாணத்தவரின் செயற்பாடுகளை நேரில் கண்ட அனுபவமுள்ளது.

 

9 hours ago, Dash said:

உங்களுடைய வெகுளிதனத்தை நம்ப முடியவில்லை, நீங்கள் இன்னமும் புட்டும் தேங்காய் பூவும் நிலையில் தான் இருகின்றீர்கள்.

என்று , கிஸ்புல்லாவின் தமிழருக்கு எதிராக தாம் செய்தவற்றை விபரித்த தம்பட்ட வீடியோவை பார்த்தேனோ, அன்றே இவர்கள் தொடர்பான எனது வெகுளித்தனத்தை மூட்டை கட்டி வைத்தேன்.

தேவை என்றால், தமிழ் பேசும்....பிட்டும் தேங்காய்பூவும் புண்ணாக்கு கதை... தேவை சிங்களத்தரப்பிலிருந்தாயின், தமிழர் , இஸ்லாமியர் கதை... 

தனது மக்களின் காணித்தேவைக்காக, ரிசாத்தின், வில்பத்து தேசிய காடழிப்பு, முல்லைத்தீவு காடழிப்பு போன்றவை மிகவும் கிரிமினல் தனமானது.

கொழும்பின் மேல்தட்டு மாணவர் , அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத தொடர்பில் கைதாகியமை சாதாரணமாணதல்ல.

கிழக்கின், மத்திய கிழக்கு தொடர்புகள் அபாயகரமானவை. பாகிஸ்தான், இலங்கையின் கிழக்கு ஊடாக தென்னிந்தியாவை குறிவைக்கலாம் என்பது ரோவின்  இப்போதைய தலைவலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Dash said:

மிச்சத்துக்கு சிங்களவனை திட்டி போட்டு ஒன்றும் செயாதிங்கோ , தமிழ் இனத்தின் தற்போதைய எதிரி சிங்களவன் இல்லை .....!! முஸ்லிம் தான் .... இது புரியாமல் எங்கடைகள்  இன்னமும் சிங்களவன் எதிரி எண்டு போட்டு முஸ்லீம் மதவாத ஆக்கிரமிப்பை கண்ணை மூடிக்கொண்டு பார்த்து கொண்டிருக்கும்.

மக்கள் மத்தித்யில் ஏதாவது விழிப்புணர்வு செய்தோமா...???

தமிழ் மக்களிடம் விழிப்புணர்வு வந்து இப்படியான முஸ்லீம் பயங்கரவாதமும்.. சிங்கள பெளத்தர அரசாங்கத்தின் பயங்கரவாதமும் முறியடிக்கப்படும் என்று நினைத்தால் அப்படியே நினைத்துக் கொண்டே இருக்க வேண்டியான்.

இதெல்லாம்.. ஜெனிவா போய் நடக்கிற காரியமில்லை.

இப்படியான தமிழ் மக்களுக்கு எதிரான மதவாத இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மற்றும் சிங்கள பெளத்தத்தின் இன அழிப்பு நடவடிக்கைகள்.. சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை. 

அதேவேளை.. இவற்றிற்கு எதிராக.. குரல் கொடுக்க மறுக்கும் எமது அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

இப்படியான பயங்கரவாதச் செயல்களுக்கு எதிரான சர்வதேசத்தின் நீதியை கோர வேண்டும்.

அரசியல் ரீதியாக எமது மக்கள் சந்திக்கும்.. இப்படியான துயர்களை.. உடனுக்குடன் வெளிப்படுத்தும்.. பிரபல்யப்படுத்தும்.. மக்கள்.. மண் நலன் சார்ந்த அரசியல் தலைவர்கள்.. பிரதிநிதிகளை மக்கள் உள்ளூரில் உருவாக்க வேண்டும். வளர்த்தெடுக்க வேண்டும்.

இளைய சமூகம்.. இவற்றிற்கு எதிராக முறையாக குரல்கொடுப்பதோடு நிறுவனப்படுத்திய வகையில் உடனடி எதிர்ப்புக்களை சாத்தியமான சட்ட நடவடிக்கைகளை.. எதிர்ப்புக்களை தடைகளை உருவாக்க வேண்டும்.  இவ்வாறான செயல்களுக்கான ஆதாரங்களை.. சாட்சியங்களை..  ஆவணப்படுத்துவதை உடனடியாகச் செய்ய வேண்டும்.

ஒரு சர்வதேச பாதுகாப்புப் பொறிமுறை உருவாகவல்ல.. சர்வதேச அழுத்தம் ஒன்றினால் தவிர.. எமது மக்களையும் மண்ணையும் அவ்வளவு இலகுவில்.. முஸ்லீம் மதப் பயங்கரவாதத்திடம் இருந்தும்... சிங்கள பெளத்த அரச பயங்கரவாதத்திடம் இருந்தும் பாதுகாக்க முடியாது. இதுதான் கள யதார்த்தம். 

அதைவிடுத்து.. அசைலம் அடிக்கிறவனையும்.. கல்யாணம் முடிக்கிறவனையும்.. ஜெனிவாவையும்.. கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தால்.. அதனால்.. நமக்கு எந்த நன்மையும் விளையாது.

மூன்றாம் உலக நாடொன்றில் அடிமையாக மூன்றாம் நிலை பொருளாதார நிலையில் வாழும் ஓர் இனத்துக்கு பணக்கார நாடுகளில் நல்ல வாழ்க்கை அமைய ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என்றால்.. எந்த இனமும் எம்மவர் போலத்தான் நடந்து கொள்ளும். அதற்குள் இருந்து தான் நாம் போராடிப் பெற வேண்டும்.. உரிமைகளை. திட்டி ஒரு பிரயோசனமும் இல்லை. ?

Link to comment
Share on other sites

கிழக்கில் இசுலாமியர்களால் வீடு எரிக்கப்பட்ட தமிழ்க் குடும்பத்தின் பரிதாப நிலை!

 

 

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

அம்பாறை வளத்தாப்பட்டி இஸ்மாயில் புரத்தில் இருந்த தமிழ் குடும்பத்தை வீட்டுக்குள் வைத்து தீவைத்து எரித்த சம்பவம் குறித்தும் அதற்கான பின்னணி குறித்த உண்மைகளை செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.

குறித்த செய்தி கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் மதமாற்றம் குறித்த உண்மைகளையும் அது எவ்வாறு நடைபெறுகிறது என்பதன் உண்மை தன்மையையும் உலகிற்கு எடுத்து காட்டியிருக்கிறது.

இது வரை நாங்கள் தமிழர்களை மதம் மாற்றவில்லை என்று கூறிய இஸ்லாமிய மத தலைவர்கள் இந்த செய்தியின் பின் நாங்கள் தமிழர்களை வற்புறுத்தி மதம் மாற்றவில்லை அவர்களாகவே விரும்பி மதம் மாறியுள்ளார்கள் என்று ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நிலமை தலைகீழாக மாறிவிட்டது.

குறித்த செய்தி கிழக்கில் தமிழின அழிப்பு நடைபெறுகிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இஸ்லாமிய மதமாற்றம் என்பது தமிழின அழிப்பே!

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

அவர் அவர் விரும்பும் மதத்தை கடைப்பிடிக்கும் சுதந்திரம் இலங்கையில் உண்டு ஆனால் அதே சுதந்திரம் ஒரு இனத்தை அழிக்கிறது என்றால் என்ன செய்வது?

கிழக்கில் இடம்பெறும் இஸ்லாமிய மாற்றம் என்பது வெறும் மத மாற்றம் அல்ல அது ஒரு இன மாற்றம் அதாவது மத மாற்றம் என்ற பெயரில் நடைபெறும் தமிழின அழிப்பு.

இதனால் ஒரு தேசிய இனம் மிகவும் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

கிழக்கை பொறுத்தமட்டில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இஸ்லாமிய மயமாக்கல் மிகவும் திட்டமிட்டு அரவு நாடுகளில் உதவியுடன் அபிவிருத்தி என்ற போர்வையில் நடைபெறுகிறது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு.

முஸ்லீம்களின் பிரதேசங்களில் கடைகளையோ ஆலயங்களையோ வீடுகளையோ தமிழர்கள் கட்டமுடியாது. ஒரு அங்குலம் நிலத்தை கூட தமிழர்கள் வாங்க முடியாது அப்படி அவர்களது பிரதேசத்தில் வாழ்வதாக இருந்தால் அவர்கள் இஸ்லாத்திற்கு மாற வேண்டும் இன்நிலையில் தமிழர்களின் பிரதேசங்களில் இஸ்லாமியர்கள் எதுவும் செய்யலாம் என்ற நிலை கிழக்கில் உண்டு.

இந்த உண்மையை கூறினால் இந்த ஊடகம் இனவாதத்தை தூண்டுகிறது என்று முழக்கம் இடுவார்கள். இன வாதமோ மத வாதமோ அல்லது பாரிச வாதமோ உண்மையை வெளியே கொண்டுவர வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு.

எனவே கிழக்கில் ஒரு இனம் அழிக்கப்படுகிறது என்பதற்கு இந்த குடும்பத்தில் இருந்து இஸ்லாத்திற்கு மாறிய 9 பேருடன் இஸ்லாத்திற்கு மாற மறுக்கும் அந்த குடும்பமும் ஒரு சாட்சி.

அவர்கள் விரும்பி போனார்களோ இல்லை வற்புறுத்தப்பட்டார்களோ என்பதற்கு அப்பால் இது போன்ற நூற்றுக்கணக்கான இஸ்லாமிய மத மாற்றங்கள் கிழக்கில் நடைபெறு‌கிறது என்ற உண்மையை எமது ஊடகம் பதிவு செய்கிறது. இல்லை என்று வாதிடுபவர்கள் இதற்கான மறுப்பை ஆதாரத்துடன் அனுப்பி வையுங்கள்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தின் இன்றைய நிலை!

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

தமிழன் ஒருவரின் வீடு ஆட்டடோ எரிக்கப்பட்டுள்ளது. அதுவும் அவர்கள் இரவு நித்திரையில் இருந்த போது எரித்துள்ளார்கள் அவர்கள் விழித்துக் கொள்ளாவிட்டால் அவர்களும் தீயில் எரிந்து இருப்பார்கள். அவர்கள் நாளாந்தம் வருமானம் தேடிய முச்சக்கர வண்டியும் எரிக்கப்பட்டுள்ளது இதற்கெல்லாம் விடை தேடாத சில ஊடகங்கள் பாதிக்கப்பட்ட குடும்பம் குறித்து கவலை கொள்ளாத ஊடகங்கள் இஸ்லாமிற்கு மதமாறுமாரு வற்புறுத்தினார்களா? இல்லை என்பதை மட்டும் நிருபிப்பதற்கு செய்தி தயாரிப்பில் ஈடுபட்டு ஊடகத்தின் மனிதாபிமானம் எவ்வாறு இருந்தது என்று அதை பார்த்தவர்களுக்கு தெரியும்.

பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திற்கு நீதியை பெற்றுக்கொடுத்து. அவர்கள் தங்கியிருந்த வீட்டை எரித்தவர்கள் யார் என்பதை வெளியில் கொண்டுவராது அந்த சம்பவத்திற்கான காரணத்தை தேடாது முற்று முழுதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தை இழிவு படுத்தும் வேலையை ஊடகம் என்ற போர்வையில் சென்ற அந்த இஸ்லாமிய மதவாத குழு கனகச்சிதமாக செய்துள்ளது.

அவர்களுக்கு ஏதும் நடந்திருந்தால் இதே பதிலைத்தான் சொல்லி இருப்பார்கள் அது அவர்களது ஒற்றுமை.

தற்போது குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நாளாந்தம் வருமானம் ஈட்டி வந்த முச்சக்கர வண்டி எரியூட்டப்பட்டதால் அவர்கள் வருமானம் இன்றி தவிக்கின்றனர். தற்போது அவர்கள் போரதீவு என்னும் இடத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து கவலை கொள்ளாத அம்பாறை தமிழ் பாராளுமன்ற மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் மதம் மாற்றம் பற்றிபேசியதை தூக்கி பிடித்துக்கொண்டு அவர் முச்சக்கர வண்டிக்காக நாடகமாடுவதாக கூறியுள்ளனர்.

அவர்கள் முச்சக்கர வண்டி வேனும் என்றால் இஸ்லாம் மதத்திற்கே சென்றிருப்பார்கள். இப்படி தமிழ் பிரதிநிதிகள் இடம் கெஞ்சி திரியவேண்டிய தேவையில்லை.

இதே விடயம் ஒரு முஸ்லீம் நபருக்கு தமிழ் பிரதேசங்களில் நடந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள். இன்நேரம் அந்த குடும்பத்திற்கு அரவு நாட்டில் இருந்து உதவிகள் குவிந்திருக்கும்.

ஆனால் பாதிக்கப்பட்டது தமிழ் குடும்பம் என்ற படியால் எத்தனை ஏமாற்றங்கள் எத்தனை சுத்துமாத்து கதைகள் பாவம் அந்த குடும்பம். அவர்களை எமது தமிழ் உறவுகளே ஏடேடுத்து பார்க்கவில்லை.

நேரில் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்!

குறித்த குடும்பத்தை நேரில் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் சம்பவத்தின் உண்மை தன்மை குறித்து கேட்டறிந்ததுடன். அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

புலம்பெயர் உறவுகளுக்கான வேண்டுகோள்!

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பம் தன்னுடைய நாளாந்த வருமானத்திற்காக இருந்த முச்சக்கர வண்டியையும் இழந்து இருப்பிடம் இல்லாது தவித்து வருகின்றனர். எனவே இவர்களது நாளாந்த வருமானத்திற்கான உதவிகளை செய்ய முன்வருமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு ஊதவி செய்ய விரும்பும் உறவுகள் கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்- சோதிநாதன் சந்திரசேகர் 0773507156

https://www.ibctamil.com/srilanka/80/106050

Link to comment
Share on other sites

வீடு எரிக்கப்பட்ட தமிழ்க் குடும்பத்தின் பரிதாப நிலை!

 

வீடு எரிக்கப்பட்ட தமிழ் இளைஞரது தந்தையின் சாட்சி

தமிழ்க் குடும்பத்தின் வீடு எரிக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியானது!!

 

 

அம்பாறை வளத்தாப்பட்டி இஸ்மாயில் புரத்தில் இருந்த தமிழ் குடும்பத்தை வீட்டுக்குள் வைத்து தீவைத்து எரித்த சம்பவம் குறித்தும் அதற்கான பின்னணி குறித்த உண்மைகளை செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.

அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று ஒரு சில ஊடகங்கள் மறுத்திருந்தன.

இந்த நிலையில் குறிப்பிட்ட தமிழ் இளைஞனின் வீடும், அவனது முற்சக்கரவாகணமும் தீயிட்டு எரிக்கப்பட்ட வீடியோ வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயல்வீட்டில் வசித்தவர்களால் இந்த விடியோ எடுக்கப்பட்டுள்ளது.

 

 

https://www.ibctamil.com/articles/80/106078?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஒரு சாதரண கூலி வேலைக்கும் அங்கே அதாவது முஸ்லீம்கள் பகுதிகளுக்கும் கடைகளுக்கும் சென்று  காத்திருக்கும் நிலை தமிழ் மக்களுக்கு அங்கே சந்தியில் வேலைக்கு தேவையான ஆட்களை நாட்கூலி பேசி  அழைத்து செல்வார்கள் அப்படி களைத்து வேலை செய்து விட்டு பெற்றுக்கொள்ளும் பணத்தை அப்படியே  சாராய தவறனைக்கு கொடுத்து விட்டு செல்கிறார்கள் நான் கண்ணால் பார்க்கும் காட்சி இடம் சாய்ந்த மருது பள்ளியடி சந்தி மற்றது கல்முனை தரவை பிள்ளையாரடி சந்தி 

 

தமிழர்களோ ஓர் அபிவிருத்தி அல்லது கடை கட்டி வியாபாரம் செய்ய தயார் இல்லை ஆனால் பதுக்கி வைத்த பணத்தை பல மாடி கட்டிடங்களை அழகான வீடுகளைகட்டியும் தூசும் ஒட்டறையும் பிடிக்க வைத்துள்ளார்கள் ஓர் அரச வேலை செய்தால்  போதும் எனவும் பிறகு எப்படி அடுத்தவனுக்கு தொழில் கொடுத்து அவனையும்  வாழ வைக்கலாம் என்ற சிந்தனையும் இல்லை. தான் வாழ்ந்தால் போதும் என  நினைக்கும் கூட்டம்தான் அதிகம் ( ஒரு சிலர்) 

இந்த சம்பவம் நடந்தது உண்மைதான் ஆனால் அதுவும்  இருவருக்கு ஏற்பட்ட பிரச்சனை (தனிப்பட்ட ) அந்த நபர்தான் செய்திருக்கலாம் என கூற முடிகிறது (அந்த தமிழர்)  விசாரணை தொடர்கிறது வளத்தாப்பிட்டி பிரதேசம் நாள்தோறும் அரிக்கப்பட்டும் விற்கப்பட்டும் வரும் பகுதியாக மாறுகிறது அதே போல கிழக்கில் வறுமை காரணமாக மதமும் மாறுகிறார்கள் பின் சேருகிறார்கள் மாறுகிறார்கள் சேருகிறார்கள் இது நாள் தோறும் காணும் நிலை சிறிய சிறிய ஊர்களில் இருக்கும் மக்கள் மனது ஏன் கிறிஸ்தவ பாதிர்யர்களால் கூட தான் மாற்றப்படுகிறது என்றும் கூறலாம்  வறுமையும் வயிறும் தான் காரணம் அது தான் போராட்டமாக இருக்கிறது 

41717076_1101368036680304_51504790313715  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.